Tuesday 1 October 2013

Guru Peyarchi Palangal (28.5.13 முதல் 12.6.14 வரை) - Meenam

மீனம்: மலைபோல் சோதனை பனியாவது உங்கள் கையில்!

நீதி நேர்மை தவறாத மீனராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு 3ல் சஞ்சரித்த குருபகவான், மே28ல் சுகஸ்தானமான 4ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். இவர் தன் பார்வை பலத்தால் 8,10,12 ஆகிய இடங்களை பலம் பெறச் செய்கிறார். ராசிக்கு 8ல் அமர்ந்திருக்கும் சனியின் பார்வை 2,5,10 ராசிகளில் பதிகிறது.சொல்லப்பா சூதாட்டம் கொடியதப்பா!சுகமுள்ள பஞ்சவர்கள் வினையினாலே அல்லப்பா அகிலங்கள் எல்லாம் தோற்றுஅப்பனை ஆரண்யம் சென்றார் என்றால்நல்லப்பா நாளதனில் குருவும் ஏறநரச்சுகமும் கிட்டாது நலிவும் உண்டுமல்லப்பா மண்ணாலும் பொன்னாலும் வேதைமகத்தான குரு அதனின் கொடுமை தானே!என்கிறது ஒரு வெண்பா.இதன்படி, சோதனைகள் கடுமையாக இருக்கும் என்பது தெளிவாகிறது.குருவின் பலத்தால் ஆயுள்பாவம் தீர்க்கம் பெறும். ஆனால், உடல்நிலையில் அவ்வப்போது சிரமம் உருவாகலாம், கவனம். பொருளாதார நிலையில் பணப்பற்றாக்குறைக்கு ஆளாவீர்கள். இயன்றவரை நிதானமாகப் பேசுவது நன்மை தரும். சிலர் வாக்கு கொடுத்துவிட்டு அதைக் காப்பாற்ற முடியாமல் தவிப்பர்.மன தைரியத்திற்கு குறைவிருக்காது. எந்தச் செயலையும் சவாலாக எடுத்துக் கொண்டு முன்னேற முயல்வீர்கள். சகோதரர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம் கவனம். அவர்களின் ஆதரவு உங்களுக்குத் தேவைப்படலாம். அதனால், விவேகத்துடன் செயல்படுவது நன்மையளிக்கும். தாயின் உடல்நலனுக்காக மருத்துவச் செலவு செய்ய நேரிடும். வீடு,மனை வாங்கும் முயற்சியில் விடாமுயற்சி தேவைப்படும். வீடு, வாகன வகையில் இருப்பதைக் கொண்டு திருப்தி கொள்வது நல்லது. மராமத்துச் செலவு அடிக்கடி ஏற்படும். பிள்ளைகள் கல்வியில் பின்தங்கலாம். அவர்களுக்கு தக்க அறிவுரை கூறி வழிகாட்ட முயல்வீர்கள். அவர்களின் எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும். அலைச்சலால் அடிக்கடி உடல்அசதிக்கு ஆளாவீர்கள். சிலருக்கு உஷ்ணம், வயிறு சம்பந்தமான வியாதிகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் முன்னெச்சரிக்கை தேவைப்படும். அறிமுகமில்லாதவர்களிடம் கடன் வாங்குவது கூடாது.திருமண முயற்சிகளில் தடைகளைச் சந்திக் வாய்ப்புண்டு. உறவினர்கள் ஆதரவும் ஓரளவே கிடைக்கும். குடும்பத்தில் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்படலாம். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடப்பது எதிர்கால நன்மைக்கு வழிவகுக்கும். அஷ்டமத்துசனியின் தாக்கத்தால் எதிரிகளின் பலம் அதிகரித்தாலும், குருவின் பார்வை பலத்தால் நிலைமையைச் சமாளிப்பீர்கள். எதிரிகள் விஷயத்திலும் முன்யோசனையுடன் செயல்படுவது பிரச்னையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.தந்தையின் உடல்நலம் சீராக இருக்கும். அவர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கிடைக்கும். ஜீவன ஸ்தானத்தில் குரு,சனி இருவரின் பார்வையும் படுவதால், நன்மையும் தீமையும் கலந்தே நடக்கும். அஷ்டமத்துச் சனியின் தாக்கத்திற்கு ஆளானாலும், குருவின் பார்வை பலத்தால் நிம்மதியை ஓரளவு வாழ்வில் பெறுவீர்கள். சுயதொழில் துவங்க விரும்புபவர்கள் உரிய காலம் வரும் வரை பொறுத்திருப்பது நல்லது.
தொழிலதிபர்கள்: உங்கள் நிறுவனத்தைப் பாதுகாத்துக் கொள்வதில் அக்கறையுடன் செயல்படுவது நல்லது. உற்பத்தியை அதிகப்படுத்திய பிறகு, விற்பனை சரியில்லையே என்ற நிலை ஏற்படலாம். எனவே, ஆர்டர் வாங்கியபின், உற்பத்தி செய்வது லாபத்தை தக்க வைக்கும். நிர்வாகச் செலவு அதிகரிக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கும்.கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் தான் தொழிலில் லாபத்தை தக்க வைக்க முடியும்.
வியாபாரிகள்: அளவான மூலதனத்துடன் அதிக முயற்சியினால் வியாபாரத்தில் உள்ள அனுகூல விஷயங்களை பாதுகாத்துக் கொள்வது அவசியமாகும். சந்தை போட்டியை சமாளிப்பதில் கூடுதல் சிரமங்களை எதிர்கொள்வீர்கள். சராசரியைவிட விற்பனை இலக்கின் அளவு குறையும். மிதமான அளவில் பணவரவு கிடைக்கும். நிர்வாக நடைமுறை மற்றும் குடும்ப செலவுகளுக்காக கொஞ்சம் கடன் பெறுவீர்கள். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு நடைமுறை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றி செயல்படுவது அவசியம். பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் வருமானம் ஓரளவு கிடைக்கும். சிலசமயம் அதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கும் ஆளாவர். சிலர் பணியில் குளறுபடியை எதிர்கொண்டு ஒழுங்கு நடவடிக்கையினால் சில சலுகைகளைப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம். 
பெண்கள்: குடும்பப் பெண்கள் உடல்நல ஆரோக்கியத்தை தகுந்த முறையில் பாதுகாத்துக் கொள்வதால் மட்டுமே அன்றாடப் பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்ற இயலும். குடும்பத்தின் பணவரவுக்கேற்ப செலவுகளை திட்டமிடுவது அவசியம். உறவினர்களிடம் மனக்கிலேசம் வராத அளவில் நிதானித்து பேசுவது நல்லது. பணிபுரியும் பெண்கள் கூடுதல் கால அவகாசத்தில் பணி இலக்கு நிறைவேற்றுவர். சலுகைகள் கிடைப்பதில் தாமதம் இருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் லாபவிகிதம் குறைத்து விற்பதால் மட்டுமே புதிய ஆர்டர் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.
மாணவர்கள்: உயர்கல்வி முயற்சிகளை இப்போதைக்கு தள்ளி வைக்கும் சூழ்நிலையே அமையும்.எதிர்கால லட்சியங்களை மனதில் கொண்டு அக்கறையுடன் படிப்பதால் மட்டுமே ஞாபகத்திறன் வளரும். கவுரவமான தேர்ச்சிவிகிதம் பெற இயலும். பெற்றோர் மனம் வருந்தாத அளவில் நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு வகைகளை உண்ண வேண்டாம். சக மாணவர்களுடன் படிப்பு தவிர பிற விஷயங்களில் விவாதம் தவிர்க்கவும். வேலைவாய்ப்பு பெற முயற்சிப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற பணி கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: ஆதரவாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவதில் தகுதிக்கு மீறிய எவ்வித வாக்குறுதியும் தரக்கூடாது. எதிரியின் செயல்களினால் சிரமமும் மனவருத்தமும் அடைவீர்கள். இருப்பினும் சுயகவுரவத்தை பாதுகாக்கும் எண்ணத்துடன் அரசியல் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவீர்கள். அதிகாரிகளிடம் இதமான அணுகுமுறை பின்பற்றுவதால் அரசு தொடர்பான அனுகூலம் ஓரளவு பெறலாம். விவகார பேச்சுக்களில் நிதானித்து நடந்துகொள்வது நல்லது.
விவசாயிகள்: விவசாயப்பணிகளில் முடக்கம் ஏற்படும். மகசூல் சுமாராக இருக்கும். பயிர் வளர்க்க கூடுதல் பணம் தேவைப்படும். கால்நடை வளர்ப்பில் கிடைக்கிற பணவரவு அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும். சொத்து ஆவணத்தின் பேரில் கடன் பெறுபவர்கள், நம்பகமானவர்களிடம் வாங்குவது நல்லது.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வணங்கினால், மலைபோல் வரும் சோதனைகள் பனிபோல் நீங்கி விடும்.
பரிகாரப்பாடல்:
கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு
அங்கமுதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை
இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.

Guru Peyarchi Palangal (28.5.13 முதல் 12.6.14 வரை) -Khumbam

கும்பம்: புது தொழில் துவங்குங்க! கோடிகளை அள்ளுங்க!!

