Wednesday 16 September 2009

ச‌னி‌ப்பெய‌ர்‌ச்‌சி பல‌ன்க‌ள்

Source: http://tamil.webdunia.com

நிகழும் விரோதி வருடம் புரட்டாசி மாதம் 10ஆம் தேதி அதாவது செ‌ப்ட‌ம்ப‌ர் 26ஆ‌ம் தே‌தி சனிக்கிழமை சுக்ல பட்சத்து அஷ்டமி திதி, மூலம் நட்சத்திரம் நடைபெறும் நாளில், சௌபாக்யம் நாமயோகம், பாலவ நாமகரணம், சித்தயோகத்தில் சூரிய உதயநேரம் போக சரியாக மதியம் மணி 3.18க்கு சனி பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்குள் நுழைகிறார்.


இ‌ந்த சனிப் பெயர்ச்சியினால் ஒவ்வொரு ராசிதாரரின் வாழ்விலும் ஏற்படக்கூடிய மாற்றங்கள், பாதிப்புகள் அதற்கான பரிகாரங்கள் ஆகியன ராசி வாரியாக தொகுத்து அளித்துள்ளோம்.

எமது ஜோ‌திட‌ர் ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதர‌ன் இந்த சனிப் பெயர்ச்சிப் பலன்களை தொகுத்தளித்துள்ளார்

சனிப் பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

முன் வைத்த காலை பின் வைக்காத நீங்கள் சில வேலைகளில் தடைகள் வந்தாலும் அதை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவீர்கள்.

இதுவரை உங்களின் புத்தி வீடான 5ஆம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை பல வகையிலும் அல்லல்படுத்திய சனிபகவான் 26.09.2009 முதல் 21.12.2011 முடிய விபரீத வீடான 6ஆம் வீட்டில் அமர்ந்து சகல யோகங்களையும் தர உள்ளார்.

இதுவரை முன்னுக்குப்பின் முரணாக யோசித்தீர்களே! காரியத்தடைகளால் வீண் மனஉளைச்சலுக்கு உள்ளானீர்களே! குடும்பத்தில் எப்போதும் கூச்சல், குழப்பங்கள் நிலவியதே! பிள்ளைகள் உங்களின் தியாக உணர்வை புரிந்து கொள்ளாமல் உங்கள் மீது கோபப்பட்டார்களே! இந்த அவல நிலையெல்லாம் இனி மாறும்.

கணவன்-மனைவிக்குள் நிலவி வந்த பனிப் போர் நீங்கும். குடும்பத்தில் தென்றல் வீசும். இடுப்பு வலி, கர்ப்பச் சிதைவால் அடிக்கடி மனைவியின் உடல் நிலை பாதித்ததே! இனி ஆரோக்கியம் கூடும். செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள்.

பெற்றோரின் உடல் நிலை சீராகும். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். மழலை பாக்கியம் கிடைக்கும்.

பாதியில் நின்ற வீடு கட்டும் பணி முழுமையடையும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. உங்களைக் கண்டு ஒதுங்கிச் சென்றவர்களெல்லாம் இனி வலிய வந்து உறவாடுவர். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதம், மாநிலத்தவரால் ஆதாயம் உண்டு.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் பூர்வபுண்யாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திர சாரத்தில் 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பழைய கடன் பிரச்சனை தீரும். வழக்குகள் சாதகமாகும். பதவிகள் தேடி வரும்.

உங்களின் சுகாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திர சாரத்தில் 20.09.2010 முதல் 14.10.2011 வரை சனிபகவான் செல்வதால் வீடு, மனை வாங்குவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். தாய்க்கு இருந்த மருத்துவச் செலவுகள் குறையும். தர்மகாரியங்கள் பலவும் செய்வீர்கள்.

உங்களின் ராசிநாதனான செவ்வாயின் சித்திரை நட்சத்திர சாரத்தில் 15.10.2011 முதல் 21.12.2011 வரை சனிபகாவன் செல்வதால் புதிய எண்ணங்கள் மனதில் தோன்றும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும்.

வரும் 10.1.2010 முதல் 8.05.2010 வரை மற்றும் 23.01.2011 முதல் 15.06.2011 வரை சனி பகவான் வக்ரத்தில் செல்வதால் சிறுசிறு விபத்துகள், மன உளைச்சல்கள் வந்து நீங்கும்.

வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வேலை அதிகம் இருக்கும் போது விடுப்பில் செல்லும் வேலையாட்களை நீக்குவீர்கள். புதியவர்களை பணியில் அமர்த்துவீர்கள். இரும்பு, சிமெண்ட், மருந்து வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் புதியவர்களை, இளைஞர்களை சேர்த்துக் கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். புது நிறுவனங்களிலிருந்து அதிக சம்பளத்துடன் நல்ல வேலை தேடி வரும். அயல்நாட்டுத் தொடர்பில் இயங்கும் தொழிற்கூடங்கள் மூலமாகவும் அழைப்பு வரும். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். திருமணத் தடை நீங்கும். பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். கனவுத் தொல்லை, பசியின்மை, முகப்பரு யாவும் நீங்கும்.

