Saturday 4 January 2014

2014 MEENAM மீனம்

2014-ம் ஆண்டு புத்தாண்டு பலன்கள்
பூரட்டாதி 4–ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: தீ, து, ஓ, ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கும்)
ஒன்பதாம்  பார்வை  நம்பிக்கையூட்டும்!
நல்லவர்கள் யார் என்பதைக் கண்டு கொள்ளும் தன்மை பெற்ற மீன ராசி நேயர்களே!
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த புத்தாண்டு வந்து விட்டது. ஆரம்பத்தில் குரு வக்ரமாக இருந்தாலும் அதன் பின்னர் கடகத்தில் சஞ்சரித்து உச்சம் பெறும் பொழுது அதன் பார்வை முழுமையாக உங்கள் ராசியில் பதியப் போவதால், எல்லா நாட்களும் இனிமையான நாட்களாக அமைய வாய்ப்புக் கிட்டும்.
இருந்தாலும் வருடத் தொடக்கத்தில் குரு வக்ரமாக அல்லவா இருக்கிறார். எனவே, தக்க விதத்தில் பலன் கொடுப்பதில் சில தடைகளும் உருவாகலாம். சிக்கனத்தைக் கையாளும், சூழ்நிலையும், திடீர் மாற்றங்களும், குழந்தைகளால் விரயங்களும், குடும்பச் சுமை கூடுதலும் ஏற்படும் விதத்திலேயே இருக்கிறது.
புத்தாண்டின் தொடக்கத்தில் 2–ல் கேது, 8–ல் ராகு அல்லவா சஞ்சரிக்  கிறார்கள். எனவே, சர்ப்ப தோஷத்தின் பின்னணியில் உங்கள் ஜாதகம் இருக்கிறது. எனவே, ஆண்டின் தொடக்கத்திலேயே சர்ப்ப சாந்தியைச்செய்து கொள்வது நல்லது. அது மட்டுமல்லாமல் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் அனுமன் வழிபாட்டையும், மேற்கொள்வது நல்லது.  
ஆண்டின் தொடக்கத்தில் ராசிநாதன் குரு வக்ரம் பெற்று புதன் வீட்டில் பரிவர்த்தனை யோகம் அடைகின்றார். தனாதிபதி செவ்வாய் உங்கள் ராசியைப் பார்க்கிறார். ராசிநாதனுக்குப் பகைக் கிரகமான சுக்ரன் வக்ரம் பெற்றிருப்பது யோகம்.
நீங்கள் உதவி செய்வதை ஒரு குறிக்கோளாகக் கொண்டிருப்பீர்கள். ஓசைப்படாமலேயே சில நல்ல காரியங்களைச் செய்வீர்கள். எதிரிகளை இருந்த இடத்திலேயே இருந்து வெல்லும் ஆற்றல் உங்களுக்கு உண்டு.
தன்னம்பிக்கை குறைகிற பொழுதெல்லாம் தக்க விதத்தில் நம்பிக்கைக்கு உரியவரிடம் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். நேர்மை, நியாயத்திற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பதால், பலரும் உங்களிடம் பழக்கம் வைத்துக் கொள்ளப் பிரியப்படுவார்கள்.
உங்களுக்கு இந்த 2014–ம் புத்தாண்டு எப்படியிருக்கும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
1.1.2014 முதல் 12.6.2014 வரை
புத்தாண்டு தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு வக்ரம் பெறுகிறார். எனவே, தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். உறவினர்களின் தொல்லைகள் அதிகரிக்கும்.  தனாதிபதி செவ்வாய், சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்தபடி உங்கள் ராசியைப் பார்ப்பது யோகம்தான். ஒரு தொகை செலவானாலும் மற்றொரு தொகை வந்து கொண்டேயிருக்கும்.
பூர்வீக இடத்தில் வீடு கட்டலாமா? இல்லை புதிய இடத்தில் வீடு கட்டலாமா? இல்லை வீடாக வாங்கினால் யார் பெயரில் வாங்குவது உத்தமம், குடும்ப உறுப்பினர்களில் யார் பெயரில் வாங்கினால் அது நிலைத்திருக்கும் என்று மனக்குழப்பத்தோடு இருந்த உங்களுக்கு இப்பொழுது தெளிவு பிறந்து தீர்க்கமான முடிவெடுத்து செயல்படப் போகிறீர்கள்.
சுக்ரன் வக்ரம் பெறுவது யோகம் தான். ஒற்றுமையின்றி பிரிந்து சென்ற உடன்பிறப்புகள் இனி உங்களைத் தேடி வருவர். ஆபரணங்களை வாங்கிச் சேர்க்க வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். புத–ஆதித்ய யோகத்தின் அடிப்படையில் உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கத்தால் சுபவிரயம் அதிகரிக்கும் நேரமிது.
சனி விலகும் நேரம்!
இதுவரை உங்கள் ராசிக்கு 8–ல் சஞ்சரித்து அஷ்டமத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த சனி பகவான் இந்த புத்தாண்டு கடைசியில் 9–ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இது ஒளிமயமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் கொடுக்கும். போற்றுகிற அளவிற்கு வாழ்க்கைத் தரம் உயரும்.
இழப்புகளை எல்லாம் ஈடுசெய்யப் போகிறீர்கள். எடுத்த காரியத்தில் வெற்றியும், கொடுத்த வாக்கை காப்பாற்றும் சூழ்நிலையும் உருவாகும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் அகலும். சிந்தையை செலுத்தி செய்ய வேண்டிய காரியங்களில் எல்லாம் சிறப்புகள் கிடைக்கும். கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஏற்பட்ட வாட்டங்கள் மாறும். வருத்தங்கள் தீரும். வைத்தியச் செலவுகள் குறையும்.
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். போற்றுகிற அளவிற்கு வாழ்க்கைத் தரம் உயரும். 11, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனிபகவான் 9–ல் உலா வரும்பொழுது திருநள்ளாறு சென்று சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.
குரு மற்றும் சனியின் வக்ர காலங்கள்!
புத்தாண்டில் குரு வக்ரமும், சனி வக்ரமும் நிகழவிருக்கிறது. இந்த இரண்டு வக்ர காலமுமே நீங்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய காலம் தான். ராசிநாதனாக குரு விளங்குவதால் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு அகலும். மருத்    துவச்செலவுகள் கூடும். வாங்கிப் போட்ட இடங்களை விற்பனை செய்யும் அமைப்பு உருவாகும். சனியின் வக்ர காலத்தில் பணவரவில் இருந்த தடைகள் அகலும். தொழில் மாற்றச் சிந்தனை மேலோங்கும்.
மீன ராசியில் பிறந்த பெண்களுக்கு
மீன ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த புத்தாண்டு நல்ல மாற்றங்களை அள்ளி வழங்க போகிறது. திருமண வாய்ப்புகள் வரவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு அதுவந்து சேரும். குழந்தைப் பேறு கிட்டும். கணவன்–மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். குருப்பெயர்ச்சிக்குப் பின்னால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கொடுக்கல்–வாங்கல்கள் சிறப்பாக இருக்கும். தாய்   வழித் தனலாபம் கிடைக்கும். ராகு– கேது பெயர்ச்சிக்குப் பின்னால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளையும், பின்னணியாக இருந்து பார்த்துக்கொள்வது நல்லது. குருவழிபாடும், சர்ப்ப சாந்தியும் குதூகலத்தை வரவழைத்துக்கொடுக்கும். சேமிப்பு அதிகரிக்கும் இந்த ஆண்டு தங்கம், வெள்ளி ஆகியவை சேர்க்கையும், தகுந்த பொருளாதார வளர்ச்சியையும் உருவாக்கும்.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
உங்கள் ராசிநாதன் வியாழன் என்பதால் வியாழக்கிழமை தோறும் குரு தெட்சிணாமூர்த்தி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். பிறந்த தேதி மற்றும் கூட்டுத்தொகைக்குரிய எண்களின் ஆதிக்க நாளில் யோகபலம் பெற்ற நட்சத்திரம் சேரும்பொழுது சிறப்பு   வழிபாடாக திருச்செந்தூருக்கு சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்வது முன்னேற்றத்திற்கு வித்திடும்.
நலம் தரும் ராகு–கேதுப் பெயர்ச்சி!
இதுவரை உங்கள் ராசிக்கு 2–ல் கேதுவும், 8–ல் ராகுவும் சஞ்சரித்து வந்தார்கள். புத்தாண்டில் ராகு–கேது பெயர்ச்சி நிகழவிருக்கிறது. உங்கள் ராசியிலேயே கேதுவும், சப்தம ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். சர்ப்ப தோஷத்தின் பிடியில் இருப்பதால் ராகு–கேது பிரீதி செய்வது நல்லது.
ஜென்ம கேதுவால் மனக்குழப்பம் அதிகரிக்கும். மாற்றுச் சிந்தனை மேலோங்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தும் சூழ்நிலை உருவாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். கட்டிடப் பணி மட்டும் பாதியிலேயே நிற்கலாம். கொள்கைப் பிடிப்பைத் தளர்த்திக்கொள்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ வழியமைக்கும்.
சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் குடும்பச் சுமை கூடும். குலதெய்வ வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய முயற்சிகளில் புகழ் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து முடித்துக்கொடுப்பர்.  சேமிப்பில் சிறிது கரையலாம். திருமணத்தால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.
குருப் பெயர்ச்சி  பலன்கள்!
புத்தாண்டில் குரு உச்சம் பெற்று உங்கள் ராசியைப் பார்க்கப் போகிறார். இந்த நிகழ்வு ஜூன் 13–ம் தேதி நிகழவிருக்கிறது. அதன் பார்வை பலம் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். வசதி, வாய்ப்புகள் பெருகும். எதைச்செய்ய நினைத்தீர்களோ, அதைச்செய்து முடிப்பீர்கள். இல்லத்தில் உள்ளவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.
சேமிப்புகள் உயரும்இந்த நேரத்தில் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெற வழிபிறக்கும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் மாறும். உற்சாகத்தோடு பணிபுரிந்து உள்ளம் மகிழும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப் போகிறீர்கள்.
குரு உங்கள் ராசியை 9–ம் பார்வையாக பார்க்கிறார். எனவே 5, 9 ஆகிய இடங்கள் மிஞ்சும் பலன் தரும் என்பார்கள். அதன்படி மிஞ்சும் அளவிற்கு பொருளாதாரம் அமையப் போகிறது. கடை திறப்பு விழாக்கள் நடத்திப் பார்ப்பீர்கள். கூட்டு முயற்சியை விட்டுவிட்டு தனி முயற்சியில் நாட்டம் கொள்வீர்கள். கொள்கைப் பிடிப்பு கூடுதலாக இருக்கும்.
குழந்தைகளின் எதிர்கால நலன்கருதி சேமிப்பில் வைப்புநிதி ஒதுக்குவீர்கள். நகை, தோட்டம், என்று வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். வெளிநாட்டு அனுகூலம் உண்டு. மூடிக்கிடந்த தொழிலை மீண்டும் திறக்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். ஓடிச் சென்ற வேலையாட்கள் மீண்டும் வந்து இணைவர். ஒப்பந்தங்கள் வந்து கொண்டேயிருக்கும். பூர்வீக சொத்துக்கள் கிடைத்து அதன்மூலம் நன்மைகள் ஏற்படும். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படும் இந்த நேரத்தில் திசை மாறிய தென்முகக் கடவுளை வழிபட்டு வருவது நல்லது,
முல்லைப்பூ மாலை அணிவித்து, மஞ்சள் வண்ண ஆடை சாற்றினால் எல்லையில்லாத நற்பலன்கள் உங்களுக்கு வந்து சேரும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