 வெற்றி தோல்வியை சமமாகக் கருதும் கும்பராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு சுகஸ்தானமான 4ல் சஞ்சரித்த குருபகவான், மே28 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5க்கு பெயர்ச்சியாகிறார். இதனால், குருபலம் உண்டாகப் போகிறது. இவர் 1,9,11 ஆகிய ராசிகளைப் பார்வையால் பலப்படுத்துகிறார். 9ல் இருக்கும் சனியின் பார்வை 3,6,11 ஆகிய ராசிகளில் பதிகிறது. பெரு பதினொன்றைத் தேழ் பேர், ஒன்பதாம் இரண்டில் தேவ குருவரில் செல்வம் சிரூர், குதிரை வெண்குடை தீவர்த்திதருமமும் தானமுண்டு, தாய் தந்தை துணையும் உண்டாம்அருமையும் பெருமையுண்டாம், அரசர் சேவையும் உண்டாமேஎன்கிறது ஒரு ஜோதிட வெண்பா.ஆம், குரு ஐந்தில் சஞ்சரிக்கும் காலத்தில் ஆயுள்பாவம் அதிகரிக்கும். கடந்த காலத்தில் குருவின் சஞ்சாரத்தால் பல துன்பங்களில் சிக்கித் தவித்தீர்கள். தற்போது குருவின் பார்வை ராசியில் பதிவதால் உடல் பொலிவு பெறும். ஆரோக்கியம் மேம்படும். பொருளாதாரநிலை உயர்ந்து பணப்பற்றாக்குறை நீங்கும். புதியவகையில் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. புதிய தொழில்களில் ஈடுபட்டால் பணம் கோடியாய் கொட்டும். குடும்பத்தேவை நிறைவேறும். பழைய கடன்பாக்கியைத் திருப்பிச் செலுத்துவீர்கள். பிறருக்கு வாக்கு கொடுக்கும்போது, கவனமாக இருப்பது நல்லது.காரணமே இல்லாமல் அவ்வப்போது மனதில் பயம் உருவாகும். சகோதரர் வகையிலும் எச்சரிக்கை தேவைப்படும். அளவுக்குமீறிய உதவிகளைச் செய்து அவதிக்கு ஆளாகலாம் கவனம். சிலநேரத்தில் தேவையற்ற வாக்குவாதம், வம்புகளைச் சந்திக்க இடமுண்டு. தாயின் உடல்நலத்தில் அக்கறை தேவை. வீடு, மனை விஷயத்தில் இருந்து வந்த தடைகள் அகலும். சிலருக்கு வீடு, இடமாற்றம் ஏற்படும். வாகன வகையில் ஓரளவு ஆதாயபலன் பெறுவீர்கள். மராமத்துச் செலவைக் குறைக்க முடியாது. புதிய வீடு, வாகனம் வாங்குவீர்கள்.குழந்தைப் பேறு வாய்க்கப் பெறாதவர்கள் குருவருளால் மழலை பெற்று மகிழும் சந்தர்ப்பம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பிள்ளைகள் வகையில் மருத்துவச் செலவு இனி செய்ய இடமில்லை. அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் உண்டாகும். மொத்தத்தில் பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வீர்கள். கடந்த இரு ஆண்டுகளாக இருந்து வந்த திருமணத் தடை அகலும். உறவினர் ஆதரவால் மங்கல நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். கருத்துவேறுபாடு நீங்கி கணவன், மனைவி ஒற்றுமை சிறக்கும். குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும். சத்ரு ஸ்தானத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு நீங்களே எதிரியாக இருப்பீர்கள். எந்த விஷயத்தையும் காரணமின்றி தள்ளிப் போடுவதாலும், முடிவு எடுக்க முடியாமல் திணறுவதாலும் பிரச்னைக்கு உள்ளாவீர்கள். தந்தையின் உடல்நலனுக்காக மருத்துவச் செலவு செய்ய நேரிடும். அதே சமயத்தில் பூர்வீகச் சொத்து பிரச்னைகளுக்கு சுமூகமான தீர்வு உண்டாகும். கல்வி ஸ்தானம் மந்தகதியில் இருப்பதால் உயர்கல்வி கற்பதில் தடையுண்டாகும். மொத்தத்தில் குருவின் சஞ்சாரத்தால் சனியின் தாக்கம் பெருமளவு குறைந்து விடும். பிரச்னைகள் அவ்வப்போது தலைதூக்கினாலும், அதற்கான தீர்வும் உடனடியாகத் தென்படும். சுயதொழில் துவங்க விரும்புபவர்களுக்கு தாராள பணவசதி, தொழில்நுட்ப உதவி எளிதாக கிடைக்கும்.
தொழிலதிபர்கள்: தொழிலதிபர்களுக்கு கடின உழைப்பும், விடாமுயற்சியும் தேவைப்படும். தொழிலில் அபிவிருத்தி பணிகளை திறம்பட மேற்கொள்ள புதிய திட்டம் உருவாக்குவீர்கள். எதிர்பார்த்த பணவசதி தாராள அளவில் கிடைத்து பணிகளை மேற்கொள்வீர்கள். உற்பத்தி, விற்பனை செழித்து உபரி பணவரவைத் தரும். நிர்வாக பணியில் புத்திரர்களுக்கு தகுந்த பயிற்சி தந்து பொறுப்புடன் செயல்பட உதவுவீர்கள். புதிய கிளை துவங்கவும் அனுகூலம் உண்டு.
வியாபாரிகள்: சந்தையில் போட்டி குறைந்து வியாபாரத்தில் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். வாடிக்கையாளர்களின் பேராதரவு கிடைத்து விற்பனை இலக்கில் வியத்தகு சாதனை புரிவீர்கள். லாபம் அதிகமாக இருக்கும். சில வகைகளில் கிடைக்கும் உபரி பணத்தில் அபிவிருத்தி பணி மேற்கொள்வீர்கள். கூடுதல் கிளை துவங்குகிற முயற்சி நிறைவேறும். சக தொழில் சார்ந்தவர்கள் ஒத்துழைப்பு தருவர். குடும்பத்தின் முக்கிய தேவைகளை தாராள செலவில் நிறைவேற்றுவீர்கள். அரசு, நிதி நிறுவனங்களில் பெற முயற்சிக்கிற உதவி கிடைக்கும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் ஒருமித்த மனதுடன் செயல்பட்டு பணிகளை வேகமாக முடிப்பர். பணிச்சுமை எவ்வளவு அதிகரித்தாலும் இன்முகத்துடன் முடித்து விட்டு, அடுத்த வேலையைத் தரத்தயாரா என கேட்குமளவு மனநிலையும், உடல்நிலையும் ஒத்துழைக்கும். ஓவர்டைம், சம்பள உயர்வு, விரும்பிய பதவி உயர்வு, விண்ணப்பித்த கடனுதவி தாமாக வந்து சேரும்.
பெண்கள்: குடும்பப் பெண்கள் கணவரின் கருத்துக்களை மதித்து நடந்து கொள்வர். தாராள பணவசதி பெற்று அத்தியாவசிய செலவுகளை மனமகிழ்வுடன் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி வளரும். ஆடை, ஆபரணம் விரும்பியபடி வாங்குவீர்கள். பணிபுரியும் பெண்கள் பணித்திறமையை வளர்த்து பணிகளை வேகமாக முடிப்பர். தாமதமான சலுகைகள், பதவி உயர்வு எளிதாக கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் ஆர்டர் கிடைத்து உற்பத்தி, விற்பனையில் முன்னேற்றம் காண்பர். உபரி வருமானம் கிடைத்து மூலதன தேவைகளுக்கு பயன்படும்.பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.
மாணவர்கள்: முறையான பயிற்சியை பின்பற்றி பாடத்திட்டங்களை மனதில் எளிதில் பதித்துக்கொள்வீர்கள். நல்ல மார்க் பெற இடம் உண்டு. படிப்புக்கான பணவசதி திருப்திகரமான அளவில் கிடைக்கும். சக மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் பெற ஒருவருக்கொருவர் உதவி கரமாக செயல்படுவர். தாய், தந்தையின் அன்பு, பாசம் மனதை நெகிழ வைக்கும். விளையாட்டு, தனித்திறன் வளர்ப்பில் முன்னேற்றம் காண்பீர்கள். பாராட்டு, பரிசு கிடைக்கும். படிப்பை முடித்து, வேலைவாய்ப்பு பெற முயற்சிப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய பணிவாய்ப்பு கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: உற்சாகத்துடன் சேவை புரிந்து ஆதரவாளர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். திட்டங்கள் நிறைவேற அதிகாரிகளின் ஒத்துழைப்பு சீராக கிடைக்கும். எதிரிகளால் வருகிற இடையூறுகளை எப்படியாவது சரிக்கட்டி விடுவீர்கள். புத்திரர்கள் உங்களின் அரசியல் பணிக்கு அதிகளவில் உதவிகரமாக செயல்படுவர். சொத்து வாங்க அனுகூலம் உண்டு.
விவசாயிகள்: விவசாயப் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள் தாமதமின்றி கிடைக்கும். பணவசதியும் சீராக இருக்கும். அதிக மகசூல் கிடைத்து நல்ல வருமானம் பெறுவீர்கள். கால்நடை வளர்ப்பில் அபிவிருத்தியும் கணிசமான லாபமும் கிடைக்கும். புதிய நிலம் வாங்க அனுகூலம் உண்டு.
பரிகாரம்: சிவபெருமானை வணங்கினால் உங்கள் நிலையில் மேலும் முன்னேற்றமாகி புகழும் கிடைக்கும்.
பரிகாரப் பாடல்:
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளிந்தாய் போற்றி
ஓவாத சந்தத்து ஒலியே போற்றி
 ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி
காற்றாகி யெங்கும் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி! போற்றி!

Guru Peyarchi Palangal (28.5.13 முதல் 12.6.14 வரை) - Makaram

மகரம்: வருமானம் கூடினாலும் மனசுக்கு பிரச்னைதான்!

உழைப்பில் உறுதி மிக்க மகரராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு 5ல் சஞ்சரித்த குருபகவான், மே28 முதல் 6ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். அவரின் பார்வை ராசிக்கு 2,10,12 ஆகிய இடங்களில் பதிகிறது. 10ல் சஞ்சரிக்கும் சனியின் பார்வை, 4,7,12 ஆகிய இடங்களில் விழுகிறது.கேளப்பா குருபதியும் ஆறில் ஏற கெடுதி மிகச்செய்வன் மாபலியாம் மன்னன்சீரப்பா சிறைக்கூடம் சென்றாரய்யாசிவசிவா தேவர்களின் கொடுமையினாலேஈரப்பா ராஜபயம் கலகம் துன்பம் இல்லதனில் களவும் போம் கிலேசம் மெத்தவீரப்பா வெகுபயமாய் சர்ப்பதோஷம் வேந்தன் நின்ற பதியறிந்து வினையை மூட்டே!என்கிறது ஒரு வெண்பா.இதன்படி, ஆறாம் இடத்து குரு மூலம் சிரமங்களைச் சந்திக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. ஓராண்டுகாலமாக குருவின் சுபஸ்தானத்தால் நன்மையைப் பெற்ற நீங்கள், இப்போது சில சிரமங்களைச் சந்திக்க நேரிடும். தன ஸ்தானத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதால் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். இருந்தாலும் மனதளவில் பிரச்னைக்கு உள்ளாவீர்கள். மனதில் தைரியம் குறைய அனுமதிக்காதீர்கள். சகோதர, சகோதரிகள் வகையில் கருத்துவேறுபாடு ஏற்பட இடமுண்டு. அவர்களிடம் ஒதுங்கி நடந்து கொள்வது நல்லது. தாயின் உடல்நிலை பாதிக்கலாம். அவருடன் கருத்துவேறுபாடு கொள்ளவும் வாய்ப்புண்டு. வீடு,வாகனத்தில் புதிய மாற்றத்தைத் தவிர்ப்பது நல்லது. இருப்பதைக் கொண்டு திருப்தி கொள்வது பிரச்னையைக் குறைக்க உதவும். குழந்தைகள் கல்வி,வேலைவாய்ப்பில் பின்தங்க வாய்ப்புண்டு. தக்க அறிவுரை கூறி அவர்களை நல்வழிப்படுத்துங்கள். அவர்களின் உடல்நிலையிலும் அக்கறை தேவைப்படும். உடல்ரீதியான பிரச்னைக்கு உள்ளாவீர்கள். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னையை உடனுக்குடன் சரிசெய்வது அவசியம். திருமணம் போன்ற சுபவிஷயங்களில் விடாமுயற்சி தேவைப்படும். உறவினர்களின் ஆதரவும் சுமாராகவே இருக்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு குடும்ப அமைதியைக் குலைக்கும் சூழ்நிலை உள்ளது. அக்கம்பக்கத்தினரோடு அளவாக பழக்கம் வைத்துக் கொள்வது நன்மைஅளிக்கும். எதிரி ஸ்தானம் பலம் பெறுவதால் நண்பர்கள் கூட பகைவர்களாக மாற இடமுண்டு. அதனால், எதிலும் நிதானமாக இருப்பது அவசியம். பூர்வீகச் சொத்தில் பிரச்னை உருவாகும். பாகப்பிரிவினை போன்ற முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. என்ன தான் கஷ்டசூழ்நிலை இருந்தாலும், பணப்புழக்கம் ஓரளவு கைகொடுக்கும். இதனால், மனதை சலனப்படுத்திக் கொள்ளாமல், இறை வணக்கத்தில் தீவிரமாகக் கவனம் செலுத்தி ஆறுதல் பெறலாம். ஆறாமிட குரு காலத்தில், கடன் வாங்குவதை அறவே தவிர்க்க வேண்டும். வாங்கினால் அதை அடைக்க படாதபாடு பட வேண்டியிருக்கும்.இந்த சமயத்தில், ஏதாவது புண்ணியத்தலத்துக்கு சென்று வருவது நல்லது. குடும்பத்துடன் சென்று வந்தால் இன்னும் சிறப்பு. பணவிஷயத்தில் வாழ்க்கைத்துணை நீங்கலாக பிறரை நம்ப வேண்டாம்
தொழிலதிபர்கள்: கடின உழைப்பும், விடாமுயற்சியும் தேவைப்படும். சுமாரான உற்பத்தியும், அதற்கேற்ற மிதமான பணவரவும் இருக்கும். சிலர் தொழிலுக்காக கடன் வாங்கவும் செய்வர். நிர்வாக நடைமுறைகளில் கூடுதல் கவனம் கொள்வதால் உற்பத்தி, தரத்தின் அளவை சராசரிக்கு கொண்டுவர இயலும்.பணியாளர்களின் ஒத்துழைப்பு காரணமாக, இக்கட்டான சமயங்களில் தப்பி விடலாம். ஆனால், அவர்களுக்கு சலுகை தரும் போது செலவு கூடும். 
வியாபாரிகள்: சந்தையில் உருவாகிற போட்டியை சமாளிக்க வேண்டியிருக்கும். விற்பனையில் சுமாரான இலக்கை அடைவீர்கள். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் வழங்குவதால் நிறுவனத்திற்கு நற்பெயருடன் பணப்புழக்கத்தையும் ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம். சரக்கு கிட்டங்கியில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்வது நல்லது. வெளியூர் பயணம் மேற்கொண்டு புதியவர்களின் அறிமுகம் பெறுவீர்கள்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டங்களை மதித்து நடப்பதால் மட்டுமே ஒழுங்கு நடவடிக்கை, சலுகைப்பயன் பெறுவதில் தாமதம் தவிர்க்கலாம். பணிச்சுமைக்கு ஆளாவதோடு, எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகும். அதே நேரம், மிதுன குருவின் ஸ்தான பலத்தை விட, அதன் பார்வை பலம் உங்களுக்கு பணியிலுள்ள சிரமங்களைக் குறைத்து விடும். உழைப்புக்கேற்ற வகையில் சீரான ஓய்வு மேற்கொள்வதால் உடல்நலம் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
பெண்கள்: குடும்பப் பெண்கள் கணவரின் பணவரவுக்கேற்ப செலவுகளை திட்டமிட்டு மேற்கொள்வர். உடல்நலத்தை சரிவர பேணுவதால் மருத்துவ செலவு அதிகரிக்காமல் தவிர்க்கலாம். பணிபுரியும் பெண்கள் பணியிட சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவதால் பணியில் குளறுபடி வராமல் தவிர்க்கலாம். சலுகைகள் ஓரளவு கிடைக்கும். தங்கநகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் சீரான உழைப்பினால் உற்பத்தி, விற்பனை அளவை பாதுகாத்துக் கொள்வர். சுமாரான லாபம் கிடைக்கும்.
மாணவர்கள்: உயர்கல்வி முயற்சிகளில் பிற்போக்கான நிலை தென்படும். உடல் நலக்குறைவும், மனச்சோர்வும் கல்விவளர்ச்சிக்கு தடையாக அமையலாம். வெளியிடங்களில் சுற்றுவதை குறைத்து படிப்பில் தகுந்த கவனம் கொள்வதால் மட்டுமே தரதேர்ச்சி விகிதம் சீரான அளவில் கிடைக்கும். படிப்புக்கான பணவசதியை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். சக மாணவர்களுடன் படிப்பு தொடர்பான நல்ல கருத்துக்களை பகிர்ந்துகொள்வீர்கள்.  படிப்புக்குப் பின் வேலைவாய்ப்பு பெற விரும்புபவர்களுக்கு ஓரளவு சம்பளத்தில் வேலை அமையும்.
அரசியல்வாதிகள்: ஆதரவாளர்களின் நம்பிக்கையைப் பெற அதிக அக்கறையுடன் பணி புரிவது அவசியம்.அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எதிரிகள் தருகிற தொந்தரவிலிருந்து சில படிப்பினைகளை கற்றுக் கொள்வீர்கள். சமரச பேச்சுவார்த்தைகளில் இருதரப்பு நியாயம் உணர்ந்து பேச வேண்டும். இல்லாவிட்டால், சிரமம் தான் வரும். அரசியல் பணிக்கு புத்திரர்களின் உதவி  கிடைக்கும்.
விவசாயிகள்: அளவான மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் தேவையான அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு அதிக லாபம் பெறுவீர்கள். நிலம் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் முக்கியஸ்தரின் உதவியால் சமரச தீர்வு எளிதில் பெறலாம். குடும்பத்தில் சுபநிகழ்ச்சியை அளவான செலவில் நடத்துவீர்கள்.
பரிகாரம்: துர்க்கையை வழிபடுவதால் சகல நன்மையும் பெறுவீர்கள்.
பரிகாரப் பாடல்:
ராஜராஜேஸ்வரி நமஸ்காரம்
லலிதாம்பிகையே நமஸ்காரம்
துர்க்கா லட்சுமியே நமஸ்காரம்
புவனேஸ்வரியே நமஸ்காரம்
அன்னபூர்ணேஸ்வரியே நமஸ்காரம்
காமேஸ்வரியே நமஸ்காரம்
பக்தியுடனே உனை நாடி வந்தோம்
பண்புடனே உன்னை பார்க்க வந்தோம்

Guru Peyarchi Palangal (28.5.13 முதல் 12.6.14 வரை) - Dhanusu

தனுசு: ஐயையையோ ஆனந்தமே! கோடி நன்மை ஆரம்பமே!

குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்ட தனுசுராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு 6ல் சஞ்சரித்த குரு, மே28 முதல் 7ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். அவருடைய பார்வை பலத்தால் 1,3,11 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். சனி ராசிக்கு 11ல் அமர்ந்து 1,5,8 ஆகிய ராசிகளை பார்க்கிறார். குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். இது இவர்களுக்கு முற்றிலும் பொருந்தும். குரு பதினொன்றுஏழ் ஒன்பான் கூறும்ஐந்து இரண்டில் நிற்க திருமகள் கிருபை உண்டாம் தீர்த்த யாத்திரை உண்டாம் தரும தானங்கள் உண்டாம் தந்தை தாய் உதவி உண்டாம்அருமையும் பெருமையும் உண்டாம்அரசர் சேவையும் உண்டாமே!என்று ஏழாம் இட குரு தரும் நற்பலன்களைப் பட்டியலிடுகிறது இந்த ஜோதிட வெண்பா. இதன்படி, வாழ்வில் எல்லாவழிகளிலும் நன்மை பெறுவீர்கள். ஆயுள் அதிகரிக்கும். தொல்லை கொடுத்த நோய்நொடி நீங்கும். கடந்த காலத்தில் உங்களை குறைத்து மதிப்பிட்டவர்கள் கூட வலியவந்து உங்களின் நட்பைத் தேடுவர். வருமானம் தாராளமாக இருக்கும். ஆனால், ஆடம்பர சிந்தனையால் செலவும் பன்மடங்கு அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலைத்திருக்கும். அளவுக்கு மீறி வாக்களித்துவிட்டு சிரமத்திற்கு ஆளாகலாம், கவனம். தைரிய ஸ்தானத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதால், மனோதிடம் அதிகரிக்கும். இருந்தாலும் தைரியத்தோடு புத்திசாலித்தனத்தையும் வளர்த்துக் கொள்வது நல்லது. கருத்துவேறுபாடு நீங்கி சகோதரர்களிடம் இணக்கம் கூடும். சகோதர வழியில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி நடத்திட யோகமுண்டு. தாயின் ஆரோக்கியம் சீர்பெறும். அவரது தேவைஅறிந்து உதவி செய்து மகிழ்வீர்கள். புதிய மனை, வீடு வாங்கவோ அல்லது கட்டவோ வழி பிறக்கும். வாகன வகையிலும் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும். பிள்ளைகள் கல்வியில் மந்தகதியில் செயல்படுவர். அவர்களின் ஆரோக்கியத்திலும் அக்கறை தேவை. அவர்களுக்கு தேவையான அறிவுரைகளைக் கூறி நெறிப்படுத்துவது அவசியம். அலைச்சலைத் தவிர்க்க முடியாது. தொல்லை அளித்து வந்த கடன் பிரச்னையிலிருந்து பெருமளவு விடுபடுவீர்கள். ஏழாம் வீட்டில் குரு இருப்பதால், திருமணத்திற்கு காத்திருப்போருக்கு இது சுபமான காலகட்டம். உறவினர்களின் ஒத்துழைப்போடு சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துபேதம் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் பயந்தோடுவர். மறைமுக எதிரிகளை இனம் கண்டு கொள்வீர்கள். உங்களின் வளர்ச்சியைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்படுவர். தந்தையின் உடல்நிலையில் அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டாலும், பாதிப்பு ஏதும் நேராது. தந்தையுடன் உறவு சீராக இருக்கும். தடைபட்ட உயர்கல்வியைத் தொடரும் வாய்ப்பு உருவாகும். சிலர் கல்வி பெறும் நோக்கில் வெளியூர், வெளிநாடு செல்ல நேரிடும். சுயதொழில் துவங்க விரும்புபவர்களுக்கு தாராள பணவசதி அமைவதுடன், நண்பர்களின் உதவியும் கிடைக்கும்.
தொழிலதிபர்கள்: தொழிலில் எல்லா நிலைகளிலும் நன்மைகளை வாரி வழங்க மிதுனகுரு காத்திருக்கிறார் என்றால் மிகையில்லை. அமோக வளர்ச்சி காணலாம். கல்வியை முடித்துவிட்டு, புதிய வேலைக்கு முயற்சிப்பவர்கள் குருபலத்தால் நற்பலன் காண்பர். உற்பத்தி, தர உயர்வில் சாதனை நிகழ்த்துகிற எண்ணத்துடன் செயல்படுவீர்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு திருப்திகரமான அளவில் கிடைக்கும். உற்பத்தி செழித்து பெரும் லாபம் அடைவீர்கள். புகழ், செல்வாக்கு வளரும். தொழிலதிபர் சங்கப்பணிகளில் ஆர்வமுடன் பங்கேற்று கவுரவமான பதவியில் அமருவீர்கள். நவீன இயந்திரங்கள் வாங்குவீர்கள். தொழிற்சாலை அபிவிருத்தி பணிகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள்.
வியாபாரிகள்: அனுபவசாலிகளின் ஆலோசனை வரப்பிரசாதமாக கிடைத்து வியாபார நடைமுறையில் சில மாற்றங்களை செயல்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவினால் விற்பனை, பணவரவில் முன்னேற்றம் அடைவீர்கள். சந்தையில் நன்மதிப்பு, புகழ் பெறுவீர்கள். பாக்கிப் பணத்தை எந்த வித சிரமமும் இன்றி எளிதில் வசூல் செய்வீர்கள். புதிய கிளை துவங்குகிற முயற்சி இனிதாக நிறைவேறும். வங்கி நிதியுதவி எதிர்பார்த்த அளவில் கிடைக்கும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறை பணியாளர்கள் பணித்திறனை வளர்த்து ஆர்வமுடன் செயல்படுவர். குறிப்பிடத்தக்க அளவு சம்பளம் உயரும். பணிச்சுமை குறையும். ஓவர்டைம் போன்ற வகைகளால்வருமானம் கூடும். குறித்த காலத்தில் வேலைகளை முடிப்பதால், அதற்குரிய சலுகைகளையும் பெறுவீர்கள். நிர்வாகத்தின் பார்வையில் உங்கள் மீதான மதிப்பு உயர்ந்து பொறுப்பான பதவி கிடைக்கும். சக பணியாளர்களுடன் சுமூக நட்பு இருக்கும். அதிக வேலைவாய்ப்பு கிடைத்து குடும்பத்தின் அத்தியாவசியத் தேவைகளை தாராள செலவில் பூர்த்தி செய்வீர்கள்.
பெண்கள்: குடும்ப பெண்கள் கணவரின் நல்அன்பு, தாராள பணவசதி கிடைத்து மகிழ்ச்சிகரமான வாழ்வு நடத்துவர். எதிர்கால வாழ்வு நடைமுறை பற்றிய நம்பிக்கை வளரும். சேமிப்பு உயரும். நீண்ட காலமாக வாங்க விரும்பிய நகை அல்லது ஆடம்பரப் பொருட்களை இந்த கால கட்டத்தில் வாங்கிக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக இப்போது இடும் திட்டம் வெற்றி பெறும். பணிபுரியும் பெண்கள் பணித்திறமையை வளர்த்துக் கொள்வர். வேலைப்பளு குறைந்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். பதவி உயர்வு, எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் அதிக ஆர்டர் பெறுவர். உற்பத்தி, விற்பனையில் திட்டமிட்ட இலக்கை அடைவீர்கள். லாபம் அபரிமிதமாக இருக்கும். இளம் பெண்களுக்கு நல்ல வரன் கிடைத்து திருமணம் கைகூடும்.
மாணவர்கள்: அறிவுத்திறன், ஞாபகத்திறன் வளர்ந்து படிப்பில் நல்ல தேர்ச்சி பெறுவர். படிப்புக்கான பணவசதி திருப்திகரமான அளவில் கிடைக்கும். சக மாணவர்கள் சுமூக உறவு கொள்வர். ஆசிரியர்களும், பெற்றோரும் படிப்புக்கு தேவையான உதவி வழங்குவர். பொறுப்புணர்வுடன் செயல்பட்டு அதிக மார்க் பெறுவீர்கள். உங்கள் தனித்திறமை பாராட்டப்பட்டு, வெகுமதி கிடைக்கும். படித்து முடித்தவர்களுக்கு கவுரவமான சம்பளத்தில் பணி கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: சமயோசிதமாக செயல்பட்டு ஆதரவாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள். நன்மதிப்பும் புகழும் அதிகரிக்கும். எதிர்ப்பாளர்களால் இருந்த தொல்லை விலகும். கவுரவமான பதவி, பொறுப்பு கிடைக்கும். புத்திரர்களின் நுட்பமான ஆலோசனை உங்களை முன்னேற்ற பாதையில் நடைபோட வைக்கும். சமரச பேச்சுக்களில் நல்ல தீர்வு கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குகிற திட்டம் இனிதாக நிறைவேறும்.
விவசாயிகள்: தாராள பணவசதி கிடைத்து விவசாயப்பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். மகசூல் அதிகரித்து உபரி வருமானம் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் திருப்திகரமான லாபம் வந்துசேரும். புதிய நிலம் வாங்குகிற முயற்சி இனிதாக நிறைவேறும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சியை தாராள பணச்செலவில் நடத்துவீர்கள்.
பரிகாரம்: சாஸ்தாவை வழிபடுவதால் வசதிகள் மேலும் மேலும் உயரும்.
பரிகாரப் பாடல்:
மண்ணுலகெல்லாம் காத்தருள் செய்ய
மணிகண்ட தேவா வருக வருக
மாயோன் மைந்தா வருக வருக
ஐங்கரன் சோதரா ஐயப்பா வருக
புலி வாகனனே வருக வருக
புவியெல்லாம் காத்திட வருக வருக
புஷ்கலா நாதனே வருக வருக
பூரணை துணைவா வருக வருகவே!

Guru Peyarchi Palangal (28.5.13 முதல் 12.6.14 வரை) - Viruchagam

விருச்சிகம்: படைத்தவன் இருக்கான் பார்த்துக் கொள்வான்!