மாணவ-மாணவிகளே! நினைவாற்றல் அதிகரிக்கும். கெட்ட நண்பர்களை ஒதுக்கித் தள்ளுங்கள். மதிப்பெண் கூடும். ஆசிரியர்களின் அன்பையும், பாரட்டையும் பெறுவீர்கள். கலைஞர்களே! உங்களின் கற்பனைத் திறனுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். தள்ளிப் போன ஒப்பந்தங்களும் தேடி வரும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

இந்தச் சனிப்பெயர்ச்சி தடுமாறிக் கொண்டிருந்த உங்களை தன்னடக்கத்துடன் தலைநிமிர வைப்பதாக அமையும்.

சனிப் பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

அடிக்கடி கற்பனை, கனவுகளில் மிதக்கும் நீங்கள் மனசுக்குள்ளேயே புதுத் திட்டங்கள் போட்டுக் கொண்டே இருப்பீர்கள்.

இதுவரை உங்கள் ராசிக்கு 4ஆம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை படாதபாடுபடுத்தி வந்த சனி பகவான் இப்போது 26.09.2009 முதல் 21.12.2011 வரை உள்ள காலகட்டங்களில் 5ஆம் வீட்டில் அமர்வதால் உங்களின் தயக்கம், தடுமாற்றம் விலகும்.

இனி எந்த வேலையையும் விரைந்து முடிப்பீர்கள். உங்களுக்குள் அடங்கிக் கிடந்த ஆற்றல்கள் வெளிப்படும். தைரியம் பிறக்கும். சோகமான முகம் மலரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். கணவன்-மனைவிக்குள் சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் பெரிய சண்டை வந்ததே! சில தம்பதியர்கள் சந்தேகத்தால் பிரிந்தீர்களே! அந்த அவல நிலை இனி மாறும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வீர்கள்.
தாயாருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். அவரின் உடல் நிலை சீராகும். பிள்ளைகள் ஸ்தானத்தில் சனி அமர்வதால் பிள்ளைகளிடம் உங்கள் எண்ணங்களை திணிக்காதீர்கள். அவர்களின் போக்கில் விட்டுப் பிடியுங்கள். சில சமயங்களில் பாதை மாறி போக நேரும். உயர் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

மகளுக்கு நல்ல வரன் அமையும். சொந்த, பந்தங்கள் மெச்சும் படி திருமணத்தை நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். உங்களுக்குள் வீண் குழப்பத்தையும், சிக்கல்களையும் உண்டாக்கிய சிலரை இனி தவிர்ப்பீர்கள்.

மூட்டு வலி, தலைச்சுற்றல் எல்லாம் நீங்கும். சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டு பல நேரங்களில் இப்படியெல்லாம் பேசி இருக்கக் கூடாது என வருந்தி வதங்கினீர்களே! இனி மற்றவர்கள் மனம் புண்படாத படி பேசுவீர்கள்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் சுகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திர சாரத்தில் 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். புது வீடு கட்டி குடியேறுவீர்கள்.

உங்களின் தைரிய ஸ்தானாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திர சாரத்தில் 20.09.2010 முதல் 14.10.2011 வரை சனி பகவான் செல்வதால் எதிர்பாராத பணவரவு, பொருள் சேர்க்கை, உயர் பதவி, சமூக அந்தஸ்து என யாவும் கிட்டும்.

உங்களின் சப்தம விரையஸ்தானாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திர சாரத்தில் 15.10.2011 முதல் 21.12.2011 வரை சனிபகாவன் செல்வதால் மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். சொத்து சேரும்.

வரும் 10.1.2010 முதல் 8.05.2010 வரை மற்றும் 23.01.2011 முதல் 15.06.2011 வரை உள்ள காலக்கட்டத்தில் சனி பகவான் வக்ரத்தில் செல்வதால் உறவினர் பகை, வீண் செலவுகள், அலைச்சல்கள் ஏற்படக்கூடும்.

சனி பகவான் ஏழாம் வீட்டை பார்ப்பதால் முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வாக்கு ஸ்தானத்தையும் பார்ப்பதால் மற்றவர்களை விமர்சித்து பேச வேண்டாம். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வழக்கில் வெற்றி கிட்டும்.

அக்கம், பக்கம் வீட்டாரிடம் அளவாகப் பழகுங்கள். யோகா, தியானம் செய்யுங்கள். மனஅமைதி கிட்டும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். சரக்குகள் உடனுக்குடன் விற்றுத் தீரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனங்கள் உங்கள் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வார்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள்.

உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களை குறை கூறுவதற்கென்றே ஒரு கூட்டமே இருந்ததே! இனி உங்கள் சேவையை எல்லோரும் மதிப்பர். நீங்கள் கேட்ட இடத்திற்கே மாற்றம் கிடைக்கும்.

கன்னிப் பெண்களே! படிப்பை தொடர்வீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாணவ, மாணவிகளே! அதிகாலையில் எழுந்து படிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். உயர்கல்வியில் வெற்றியுண்டு. கலைஞர்களே! மூத்த கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும். பெரிய நிறுவனத்திலிருந்து வாய்ப்புகள் தேடி வரும்.

இந்த சனிப்பெயர்ச்சி கடன் பிரச்சனைகளிலிருந்து மீளச் செய்வதுடன் புது அத்தியாயத்தை தொடங்குவதாக அமையும்.




No comments:

Post a Comment