2014 KUMBHAM கும்பம்

Source: www.dailythanthi.com

2014-ம் ஆண்டு புத்தாண்டு பலன்கள்
அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: கு, கூ, கோ, ஸி, ஸீ, ஸே, ஸோ, தா  உள்ளவர்களுக்கும்)
அனுசரித்துச் செல்வதன்  மூலமே  ஆதாயம்  கிடைக்கும்!
எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி வருங்காலத்தை வளப்படுத்தும் கும்ப ராசி நேயர்களே!
வந்து விட்டது புத்தாண்டு. குருவின் வக்ர இயக்கம் முடிந்த பின்னால் நாம் அக்கறை செலுத்துகின்ற காரியங்களில் எல்லாம் ஆதாயம் கிடைக்குமா? முப்பெரும் கிரகங்களின் பெயர்ச்சி எப்படியிருக்கப் போகிறது. ஒப்பற்ற தனாதிபதி குரு 6–ல் சஞ்சரிக்கும் பொழுது இடமாற்றம் வந்திடுமா?, இல்லை ஊர் மாற்றம் வந்திடுமா?, உத்தியோக மாற்றம் வந்திடுமா? என்ற சிந்தனை இருக்கும்.  
பிறக்கும் புத்தாண்டில் உங்கள் ராசிநாதன் சனி உச்சம் பெற்று இருக்கிறார். அதே நேரத்தில் தன லாபாதிபதியான குருவோ வக்ரம் பெற்று இருக்கிறார். 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் வலிமை இழந்தாலும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கிறார். அஷ்டமத்தில் செவ்வாய் இருப்பது ஒன்று தான் யோசிக்கக் கூடியதாக இருக்கிறது. 3–ல் கேதுவும், 9–ல் ராகுவும் இருப்பதால் வருமானப் பற்றாக்குறை ஏற்படாது, என்றாலும் நிம்மதி குறைவாகவே இருக்கும்.
மற்றவர்கள் அறிமுகம் செய்யாமலேயே நெருங்கிப்பழகும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. பயணங்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். கொடுத்த வாக்கை எப்படியாவது காப்பாற்றி விடவேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் இடம் பெற்றிருக்கும். யாரேனும் உங்களை ஏமாற்ற நினைத்தால் அவர்கள் மீது கடுமையாக கோபம் கொள்வீர்கள். மற்ற நேரங்களில் எல்லாம் இரக்க சுபாவம்கொண்டவர்களாகவே காட்சி அளிப்பீர்கள். தங்களது பிரச்சினைகளை பிறரிடம் சொல்லிப் பகிர்ந்து கொள்வது உங்கள் வாடிக்கையாகும். இந்த 2014 புத்தாண்டு எப்படி இருக்கும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
1.1.2014 முதல் 12.6.2014 வரை
புத்தாண்டு தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உச்சம் பெற்று ராகுவோடு இணைந்து சஞ்சரிக்கின்றார். எனவே, ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் எண்ணம் மேலோங்கும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த புது முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
சுக்ரனின் வக்ர இயக்கத்தால் பெற்றோர் வழியில் பிரியம் கொஞ்சம் குறையலாம். இடம், பூமி வாங்கியதில் எதிர்பாராத பிரச்சினைகள் ஒருசிலருக்கு உருவாகலாம். தந்தைவழி பங்காளி   களால் விரயம் உண்டு. அஷ்டமத்து செவ்வாய் ஆதிக்கம் இருக்கும் வரை ஆரோக்கியத்தில் சிறுசிறு தொல்லைகள் வந்து கொண்டேதான் இருக்கும்.  வாகனங்களில் செல்லும்பொழுது கவனம் தேவை. அஷ்டமாதிபதி புதன் சப்தமாதியுடன் இணைந்து புத–ஆதித்ய யோகத்தை உருவாக்குவதால் கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். மாமன், மைத்துனர் வழியில் மகத்தான ஒத்துழைப்பு கிடைக்கும். முன்னோர் சொத்துக்        களில் முறையான பஞ்சாயத்துக்கள் நடந்து முடிவடைவதில் தாமதம் ஏற்படும். மூன்றாம் இடத்து கேதுவின் ஆதிக்கம் கூடுதலாக இருப்பதால் உடன்பிறப்புகள் வழியில் அனுசரித்துச் செல்வது நல்லது.
10–ம் இடத்திற்கு வரும் முத்தான சனி!
இதுவரை உங்கள் ராசிக்கு 9–ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் புத்தாண்டின் கடைசியில் 10–ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். கர்ம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில் வளம் சிறப்பாக இருக்கும். பழைய தொழிலை மாற்றிவிட்டு, புதிய தொழில் தொடங்கும் சிந்தனை மேலோங்கும்.
அதற்கு ஒத்துழைப்பு செய்யும் விதத்தில் மாற்று இனத்தவரும் உங்களுடன் இணைந்து செயல்பட முன்வருவர். அதே நேரத்தில் சனியின் பார்வை உங்கள் ராசிக்கு 12–ம் இடமான விரய ஸ்தானத்தில் பதிகிறது. எனவே, அன்றாடம் தொழிலைக் கண்காணித்து வராவிட்டால் ஏமாற்றங்களை சந்திக்க இயலும். நம்பிக்கைக்குரியவர்களிடம் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. நாடுமாற்றச் சிந்தனை நடைபெறுமா? என்பது சந்தேகம் தான். சொத்துக்களால் ஆதாயம் உண்டு.
திருநள்ளாறு, பெருச்சிக்கோவில், திருக்கொள்ளிக்காடு போன்ற ஸ்தலங்களுக்குச் சென்று, உங்களுக்கு நடக்கும் சனிச்சுற்றின் அடிப்படையில் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சனி கவசம் பாடி எள் தீபமும் ஏற்றி வழிபட்டால் காரியங்கள் நாளும் வெற்றி பெறும்.
குரு மற்றும் சனி வக்ர காலம்!
இந்தப் புத்தாண்டில் குருவும், சனியும் வக்ரம் பெறுகிறார்கள். இந்த இரண்டு வக்ர இயக்க காலமும், எச்சரிக்கையோடு செயல்பட வேண்டிய காலமாகும். கூடுமானவரை சேமிப்பில் இருந்த தொகைகள் திடீரென செலவாகும்.