நாணயத்துடன் வாழ விரும்பும் விருச்சிகராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு7ல் சஞ்சரிக்கும் குரு, மே28 முதல் ஆயுள் ஸ்தானமான எட்டாம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதை அஷ்டம குரு என்பர். அவரின் சுபபார்வை 2,4,12 ஆகிய ராசிகளில் பதிகிறது. விரய ஸ்தானமான 12ல் சஞ்சரிக்கும் சனி 2,6,9 ஆகிய இடங்களைப் பார்க்கிறார்.  சொல்லவே பொன்னவனும் ஜென்மம் மூன்று சுகமான நாலாறு எட்டு பத்து வல்லவே பன்னிரண்டில் இருந்து வாழ அலைச்சலோடு சத்துரு நிஷ்டூர வாதம்புல்லவே சகோதரர் தாய் மனையாள் புத்திரரின்நலம் கெடும் பொருளும் போகும் அல்லவே மன்னவரால் பதியும் சேதம் அரிவையர் தங்களால் வியாதியாமே!என்கிறது ஒரு வெண்பா.எட்டில் குரு வந்தால், அவரால் நடக்க வேண்டிய நன்மைகள் தடைபடும் என்று எச்சரிப்பதே இந்த ஜோதிட வெண்பாவின் நோக்கம். ஏழரைச்சனி வேறு நடப்பதால் நிலைமை கொஞ்சம் சிக்கலோ என்று எண்ண வேண்டியுள்ளது. இருப்பினும், குருவின் 12ம் இட பார்வை ஏழரையின் தாக்கத்தை குறைக்கும்.மற்ற கிரகங்களால் கடுமையை எதிர்கொண்டாலும் கேதுவின் அனுகூலத்தால் ஆன்மிக சிந்தனை மேலோங்கும். அதனால்,அடிக்கடி கோயிலுக்குச் செல்வதன் மூலம் பிரச்னையின் தீவிரத்தைக் குறைத்துக் கொள்ளலாம். படைத்தவன் தானே நம்மைப் பாதுகாக்க முடியும்! குருபலத்தால் ஆயுள்பலம் அதிகரிக்கும், இருப்பினும், ஆரோக்கிய விஷயத்தில் அக்கறை கொள்வது அவசியம். எட்டாம் இட குரு வாழ்வில் தடுமாற்றத்தை உருவாக்கும். பணப் பற்றாக்குறை உண்டாகும். கடன்விஷயத்திலும் உஷாராக இருப்பது அவசியம். சிக்கனத்தை கடைபிடித்தால் கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம். குடும்பத்தில்சலசலப்புக்கு பஞ்சமிருக்காது. பேச்சில் மிகவும் கவனம் தேவை. நிதானம் இழந்து பேசுவதால் பிரச்னைக்கு உள்ளாகலாம், கவனம். சகோதரர்கள் உங்களிடம் உரிமை என்ற பெயரில் மோதுவார்கள். அவர்களிடம் அளவாக உறவு கொள்வது நல்லது. இயன்ற உதவிகளை அவர்களுக்கு மறுக்காமல் செய்வதன் மூலம் கருத்து வேறுபாட்டைத் தவிர்க்கலாம். முரட்டு தைரியம் அதிகரிக்கும். இது சில சிக்கல்களில்மாட்டி விடும். கவனம். தாயிடம் இருந்த கருத்துவேறுபாடு நீங்கி இணக்கம் அதிகரிக்கும். அவர்களின் தேவையை நிறைவேற்றி அன்புக்குரியவராகத் திகழ்வீர்கள். வீடு, வாகன வகையில் இருக்கிற வசதியைப் பயன்படுத்திக் கொள்வது போதுமானது. வீட்டில் பராமரிப்பு செலவு செய்ய நேரிடும்.குழந்தைகளின் கல்வி, ஆரோக்கிய விஷயங்களில் அதிருப்திக்கு ஆளாவீர்கள். விழிப்புடன் இருந்து அவர்களை நல்வழிப்படுத்துவது நல்லது. அதிக அலைச்சல் இருக்கும். உங்கள் உடல்நிலை சீராக இருக்காது. உஷ்ண வியாதிகளால் அவதிப்படலாம். திருமணம் போன்ற சுபவிஷயத்தில் தடைகள் குறுக்கிடும். உறவினர்களின் ஒத்துழைப்பும் கிடைப்பது சந்தேகம் தான். கணவன், மனைவி கருத்துவேறுபாடு கொள்வர். விட்டுக்கொடுக்கும் மனோபாவம் குறையும். குடும்ப உறுப்பினர்கள் சிலரே பிரித்தாளும் தந்திரத்தை செய்து கொண்டிருப்பர். உஷார்.நண்பர்களாக இருந்தவர்கள் எதிரிகளாக மாற வாய்ப்புண்டு. அந்தரங்கப் பணிகளை, உங்களின் நேரடி கண்காணிப்பில் மேற்கொள்வதன் மூலம் பிரச்னையைத் தவிர்க்கலாம். தந்தையின் உடல்நலனில் கவனம் வேண்டும். அவருடன் கருத்துவேறுபாடு கொள்ளும் சூழ்நிலையும் இருக்கிறது. பூர்வீகச் சொத்தின் மூலம் பிரச்னைக்கு உள்ளாவீர்கள்.
தொழிலதிபர்கள்: உற்பத்தி மிக சுமாராகவே இருக்கும். லாபம் எதிர்பார்த்த அளவு இருக்காது. பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில் குளறுபடி ஏற்படலாம். நிர்வாகச் செலவு அதிகரிக்கும். தொழில் கருவிகளை மாற்றியமைத்து உற்பத்தியைப் பெருக்கும் திட்டம் சிரமத்தின் பேரில் நிறைவேறும். தொழிற்சாலை இடவசதியை அதிகரிப்பீர்கள். பண வரவு செலவில் நேரடி கண்காணிப்பு நல்லது.
வியாபாரிகள்: சந்தையில் போட்டி அதிகரிப்பதால் விற்பனை இலக்கை அடைவதில் பின்தங்குகிற நிலை ஏற்படும். பொருட்களின் தரம் உயர்வாகவும், அளவான லாபத்திற்கு விற்பதன் மூலமும், வியாபாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம். நிர்வாகச் செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். வெளியூர் பயணங்களை பயனறிந்து மேற்கொள்வதால் பணம் மிச்சமாவதுடன், உடல்நலமும் பாதுகாக்கப்படும். வியாபார அபிவிருத்திக்காக எதிர்பார்க்கிற நிதியுதவி கிடைக்கும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் அதிக பணிச்சுமையை எதிர்கொள்கிற நிலை உண்டு. சோம்பல் குணம் மேலோங்கும் என்பதால், மனஉறுதியுடன் அன்றைய பணியை அன்றே முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இல்லாதபட்சத்தில் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரும். சிலர் நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். சலுகைகள் அதிகம் இராது. எனவே, குடும்பத் தேவைகளுக்காக அலுவலகத்தில் கடன் வாங்க நேரும். சக பணியாளர்களுடன் சுமூக நட்பு இருக்கும். சிலருக்கு பணியிட மாற்றம் ஏற்படலாம்.
பெண்கள்: குடும்பப்பெண்கள் கணவருடன் அனுசரித்து நடக்க வேண்டும் என்பதில் அக்கறையுடன் செயல்படுவர். நல்லோரின் அன்பு, ஆசி கிடைத்து மனதில் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை பிறக்கும். வீட்டுச்செலவுக்கு தட்டுப்பாடு இருக்கும் என்பதால், சிக்கன செலவு செய்து சிரமம் அணுகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தாய்வீட்டு உதவி கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டங்களை மதித்து நடப்பதால் மட்டுமே பணியில் குளறுபடி, ஒழுங்கு நடவடிக்கை வராமல் தவிர்க்கலாம். சலுகைகள் குறைவே. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனம் இட்டால் போதும். கடுமையாக உழைத்தால் தான் உற்பத்தி, விற்பனையை காத்துக் கொள்ள முடியும்.
மாணவர்கள்: உடல்நலத்தை நல்லமுறையில் பராமரித்துக்கொள்வதால் மட்டுமே படிப்பில் கவனம் ஏற்படும். படிப்புக்கான பணவசதி குறைந்த அளவில் கிடைக்கும். சிலர், பகுதிநேர வேலை பார்த்து படிப்புக்கான பணச்செலவை ஈடுகட்ட முயற்சிப்பர். சக மாணவர்களிடம் கருத்துபேதம் வராத சுமூக சூழ்நிலை இருக்கும். பெற்றோரின் எதிர்பார்ப்புக்கு குறை ஏற்படாமல் படிப்பில் அதிக கவனம் கொள்வது நல்லது. வண்டியை வேகமாக ஓட்டுவது கூடாது.
அரசியல்வாதிகள்: செயல்கள் நிறைவேறுவதற்குள் பலவித சோதனை, எதிர்ப்புக்களை சந்திக்க வேண்டியிருக்கும். நம்பிக்கையுடன் நடந்துகொள்வதால் மட்டுமே நன்மை கிடைக்கும். அரசியல் பணிக்கு புத்திரர்களின் உதவி ஊக்கம் தரும். ஆதரவாளர்களின் நம்பிக்கையை பெறுவது அவ்வளவு எளிதல்ல. எதிரிகளுக்கு பாடம் புகட்ட வேண்டுமென செயல்பட்டால் நேரமும் பணமுமே விரயமாகும். கடன் கொடுத்த பணம் வசூலாகும். வாகன வசதிபெற வழியுண்டு.
விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான இடுபொருட்கள் கிடைப்பதில் தாமதமும் பணப்பற்றாக்குறையும் ஏற்படும். அளவான மகசூல், அதற்கேற்ப பணவரவு கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் அபிவிருத்தியும் நல்ல வருமானமும் பெறுவீர்கள். நிலம் தொடர்பான பிரச்னை இழுத்தடிக்கும்.
பரிகாரம்: முருகப்பெருமானை வணங்குவதால் பிரச்னைகளின் தீவிரம் குறைந்து விடும்.
பரிகாரப் பாடல்:
அன்பர்கள் நேயா! அம்பிகை புதல்வா!
துன்பம் அகற்றிடும் சீலா பாலா!
சிவகுமாரா முருகா வருக!
பரமா! புருஷா! வரம் தர வருக!
கலங்காது எனையே காத்திட வருக!
காவாய் முருகா கார்த்திகை குமரா!
வா வா முருகா! வல்லமை தரவே.

Guru Peyarchi Palangal (28.5.13 முதல் 12.6.14 வரை) - Thulam

துலாம்: ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் என ஊஞ்சல்!


வெற்றியே குறிக்கோள் என துடிப்புடன் செயல்படும் துலாம்ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு 8ல் சஞ்சரித்த குருபகவான், மே28முதல் பாக்கியஸ்தானமான 9ம்இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். இவர் தன்பார்வையால் 1,3,5 ஆகிய ஸ்தானங்கள் வாயிலாக நன்மையை வாரி வழங்குவார். ஜென்மத்தில் இருக்கும் சனியின் பார்வை 3,7,10 ஆகிய இடங்களில் பதிகிறது. பாரப்பா குருவே தான் இரண்டொடு ஐந்தேழ் பரிவாகும் நவத்தோடு பதினொன்றில் தான் சீரப்பா நின்றபலன் செப்பக்கேளு சிவிகையொடு கரிபரி கல்யாணம் கூடும் நேரப்பா பூஷணமும் மறையோர் நேயம் நிலையாகும் அரசருடன் பேட்டி காணும் கூறப்பா சுகமெல்லாம் கொடுக்கும் மெத்த குடும்பமது தான் செழிக்கும் கீர்த்தி ஓங்கும்என்று ஒன்பதாம் இட குரு தரும் நன்மைகளை பட்டியலிடுகிறது இந்த ஜோதிட வெண்பா. இதன்படி, ஏழரைச்சனியின் கெடுபலனை, குருவின் பார்வைபலம் பெருமளவு குறைத்து விடும். அதாவது, இத்தனை நாள் மனதில் வீசிய வெப்பக்காற்று தணிந்து, மனம் இன்ப ஊஞ்சலாடும். ஆயுள்பலம் அதிகரிக்கும். அதேசமயம், ராகுவால் உடலில் இனம்புரியாத பிரச்னைகள் அவ்வப்போது உண்டாவதை தவிர்க்க முடியாது.பணப்பற்றாக்குறைக்கு ஆளாக நேரிடும். இயன்றவரை சிக்கனத்தைக் கடைபிடித்து கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் அடிக்கடி வாக்குவாதம், பிரச்னை ஏற்பட்டாலும் ராசியைக் குரு பார்ப்பதால் அமைதிக்கான வழி பிறக்கும். பிடிவாதத்தைக் குறைத்துக் கொள்வதும், நிதானமாகப் பேசுவதும் பிரச்னையின் தீவிரத்தைக் குறைக்க உதவும். மனதில் தைரியம் அதிகரிக்கும். சகோதரர்கள் வகையில் சில இடைஞ்சல்களைச் சந்திப்பீர்கள். அவர்கள் விஷயத்தில் விழிப்புடன் செயல்படுவது நல்லது. சிலசமயம் அவர்களுக்கு உதவி செய்து உபத்திரவத்தில் மாட்டிக் கொள்ளலாம். கவனம்.தாயின் உடல்நலனில் அக்கறை செலுத்துவது அவசியம். அவருடன் கருத்துவேறுபாடும் உண்டாகலாம். புதிய மனையோ, வீடோ வாங்க ஏற்ற காலகட்டம் இதுவல்ல. குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவு அதிகமாகும்.குலதெய்வ அருளால் புத்திர பாக்கியம் கிடைக்க யோகமுண்டு. பிள்ளைகள் படிப்பில் பின்தங்கலாம். தகுந்த அறிவுரை கூறி அவர்களை வழிப்படுத்த முயற்சிப்பீர்கள். குழந்தைகளின் உடல்நலனுக்காக மருத்துவச் செலவு செய்ய நேரிடும்.ரோக ஸ்தானமாகிய 6ம் வீடான மீனராசியை எந்த கிரகபார்வையும் கிட்டாததால் உடல்நிலையில் அதிருப்தி ஏற்படும். உஷ்ண சம்பந்தமான பிணிகள் தலைகாட்டலாம். சிலருக்கு ஆபரேஷன் போன்ற சிகிச்சையும் செய்ய நேரிடும். ஆனாலும், மனநிலையில் உற்சாகம் நிலைத்திருக்கும் என்பதால் கடமையாற்றுவதில் தொய்வு உண்டாகாது. 7ம் வீடான களஸ்திர ஸ்தானத்தில் சனி,ராகு பார்வை பதிவதால் குருபலம் இருந்த போதும், திருமண முயற்சியில் தடங்கல்களை எதிர்கொள்வீர்கள். கடந்தகாலத்தில் கணவன், மனைவிக்கிடையே எழுந்த கருத்துவேறுபாடு மெல்ல மறையும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் குடும்பம் முன்னேற்றப்பாதையில் செல்லும். மற்றவர்களை தேவையில்லாமல் விமர்சித்து எதிரிகளை உருவாக்கிக் கொள்ளும் நிலையுண்டு. இப்பழக்கத்தை விடுப்பது நிம்மதிக்கு வழிவகுக்கும். சுபநிகழ்ச்சிகளை மனநிறைவாக செய்து முடிப்பீர்கள். தந்தையிடமிருந்த கருத்து வேறுபாடு மறைவதோடு உறவும் பலப்படும். பிதுர்சொத்தில் இருந்த பிரச்னை நீங்கி, பாகப்பிரிவினை நடந்தேறும். சுயதொழில் துவங்க விரும்புபவர்களுக்கு அனுகூல சூழ்நிலை உருவாகி நிறைவேறும்.
தொழிலதிபர்கள்: புதிய தொழில்நுட்பங்களை அறிந்து செயல்படுத்துவதில் அதிக ஆர்வம் கொள்வீர்கள். மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உற்பத்தி, தரத்தின் அளவை அதிகரிப்பீர்கள். நிறுவனத்தின் நற்பெயர் பரவலாகும். பணவரவில் இருந்த தளர்ச்சி நீங்கி மிதமான லாபம் கிடைக்கும். தொழிலதிபர் சங்கங்களில் கவுரவமான பதவி பெறுகிற யோகம் உண்டு. நிர்வாகச் செலவு அதிகரிக்கும். வெளிநாடு சுற்றுலா பயணம் திட்டமிட்டபடி நிறைவேறும்.
வியாபாரிகள்: அதிக மூலதனம் செய்யும் அளவிற்கு ஒரு தொகை கையில் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைத்து விற்பனையில் முன்பை விட முன்னேற்றம் அடைவீர்கள். லாபமும் பல வகைகளில் நன்மையும் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குகிற முயற்சி நிறைவேறும். சிலர் புதிய கிளைகள் துவங்க அனுகூலம் உண்டு. புத்திரர்கள் வியாபாரம் செழிக்க தகுந்த ஆலோசனை தந்து, வியாபார நடைமுறையில் உறுதுணை புரிவர். பாக்கிப்பணம் எளிய முயற்சியால் வசூலாகும்.
பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறை பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். தங்களுக்குரிய பொறுப்புக்களை உணர்ந்து உற்சாகத்துடன் செயல்படுவர். குறித்தகாலத்தில் பணி இலக்கு நிறைவேறி நன்மதிப்பு, சலுகைளைப் பெற்றுத்தரும். சிலருக்கு பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சக பணியாளர்கள் அன்புடன் நடந்து கொள்வர்.
பெண்கள்: குடும்பப் பெண்கள் கணவரின் கருத்துக்களை மதித்து நடந்துகொள்வர். குடும்பத்தில் ஒற்றுமை வளரும். வீட்டுச்செலவுக்கு தாராள பணவசதி கிடைத்து மகிழ்ச்சிகரமான வாழ்க்கை நடத்துவர். புத்திரர்களின் படிப்பு திறமை வளர்வது கண்டு மகிழ்வீர்கள். பணிபுரியும் பெண்கள் குறித்த காலத்தில் பணிகளை முடிப்பர். அதிகாரிகளின் ஆதரவுடன் பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் எளிதாக கிடைக்கும். இளம் பெண்களுக்கு திருமண முயற்சி இனிதாக நிறைவேறும். தங்க நகை வாங்குவீர்கள். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையில் முன்னேற்றம் அடைவர்.
மாணவர்கள்: தடைபட்டிருந்த உயர்கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புண்டாகும். கல்விக்கடன், அரசாங்க உதவியோடு படிப்பைத் தொடர்வீர்கள். ஒருமித்த மனதுடன் படித்து அதிக மார்க் பெறுவீர்கள். படிப்புக்கான பணவசதி திருப்திகரமான அளவில் கிடைக்கும். படிப்புடன் தனித்திறமைகளையும் வளர்த்துக்கொள்வீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாகி தேவையான உதவி வழங்குவர். பெற்றோர் சொல்லும் வார்த்தையை வேதவாக்காக கருதி செயல்படுவீர்கள்.  படிப்பை முடித்து வேலைவாய்ப்பு பெற முயற்சி செய்பவர்களுக்கு கவுரவமான பணி கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆதரவாளர்களின் கோரிக்கையை பெருமளவில் பூர்த்தி செய்வீர்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உண்டு. எதிரிகளால் இருந்த தொல்லை குறையும். கவுரவமான பதவி கிடைக்க அனுகூலம் உண்டு. அரசியல் பணிக்கு புத்திரரின் உதவியும் கைகொடுக்கும். சுற்றுலா பயணம் திட்டமிட்டபடி மேற்கொள்வீர்கள். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும். வீடு, வாகனம் விரும்பியபடி வாங்குவீர்கள்.
விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான அனைத்து வசதிகளும் எளிதாக கிடைக்கும். மகசூல் அதிகரித்து தாராள லாபம் பெறுவீர்கள். கால்நடை வளர்ப்பில் அபிவிருத்தியும் எதிர்பார்த்த பணவரவும் உண்டு. புதிய நிலம் வாங்குகிற திட்டம் நிறைவேறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவீர்கள்.
பரிகாரம்: பைரவரை வழிபடுவதால் பலன்கள் மேலும் அதிகரிக்கும். நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
பரிகாரப் பாடல்:
கடிகமலம் சூழ்புவியில் மறையவராம்
வாதாவிக் கடிந்து மன்னாற்
படிக்கமல மறவடியார்க் கனம் படைத்தோர்
சீராளற் பயந்த நங்கை
பிடிக்கமலம் காதரிந்து சமைத்தகறி
வயிரவராம் பெருமாற்கீந்தே
அடிக்கமலம் குடிபெறுநற் பரஞ்சோதி
சிறுத்தொண்டர்க்கு அன்பு செய்வாம்.

