அயராது உழைத்து சிகரத்தின் எல்லைக்கே சென்றாலும் பெரியோர்களை மதித்து நடந்துக் கொள்ளும் குணமுடையவர்கள் நீங்கள்தான்.
இதுவரை உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் அமர்ந்து அடிப்படைய வசதி வாய்ப்புகளை அதிகப்படுத்தியதுடன், அதிகாரப் பதவியில் இருப்பவர்களுடன் நெருக்கமாகப் பழகும் சூழலையும் உருவாக்கித் தந்த சனி பகவான் வரும் 26.09.2009 முதல் 21.12.2011 வரை உங்கள் ராசிக்கு 7வது வீட்டில் நுழைந்து பலன் தரப்போகிறார்.
7வது வீட்டுக்கு சனி வருகிறாரே என்று பதற்றப்படாதீர்கள். இனி எதையும் திட்டமிட்டு செய்யப் பாருங்கள். கணவன்-மனைவிக்குள் சின்னச்சின்ன சந்தேகம் வரக்கூடும். பணம் வரும். வீண் செலவுகளை குறைத்து சேமிக்கப் பாருங்கள். பிள்ளைகளால் செலவுகளும், அலைச்சலும் வரும்.
மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். நீங்களும் அயல்நாடு சென்று வருவீர்கள். மகளின் கல்யாணத்தை போராடி முடிப்பீர்கள். சகோதர வகையில் அதிக உரிமையெடுத்துக் கொள்ள வேண்டாம். பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் தலை தூக்கும்.
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் சஷ்டமாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திர சாரத்தில் 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் பணப் பற்றாக்குறை, வீண் அலைச்சல், நெஞ்சுவலி, வீண் பழி வந்து செல்லும்.
உங்களின் பூர்வ புண்யாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திர சாரத்தில் 20.09.2010 முதல் 14.10.2011 வரை சனிபகவான் செல்வதால் குழந்தை பாக்கியம் கிட்டும். பணவரவு உண்டு. சொத்து வாங்குவீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிள்ளைகளுக்கு நல்ல வருங்காலத்தை அமைத்துத் தருவீர்கள்.
உங்களின் தன பாக்யாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திர சாரத்தில் 15.10.2011 முதல் 21.12.2011 வரை சனிபகாவன் செல்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், விருந்தினர் வருகையும் உண்டு. உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள்.
வரும் 10.1.2010 முதல் 08.05.2010 வரை சனி பகவான் வக்ரத்தில் செல்வதால் வழக்கில் வெற்றி, சித்தர் தொடர்பு, வெளிநாட்டுப் பயணங்கள் வரக்கூடும். 23.01.2011 முதல் 15.06.2011 வரை வக்ரத்தில் செல்வதால் வீண் அலைச்சல்,சிறுசிறு நஷ்டங்கள் வந்து செல்லும்.
சனி பகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் அதிகரித்தல், இரும்பு, சுண்ணாம்புச் சத்து குறைவு ஏற்படக்கூடும். மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்ளுங்கள். மறதியால் பொருட்களை இழக்க நேரிடும்.
பெற்றோரின் உடல்நிலை பாதிக்கும். வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வரும். மற்றவர்களுக்காக எதிலும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். வி.ஐ.பி.கள் தக்க நேரத்தில் உதவுவார்கள். நெருங்கிய உறவினர் அல்லது நண்பர் ஒருவரின் இழப்பு உங்களை வாட்டும். லேசாக கால் வலி, உடல் அசதி, தோலில் நமச்சல் வந்து நீங்கும்.
பழைய வாகனத்தை விற்றுவிட்டு நவீன வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி புது முதலீடுகள் வேண்டாம். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் லாபம் உண்டாகும். கறாராக இருங்கள். வேலையாட்கள் முரண்டு பிடிப்பர். கமிசன், கன்சல்டன்ஸி, கட்டிட உதிரி பாகங்களால் ஆதாயம் உண்டு.
உத்தியோகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கன்னிப் பெண்களே, பெற்றோருடன் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் வரும். திருமணம் தாமதமாக முடியும்.
மாணவ-மாணவிகளே! கணிதம், வேதியியல் பாடங்களில் அலட்சியம் வேண்டாம். ஆசிரியர் ஒத்துழைப்பார். கலைஞர்களே! தனி நபர் விமர்சனத்தைத் தவிர்க்கவும். அரசு பாராட்டும். இந்தச் சனிப் பெயர்ச்சி ஒருபுறம் அலைச்சலுடன் அனுபவ அறிவையும், மறுபுறம் செல்வாக்கையும் தருவதாக அமையும்.
No comments:
Post a Comment