தன லாபாதிபதியின் வக்ரம் அவ்வளவு நல்லதல்ல. பண நெருக்கடி ஏற்படும். ஒரு தொகை செலவான பிறகு அடுத்த தொகை வந்து சேரும். சனி ராசிநாதனாக இருப்பதால் உடல்நலத் தொல்லைகள், பணியாளர் பிரச்சினை, பயணங்களில் தடை உருவாகலாம். வீடு மாற்றமும், வேலை மாற்றமும் திருப்தியளிக்கும் விதத்தில் இருக் கும்.
கும்ப ராசியில் பிறந்த பெண்களுக்கு!
கும்ப ராசியில் பிறந்த பெண்களுக்கு குழப்பங்கள் அகலும். குணத்தோடு பழகியவர்களின் நட்பால் கூட்டு முயற்சி வெற்றி பெறும். குரு பார்வை பலத்தால் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த வருட வருமானம் பெருகும். கணவன்–மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். விட்டுக்கொடுத்துச் செல்லாத வாழ்க்கைத் துணை கூட குணம் மாறி அன்பும், ஆதரவும் அதிகமாக காட்டத் தொடங்குவார்.
ராகு–கேது பெயர்ச்சிக்குப் பின்னால் பக்கத்து வீட்டாரின் பகை உருவாகலாம். தாய்வழிப் பிரச்சினைகள் தலைதூக்கும். பிறருக்குப் பொறுப்புச் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை போராடி வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.  குறிப்பாக குழந்தைகளின் திருமணத்தை முன்னிட்டு தங்க ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு கிட்டும். சர்ப்ப சாந்திப் பரிகாரமும், தொடர்ந்து வியாழன் தோறும் குரு தட்சிணாமூர்த்தி வழிபாடும் எடுத்த செயலில் வெற்றி பெற வைக்கும்.
செல்வ வளம் தரும்  சிறப்பு வழிபாடு!
உங்கள் ராசிநாதன் சனி என்பதால் சனிக்கிழமை தோறும் பெருமாள், இலக்குமி, அனுமன் வழிபாட்டை மேற்கொள்வதோடு பிறந்த தேதி மற்றும் கூட்டுத் தொகைக்குரிய எண்களின் ஆதிக்கத்தில் யோகபலம் பெற்ற நாளில், யோகமான நட்சத்திரம் சேரும் பொழுது சிறப்பு வழிபாடாக வன்னி     மரத்தடியில் வீற்றிருந்து அருள் வழங்கும் சனி பகவானை பெருச்சிக் கோவில் சென்று வழிபாடு செய்யுங்கள். இத்திருத்தலம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது.
நலம் தரும் ராகு–கேது பெயர்ச்சி!
இதுவரை உங்கள் ராசிக்கு 3–ம் இடத்தில் கேதுவும், 9–ம் இடத்தில் ராகுவும் சஞ்சரித்து வந்தார்கள். இந்தப் புத்தாண்டில் ஜூன் மாதம் 21–ம் தேதி கன்னி ராசியில் ராகுவும், மீன ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். பின்னோக்கிச் செல்லும் இந்தக் கிரகங்களின் ஆதிக்கத்தால் நீங்கள் முன்னேற்றம் காண வழிகிடைக்கப் போகிறது. 2–ல் சஞ்சரிக்கும் கேதுவால் செயல்பாடுகளில் நிதானம் காட்டுவது நல்லது. மனக்குழப்பங்கள் உருவாகலாம். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது.
குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்களா என்பது சந்தேகம் தான். கொடுக்கல்–வாங்கல்களிலும் கொஞ்சம் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. அஷ்டமத்து ராகுவால் பண வரவு திருப்திகரமாக இருந்தாலும் செலவுகள் கூடுதலாகும். மறைந்த ராகு நிறைந்த தனலாபத்தைக் கொடுக்கும் என்பார்கள். எனவே இக்காலத்தில் தொழிலால் வரும் லாபத்தை சேமிப்பாக வைத்துக் கொள்ளாமல், செலவுகளில் சுப விரயங்களாக மாற்றிக் கொள்வது நல்லது.
குருப் பெயர்ச்சி  பலன்கள்!
புத்தாண்டில் குரு உச்சம் பெற்று சஞ்சரிக்கப் போகிறார். தன லாபாதிபதி உச்சம் பெற்று சஞ்சரிப்பது ஒருவழிக்கு யோகம்தான் என்றாலும், அவர் 6–ம் இடத்தில் அல்லவா சஞ்சரிக்கிறார். எனவே இதன் விளைவாக ஜூன் 13–ம் தேதி முதல் மாற்றங்களும், ஏற்றங்களும் உங்களுக்கு வந்து சேரப் போகின்றன. குருவின் பரிபூரண பார்வை 2, 10, 12 ஆகிய இடங்   களைப் புனிதப்படுத்துகின்றார்.  
அப்படிப்பட்ட குரு 6–ல் சஞ்சரிக்கும் பொழுது உத்தியோகம், தொழிலில் உதிரி வருமானங்கள் பெருகும். உற்சாகத்தோடு பணி புரிவீர்கள். ஊதிய உயர்வு, இலாகா மாற்றங்கள் எதிர்பார்த்தபடி ஒரு சிலருக்கு வந்து சேரும். கடன் சுமை குறைய வழிபிறக்கும். விலகிச் சென்ற உறவுகள் மீண்டும் வந்திணையும்.
அதன் பார்வை பலத்தால் தன ஸ்தானம் புனித      மடைவதால் எந்தத் தொழில் செய்பவராக இருந்தாலும், எதிர்பார்ப்பதைவிட லாபம் ஒரு மடங்கு கூடுதலாகவே கிடைக்கும். சொந்தம், சுற்றம் அனைத்தும் பாராட்டும் அளவிற்கு உங்கள் முன்னேற்றம் கூடும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். பிறருக்கு பொறுப்புச் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையும் மீண்டும் வந்து நிம்மதி தரும்.
கூட்டு முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் இதுவரை கூட்டாளிகளால் திருப்தி ஏற்படவில்லையே என்று நினைத்திருக்கலாம். இந்த குரு மாற்றத்தின் விளைவால் தனித்து இயங்க முற்படுவீர்கள். கொள்கைப் பிடிப்போடு செயல்பட்டுக் குடும்பத்தில் உள்ளவர்களைத் திருப்திப்படுத்துவீர்கள்.
அயன சயன ஸ்தானத்தில் குருவின் பார்வை பதிவதால் ஒரு சிலருக்கு அயல்நாட்டு யோகம் வந்து சேரலாம். வாகனமாற்றம் செய்ய முன்வருவீர்கள். வீடு மாற்றங்கள் ஒரு சிலருக்கு வந்து சேரும். வேற்று மனிதர்களின் ஒற்றுமையோடு வியக்கும் அளவு முன்னேற்றம் காண இந்தக் குருப்பெயர்ச்சி வழிவகுக்கும். திசைமாறிய தென்முகக் கடவுளை வழிபட்டால் தெய்வ அனுகூலமும் கைகொடுக்கும்.