Guru Peyarchi Palangal (28.5.13 முதல் 12.6.14 வரை) - Kanni

கன்னி: யானையின் பலம் தும்பிக்கை உங்களின் பலம் நம்பிக்கை!


இனிமையான சுபாவம் கொண்ட கன்னிராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9ல்  சஞ்சரித்த குரு, மே28 முதல் 10ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். அவர் பார்வை 2,4,6ம் இடங்களில் பதிகிறது. சனி ராசிக்கு இரண்டில் உச்சத்தில் இருந்து 4,8,11 ஆகிய இடங்களைப் பார்க்கிறார்.  ஓங்கவே குருவேதான் ஒன்று மூன்று உகந்த நாலாறு எட்டுபத்து ஈறாறில் தீங்காக நின்றிடிலோ பலனைக்கேளு,தேடிய பொருள் பூமி சேதமாகும் வாங்கவே அகத்தினிலே அலைச்சலோடுவாதபித்த ரோகமது வந்து வாட்டும்தாங்கவே தந்தையொடு புத்திரக்கும்தேடிவரும் தீமையது திகில் உண்டாமே! என்கிறது ஒரு வெண்பா.பத்தாம் இட குருவால்  பிரச்னை உண்டு என்று இந்த வெண்பா சொன்னாலும் அவரது பார்வை பலத்தால், உடல்நலமும், ஆயுள்பலமும் அதிகரிக்கும். மனதில் ஏதாவது குழப்பத்தை உருவாக்கிக் கொண்டிருப்பீர்கள். இந்த பிரச்னையும் தற்காலிகமானதே. தடைபட்டு வந்த பணநிலை குருவின் பார்வையால் சீர்படும். வருமானம் அதிகரிப்பதால் சேமிக்கவும் வாய்ப்புண்டு. யாருக்கும் வாக்குறுதி அளிக்காமல் இருப்பது நல்லது. இல்லாவிட்டால் வேண்டாத வம்பில் மாட்டிக் கொள்வீர்கள்.சகோதர வகையில் செலவு அதிகரிக்கும். அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கான ஆலோசனை வழங்குவீர்கள். தாயின் உடல்நிலை சீராக இருக்கும். தாய்வழி சொத்து கிடைக்கும். வீடு, வாகனத்தில் மராமத்துப்பணி மேற்கொள்வீர்கள். வருமானத்தை விட செலவு அதிகரிக்கும். மனை, வீடு வாங்கும் முயற்சியில் விடாமுயற்சி தேவைப்படும். சிலர் வீடு கட்டும் வகையில், அகலக்கால் வைத்து பணச்சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம். உங்களிடம் இருக்கும் பணத்துக்கு மட்டும் பட்ஜெட்டை தீட்டுங்கள். பிள்ளைகள் படிப்பில் மந்தகதியில் செயல்படுவர். அவர்களுக்கு தக்க அறிவுரை கூறி வழிகாட்டுவது அவசியம். அவர்களின் சேர்க்கை விஷயத்தில் எச்சரிக்கை கொள்வது நல்லது. குறிப்பாக, பெண் குழந்தைகள் ஆண் நண்பர்களிடம் பழகுவது தெரிந்தால், பக்குவமாக எடுத்துச் சொல்லி சிக்கலில் இருந்து மீளுங்கள். கடன்பிரச்னையால் நிர்ப்பந்தத்திற்கு ஆளாவீர்கள். கடன் பெறும்போது நம்பகமானவர்களை அணுகுவது முக்கியம். உடல்நலனில் அக்கறை தேவை. கடந்த காலத்தில் இருந்து குணமான சில வியாதிகள் தலைதூக்கும். சளி, இருமல் போன்ற பிரச்னைக்கு ஆளாவீர்கள். திருமண முயற்சியில் தடைகளைச் சந்திப்பீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு ஓரளவே கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட இடமுண்டு. தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தால் மட்டுமே வீட்டில் நிம்மதி நிலைக்கும். சனியின் பார்வையால் ஆயுள்பலம் அதிகரிக்கும். ஆனால், உடல்ரீதியான பிரச்னை அவ்வப்போது உருவாகும். எதிரிகளின் தொல்லை மறையும். மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். நண்பர்களின் செயல்பாடு மனதிற்கு ஆறுதல் தரும்.தந்தைவழி உறவினர்களிடம் கருத்து வேறுபாடு உருவாகும். தந்தையின் உடல்நலனுக்காக மருத்துவச் செலவு செய்வீர்கள். வெளியூர் பயணத்தின் போது பணம், பொருட்களை விழிப்புடன் கவனிப்பது நல்லது. பிரதான கிரகங்களான குரு, சனி இரண்டும் சாதகமாக இல்லாவிட்டாலும் யானை தம் தும்பிக்கையை நம்பியிருப்பதைப் போல, நீங்கள் தன்னம்பிக்கையுடன் சாதிப்பீர்கள்.
தொழிலதிபர்கள்: விடாமுயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் மட்டுமே லாபத்தை தக்கவைக்க இயலும். தொழிலாளிகளின் ஒத்துழைப்பும் ஓரளவே கிடைக்கும். நிர்வாகச் செலவைக் கட்டுப்படுத்த போராட வேண்டியிருக்கும். நிர்வாக நடைமுறையை சரியான பாதையில் கொண்டு செல்வதில் சில இடையூறுகளை சந்திப்பீர்கள். லாபம் சுமாராக இருக்கும். கட்டட விஸ்தரிப்பு பணி மேற்கொள்வீர்கள். கடந்த காலத்தில் போட்டியாக செயல்பட்டவர்கள் விலகுவர்.
வியாபாரிகள்: விற்பனையில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடிக்க கடும் முயற்சி செய்வீர்கள். சுமாரான விற்பனை, பணவரவு கிடைக்கும். கடந்த காலத்தில் சேர்த்து வைத்த பணம் மூலதன தேவைகளுக்கு பயன்படும். வியாபார நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கு வசதியாக புதிய வாகனம் வாங்குவீர்கள். போட்டி குறைந்து வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பும் நிறுவனத்தில் தகுந்த புகழும் பெறுவீர்கள். குடும்பத்தேவைகளை சிக்கன செலவில் நிறைவேற்றுவீர்கள்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவதால் மட்டுமே, குளறுபடி வராமல் குறித்த காலத்தில் பணிகளை நிறைவேற்ற முடியும். வேலைபளுவால் சிரமம் ஏற்படும். நியாயமாக பெற வேண்டிய சலுகைகள் கூட ஓரளவே கிடைக்கும். வீடு, வாகன கடன் பெற அனுகூலம் உண்டு. சக பணியாளர்களிடம் உங்கள் மீதான நல் அபிப்பிராயம் வளர்ந்து நட்பை பலப்படுத்தும். இயந்திர தொழிற்சாலை பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறையை அக்கறையுடன் பின்பற்றுவதால் மட்டுமே சிரமம் வராமல் தவிர்க்கலாம். சிலர் ஒழுங்கு நடவடிக்கை, பணியிட மாற்றம் ஆகிய பலன்களை பெறுகிற நிலை உள்ளது.
பெண்கள்: குடும்பப் பெண்களுக்கு வீட்டுச்செலவுக்கு தட்டுப்பாடு ஏற்படும். கணவரின் பணவரவுக்கேற்ப செலவுகளை திட்டமிடுவதுடன் சிக்கனமாக இருப்பதும் அவசியம். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்துவதில் தடை ஏற்படும். தாய்வீட்டு உதவி கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் பொறுப்புணர்வுடன் செயல்படுவதால் மட்டுமே பணியில் குளறுபடி வராமல் தவிர்க்கலாம். சிலர் கவனக்குறைவாக பணிபுரிந்து ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடலாம். சுயதொழில் புரியும் பெண்கள் ஆரோக்கிய உடல்நலத்துடன் உற்பத்தி, விற்பனையில் தகுந்த கவனம் கொள்வர். சுமாரான பணவரவு கிடைக்கும். தங்கநகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம்.
மாணவர்கள்: படிப்புக்கான பணவசதி திருப்திகரமான அளவில் கிடைக்கும். ஞாபகத்திறன் வளர்ந்து தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும். பெற்றோரின் அன்பு, பாசம் உங்களை மகிழ்ச்சிகரமாக்கும். தனித்திறனை வளர்த்து பேச்சுப்போட்டி, விளையாட்டுகளில் பாராட்டு, பரிசு பெறுவீர்கள். சக மாணவர்கள் படிப்பில் உறுதுணையாக செயல்படுவர். படித்து முடித்து வேலை வாய்ப்புக்காக முயற்சிப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற பணி கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: ஆதரவாளர்களிடம் பெற்ற நம்பிக்கைக்கு குறையேதும் வராத அளவில் செயல்படுவது நல்லது. புகழைத் தற்காத்துக் கொள்ள அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குகிற திட்டம் நிறைவேறும். அரசியல் பணியில் புத்திரர்கள் ஓரளவே உதவுவர்.எதிரிகளால் தொந்தரவு எதுவும் வராத நன்னிலை உண்டு. அலட்சியம், கவனக்குறைவாக செய்கிற செயல்கள் கஷ்ட சூழ்நிலையை உருவாக்கும். நடைமுறையை சீராக்குவது நல்லது.
விவசாயிகள்: விவசாயப் பணிகளுக்கு செலவு செய்கிற பணத்தின் அளவு முன்பை விட அதிகரிக்கும். சுமாரான மகசூல் கிடைக்கும். விளைபொருட்களுக்கு கட்டுப்படியாகிற விலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் அபிவிருத்தியும் ஓரளவு பணவரவும் பெறுவீர்கள். நிலம் தொடர்பான விவகாரம் இருந்தால் சமரச தீர்வு கிடைக்கும்.
பரிகாரம்: பெருமாளை வழிபடுவதால் சிரமங்கள் நீங்கி நன்மை உண்டாகும்.
பரிகாரப்பாடல்:
கடல்கடைந்து அமுதம் கொண்டு
கலசத்தை நிறைந்தாற் போல்
உடல் உருகி வாய் திறந்து
மடுத்து உன்னை நிறைத்துக் கொண்டேன்
கொடுமை செய்யும் கூற்றமும்என்
கோலாடி குறுகப்பெறா
தடவரைத் தோள் சக்ரபாணீ
சாரங்க வில் சேவகனே!