2014 MAKARAM மகரம்

Source: www.dailythanthi.com

2014-ம் ஆண்டு புத்தாண்டு பலன்கள்
உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: போ, ஜ, ஜி, ஜீ, ஜே, ஜோ, க, கா, கி உள்ளவர்களுக்கும்)
பார்க்கும்  குருவை  பலப்படுத்தினால்  யோகம்!
செய்த உதவியை கடைசிவரை மனதில் வைத்துக் கொண்டு நன்றி காட்டும் மகர ராசி நேயர்களே!
பிறக்கும் புத்தாண்டு பெருமைகளை குவிக்கும் விதத்தில் உங்கள் ராசிநாதன் சனியின் உச்சத்தோடு பிறக்கிறது. எனவே, தொழில் வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கப் போகிறீர்கள். உழைப்பின் பயனால் உயர்ந்த நிலையை அடையும் விதம், குருப்பெயர்ச்சியும் இந்த ஆண்டில் நிகழவிருக்கிறது.
சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து அதன் நேர் பார்வையை உங்கள் ராசியின் மீது குரு பதிக்கும் பொழுது கொற்றவரும், மற்றவரும் பாராட்டுவர். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். ஆண்டின் தொடக்கத்தில் குரு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். 12–க்கு அதிபதியான குரு வக்ரம் பெறும் பொழுது விபரீத ராஜயோக அடிப்படையில் பலன் கொடுப்பார்.
செவ்வாய் 9–ல் சஞ்சரிக்கிறார். விரய ஸ்தானத்தில் சூரியன், புதன், சந்திரன் ஆகிய மூன்றும் சஞ்சரித்து, ராசியிலேயே சுக்ரன் வக்ரம் பெறும் நேரத்தில் இந்த ஆண்டு பிறக்கிறது. சுக்ரன் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. குழந்தைகள் வழியில் வருடத் தொடக்கத்தில் செலவு கூடுதலாக இருக்கும். குடும்பச் சுமை கூடும்.
கிரகங்களில் அதிக வலிமையானவர் சனி பகவான். ‘ஆயுள்காரகன்’ என்று போற்றப்படுபவர். அவரை ராசிநாதனாகப் பெற்ற நீங்கள் சிறந்த உழைப்பாளிகளாக இருப்பீர்கள். நிதிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கு மத்தியில் நீதிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக          விளங்குவீர்கள்.
உதவி செய்தவர்களுக்கு நன்றிகாட்டத் தயங்க மாட்டீர்கள். குடும்பத்தினர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புவர்களின் பட்டியலில் இடம் பெறுவீர்கள். உங்களுக்கு இந்த புத்தாண்டு எப்படியிருக்கும் என்பதைப் பார்ப்போம்.
1.1.2014 முதல் 12.6.2014 வரை
வருடத் தொடக்கத்தில் ராசிநாதன் சனி உச்சம் பெறுகிறார். அவரோடு ராகுவும் இணைந்து சஞ்சரிப்பதால் தொழில் மேன்மையுண்டு. வரவு திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து கொண்டேயிருக்கும். வக்ர வியாழனின் ஆதிக்கத்தால் திட்டமிடாமல் செய்த காரியங்கள் வெற்றி பெறும். தேக நலனும் சீராகும்.
செவ்வாய் ஒன்பதாமிடத்தில் சஞ்சரிப்பது யோகம் தான். 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதி 9–ல் சஞ்சரிக்கும் பொழுது வீடுகட்டும் முயற்சியில் இருந்த தடைகள் அகலும். நீண்ட நாட்களுக்கு முன்பு வாங்கிப்போட்ட இடம் விற்பனையாகி மகிழ்ச்சியை வழங்கும். சகோதரர்கள் சகாயமாக நடந்து கொள்வார்கள். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் அகலும்.
சந்திர பலம் குறைவாக இருப்பதால் தாய் வழி உறவினர்களின் பகையை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். சுக ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு தொல்லை ஏற்பட்டு வைத்தியச் செலவை உருவாக்கலாம். இடமாற்றம் செய்வதாக முடிவெடுத்து பிறகு பின்வாங்கி விடுவீர்கள். ராகு–கேதுக்களின் ஆதிக்கம் மாறுவதற்குள் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை மேற்கொண்டால் ஆரோக்கியத்தில் குறைபாடுகள் ஏற்படாது. ஆதாயமும் அதிக   ரிக்கும்.
சந்தோஷம் தரும் சனிப்பெயர்ச்சி!
இதுவரை சனி உங்கள் ராசிக்கு 10–ம் இடத்தில் உச்சம் பெற்று சஞ்சரித்து வந்தார். இந்தப் புத்தாண்டின் கடைசியில் அவர் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் விதத்தில் தொழிலில் லாபம் அதிகரிக்கும். இளைய சகோதரத்தோடு ஏற்பட்ட பகை மாறும்.
அந்தச் சனியின் பார்வை உங்கள் ராசியிலேயே பதியப் போவதால் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தக்கூடிய சூழ்நிலை உருவாகும். அதுமட்டுமல்லாமல் ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவதன் மூலம் ஆரோக்கியப் பாதிப்பிலிருந்து அகல வழி பிறக்கும்.
ஐந்தாமிடத்தில் சனியின் பார்வை பதிவதால் பிள்ளைகள் வழியில் நீண்ட நாட்களாக நடைபெறாத சுபகாரிய நிகழ்வுகள் இப்பொழுது நடைபெறத் துவங்கும். கூட்டாளிகளால் ஏற்பட்ட பிரச்சினையும் நல்ல முடிவிற்கு வரும்.  இக்காலத்தில் சனியின் வழிபாடு சஞ்சலம் தீர்க்கும்.
குருவக்ரமும், சனி வக்ரமும்!
குருவின் வக்ரமும், சனி வக்ரமும் வரும் புத்தாண்டில் நிகழவிருக்கிறது. குருவின் வக்ரம் உங்களுக்கு நன்மை தரும் விதத்தில் அமையும். காரணம் குரு உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார். சனியோ உங்கள் ராசிநாதனாகவும், தனாதிபதியாகவும் விளங்குகிறார். எனவே, இதன் வக்ரம் உங்களுக்குப் பல இடையூறுகளை வழங்கலாம். இக்காலத்தில் அமைதியைக் கடைப்பிடித்து வந்தால் தான் ஆனந்தத்தை வரவழைத்துக் கொள்ள இயலும்.
மகர ராசியில் பிறந்த பெண்களுக்கு!
மகர ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டு வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் ஆண்டாக அமையப் போகிறது. சுப விரயங்கள் அதிகரிக்கும். சுகங்களும், சந்தோஷங்களும் குருப்பெயர்ச்சிக்குப் பின்னால் வந்து சேரும்.
ஜூன் மாதம் 13–ம் தேதிக்கு மேல் உங்கள் வாழ்க்கையில் எண்ணற்ற மாற்றங்கள் வந்து சேரும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். புகழ்கூடும்.  கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் நல்ல பெயர் எடுத்துக்கொள்வர். குறைகள் தீர அப்போதைக்கப்போது ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். வருடக் கடைசியில் உங்கள் லட்சியங்கள் நிறைவேறும். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களுக்கு ஆச்சரியப்படத்தக்க பொறுப்புகள் வந்து சேரும். ராகு–கேதுக்களுக்கு பிரீதியும், குரு வழிபாடும் செய்வது உங்களுக்கு நன்மையை வழங்கும்.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
இந்தப் புத்தாண்டு பொன் கொழிக்கும் ஆண்டாக மாற சனிக் கிழமை தோறும் சனீஸ்வர வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். பிறந்த தேதி மற்றும் கூட்டுத்தொகைக்குரிய எண்களின் ஆதிக்க நாளில் யோகபலம் பெற்ற நட்சத்திரம் சேரும் நாளில் சிறப்பு வழிபாடாக சிவகங்கை மாவட்டம் வைரவன் பட்டியிலுள்ள வைரவர், வளரொளிநாதர், வடிவுடையம்மனை வழிபட்டு வளர்ச்சியைக் கூட்டிக்கொள்ளுங்கள்.
யோகம் தரும் ராகு–கேது பெயர்ச்சி!
இதுவரை மேஷத்தில் சஞ்சரித்து வந்த கேதுவும், துலாம் ராசியில் சஞ்சரித்து வந்த ராகுவும், ஜூன் 21–ம் தேதி பெயர்ச்சியாகி பின்னோக்கிச் செல்கிறார்கள். உங்கள் ராசிக்கு 3–ல் கேதுவும், 9–ல் ராகுவுமாக சஞ்சரிக்கப் போகிறார்கள். இதன் விளைவாக உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் இருந்த இடையூறுகள் அகலும். அரசு வழி அனுகூலம் கிடைக்கும். பங்காளிப் பகை மாறும்.
மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். தந்தை வழி உறவில் விரிசல் அகலும். பூர்வீக சொத்துக்களை பிரித்துக் கொள்வதிலிருந்த மனஸ்தாபம் மாறும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனங்களை வாங்கும் எண்ணம் வரும்.
கேதுவின் ஆதிக்கத்தால் கூட்டு முயற்சியில் மாற்றம் செய்வீர்கள். உதாசீனப்படுத்திய உடன்பிறப்புகள் உங்களிடம் வந்து உதவி கேட்பர். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் இழுபறிநிலை இருக்கும். உடன்பிறப்புகளில் ஒரு கோஷ்டியினர் விலகிச் செல்லலாம். மற்றொரு கோஷ்டியினர் உங்கள் கருத்துக்களுக்கு ஒத்து வருவர். துர்க்கை வழிபாடு துணிவும், தன்னம்பிக்கையும் வழங்கும்.
குதூகலம்  தரும்  குருப்பெயர்ச்சி!
இதுவரை 6–ம் இடத்தில் சஞ்சரித்து ஆதாயத்தை அளவோடு கொடுத்து வந்த குரு பகவான் இந்த புத்தாண்டில் உங்கள் ராசிக்கு சப்தம  ஸ்தானத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கப் போகிறார். குருவின் நேரடிப் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். நிச்சயித்த கல்யாணங்கள் நிச்சயித்தபடியே நடைபெறும்.
‘குரு பார்க்க கோடி நன்மை’ என்பதற்கிணங்க அதன் அருட்பார்வை பதியும் ராசிகளில் உங்கள் ராசியும் ஒன்றாக இருப்பதால் கடன் சுமை குறையும். கவலைகள் தீரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.  
வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.   காவல் துறையில் ஏற்பட்ட கலக்கம் அகலும்.  கோவில் திருப்பணிக்கு அள்ளிக் கொடுப்பீர்கள். குடும்பச் சுமை குறையவும் வழிவகுப்பீர்கள். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களுக்கு அதிகப் பொறுப்புகளும், பதவி வாய்ப்புகளும் வந்து சேரும். இலாகா மாற்றங்கள் உங்களுக்கு இனிமை தரும்.
உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். கடன் சுமை படிப்படியாகக் குறையும். குடும்பப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். மின்சாதனப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகளின் படிப்பு மற்றும் எதிர்கால முன்னேற்றம் கருதி ஒரு தொகையை செலவிடும் சூழ்நிலை உருவாகும்.
இதுபோன்ற காலங்களில் திசைமாறிய தென்முகக் கடவுளை சேவித்து வழிபட்டு வருவது நல்லது.  அதுமட்டுமல்லாமல் வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து உள்ளூரில் உள்ள தெட்சிணாமூர்த்திக்கு மல்லிகைப்பூ அல்லது முல்லைப் பூ மாலை சூட்டி, மஞ்சள் வண்ண வஸ்திரம் சாற்றி, சுண்டல் நைவேத்தியமிட்டு, 16 முறை பிரகாரம் சுற்றி வந்தால் வெற்றி வாய்ப்புகள் வந்து கொண்டேயிருக்கும்.

2014 DHANUSU தனுசு

Source: www.dailythanthi.com

2014-ம் ஆண்டு புத்தாண்டு பலன்கள்
மூலம், பூராடம், உத்ராடம், 1–ம் பாதம் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: யே, யோ, ப, பி, பு, பூ, பா, ன, டே, பே உள்ளவர்களுக்கும்)
வழிபாட்டின் மூலம்  வளர்ச்சி  கூடும் ஆண்டு!
அடுத்தவர்களுக்கு ஆலோசனை சொல்வதில் அசகாய சூரர்கள் என்று பெயர் பெற்ற தனுசு ராசி நேயர்களே!
புத்தாண்டு உங்கள் ராசியிலேயே பிறக்கிறது. அற்புதப் பலன்களை அள்ளி வழங்கப் போகிறது. புத்தாண்டு பிறக்கும் பொழுது உங்கள் ராசிநாதன் குரு வக்ரம் பெற்று உங்கள் ராசியையே பார்க்கிறார். சப்தமாதிபதி புதன் உங்கள் ராசியிலேயே சஞ்சரித்து பரிவர்த்தனை அடைகிறார்.
புத–ஆதித்ய யோகத்தோடு இந்த புத்தாண்டு பிறக்கிறது. உங்கள் ராசிநாதன் குருவிற்கு பகை கிரகமான சுக்ரன் வக்ரம் பெறுகிறார். இது நன்மைதான். மறைமுக எதிர்ப்புகள் மாறும். குறை கூறியவர்கள் விலகுவர். அரைகுறையாக நின்ற பணி தொடரும்.
10–ல் செவ்வாய் பலம் பெறுகிறார். தனாதிபதி சனி உச்சம் பெற்று, ராகுவோடு இணைந்திருக்கிறார். அதுவும் லாப ஸ்தானத்தில் உச்சம் பெறுவது யோகம் தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் 5–ம் இடத்தில் கேது அமர்ந்து புதிய ஆண்டு பிறக்கிறது. பொதுவாக உங்கள் ராசிநாதன் குரு என்பதால் நேர்மை, நீதிக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.
எதையும் எதிர்பார்க்காமல் பிறருக்கு உதவி செய்யும் நல்ல குணம் உங்களுக்கு உண்டு. பாசத்தோடு பழகும் நீங்கள் பக்திக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். நேர்வழியில் செல்ல வேண்டுமென்று எண்ணத்தை வளர்த்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த 2014 புத்தாண்டு எப்படியிருக்கும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
1.1.2014 முதல் 12.6.2014 வரை
புத்தாண்டு 2014–ம் ஆண்டு தொடக் கத்தில் உங்கள் ராசிநாதன் குரு வக்ரம் பெறுகிறார். எனவே, தேக நலனில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக்கொள்ள அதிக செலவு செய்யும் சூழ்நிலை உருவாகும்.  கொடுக்கல்–வாங்கல்கள் சிறப்பாக இருந்தாலும் மன நிம்மதி கொஞ்சம் குறைவாகவே இருக்கும். குரு, புதன் பரிவர்த்தனை யோகம் பெற்று சஞ்சரிப்பதால் மாமன், மைத்துனர் வழி ஒத்துழைப்பு கிடைக்கும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.
சுக்ரனின் வக்ர இயக்கத்தால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த புது முயற்சிகள் கைகூடும். மாற்றினத் தவர்கள் ஒத்துழைப்புச் செய்வர். 10–ல் செவ்வாய் சஞ்சரிப்பது யோகம்தான். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களுக்கு தலைமைப் பதவியும், புதிய பொறுப்புகளும் வந்து சேரும்.
என்றைக்கோ வாங்கிப் போட்ட இடம் இப்பொழுது விற்பனையாகி கணிசமான தொகை கைக்கு வந்து சேரும். ராகு–கேதுக்களின் ஆதிக்கம் கூடுதலாக இருப்பதால் பிள்ளைகள் வழியில் விரயங்கள் ஏற்படலாம். பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனுக்குடன் தீர்வு காண்பது நல்லது. வெளிநாட்டுப் பயணங்களை தள்ளி வைக்கும் சூழ்நிலையும் ஒரு சிலருக்கு உருவா  கும்.
ஏழரைச் சனியின் தொடக்க காலம்!
இதுவரை உங்கள் ராசிக்கு 11–ம் இடத்தில் சஞ்சரித்து வந்தார் சனி பகவான். புத்தாண்டு கடைசியில் ஏழரைச் சனியின் ஆதிக்கத்தில் தொடங்குகிறது. எனவே இனிய மாற்றங்கள் ஏராளமாக இனி வரப்போகின்றன. புனிதப் பயணங்களும், பொருளாதார நிலை உயர்வும் வரும். மங்கல நிகழ்ச்சிகளில் தங்கு தடைகள் அகலும். தொழில்   மாற்றம், ஊர் மாற்றம், வீடு மாற்றம் உருவாகும் நேரமிது.
ஏழரைச் சனி முதல் சுற்றும், மூன்றாவது சுற்றும் நடப்பவர்கள் எச்சரிக்கையோடு செயல்படவேண்டும். ஏற்ற பரிகாரங்களையும் செய்து கொள்ள வேண்டும். பொங்கு சனியின் ஆதிக்கம் நடப்பவர்கள் பொருள் குவிப்பர், புகழ் குவிப்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் சனி விருத்தியம்சத்தையே உங்களுக்கு கொடுக்கும். தனாதிபதியாகவும் சனி இருப்பதால் இக்காலத்தில் தன வரவு தடையின்றி வந்து சேர சனிக்கிழமை தோறும் எள் தீபம் ஏற்றி சனி பகவானை வழிபாடு செய்யுங்கள். சனி கவசம் பாடுவது நல்லது. திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரிச்சிக் கோவில் வன்னிமரத்தடி சனீஸ்வரரை வழிபட்டு வருவது நல்லது.
குரு மற்றும் சனியின் வக்ர காலங்கள்!
புத்தாண்டில் குருவின் வக்ரமும், சனியின் வக்ரமும் நிகழவிருக்கிறது.  சில கிரகங்கள் வக்ர காலத்தில் தான் நன்மையைச் செய்யும். பலம் பெற்றிருக்கும் நேரத்தில் பலன் கொடுக்காது. அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது குருவின் வக்ரம் உங்களுக்கு நன்மை தரும். கொடுக்கல்–வாங்கல்கள் சிறப்பாக இருக்கும். நண்பர்   களின் ஆதரவு கூடும். தொழிலை   விரிவுபடுத்தப் பார்ப்பீர்கள்.
அதே நேரத்தில் சனியின் வக்ரம் சஞ்சலத்தைக் கொடுக்கும். சகோதர ஒற்றுமையை குறைக்கும். தன வரவு வந்தாலும் மறுநிமிடமே செலவாகும். வழிபாடு இக்காலத்தில் வளர்ச்சியைக் கூட்டும்.
தனுசு ராசியில் பிறந்த பெண்களுக்கு!
தனுசு ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டு புதிய திருப்பங்கள் பலவற்றையும் கொடுக் கும் விதத்தில் அமையப் போகிறது. மதிப்பும், மரியாதையும் உயரும். மக்கட் செல்வங்களுக்கு மண மாலை சூட்டிப் பார்க்கப் போகிறீர்கள். பழைய கடன் கள் தீரும். புதிய தொழிலில் ஈடுபாடுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தைப் பற்றி விமர்சிப்பதை தவிர்ப்பது நல்லது.  
குருப்பெயர்ச்சிக்குப் பின்னால் இடமாற்றங்கள் வீடு மாற்றங்கள் அமையும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேருவர். தாய் வழியில் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் மாறும். பணியாளர்கள் பக்கபலமாக இருப்பர்.
ராகுப்பெயர்ச்சிக்குப் பின்னால் உங்கள் பெயரிலேயே தொழில் தொடங்கும் வாய்ப்பு உருவாகலாம். சேமிப்பு அதிகரிக்கும். சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு விரயங்கள் ஏற்படலாம். ராகு– கேது பிரீதியும், அனுமன் வழிபாடும் ஆனந்த வாழ்க்கையை வழங்கும்.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
உங்கள் ராசிநாதன் வியாழன் என்பதால் வியாழக்கிழமை தோறும் குரு தெட்சிணா மூர்த்தி வழிபாட்டை முறையாக மேற்கொள்ளுங்கள். பிறந்ததேதி மற்றும் கூட்டுத் தொகைக்குரிய எண்களின் ஆதிக்க நாளில் யோக பலம்பெற்ற நட்சத்திரம் சேரும் பொழுது சிறப்பு வழிபாடாக சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் உள்ள கீர்த்தி வழங்கும் கிழக்கு நோக்கிய தெட்சிணாமூர்த்தியை வழிபட்டு வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்.
நலம் தரும் ராகு–கேது பெயர்ச்சி!
இதுவரை உங்கள் ராசிக்கு 11–ம் இடத்தில் ராகுவும், 5–ம் இடத்தில் கேதுவும் சஞ்சரித்து வந்தார்கள். இந்தப் புத்தாண்டில் ஜூன் மாதம் 21–ம் தேதி கன்னி ராசியில் ராகுவும், மீன ராசியில் கேதுவும் பின்னோக்கிச் செல்கிறார்கள். இதனால் பெரிய மாற்றங்கள் வந்து சேரப் போகிறது. 10–ல் ராகு சஞ்சரிப்பதால் செயல்பாடுகளில் தீவிரம் காட்டுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் திட்டங்களுக்கான முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். மாமன், மைத்துனர் வழி ஒத்துழைப்பு கிடைக்கும்.
ராகுவின் பார்வை பலத்தால் இட மாற்றம், ஊர் மாற்றங்கள் ஒரு சிலருக்கு ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இலாகா மாற்றங்கள் உருவாகலாம். அஷ்டம ஸ்தானத்தை ராகு பார்ப்பதால் ஆரோக்கிய பாதிப்புகள் குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு வந்து கொண்டே இருக்கலாம். தொழிலில் பழைய பங்குதாரர்கள் விலகலாம். மாற்றினத்தைச் சார்ந்த புதிய பங்குதாரர்களை இணைத்து செயல்படுவீர்கள்.
கேதுவின் பலத்தால் வீடு, நிலம் வாங்குவதிலிருந்த பிரச்சினைகள் அகலும். வெளிநாட்டு முயற்சியில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தில் திடீர், திடீரென மனக்கசப்புகள் உருவாகி மறையும்.
குருப் பெயர்ச்சி  பலன்கள்!
புத்தாண்டில் குரு உச்சம் பெற்று சஞ்சரிக்கப் போகிறார். உங்கள் ராசிநாதன் உச்சம் பெறுவது யோகம் தான் என்றாலும், அஷ்டமத்தில் அல்லவா உச்சம் பெறுகிறார். எனவே, எதிர்பாராத மாற்றங்கள்  வந்து சேரும். இல்லம் கட்டி குடியேற வேண்டும் அல்லது இல்லம் வாங்க வேண்டுமென்ற எண்ணம் இப்பொழுது நிறைவேறப் போகிறது.
ஜூன் 13–ம் தேதி பெயர்ச்சியாகும் குரு அதன் பார்வை பலத்தால் 2, 4, 12 ஆகிய இடங்களைப் புனிதப்படுத்துகிறார். எனவே அந்த இடங்களுக்குரிய ஆதிபத்யங்கள் அனைத்தும் சிறப்பாக நடைபெறும். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். எடுத்த செயல்களில் வெற்றி காண்பீர்கள். வாகனம் வாங்கும் வாய்ப்பு கிட்டும். நண்பர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். சேமிப்பு சீட்டுகளில் சேர்ந்து பணம் கட்டி வருபவர்களுக்கு திடீரென பரிசு கிடைத்து பணவரவு வந்து சேரப்போகிறது.
சண்டை, சச்சரவில் சிக்கித் தவித்த குடும்ப உறவினர்கள் இப்பொழுது சமரசமாகி தங்கள் கடமைகளை உணர்ந்து பணிபுரிவர். தொழில் முன்னேற்றம் காணும் நேரமிது. அடிமைத் தொழிலிருந்து விலகி  ஏதேனும் ஒரு புதிய தொழில் தொடங்கும் திட்டத்தை உருவாக்குவீர்கள்.
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும். தொல்லை கொடுத்த எதிரிகள் விலகலாம். அரசியல் மற்றும் பொதுநல ஈடுபாடு கொண்டவர்களுக்கு செல்வாக்கு மேலோங்கும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் அதிகரிக்கும். மதி நுட்பத்தால் மக்கள் செல்வங்            களின் கல்வி முன்னேற்றத்திற்கு வித்திடுவீர்கள். அயல்நாட்டில் கல்வி கற்று அதிகப் புகழ் சேர்க்க வேண்டுமென்று விரும்பும் உங்கள் குழந்தைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். இடமாற்றம், நாடுமாற்றங்கள் ஒரு சிலருக்கு இனியதாக அமையும். இக்காலத்தில் திசைமாறிய தென்முகக் கடவுளை வழிபட்டால் அசையாத சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும்.