Guru Peyarchi Palangal (28.5.13 முதல் 12.6.14 வரை) - Simmam

சிம்மம்: நம்ப முடியாது உங்களை வெல்ல முடியாது!


குடும்ப பெருமையை நிலைநாட்டும் சிம்மராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் சஞ்சரித்த குருபகவான், மே28 முதல் லாப ஸ்தானமான பதினோராம் இடத்திற்குச் செல்கிறார். அவரின் பார்வை 3,5,7ம் இடங்களில் படுவதால் நன்மை உண்டாகும். 3ம் இடத்தில் இருக்கும் சனியின் பார்வை 5,9,12ம் ராசிகளில் பதிகிறது. பெரு பதினொன்றைந் தேழ் பேர்ஒன்பதாம் இரண்டில் தேவகுரு வரில் செல்வம் சிரூர் குதிரை வெண்குடை தீவர்த்தி தருமமும் தானமுண்டு தாய்தந்தை துணையும் உண்டாம் அருமையும் பெருமையுண்டாம் அரசர் சேவையும் உண்டாமே!என்கிறது ஒரு வெண்பா. இதன்படி, நம் வாழ்விலா இப்படி நடக்கிறது என உங்களாலேயே நம்ப முடியாத பலன்கள் நடக்கும். உங்களை யாரும் வெல்ல முடியாது. கடந்தகாலத்தில் சிரமம் கொடுத்து வந்த நோய்நொடி அனைத்தும் விலகி ஆரோக்கியம் மேம்படும். உள்ளத்திலும் புத்துணர்ச்சி மேலோங்கும். குருவருளால் இந்த ஓராண்டும் பொற்காலமாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. பணவரவு தடையின்றி கிடைக்கும். குடும்பத்தினர் தேவை அனைத்தும் நிறைவேறும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். அதற்காக அளவுக்கு மீறி வாக்கு கொடுப்பது கூடாது. மனதில் தைரியம் ஊற்றெடுக்கும். இளைய சகோதரர் வாழ்வு உயரும். சகோதரர்களின் பாசமழையில் நனைவீர்கள். அவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியைச் செய்து மகிழ்வீர்கள். தாயின் உடல்நிலை சீர்பெறும். தாயிடம் இருந்து வந்த கருத்துவேறுபாடு மறையும். வீட்டிற்குத் தேவையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்வீர்கள். சிலருக்கு புதியவீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. நீண்டநாள் பிரார்த்தனை, வேண்டுதல் கூட எளிதாக நிறைவேற்றும் வாய்ப்பு அமையும்.தடைபட்டு வந்த திருமண முயற்சி இனிதே நிறைவேறும். சுபநிகழ்ச்சிக்கு உறவினர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். கருத்துவேறுபாடு மறைவதோடு தம்பதிக்கு இடையே அன்பு மேலோங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு இனிய தருணம் இதுவாகும். வீட்டில் மழலைக்குரல் கேட்கும் காலம் நெருங்கிவிட்டது. பிள்ளைகளின் கல்வி, வேலைவாய்ப்பு விஷயத்தில் எதிர்கால வளர்ச்சிக்காகத் திட்டமிட்டு செயல்படுவீர்கள். அலைச்சலால் அடிக்கடி அசதிக்கு ஆளாவீர்கள். ஆரோக்கிய விஷயத்தில் அக்கறை செலுத்தி உடல்நலத்தைப் பேணுவீர்கள். கடன் பிரச்னையைக் கட்டுக்குள் வைத்திருப்பீர்கள். ஓரளவு அடைபடவும் வாய்ப்புண்டு. பகைவர் கூட நண்பராக மாறும் சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியும் அவ்வப்போது கிடைக்கும். வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு.தந்தையின் உடல்நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. அவருக்காக மருத்துவச் செலவு செய்ய நேரிடும். சுயதொழில் புரிவோருக்கு அரசுவகையில் ஆதாயம் உண்டு.
தொழிலதிபர்கள்: உங்களின் தொழில் வளர்ச்சிக்கான அத்தனை முயற்சிகளும் முழு அளவிலான வெற்றியைத்தரும். புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து உற்பத்தியின் அளவை அதிகரிப்பீர்கள். லாபம் நன்றாக இருக்கும். நவீன இயந்திரங்களை வாங்குவீர்கள். சக தொழில் சார்ந்தவர் உங்களின் நட்பை பெரிதும் விரும்புவர். தொழிலதிபர் சங்கங்களில் கவுரவமான பதவி கிடைக்கும். புத்திரர்கள் நிர்வாகப்பணிகளில் தகுந்த பயிற்சி பெற்று உதவிகரமாக நடந்து கொள்வர்.
வியாபாரிகள்: அதிக மூலதனத்துடன் அபிவிருத்தி பணிகளை திறம்பட நடத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவு பலமாக கிடைக்கும். விற்பனை அதிகரித்து தாராள பணவரவு பெறுவீர்கள். வாடகை கட்டடத்தில் நிறுவனம் நடத்துபவர் சொந்த இடம் வாங்கி நடத்த அனுகூலம் உண்டு. சக தொழில் சார்ந்தவர் உதவிகரமாக நடந்துகொள்வர். புத்திரர்கள் உங்களின் வியாபார நடைமுறையில் புதிய மாற்றங்களை கொண்டுவர தகுந்த திட்டங்களை உருவாக்கித்தருவர்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணித்திறமையை நன்கு பயன்படுத்தி குறித்த காலத்தில் இலக்கை நிறைவேற்றுவர். பதவி உயர்வு பெறுகிற தகுதி உள்ளவர்களுக்கு அனுகூலம் எளிதில் கிடைக்கும். சலுகைகளும் திருப்திகரமாக வந்து சேரும். வீடு, வாகனம் வாங்குவதற்கான பணக்கடன் இனிய அணுகுமுறையால் பெறுவீர்கள். தனியார் துறை பணியாளர்களுக்கு ஓவர்டைம் உள்ளிட்ட சலுகைகள், பயிற்சி பெற வெளிநாடு, வெளிமாநிலம் செல்லுதல் ஆகிய அனுகூலங்கள் உண்டு. சக பணியாளர்களுடன் சுமூக உறவு இருக்கும்.
பெண்கள்: குடும்பப் பெண்கள் கணவரின்  கருத்துக்களை மதிப்புடன் ஏற்று நடந்து கொள்வர். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பணவசதி திருப்திகரமாக இருக்கும். புத்திரப்பேறு விரும்புபவர்களுக்கு அனுகூல பலன் உண்டு. பணிபுரியும் பெண்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு பணியை திறம்பட நிறைவேற்றுவர். தாமதமான சலுகைகள், பதவி உயர்வு கிடைக்கும். தங்க நகை வாங்குவீர்கள். சுயதொழில் புரியம் பெண்கள் தாராள பணவசதி கிடைத்து உற்பத்தி, விற்பனையில் அபிவிருத்தி காண்பர். நவீன தொழிற்கருவிகள் வாங்குவீர்கள். இளம் பெண்களுக்கு திருமண முயற்சி இனிதாக நிறைவேறும்.
மாணவர்கள்: லட்சிய மனதுடன் படித்து படிப்பில் சிறந்த தேர்ச்சி பெறுவீர்கள். தனித்திறன் வளர்த்து புகழ் பெறுவீர்கள். பெற்றோர் அதிக அன்பு, பாசத்துடன் தேவையான உதவிகளை வழங்குவர். ஆன்மிக நம்பிக்கை மனதில் வளர்ந்து தெய்வ வழிபாடுகளில் கலந்துகொள்வீர்கள். சக மாணவர்கள் படிப்பில் உறுதுணையாக செயல்படுவர். சுற்றுலா செல்ல அனுகூலம் உண்டு. படிப்பை முடித்து வேலைவாய்ப்பு பெற முயற்சிப்பவர்களுக்கு கவுரவமான சம்பளத்தில் பணி கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: புகழும் அந்தஸ்தும்  பெறுவீர்கள். ஆதரவாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகளின் ஒத்துழைப்பு முழு அளவில் கிடைக்கும். எதிரிகள் விலகுகிற அளவில் உங்கள் செயல்பாடுகள் அமையும். புத்திரர்கள் உங்கள் அரசியல் பணிக்கு நல்லமுறையில்  உதவுவர். கவுரவமான பதவி கிடைக்க அனுகூலம் உண்டு. புதிய வீடு, வாகனம் வாங்குவீர்கள்.
விவசாயிகள்: விவசாயப்பணிகளில் மிகுந்த ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். பயிர் வளர்க்க தேவையான அத்தனை வசதிகளும் எளிதாக கிடைக்கும். மகசூல் அதிகரித்து பயிர்களுக்கு நல்ல விலை பெறுவீர்கள். கால்நடை வளர்ப்பில் அபிவிருத்தியும் உபரி பணவரவும் உண்டு. புதிய நிலம் வாங்க அனுகூலம் உருவாகும்.
பரிகாரம்:ராமபிரானை வணங்குவதால் உங்கள் வாழ்வு மேலும் வளம் பெறும்.
பரிகாரப் பாடல்:
சுற்றமெல்லாம் பின்தொடர
தொல்கானம் அடைந்தவனே!
அற்றவர்கட்கு அருமருந்தே!
அயோத்தி நகர்க்கு அதிபதியே!
கற்றவர்கள் தாம் வாழும்
கணபுரத்தெண் கருமணியே!
சிற்றவை தன் சொற்கொண்ட
சீராமா தாலேலே!

Guru Peyarchi Palangal (28.5.13 முதல் 12.6.14 வரை) - Kadagam



கடகம்: நீங்க உண்டு! உங்க வேலையுண்டு!

காரியத்தில் கண்ணாய் இருக்கும் கடகராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு லாபஸ்தானத்தில் சஞ்சரித்த குரு மே28 முதல் விரயஸ்தானமான பன்னிரண்டாம் இடத்தில் சஞ்ரிக்கப்போகிறார். குருவின் பார்வை 4,6,8 ஆகிய இடங்களில் விழுகிறது. சனி ராசிக்கு 4ல் இருந்து 1,6,10 ஆகிய இடங்களைப்  பார்க்கிறார்.  சொல்லவே பொன்னவனும் ஜென்மம் மூன்று சுகமான நாலாறு எட்டு பத்து வல்லவே பன்னிரண்டில் இருந்து வாழ அலைச்சலோடு சத்துரு நிஷ்டூர வாதம் புல்லவே சகோதரர் தாய் மனையா ள் புத்திரரின் நலம் கெடும் பொருளும் போகும்அல்லவே மன்னவரால் பதியும் சேதம் அரிவையர் தங்களால் வியாதியாமே!என்கிறது ஒரு வெண்பா.ராவணனுக்கு 12ல் குரு வந்த போது, பெண்ணாசையால் உயிரையே இழந்தான். பெண்கள், நண்பர்கள் விஷயத்தில் கவனம் அவசியம்.விரயகுரு, அர்த்தாஷ்டம சனி என முக்கிய கிரகங்கள் இரண்டையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள். ஆயுள்பலம் அதிகரித்தாலும் மனதளவில் அவ்வப்போது சோர்வுக்கு ஆளாவீர்கள். அதன் தாக்கத்தை உடல்நிலையும் உணர்த்தும். அதனால், அதிகாலையே எழுவது, புத்துணர்ச்சி தரும் விஷயங்களில் மட்டும் ஈடுபடுவது நல்லது.  பணப்பற்றாக்குறை உண்டாக வாய்ப்புண்டு. குடும்பச் செலவை திட்டமிட்டுச் செய்வது நன்மை தரும். அநாவசிய விஷயங்களில் கவனம் செலுத்துவது கூடாது. குடும்பத்தினரிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும். சகோதரர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய முற்படுவீர்கள். ஆனால், அவர்களிடம் நீங்கள் எந்த விதமான உதவியையும் எதிர்பார்க்க இயலாது. தாயின் உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். கருத்து வேறுபாடு மறைந்து அன்னையின் அன்புக்குரியவராகத் திகழ்வீர்கள். வீடு, வாகன வகையில் நல்ல அனுகூலமான சூழ் நிலையும், வளர்ச்சியும் காத்திருக்கிறது. தேவையான புதிய மாறுதல்களைச் செய்து மகிழ்வீர்கள். புத்திரர்களின் உடல்நிலை, கல்வி வளர்ச்சியில் அக்கறை தேவைப்படும். படிப்பில் சோம்பல், ஞாபகமறதி போன்ற பிரச்னையை பிள்ளைகள் எதிர்கொள்வர். கடன் விஷயத்தில் கவனம் வைப்பது அவசியம். புதிதாக கடன்வாங்கும்போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுங்கள். திருமண முயற்சியில் விடாமுயற்சி தேவைப்படும். சுபவிஷயங்கள் நடத்துவதில் உறவினர்களின் ஒத்துழைப்பு ஓரளவே கிடைக்கும். குடும்பத்தில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது நன்மை தரும். எதிரிவிஷயத்தில் விழிப்புணர்வு தேவை. அக்கம்பக்கத்தினரோடு அளவாகப் பழகுவது பிரச்னையைத் தவிர்க்க உதவும்.தந்தையின் உடல்நிலையில் அக்கறை செலுத்த நேரிடும். பூர்வீகச் சொத்தில் தேவையில்லாத பிரச்னை தலைதூக்கும். உயர்கல்வி பெறுவதற்கான யோகம் உண்டாகும். தடைபட்ட கல்வியைக் கூட தொடர்வதற்கான வாய்ப்பு ஏற்படும். தொழிலதிபர்கள் தொழிலில் சற்று மந்தகதியை எதிர்கொள்வர். கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் மட்டுமே வளர்ச்சி பெற முடியும். பணியாளர்கள் சகபணியாளர்களால் பணிச்சுமைக்கு ஆளாவர். கல்வி முடித்து வேலைவாய்ப்பைத் தேடுபவர்கள் பொறுமையுடன் இருப்பது அவசியம். மூத்த சகோதரர்களின் உதவி ஓரளவே கிடைக்கும். குருவால் தானதர்மங்களில் அக்கறையுடன் ஈடுபடுவீர்கள். கோயில் திருப்பணிகளுக்கு இயன்ற பணஉதவி செய்து புண்ணியத்தை தேடிக் கொள்வீர்கள். தானுண்டு தன்வேலையுண்டு என்று செயல்பட்டால் குருவின் சஞ்சாரமான ஓராண்டு காலத்தை நிம்மதியாக நடத்த முடியும்.
தொழிலதிபர்கள்: தொழிலில் அளவான உற்பத்தி, சுமாரான பணவரவு பெறுவீர்கள். சந்தையில் எதிர்ப்பாளர்களின் தொந்தரவு குறையும். புதியவர்கள் ஒப்பந்தம் செய்ய வருவர். அவர்களுக்கு திருப்திகரமான அளவில் சலுகை தருவதால் உற்பத்தி அதிகரிக்கவும், பண ஓட்டத்தை சரிக்கட்டி செல்லவும் வழி பிறக்கும். பணியாளர்களின் கோரிக்கைகளை ஓரளவே நிறைவேற்ற முடியும். நிர்வாக நடைமுறைகளை மேம்படுத்த சொத்துக்களின் பேரில் கடன் பெற வேண்டி வரும். 
வியாபாரிகள்: விற்பனையை அதிகரிக்க முயற்சியும் அணுகுமுறையில் மாற்றமும் பின் பற்றுவது அவசியம். சந்தையில் கடந்த காலத்தில் இருந்த போட்டி பெருமளவில் குறையும். தரமான பொருட்களை தருவதால் மட்டுமே விற்பனை, பணவரவின் அளவு அதிகரிக்கும். கூடுமானவரையில் ரொக்கத்திற்கு பொருள் விற்பதால் பணக்கஷ்டம் வராத நன்னிலை உருவாகும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் கவனக்குறைவான செயல்களால் பணியில் குளறுபடியும், தாமத சூழ்நிலையும் எதிர்கொள்வர். பொறுப்புணர்வுடன் செயல்படுவதால் மட்டுமே நிர்வாகத்தின் கண்டிப்பு, ஒழுங்கு நடவடிக்கையில் இருந்து தப்பலாம். சிலர் ஒழுங்கு நடவடிக்கை, சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஆகிய எதிர்மறை பலன்களுக்கு உள்ளாவர். குழுவாக பணி செய்பவர்கள் கருத்துபேதம் வராமல் செயல்படுவதால் மட்டுமே பணி இலக்கு சீராக நிறைவேறும். புதிய வீடு, வாகனம் வாங்குகிற முயற்சிக்கு எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும்.
பெண்கள்: குடும்பப் பெண்கள் கணவரின் அன்பு, சீரான பணவசதி கிடைத்து வாழ்வை நலமுடன் நடத்துவர். மாங்கல்ய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் கணவரின் ஆயுள், ஆரோக்கியம் பலம் பெறும். தாய்வழி உறவினர்கள் தேவையான உதவிகளை வழங்கி அன்பு கொள்வர். ஆரோக்கிய உடல்நலத்துடன் அன்றாட பணிகளில் ஈடுபடுவீர்கள். பணிபுரியும் பெண்கள் பணியில் எதிர்பாராமல் உருவாகிற குளறுபடியை பணிசார்ந்த அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனை, உதவிபெற்று சரிசெய்வது நல்லது.  
மாணவர்கள்: படிப்பில் ஞாபகத்திறன் வளர குருவின் ஐந்தாம் பார்வை பலமாக துணைநிற்கும். லட்சிய மனதுடன் படிப்பதால் திட்டமிட்ட தேர்ச்சி இலக்கை எளிதில் பெறலாம். தாயின் அன்பும், சீரான பணவசதியும் உங்கள் படிப்பில் மனதில் ஊக்கத்தை உருவாக்கும். படிப்புக்கு கிடைக்கிற கடனை படிப்புக்கு பயன்படுத்துவது நல்லது.  வேலைவாய்ப்பு பெற முயற்சிப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற வகையில் பணி கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: எதிரிகளின் தவறான கண்ணோட்டத்தால், பல சிரமங்களை முன்னர் அனுபவித்த நிலைமை மாறும். புதியவர்களின் அறிமுகம், உதவி கிடைத்து சேவைப்பணிகளை ஆர்வமுடன் மேற்கொள்வீர்கள். அலைச்சலும் அதிக செலவும் உருவாகும்.வழக்கு, விவகாரத்தில் அனுகூல தீர்வு பெற புதிய வழி பிறக்கும். 
விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான பணவசதி குறைந்த அளவிலேயே இருக்கும். பருவகால சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு உரிய பயிர் வகைகளை விளைவிப்பது நல்லது. விளைபொருள் விற்பனையில் அளவான லாபம் கிடைக்கும். கால்நடைகள் மற்றும் பயிர் வகைகளுக்கு காப்பீட்டு வசதிகளை தவறாமல் பின்பற்றுவதால் நஷ்டம் வராமல் தவிர்க்கலாம். கால்நடை வாங்க எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.
பரிகாரம்: அம்பாளை வழிபட்டால். தாயாக இருந்து தலைமேல் தாங்குவாள்.
பரிகாரப்பாடல்:
கார் ஒழுகும் குழலாளைக் கருணை வழிந்து
ஒழுகும் இரு கடைக் கண்ணாளை
மூரல் இளநிலவு ஒழுகப் புழுகு ஒழுக
அழகு ஒழுகும் முகத்தினாளை
வார் ஒழுகும் தனத்தாளை வடிவு ஒழுகி
தெரியாத மருங்கு லாளைச்
சீர்ஒழுகும் பதத்தாளை அருணை உண்ணா
முலையாளைச் சிந்தை சேர்ப்போம்.

Guru Peyarchi Palangal (28.5.13 முதல் 12.6.14 வரை) - Mithunam

மிதுனம்: எதிர்நீச்சல் போட்டால் காணலாம் உதயம்


சாதுர்யமாகப் பேசி செயலாற்றும் மிதுனராசி அன்பர்களே!
ராசிக்கு 12ல் சஞ்சரித்த குருபகவான், மே28 முதல் உங்கள் ராசிக்கே பெயர்ச்சியாகிறார். தன் பார்வை பலத்தால் 5,7,9 ஆகிய இடங்களுக்கு நன்மையளிப்பார். ராசிக்கு 5ல் இருக்கும் சனி, 2,7,11 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். பாரப்பா இன்னுமொன்று பகரக்கேளு,பரமகுரு ஜென்மத்தில் வந்த போதுகூறப்பா கோதண்டபாணி வீரன்கொற்றவனே குடியேறி போகச் செய்தார்சீரப்பா ஜென்மனுக்கு வேதை மெத்த சிவசிவா செம்பொன்னும் நஷ்டமாகும் வீரப்பா வேந்தனும் தோஷமுண்டுவிளம்பினேன் கோட்சார வினையைக் கேளே!ஆம்...கோதண்டராமன் காட்டுக்குப் போனது ஜென்ம குரு காலத்தில் தான். பொன்பொருள் நஷ்டமுண்டு என்பதையும் இந்த வெண்பா மூலம் உணரலாம்.இதுவரை சுபவிரயத்தை ஏற்படுத்திய குரு, ஜென்மராசியில் இருந்து சுமாரான பலன்களை வழங்குவார். உடல்நிலையில் ஆரோக்கியக்குறைவு உண்டாகும். செயலில் வேண்டாத தாமதத்தை சந்திப்பீர்கள். பொருளாதாரத்தில் தடுமாற்றத்திற்கு ஆளாக வாய்ப்புண்டு. எந்தச் செயலையும் நன்கு யோசித்து மேற்கொள்வது நன்மை தரும். குடும்பத்தில் குழப்பம் ஏற்படலாம் கவனம். வாக்குவாதத்தில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொள்வது அவசியம். மற்றவர் விஷயத்தில் கருத்துச் சொல்வது கூடாது. மனதில் அடிக்கடி பயம் ஏற்படும். சகோதரர்களின் உதவி தேவையான சமயத்தில் கிடைக்கும். இயன்றவரை அவர்களை அனுசரித்து நடப்பது அவசியம்.தாயின் தேவைகளை நிறைவேற்றி அவர்களின் அன்பைப் பெறுவீர்கள். பெற்றோரின் உடல்நிலை திருப்தி அளிக்கும். வீடு,வாகனவகையில் புதிய மாற்றம் செய்வதை தவிர்ப்பது நல்லது.பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். இருக்கிற வாகனவசதியைப் பயன்படுத்துங்கள். குழந்தைப்பேறு வாய்க்கப்பெறாதவர்கள் குருவருளால் குழந்தைபாக்கியம் கிடைக்கப் பெறுவர். பிள்ளைகள் கல்வி, வேலைவாய்ப்பில் மந்தகதியில் செயல்படுவர். அவர்களைத் தக்க அறிவுரை கூறி நல்வழிப்படுத்த முயல்வீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவைப்படும். ஒருநாளைப் போல ஒருநாள் சீரான உடல்நிலை இருக்காது. சிலருக்கு மருத்துவச் செலவு அதிகமாகும். கடன் விஷயத்திலும் நிதானம் தேவை. கடன் வாங்கி கடன் அடைக்க முயல்வீர்கள். குடும்பச் செலவில் சிக்கனத்தைப் பின்பற்றினால் கடன் வாங்குவதைத் தவிர்க்க முடியும். களஸ்திர ஸ்தானத்தில் குரு, சனி பார்வை படுவதால் திருமணம் கைகூடினாலும், அதில் தடைகளைச் சந்திக்க நேரிடும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே கருத்துவேறுபாடும் உண்டாகும். விட்டுக்கொடுத்து நடந்தால் மட்டுமே அமைதியை நிலைநாட்ட முடியும்.ஆயுள்ஸ்தானம் பலப்படுவதால் உடல்நலக்குறைவு நேர்ந்தாலும் சமாளித்து விடுவீர்கள். மறைமுக எதிரிகளால் தொல்லைக்கு உள்ளாவீர்கள். எதிரிகளை இனம் கண்டு ஒதுங்கி இருப்பது நல்லது. தந்தை வழிச் சொத்துகளில் இருந்த பிரச்னை நல்லமுறையில் தீர்ந்து விடும். உயர்கல்விக்காக வெளியூர்ப்பயணம் செல்வீர்கள். கடந்த காலத்தில் கல்வியைத் தொடர முடியாமல் விட்டவர்கள் கூட, மீண்டும் படிக்கும் வாய்ப்பு குருவருளால் உண்டாகும். கல்வி வளர்ச்சிக்கான சூழ்நிலை வாய்க்கப் பெறுவீர்கள். தொழிலில் மிதமான வளர்ச்சியும், சீரான வருமானமும் கிடைக்கும். பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புண்டு. வேலை தேடி முயற்சிப்பவர்களுக்கு விடாமுயற்சி தேவை. மூத்த சகோதரர்களின் ஆலோசனையை ஏற்கத் தயங்குவீர்கள். அவர்களுக்காகப் பணச் செலவும் செய்ய நேரிடும். வாழ்வில் இன்ப துன்பம் இரண்டையும் கலந்து உங்களுக்கு வழங்க மிதுனகுரு காத்திருக்கிறார்.
தொழிலதிபர்கள்: உற்பத்தியை உயர்த்த கடுமையாகப் பாடுபட வேண்டியிருக்கும். ஒப்பந்தங்கள் ஓரளவுக்கு கிடைக்கும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்களுக்கு தேவையான வசதிகளைசெய்து கொடுத்து பணியில் ஆர்வமுடன் ஈடுபட வழி ஏற்படுத்துவீர்கள். சக தொழில் சார்ந்தவர்கள் உங்களிடம் நல் அபிப்பிராயத்துடன் நடந்துகொள்வர். நிர்வாகப்பணியில் ஈடுபட புத்திரர்களுக்கு தகுந்த பயிற்சி தந்து பணிபுரிய வைப்பீர்கள். 
வியாபாரிகள்: முன்பைவிட போட்டி அதிகரிப்பதால் மனதில் குழப்பமும் செயல்களில் தாமதமும் இருக்கும். விற்பனையை உயர்த்த கடுமையான போராட்டத்தை சந்திக்க வேண்டி வரும். மூலதன தேவைகளுக்காக சிறு அளவில் கடன் பெறுவீர்கள். புத்திரர்களும், இல்லறத்துணை வழி சார்ந்த உறவினர் ஒருவரும் வியாபாரம் செழிக்க தம்மால் இயன்ற உதவியை வழங்குவர். லாபம் ஓரளவுக்கு இருக்கும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் கூடுதல் பணிச்சுமையை எதிர்கொள்வர். இதனால் மனதில் பதட்டமும் செயல்திறனில் குறைபாடுகளும் ஏற்படும். குடும்பத் தேவைகளின் பொறுப்பை உணர்ந்து செயல்படுவதால் மட்டுமே பணிபுரிவதில் ஆர்வம் வளரும். பணத்தேவையை சரிக்கட்ட கடன் பெற வேண்டி வரும். சிலர் கவனக்குறைவான செயல்களுக்காக நிர்வாகத்தின் கண்டிப்பை பெறுவர். சலுகைகள் கிடைப்பதிலும் தாமதம் இருக்கும். சக பணி சார்ந்தவர் உங்களுக்கு தொழில்நுட்ப உதவி தந்து உறுதுணையாக நடந்துகொள்வர். சூழ்நிலை, பணவரவு போன்றவற்றை கவனத்தில் கொண்டு செலவுகளை திட்டமிடுவது அவசியம். பணி அழுத்தத்தினால் வாழ்க்கைத் துணைவர் சிரமப்படும்பொழுது உங்களின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை தரும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டங்களை அக்கறையுடன் மதித்து செயல்படுவது அவசியம். வேலைகள் குறித்த நேரத்தில் முடியாமல் இழுத்தடிக்கும். சலுகைகள் கிடைக்க தாமதமாகும். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் அதிக உழைப்பு மற்றும் நிர்வாகத் திறமையினால் உற்பத்தி, விற்பனையை சராசரி அளவிற்கு கொண்டு வருவர். கடனுக்கு கிடைக்கிறதென்று அதிக பயன்பாடு தராத தொழில் கருவிகளை வாங்க வேண்டாம்.
மாணவர்கள்: தேவையற்ற விஷயங்களில் கவனம் கொள்வதையும் வெளியிடங்களில் சுற்றுவதையும் குறைத்துக்கொள்வதால் மட்டுமே படிப்பில் ஈடுபாடு வளரும். பெற்றோரின் சூழ்நிலை, எதிர்கால தேவைகளை உணர்ந்து படிப்பதால் மட்டுமே தேர்ச்சி விகிதம் சீராகும். சக மாணவர்கள் சமூக நட்பு பாராட்டுவர். படிப்புக்கான பணவசதி ஓரளவுக்கு இருக்கும். தந்தையின் அன்பு, பாசம் ஊக்கம் தரும். படிப்புக்குப் பின் வேலைவாய்ப்பு பெற முயற்சிப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற வகையில் பணி கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: எதிரிகளின் குறுக்கீடு வருவதால் மனதில் சோர்வும் செயல்களில் தாமதமும் உருவாகும். பொறுமையையும் எதிர்கால நலன் குறித்த அக்கறையையும் மனதில் பதித்துக்கொள்வதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புகழ் பெறுவதைவிட பெற்ற புகழை பாதுகாப்பதில் கவனம் கொள்ளவும். அரசிடம் எதிர்பார்க்கிற உதவி கிடைப்பதில் தாமதம் இருக்கும். புத்திரர்களின் திறமையும் ஆலோசனையும் உதவிகரமாக அமையும்.
விவசாயிகள்: விவசாயப் பணிகளை மேற்கொள்ள தேவையான பணவசதி, இடுபொருட்கள் கிடைப்பதில் தாமதம் இருக்கும். வழக்கமான பயிரை விட்டு, வேறு பயிர் சாகுபடி செய்யலாமா என்பது போன்ற குழப்பமான எண்ணங்கள் உருவாகும். விளைபொருளுக்கு சுமாரான விலையே கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் கிடைக்கிற லாபம் முக்கிய செலவுகளுக்கு உதவிகரமாக இருக்கும். நிலம் தொடர்பான பிரச்னையில் பொறுமை காப்பது பலன் தரும்.
பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் தடைகள் நொறுங்கி நற்பலன் ஏற்படும்.
பரிகாரப் பாடல்:
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே!