2014 VIRUCHIGAM விருச்சிகம்

Source: www.dailythanthi.com

2014-ம் ஆண்டு புத்தாண்டு பலன்கள்
விசாகம் 4–ம் பாதம், அனுஷம், கேட்டை வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: தோ, ந, நி, நே, நோ, ய, யி, யு உள்ளவர்களுக்கும்)
ஆண்டின்  தொடக்கம் முதல்  அத்தனையும்  யோகம் தான்!
சாதனை படைத்து சரித்திரத்தில் இடம்பெற வேண்டும் என்று செயல்படும் விருச்சிக ராசி நேயர்களே!
பிறக்கும் புத்தாண்டு உங்களுக்குப் பெருமைகளைக் குவிக்கும் விதம் அமையப் போகிறது. பார்க்கப் போகும் குருவால் பணவரவு கூடும். பாராட்டும் புகழும் சேரும்.  
புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தனாதிபதி குரு வக்ரம் பெற்று தன ஸ்தானத்தையே பார்க்கிறார். புதனும், குருவும் பரிவர்த்தனை யோகம் பெறுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக விரயாதி       பதியாக விளங்கும் சுக்ரன் வக்ரம் பெறுகிறார். தொழில் ஸ்தானாதிபதி சூரியன் தன ஸ்தானத்தில் ஒன்பதுக்கு அதிபதி சந்திரனுடன் இணைந்து தொடங்கும் இந்த 2014 உங்களுக்கு திரண்ட செல்வத்தையும், திருப்பணிகள் செய்யும் வாய்ப்புகளையும் உருவாக்கப் போகிறது.
பொதுவாக உங்கள் ராசிநாதன் செவ்வாய் என்பதால் மனவலிமை அதிகம் படைத்தவர்களாக விளங்குவீர்கள். மகத்தான பலன்தரும் குருபகவான் வாக்கு ஸ்தானத்திற்கு அதிபதியாக விளங்குவதால் வாக்கு பலிதமும், கனவு பலிதமும் உங்களுக்கு உண்    டாகும்.
மூலபலமாக உங்கள் மூளை பலத்தை உபயோகிப்பதால் தான் விரைவில் வெற்றிக் கனியை எட்டிப் பிடித்து வி.ஐ.பி.க்களின் பட்டியலிலும் இடம்பெற முடிகிறது.
இப்படிப்பட்ட குணாதிசயங்களைப் பெற்ற உங்களுக்கு இந்த 2014 புத்தாண்டு எப்படிப்பட்ட பலன் தரும், என்பதைப்பற்றிப் பார்ப்போம்.
1.1.2014 முதல் 12.6.2014 வரை
புத்தாண்டு 2014–ன் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். தனாதிபதி குரு தன ஸ்தானத்தை பார்க்கிறார். அதுமட்டுமல்ல புதனும், குருவும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கிறார்கள். எனவே, வருடத் தொடக்கமே வசந்தமாக  இருக்கிறது. வருமானம் திருப்திகரமாக இருக்கும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும்.  
தொழில் ஸ்தானாதிபதி சூரியன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புதிய ஒப்பந்தங்கள் வந்து கொண்டேயிருக் கும். தொழிலுக்காக அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.   
உச்ச சனியின் ஆதிக்கம் உங்களுக்கு உன்னத வாழ்வளிக்கும் விதத்திலும், மெச்சும் புகழையும் உயர்த்தும் விதத்திலும் சஞ்சரிக்கிறது. பொங்கு சனியின் ஆதிக்கம் நடப்பவர்களுக்கெல்லாம் மங்கல தகவல் வந்து கொண்டேயிருக்கும். உங்களைப் பொறுத்த வரை சகாய ஸ்தானத்திற்கும், சுக ஸ்தானத்திற்கும் அதிபதியாக சனி விளங்குகிறார். எனவே சனிக்கிழமை விரதமிருந்து விநாயகப் பெருமானையும், சனி பகவானையும், அனுமனையும் தொடர்ந்து வழிபட்டு வருவது நல்லது.
விருச்சிக சனியின் சஞ்சாரம்!
இதுவரை விரயச் சனியின் ஆதிக்கத்தில் உங்கள் ராசி இருந்தது. எனவே, விரயங்கள் இருக்கிறதே என்று கவலைப்பட்டிருப்பீர்கள். இந்த ஆண்டு கடைசியில் ஒரு வழியாக விரயச் சனியின் ஆதிக்கம் நிறைவு பெற்று ஜென்மச்சனியாக சஞ்சரிக்கப் போகிறார்.
உங்கள் ராசியைப் பொறுத்தவரை சனி சகாய ஸ்தானாதிபதி ஆவார். உங்களுக்கு வேண்டிய சகல பாக்கி யங்களையும் சனிபகவான் தான் கொடுப்பவராக விளங்குகிறார். அப்படிப்பட்ட சனிபகவான் உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது அளவற்ற திரவியங்களை அள்ளிக் கொடுப்பார். நிலம், பூமி வாங்கும் யோகமுண்டு.  
வீடுமாற்றம், நாடுமாற்றம், இலாகாமாற்றம், வாகன மாற்றம் என்று வரும் மாற்றங்கள் நல்ல மாற்றங்களாக அமையும்.
சுக ஸ்தானாதிபதியாகவும் சனி விளங்குவதால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.  வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வந்து உதவிக்கரம் நீட்டுவர். வெளியுலகத் தொடர்பு விருத்திக்கும். தாய்வழி ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
குரு மற்றும் சனியின் வக்ர காலம்!
இந்தப் புத்தாண்டில் குருவின் வக்ரமும் நிகழ்கிறது. சனியின் வக்ரமும் நிகழவிருக்கிறது. குரு வக்ர காலத்தில் வாங்கல்–கொடுக்கல்கள் ஒழுங் காக விழிப்புணர்ச்சி தேவை. வருமானம் திருப்திகரமாக இருந்தாலும் செலவுகள் கூடுதலாக இருக்கும். பிள்ளைகள் வழியிலும் மேற்பார்வை செலுத்துவது நல்லது. சனியின் வக்ர காலத்தில் உடன் பிறப்புகளையும், உறவினர்களையும் அனுசரித்துச் செல்லுங்கள். பயணங்கள் அதிகரிக்கும்.இடம், பூமி வாங்குவதிலும் மற்றும் பத்திரப் பதிவுகளிலும் கவனம் தேவை.
விருச்சிக ராசியில் பிறந்த பெண்களுக்கு!
விருச்சிக ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப்புத்தாண்டு ஒரு பொன்னான ஆண்டாக அமையப் போகிறது. முத்தான வாழ்க்கைக்கு அஸ்திவாரமிடும் விதத்தில் கிரகங்கள் உலா வருகின்றன. குறிப்பாக குருப்பெயர்ச்சிக்குப் பின்னால் பொருளாதார நிலை மேலோங்கும். பணமழையில் நனையப் போகிறீர்கள். பக்கபலமாக இருப்பவர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பு செய்வர். மக்கள் செல்வங்களால் உதிரி வருமானம் கிடைக்கும். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்    படும். தொழில் முயற்சியில் ஈடுபடுவோருக்கு தேர்ந்தெடுத்த தொழில் எதுவாக இருந்தாலும் அதில் லாபம் கிடைக்கும். வருடம் முழுவதும் வசந்த காற்று வீசும் இந்த நேரத்தில் அரசியல் ஈடுபாடு கொண்டவர்களுக்கு அதிக நன்மை ஏற்படும். வெற்றிப் பாதையில் வீர நடை போடுவீர்கள். தங்கம், வெள்ளி, மற்றும் விலையுயர்ந்த பொருட்களையெல்லாம் தாராளமாக வாங்கி சேர்க்கும் வாய்ப்பு கிட்டும்.
ராகு–கேது பெயர்ச்சியை முன்னிட்டு யோக பலம்பெற்ற நாளில் சர்ப்ப சாந்தி பரிகாரத்தை செய்து கொண்டால் தேக நலனும் சீராகும். செல்வ வளமும் பெருகும். சனிப் பெயர்ச்சிக்குப் பிறகு ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
உங்கள் ராசியில் சந்திரன் நீச்சம் பெறுவதால் பவுர்ணமியன்று கிரிவலம் வருவதன் மூலம் பலன் அதிகம் பெறலாம். வார வழிபாடாக ஆனைமுகப் பெருமான், ஆறுமுகப் பெருமான், அனுமன், நந்தீஸ்வரரை வழிபாடு செய்யுங்கள். பிறந்த தேதிக்குரிய எண் ஆதிக்க நாளும், யோக பலம் பெற்ற நட்சத்திரமும் சேரும் நேரத்தில் சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டியில் வீற்றிருந்து அருள் வழங்கும் கற்பக விநாயகரை வழிபட்டு காரிய வெற்றியை வரவழைத்துக் கொள்ளுங்கள்.
லாப ஸ்தான ராகு, பஞ்சம ஸ்தான கேது!
இதுவரை உங்கள் ராசிக்கு 12–ம் இடத்தில் ராகுவும், 6–ம் இடத்தில் கேதுவும் சஞ்சரித்து வந்தார்கள். எனவே, பரபரப்பான வாழ்க்கை உங்களுக்கு அமைந்திருக்கும். இனிமேல் உங்கள் பணத்தேவைகள் பூர்த்தி செய்யும் விதத்தில் ராகு–கேதுக்களின் பெயர்ச்சி அமைகிறது. கன்னி ராகு எண்ணியதை முடித்து வைக்கும். புண்ணிய ஷேத்திரங்களுக்கு சென்று மகிழ்ச்சி காண்பீர்கள். கண்ணியமிக்க நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைத்து காரிய வெற்றி காண்பீர்கள்.
லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது புதிய ஒப்பந்தங்கள் அதிகரிக்கும். நாட்டுப் பற்று மிக்கவர்கள் உங்களோடு இணைந்து செயலாற்றுவர். வீட்டு மனை வாங்கியதில், வீடு கட்டிக் குடியேற வேண்டுமென்ற விருப்பம் நிறைவேறும்.
பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் நிறையவே நடைபெறும். பிள்ளைகள் வழியில் உதிரி வருமானங்கள் வந்து சேரும். பூர்வீக சொத்துக்களால் லாபமுண்டு. புதிய வாய்ப்புகள் அதிகரிக்கவும், பொருளாதார நிலை மேலும் உயரவும் முறையாக யோக ஸ்தலத்தில் சர்ப்ப சாந்தி செய்வது நல்லது.
குதூகலம்  தரும்  குருப்பெயர்ச்சி  பலன்கள்!
புத்தாண்டில் குரு உச்சம் பெற்று கடக ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். உங்கள் ராசி அடிப்படையில் தன பஞ்சமாதிபதியான குருபகவான் உச்சம் பெற்று உங்கள் ராசியைப் பார்க்கும் நேரம் ஒரு பொன்னான நேரமாகும். இந்த நிகழ்வு ஜூன் 13–ம் தேதி நிகழ  விருக்கிறது. எனவே இந்தப் புத்தாண்டில் பொன்னும், பொருளும் போற்றுகிற செல்வாக்கும், இன்னும் பெருகும். இயல்பாக வளம் கிடைக்கும். மன்னவரும், மந்திரியும், சான்றோர்களும் அன்யோன்ய உறவாகி அனைத்துக் காரியங்களிலும் வெற்றி பெற வழிவகுத்துக்கொடுப்பர்.
பலம்பெற்ற குருவின் பரிபூரண பார்வை உங்கள் ராசியில் பதிவது மிகுந்த யோகம் ஆகும். குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கேற்ப தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்துதவுவர். பட்டி தொட்டிகளில் எல்லாம் உங்கள் புகழ் பரவும். பாராட்டுக்   களையும், விருதுகளையும் குவிப்பீர்கள். உற்றார்,    உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரி யப்படுவர்.
கல்யாணக் கனவுகள் நனவாகும். கார், வண்டி வாகன சேர்க்கைகள் அதிகரிக்கும். ஊரில் ஒரு வீடு கட்டலாம் என்று நினைத்தவர்கள் கூட இரண்டு வீடுகளைக்   கட்டும் வாய்ப்பு உருவாகும். பொருளாதார நிலை உயரும். புதிய தொழிலுக்கு நண்பர்கள் போட்டி போட்டுக்கொண்டு மூலதனம் தருவர். அரசியல் வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். அயல்நாட்டிலிருந்தும் அனுகூலத் தகவல் வந்து சேரும். இக்காலம் ஒரு பொற்காலமாக அமைய திசைமாறிய தென்முகக் கடவுளை வழிபடுவது நல்லது.
குருவின் பார்வை பலத்தால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வாரிசு இல்லாத தம்பதியருக்கு வாரிசு உருவாகி மகிழ்ச்சியை வழங்கும். மருத்துவச் செலவுகள் குறையும். மகத்தான உடல் வாகைப்பெற்று உற்சாகத்தோடு பணிபுரியப் போகிறீர்கள். பிள்ளைகள் வழியிலும் பெருமை சேரும்.

2014 THULAM துலாம்

Source: www.dailythanthi.com

2014-ம் ஆண்டு புத்தாண்டு பலன்கள்
சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: ர, ரி, ரு, ரே, த, தி, து, தே உள்ளவர்களுக்கும்)
விலகப் போகிறது  ஜென்மச் சனி!
ஒப்பனை செய்து கொள்வதிலேயே எப்பொழுதும் விருப்பம் கொள்ளும் துலாம் ராசி நேயர்களே!
இப்பொழுது வரப்போகிற புத்தாண்டு உங்களுக்கு ஏராளமான நற்பலன்களை வழங்கப் போகின்றன. காரணம் சனியின் ஆதிக்கம் வருடக் கடைசியில் விலகுகிறது. ஜென்ம ராகுவும் 12–ம் இடத்தை நோக்கிச் செல்கிறது. சப்தம கேது 6–ல் சஞ்சரிக்கப் போகிறார். இதற்கிடையில் 10–ல் குரு பெயர்ச்சியானாலும் கூட அதன் பார்வை பலம் உங்களுக்கு பக்கபலமாக இருக்கப் போகிறது. எனவே இந்தப் புத்தாண்டு பொன்    கொழிக்கும் ஆண்டாக அமையப் போகிறது.
ஜென்மச் சனியின் ஆதிக்கமும் விரய ஸ்தானத்தில் செவ்வாயின் பலமும் கூடுதலாக உள்ளது. தனாதிபதி செவ்வாய் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ராசிநாதன் சுக்ரன் வக்ரம் பெற்றிருக்கிறார். ஜென்மத்தில் ராகுவும், 7–ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள்.  
பொதுவாக உங்கள் ராசிநாதன் சுக்ரன் என்பதால் உடலை அலங்கரித்துக்கொள்வதிலும், உன்னதமாகப் பேசி மற்றவர்கள் மனதைக் கவர்வதிலும் கெட்டிக்காரராக விளங்குவீர்கள். நல்ல சந்தர்ப்பங்களை விடக்கூடாது என்று நினைப்பீர்கள்.
எதையும் மேலோட்டமாக பார்க்காமல், ஆழ்ந்து பார்ப்பது உங்கள் அதிசய குணம். அடிமைத் தொழில் உங்களுக்குப் பிடிக்காது. மற்றவர்கள் உங்களை அடக்கி வைக்க நினைத்தால் அவர்களை இரண்டில் ஒன்று பார்த்து விடுவீர்கள்.  
இப்படிப்பட்ட குணாதிசயங்களைப் பெற்ற உங்களுக்கு இந்த 2014 புத்தாண்டு எப்படிப்பட்ட பலன் தரும் என்பதை பார்க்கலாம்.  
1.1.2014 முதல் 12.6.2014 வரை
புத்தாண்டு தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் வக்ரம் பெறுகிறார். எனவே, ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். உழைப்புக் கேற்ற பலன் கிடைக்க வேண்டுமானால் ராசிநாதன் பலம் பெற்றிருக்க வேண்டும். அதே நேரத்தில் குரு வக்ரம் பெற்று உங்கள் ராசியைப் பார்ப்பது ஒரு வழிக்கு நன்மைதான்.
வழக்குகளில் வெற்றி கிட்டும். வளர்ச்சிக்கு வித்திட உறவினர்களும், உடன்பிறப்புகளும் ஒத்துழைப்புச் செய்வர். வீடுமாற்றம், இடமாற்றங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். சர்ப்ப கிரகத்தின் ஆதிக்கம் உங்கள் ராசியிலும், 7–ம் இடத்திலும் இருப்பதால் எதையும் தீர்க்கமாக முடிவெடுக்க இயலாது. எனவே, வருடத் தொடக்கத்தில் கொஞ்சம் பொறுமையைக் கடைப் பிடிக்க வேண்டியது அவசியமாகும்.
மற்றவர்களின் பேச்சை நம்பி செயல்பட்டு வீண் விரயங்களையும் ஒரு சிலர் சந்திக்க நேரிடும்.
விருச்சிக சனியின் சஞ்சாரம்!
இதுவரை உங்கள் ராசியிலேயே சஞ்சரித்து வந்த சனி பகவான் இந்த ஆண்டு கடைசியில் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இது உங்களுக்கு மிகுந்த நன்மையை வழங்கும். பொதுவாக ஏழரைச் சனியில் குடும்பச் சனி நடைபெறும் பொழுது, குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடை      பெறும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வசதி வாய்ப்புகள் பெருகும். வளமான தொழில் அமைய நண்பர்கள் வழிகாட்டுவர். உறவினர் பகை அகல எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஊர் மாற்றம், நாடு மாற்றம் ஒரு சிலருக்கு வந்து சேரலாம். இடம், பூமி வாங்கி வீடு கட்டும் யோகம் ஒரு சிலருக்கு உண்டு. இல்லத்தில் நீண்ட நாட்களாக நடைபெற வேண்டிய சுபகாரிய நிகழ்வுகள் படிப்படியாக நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும்.
ஆரோக்கியத்திற்காக ஒரு சிறு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உருவாகலாம். சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சனிக்கவசம் பாடி சனி பகவானை வழிபடுவது நல்லது.
குரு மற்றும் சனியின் வக்ர காலம்!
புத்தாண்டில் குருவின் வக்ரமும், சனியின் வக்ரமும் நிகழவிருக்கிறது. பொதுவாகவே ஒரு சில கிரகங்கள் வக்ரம் பெறும்பொழுது நன்மையே செய்யும். ஒரு சில கிரகங்கள் வக்ர இயக்கத்தின் போது செயல்பாடுகளில் கொஞ்சம் தாமதத்தை ஏற்படுத்தும். குறிப்பாக உங்கள் ராசியைப் பொறுத்த வரை குருவின் வக்ர காலம் உங்களுக்கு நன்மை தரும் விதத்திலேயே இருக்கும்.
அதே நேரத்தில் சனியின் வக்ர காலத்தில் சஞ்சலங்கள் குடிகொள்ளும். விரயம் கூடுதலாக இருக்கும். உடல் ஆரோக்கியத்திலும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு அகலும். பிள்ளைகள் வழியிலும் ஏற்பாடு செய்த முயற்சிக்கு இடையூறுகள் வந்து அகலும்.
துலாம் ராசியில் பிறந்த பெண்களுக்கு!
துலாம் ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டு புதிய வாய்ப்புகளை வரவழைத்துக் கொடுக்கப் போகிறது. ஜென்மச் சனி விலகப் போகிற நேரம் என்பதால், நன்மையை அதிகம் எதிர்பார்க்கலாம். 10–ல் சஞ்சரிக்கும் குரு பலம் பெறுவதால், முத்தாய்ப்பாக தொடங்கும் தொழிலுக்கு மூலதனம் கிடைக்கும். முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். உத்தியோகம், தொழிலில் உள்ளவர்களுக்கு ஊர் மாற்றம், இலாகா மாற்றம் உருவாகலாம். வெற்றிக்குரிய செய்திகள் வருடக் கடைசியில் வந்து சேரும். கணவன்–மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகன்று கனிவு கூடும். குடும்ப உறவில் குழப்பத்தை உருவாக்கியவர்கள் விலகிச் செல்வர். ராகு–கேது பெயர்ச்சியின் விளைவாக ஒரு சிலருக்கு தூர தேசங்களிலிருந்து அழைப்புகள் வரலாம். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். அன்றாட வாழ்க்கை நன்றாக அமைய திருமால், திருமகள், ஆஞ்சநேயர் வழிபாட்டோடு ராகு–கேது பிரீதியும் செய்வது நல்லது.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
உங்கள் ராசிநாதன் சுக்ரன் என்பதால் வெள்ளிக்கிழமை தோறும் அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். பிறந்த தேதி மற்றும் கூட்டுத்தொகைக்குரிய எண்களின் ஆதிக்க நாளில் யோகபலம் பெற்ற நட்சத்திரமும் சேரும் நேரத்தில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டம் பி.அழகாபுரியில் வீற்றிருந்து அருள்வழங்கும் மகிஷாசுர மர்த்தினியின் அவதாரமான பொன்னழகியம்மனை வழிபட்டு பொருள் வளம் பெருகும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.
நலம் தரும் ராகு–கேது பெயர்ச்சி!
இதுவரை உங்கள் ராசியில் ராகுவும், 7–ல் கேதுவும் சஞ்சரித்து வந்தார்கள். இந்தப் புத்தாண்டில் ராகு–கேது பெயர்ச்சி ஜூன் 21–ம் தேதி நிகழவிருக்கிறது. 12–ல் ராகுவும், 6–ல் கேதுவும் மாறப் போகிறார்கள். இதன் விளைவாக வருடத்தொடக்கத்திலேயே நற்பலன்கள் வந்து சேர, யோகபலம் பெற்ற நாளில் சர்ப்ப சாந்தியை செய்வது நல்லது.
மறைந்த கேதுவால் நிறைந்த தன லாபம் கிடைக்கும் என்றாலும், விரயங்களும் கூடுதலாகவே இருக்கும். ஊர் மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். ஒருசிலருக்கு அந்நிய நாடு, அந்நிய மாநிலங்களுக்கு உத்தியோக ரீதியாக செல்லும் வாய்ப்பு கிட்டும். எதிரிகளின் பலம் குறையும். தொழில் கூட்டாளிகளை மாற்ற முன்வருவீர்கள். புதிய தொழில்தொடங்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொள்பவர்களுக்கு வங்கிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தோடு குதூகலப் பயணங்களை மேற்கொள்வீர்கள். அருமைப் புதல்வர்களால் உதிரி வருமானங்கள் வந்து சேரும். குழந்தைகளின் திருமணத்தை முன்னிட்டு ஆபரணங்களை வாங்க முன்வருவீர்கள். வாகன மாற்றம் செய்ய உகந்த நேரமிது.
குருப் பெயர்ச்சி  பலன்கள்!
புத்தாண்டில் குரு உச்சம் பெறப் போகிறார். இதுவரை 9–ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான் இப்பொழுது 10–ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த நிகழ்வு ஜூன் 13–ம் தேதி நிகழவிருக்கிறது. 10–ல் குரு வந்தால் பதவி மாற்றங்கள், இடமாற்றங்கள் உருவாகும் என்பது ஒரு நியதி. அவரவர் சுய ஜாதகத்தைப் பொறுத்தும், திசாபுத்தி அடிப்படையிலும் அது நிகழலாம்.
3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. கடன்களை வாங்க வைப்பவரும் குரு தான். அதே நேரத்தில் கடன்களை நிவர்த்தி செய்ய வைப்பவரும் குரு தான். எதிர்ப்புகளை உருவாக்குவதும் குரு தான். அந்த எதிரிகளை சம்ஹாரம் செய்ய வைப்பவரும் குரு தான். 10–ல் வந்த குருவை வரவேற்றுக் கொண்டாடி, பதிகம் பாடி வழிபட்டால் முத்தான வாழ்க்கைக்கு முன்னேற்றத்தை வழங்குவார்.
பொதுவாக குரு இருக்குமிடத்தைக் காட்டிலும் பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகமல்லவா? எனவே அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, குருவின் பார்வை பதியுமிடங்களான 2, 4, 6 ஆகிய இடங்கள் புனிதமடைகின்றன. எனவே கொடிகட்டிப் பறந்த குடும்பப் பிரச்சினைகள் தீரும். கொடுக்கல்–வாங்கல்கள் ஒழுங்காகும். சேமிப்பின் மூலம் தங்கம், வெள்ளி ஆபரணங்களையோ, இடம், பூமிகளையோ வாங்க முன்வருவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலும்.
தாய்வழி ஆதரவு தக்க விதத்தில் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு மாற்றினத்தவர் உங்களுக்கு ஒத்துழைப்பு செய்வர். நடந்து வரும் தொழிலில் ஈடுபாடு குறையலாம். நாகரீக தொழில்களில் மோகம் அதிகரிக்கும். கடந்து வந்த பாதைகளிலிருந்த  குறுக்கீடுகள் அகலும். காலம், காலமாக பகைமை உணர்வோடு விலகியிருந்த உறவினர்கள் இப்            பொழுது உங்களை தேடி வந்து ஆச்சரியப்பட வைப்பர். ரேஸ் குதிரையைப் போல உங்கள் மனவேகம் அதிகரிக்கும். செயல்வேகம் கூடும். திறமை பளிச்சிடும். திசைமாறிய தென்முகக் கடவுளை முறையாக  வழிபடுவது முன்னேற்றத்திற்கு வித்திடும்.

2014 KANNI கன்னி

Source: www.dailythanthi.com

2014-ம் ஆண்டு புத்தாண்டு பலன்கள்
உத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: ப, பி, பு, பூ, ஷ, ண, ட, பே, போ உள்ளவர்களுக்கும்)
புத்தாண்டில்  புதுவீடு  வாங்கும்  யோகம்!
வந்து உறவாடும் மாந்தர்களை வாய்ப்பேச்சாலே வசமாக்கும் கன்னி ராசி நேயர்களே!
புத்தாண்டு பிறக்கப் போகிறது. ஏழரைச் சனியின் ஆதிக்கத்தில் சிக்கியிருப்பதால் இந்த ஆண்டு எப்படியிருக்குமோ என்ற கவலை இருக்கும்?. கவலை வேண்டாம், பணப்புழக்கம் அதிகரிக்கும் விதத்தில் கிரக நிலைகள் சஞ்சரிக்கின்றன.
வருடக் கடைசியில் சனி விலகுகிறது. என்றாலும், கொஞ்சம் முன்னதாகவே நல்ல பலன்களைக் கொடுக்கத் தொடங்கி விடும். நண்பர்களால் பலவித நல்ல செயல்களை முடித்துக் காட்டுவீர்கள். ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசியில் செவ்வாய் சஞ்சரிக்கின்றார். அடுத்து குரு பகவான் 10–ல் வக்ரம் பெற்று விளங்குகிறார்.
ராசிநாதனும் பலமிழந்து விரயாதி    பதியுடனும், லாபாதிபதியுடனும் இணைந்து வருடத் தொடக்கம் உருவாகிறது. இப்படி பிறக்கும் புத்தாண்டில் உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய குருப்பெயர்ச்சியும், ராகு–கேது பெயர்ச்சியும், சனிப்பெயர்ச்சியும் வழிகாட்டுகிறது.
உங்களைப் பொறுத்தவரை சிந்தனை ஆற்றல், சொல் வளம், செயல்பாடுகளில் ஈடுபாடு ஆகிய மூன்றும் இணைந்திருப்பதால்தான் வெற்றி உங்கள் வீடு தேடி வருகிறது. சில பெரிய மனிதர்கள் கூட செய்யமுடியாத சில காரியங்களை நீங்கள் செய்து பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். கலை, இலக்கியம் உங்களுக்குப் பிடிக்கும். கலகலப்பை எப்பொழுதும் கூடவே வைத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்புவீர்கள்.
1.1.2014 முதல் 12.6.2014 வரை
வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் வலிமை இழந்திருக்கிறார். அவரோடு லாபாதிபதியும், விரயாதிபதியும் இணைந்திருக்கிறார்கள். எனவே, வரவு திருப்திகரமாக வந்தாலும் செலவு நடைகள் கூடுதலாகவே இருக்கும். வழக்கமாக சிக்கனத்தைக் கடைப்பிடிக்கும் நீங்கள் இப்பொழுது செலவு அதிகமாக வருகிறதே என்று கவலைப்படுவீர்கள். பக்கபலமாக இருக்கும் நண்பர்களில் ஒருசிலர் உங்களை விட்டு விலகலாம்.
3, 8–க்கு அதிபதியான செவ்வாய் உங்கள் ராசியில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. உடன் பிறப்புகளையும், உடன்இருப்பவர்களையும் நம்பி செயல்பட்டு சில ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். ஆயினும் தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும். காரணம் குருவின் வக்ர இயக்கம் தான். குரு 4, 7–க்கு அதிபதியாகி 10–ல் வக்ரம் பெறும்பொழுது ஓரளவு நன்மைகளை வழங்கும்.
தக்க விதத்தில் அஞ்சல் வழித் தகவல் வந்து சேரும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். பணப்புழக்கத்தை பொறுத்த வரை 2–க்கு அதிபதி சுக்ரன் வக்ரம் பெற்றிருப்பதால் கொடுத்த கடன்கள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை விற்கவும் நேரிடும்.
வலிமை இழந்திருக்கும் புதனை திருப்திப்படுத்த புதன்கிழமை தோறும் விரதமிருந்து விஷ்ணு வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். நரசிம்மர் வழிபாடு உங்களுக்கு நலம் தரும். ராகு–கேது பெயர்ச்சிக்குப் பிறகு தடைகளும், தாமதங்களும் அகலும். கடைதிறப்பு விழாக்களும், கட்டிடப்பணியும் தொடரும் வாய்ப்புகளை ஜென்ம ராகுவும், சப்தம கேதுவும் உருவாக்கும். இந்த ஆண்டில் சர்ப்ப தோஷத்திலிருந்து விடுபட்டு சந்தோஷம் கிடைக்க வேண்டுமானால் ஒப்பற்ற ராகு–கேதுக் களுக்கு நீங்கள் பலன் தரும் பரிகாரங்களைச் செய்ய வேண்டும்.
விருச்சிக சனியின் சஞ்சாரம்!
இதுவரை உங்கள் ராசிக்கு 2–ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் இந்தப் புத்தாண்டில் 3–ம் இடத்தில் சஞ்சரித்து முன்னேற்றத்தை வழங்கப் போகிறார். ஏழரைச் சனி விலகப் போகிறது. இனி ஏராளமான நல்ல செய்திகள் உங்களை நாடிவரப் போகின்றது.  
சனி விலகும் சமயத்தில் சனிக்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்லது. திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, சிவகங்கை மாவட்டத்திலுள்ள வன்னி      மரத்தடியில் வீற்றிருந்து அருள்வழங்கும் சனீஸ்வர பகவான் இருக்கும் பெரிச்சிக் கோவில் போன்ற ஸ்தலங்களுக்கெல்லாம் வாய்ப்பிருக்கும் பொழுது சென்று வழிபட்டு வரலாம்.  
குருவின் வக்ரமும், சனியின் வக்ரமும்!
புத்தாண்டில் குருவும் வக்ரமாகிறார், சனியும் வக்ரமாகிறார். 4, 7–க்கு அதிபதியான குரு வக்ரம் பெறுவது நன்மையையே வழங்கும். வீடுகட்டிக் குடியேறும் வாய்ப்பும், வியக்கும் விதத்தில் வாகனம் வாங்கி மகிழும் வாய்ப்பும் கிட்டும். தொழில் வளர்ச்சியைக் கூட்டும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழப்போகிறீர்கள். புகழ் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து புதிய திருப்பங்களை உருவாக்குவார்கள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும். சனியின் வக்ரம் நன்மையும், தீமையும் கலந்ததாகவே இருக்கும். எதிரிகள் சரணடைவர். பிள்ளைகள் வழியில் பிரச்சினையும், உறவினர்களால் விரயங்களும் ஏற்படலாம்.
கன்னி ராசியில் பிறந்த பெண்களுக்கு!
கன்னி ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டு பெருமை சேர்க்கும் ஆண்டாக அமையப் போகிறது. ஆண்டின் தொடக்கத்தில் குரு வக்ரம் பெறுவதால் தாய்வழி ஆதரவு பெருகும். தனவரவு திருப்திகரமாக இருக்கும்.
குருப்பெயர்ச்சிக்குப் பின்னால் இடமாற்றம், வீடு மாற்றங்களை ஒருசிலர் சந்திக்க நேரிடும். குருவின் பார்வை பலத்தால் சகோதர ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் கல்யாணக்     கனவுகள் நனவாகும். கணவன்–மனைவிக்குள் இருந்த சண்டை சச்சரவுகள் விலகும்.  
ஏழரைச் சனி விலகும் இந்த ஆண்டு ஒரு இனிய ஆண்டுதான். மாபெரும் கிரகங்கள் விலகுவதற்கு முன்னதாகவே சில நல்ல பலன்களை கொடுத்து விடும். அந்த அடிப்படையில் உத்தியோகம், தொழிலில் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடிவரும். ராகு–கேது பெயர்ச்சிக்குப் பின்னால் சில திடீர் மாற்றங்கள் உருவாகலாம். அவை நல்ல மாற்றங்களாக அமைய முன்னதாகவே சர்ப்ப சாந்திகளை செய்து கொள்வது நல்லது.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
உங்கள் ராசிநாதன் புதன் என்பதால் புதன்கிழமை தோறும் விஷ்ணு ஆலயத்திற்கு சென்று ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. பிறந்த தேதி அடிப்படையில் சிறப்பு வழிபாட்டை மேற்கொள்வதோடு, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகிலுள்ள தென்திருப்பதி என்று சொல்லப்படுகின்ற அரியக்குடியிலிருந்து அருள்வழங்கும் விஷ்ணுவையும், இலக்குமியையும் வழிபட்டு விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.
நன்மை தரும் ராகு–கேது பெயர்ச்சி!
இந்தப் புத்தாண்டு 2014 ஜூன் 21 முதல் சொல்லைச் செயலாக்கும் விதத்தில் ராகுவும், கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். ஜென்மத்தில் ராகுவும், 7–ல் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது சர்ப்பதோஷம் உருவாகிறது. எனவே, குடும்பத்தில் குழப்பங்களும், உடன் இருப்பவர்களால் மனக்கசப்பும் வரும். காரியத்தடை அகலவும், காசு பணப்புழக்கம் அதிகரிக்கவும், முறையாக சர்ப்பசாந்தியை செய்வதே நல்லது.
பொதுவாக ஜென்ம ராகு வளர்ச்சியையும், தளர்ச்சியையும் மாறி, மாறிக்கொடுப்பார். பக்குவமில்லாதவர்களின் பழக்கம் சிக்கல்களை உருவாக்கும். இருந்தாலும் அஷ்டமத்து கேதுவின் மாற்றமே உங்களுக்கு அதிகபட்சமான நன்மையை வழங்கும். சிந்தித்து செயல்பட்டால் சிறப்புகள் வந்து சேரும். கூட்டாளிகள் பக்கபலமாக இருந்தாலும் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. வீட்டில் உள்ளவர்களையும் கொஞ்சம் அனுசரித்துச் சென்றால் அமைதிகாண இயலும். சப்தம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வர். நிகழ்காலத் தேவைகள் கடைசி நேரத்தில் தான் பூர்த்தியாகும். இதுபோன்ற காலங்களில் மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு பலன் தரும்.
மகிழ்ச்சி  தரும்  குருப்பெயர்ச்சி!
புத்தாண்டில் குரு உங்கள் ராசிக்கு 11–ம் இடத்தில் உச்சம்பெற்று சஞ்சரிக்கப் போகிறார். லாப ஸ்தானத்தில் குரு உச்சம் பெறுவது நன்மைதான். அதன் பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே சகோதர வழி ஒற்றுமையைக் கூட்டும். இதுவரை முன்னுக்குப் பின் முரணாக பேசிக் கொண்டிருந்த சகோதரர்கள் இப்பொழுது உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.
தூரதேசத்திலிருந்து வரும் தகவல்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை வழங்கும். தொழிலில் எதிர்பார்த்த படியே லாபம் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக இருக்கும். சகோதர வர்க்கத்தினர் பாகப் பிரிவினைகளைச் செய்து கொள்ளும் பொழுது, கொஞ்சம் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். குழந்தைகளின் முன்னேற்றத்தில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள்.
 ஒரு சில குழந்தைகள் மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்ல வேண்டுமென்ற எண்ணத்தை தெரிவிப்பர். அதைச்செயலாக்குவதில் மும்மரமாக இருப்பீர்கள்.
குடும்ப ஒற்றுமை பலப்படும். பிரிந்து சென்ற வாழ்க்கைத் துணை பிரியமில்லாமல் இருக்கிறாரே என்று நினைத்தவர்கள் குருவின் பரிபூரண பார்வை சப்தம ஸ்தானத்தில் பதிவதால் அன்யோன்ய உறவுக்கு ஆளாகி அழகிய வாரிசும் பெற்றெடுப்பர். வெளிநாட்டுப் பயணத்தில் இருந்த தடை அகலும். விரும்பும் விதத்தில் உங்களுக்கு உத்தியோக மாற்றங்களும், ஊதிய உயர்வும் தானாகவே வந்து சேரும். இட விற்பனை உங்கள் கடன் சுமை குறைய வழிகாட்டும்.
இதுபோன்ற காலங்களில் வியாழன் தோறும் விரதமிருந்து குரு வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. தென்முகக் கடவுளுக்குரிய சிறப்பு ஸ்தலங்களில் திசைமாறிய தென்முகக் கடவுளை தேர்ந்தெடுத்து வழிபட்டு வருவது நல்லது. குரு கவசம் பாடி குருவை வழிபடுவதன் மூலம் குழப்பங்களிலிருந்து விடுபட இயலும்.