Guru Peyarchi Palangal (28.5.13 முதல் 12.6.14 வரை) - Rishabam


ரிஷபம்: என்ன சுகம்! என்ன சுகம்! தந்திடுவார் இனிய சுகம்


இனிய பேச்சால் அனைவரையும் கவரும் ரிஷபராசி அன்பர்களே!
ஜென்ம ராசியில் சஞ்சரித்த குரு மே 28 முதல் சுபஸ்தானமான இரண்டாமிடத்திற்கு பெயர்ச்சியாகிறார். தனது பார்வை பலத்தால் 6,8,10 இடங்களைப் பார்க்கிறார். சனி ராசிக்கு 6ல் இருந்து 3,8,12 ஆகிய ராசிகளைப் பார்க்கிறார். ஆமெனவே வியாழனுமே இரண்டு ஐந்தேழ்,  அடுத்த ஒன்பது பதினொன்றில் வாழ  தாமென செல்வமொடு குதிரை உண்டாம் தழைக்குமே குடை தர்ம தானம் ஓங்கும் நாமென தாய்தகப்பன் புதல்வராலே நன்மையாம் அருமையோடு பெருமையுண்டாம்போமென அரசர்க்கு நல்லோனாக்கும்புகழ் சோபனம் நடக்கும் பூமியாள்வன் என்கிறது ஒரு வெண்பா.இதன்படி, என்ன சுகம்...என்ன சுகம் என்று பாடுமளவு வாழ்க்கைச் சக்கரம் சுமூகமாக சுழலும். மனதில் தைரியம் மேலோங்கும். ஆயுள்பலம் அதிகரிக்கும். தொல்லை அளித்து வந்த நோய்நொடி அனைத்தும் விலக ஆரம்பிக்கும். தடைபட்டவருமானம் சரளமாகும். குடும்பத்தேவை அனைத்தும் நிறைவேறும். திட்டமிட்டபடி சுபநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். கடந்த காலத்தில் கொடுத்த வாக்குறுதியைக் கூட தற்போது நிறைவேற்ற முடியும். சனியின் பார்வை தைரிய ஸ்தானத்தில் படுவதால் அவ்வப்போது மனக்குழப்பத்திற்கு ஆளாக வாய்ப்புண்டு. இளைய சகோதரர்களிடம் கருத்துவேறுபாடு ஏற்படலாம் கவனம். அவர்களுக்கு செலவு செய்யும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாவீர்கள். தாயின் தேவையறிந்து செயல்பட்டு அவரின் அன்பும் ஆசியும் பெறுவீர்கள். வீடு கட்டும் நோக்கில் புதிய மனை வாங்கும் யோகமுண்டு. சிலருக்கு புதிய வீடு, வாங்கும் அனுகூலம் உண்டாகும். புத்திரப்பேறு வாய்க்காமல் வருந்தும் தம்பதியருக்கு பொன்னான காலம் இது. குலதெய்வ அருள் பூரணமாக கிடைக்கும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். திறமையின் காரணமாக வேலைவாய்ப்பிலும் முன்னணி வகிப்பர். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சனி,ராகுவால் உடம்பில் உஷ்ணவியாதிகள் தலைதூக்கும். பொருளாதார உயர்வால் கடன்தொல்லை நீங்கும். ராகுவின் சேர்க்கை ஆறாமிடத்தில் இருப்பதால், எதிர்கால வளர்ச்சி கருதி வீட்டு, தொழில் கடன் வாங்க நேரிடும். அப்போது எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். திருமண முயற்சிகளில் சுபசெய்திகள் வீடுதேடிவரும். குடும்பத்தில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வர். எதிர்கால முன்னேற்றம் குறித்த ஆலோசனை மேற்கொள்வர். குரு,சனியின் பார்வை ஆயுள் ஸ்தானத்திற்கு கிடைப்பதால் நன்மையும் தீமையும் கலந்திருக்கும். நன்கு பழகியவர்களே எதிரிகளாக மாறுவதற்கு இடமுண்டு. உறவினர்கள் விஷயத்திலும் முன்னெச்சரிக்கை தேவைப்படும். கடந்தகாலத்தில் தந்தையுடன் இருந்த கருத்துவேறுபாடு மறையும். அவரின் ஆரோக்கியம் மேம்படும். தடைபட்டு வந்த உயர்கல்வியை மேற்கொள்ள வழிபிறக்கும். சிலர் கல்விக்காக வெளியூர், வெளிநாடு செல்வர். சிலருக்கு படித்துக் கொண்டே வேலைவாய்ப்பும் கிடைப்பதற்கு யோகமுண்டு.தொழிலில் நல்ல வளர்ச்சியும், அமோக லாபமும் கிடைக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைத்திடும். பணிச்சுமை பெரும்பங்கு குறையும். வெளியூர் பயணத்தால் நல்ல அனுபவம் உண்டாகும். விரய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் கேது பிரச்னைகளை உண்டாக்கினாலும், சனி, குரு இருவரும் நன்மை செய்ய காத்திருக்கின்றனர்.
தொழிலதிபர்கள்: தொழிலில் அபிவிருத்தி செய்வதற்கு தேவையான பணவசதி எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கிடைத்து, உற்பத்தி அதிகரிக்கும். சிறந்த செயல்பாடுகளால் தொழிலில் உருவாகிற போட்டியை எளிதில் சமாளிப்பீர்கள். சிலருக்கு தொழிலதிபர் சங்கங்களில் கவுரவமான பதவி கிடைக்கும். திறமைமிகு பணியாளர்களை ஊக்கப்படுத்துவீர்கள். சுற்றுலா  செல்வீர்கள்.
வியாபாரிகள்: வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறி சுறுசுறுப்பும் புதிய உற்சாகமும் பெறுவீர்கள். தாராள அளவில் விற்பனை நடந்து பணப்பரிவர்த்தனையில் முன்னேற்றம் உருவாகும். போட்டியாக செயல்பட்டவர்கள் விலகுகிற அளவில் உங்களின் செயல்திறனும் விற்பனை நடைமுறையும் மாற்றம் பெறும். புதிய நண்பர்கள் அறிமுகமாகி தமது வியாபாரத்தில் கூட்டுசேர அழைப்பர். அவர்கள் நம்பகமானவர்களா என அறிந்து செயல்படுவது நற்பலன்பெற உதவும். சரக்கு குடோன் அமைக்க சொந்த இடம் வாங்க யோகமுண்டு.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் ஆரோக்கிய உடல்நலத்துடன் பணியை பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுவர். வேலைகளை சீக்கிரம் முடித்து, அதிகாரிகளிடம் நற்பெயரும், கூடுதல் சலுகையும் பெறுவீர்கள். சக பணியாளர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு விலகும். தொழிற்சாலை பணியாளர்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்று திறம்பட பணிபுரிவர்.
பெண்கள்: குடும்பப் பெண்கள் எல்லாரிடமும் அன்புடன் பேசி, குடும்பத்திலும், உறவினர் இல்லங்களிலும் கலகலப்பை உருவாக்குவர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த முக்கிய காரணமாக இருப்பீர்கள். கணவரின் அன்பு, சீரான பணவசதி கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவீர்கள். மாங்கல்ய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் கணவரின் ஆரோக்கியம், ஆயுள் பலம் பெறும். பணிபுரியும் பெண்கள் சிறப்பாக பணிபுரிந்து நற்பெயரும் பெறவேண்டிய சலுகைகளும் பெறுவர். பதவி உயர்வு, இடமாற்றம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்தில் அபிவிருத்தி பணிகளை நிறைவேற்றுவர். உற்பத்தி, விற்பனை அதிகரித்து ஆதாய பணவரவை பெற்றுத்தரும். பணவசதிக்கேற்ப தங்க நகை வாங்குவீர்கள். இளம் பெண்களுக்கு திருமண முயற்சி கைகூடும்.
மாணவர்கள்: எதிர்கால திட்டங்களை மனதில் கொண்டு படிப்பில் அதிக கவனமுடன் ஈடுபடுவீர்கள். மார்க் அதிகரித்து மனதில்நம்பிக்கை பிறக்கும். படிப்புக்கான பணவசதி திருப்திகரமாக கிடைக்கும். தனித்திறமைகளை வளர்ப்பதில் அக்கறையுடன் ஈடுபடுவீர்கள். சக மாணவர்கள் அன்பு பாராட்டி படிப்பில் உறுதுணையாக நடந்துகொள்வர். பெற்றோரின் அன்பு, பாசம் கிடைக்கும். படிப்புக்குப் பின் வேலைவாய்ப்பு அல்லது சுயதொழில் துவங்க முயற்சிப்பவர்களுக்கு அனுகூலம் உண்டு.
அரசியல்வாதிகள்: கடந்த நாட்களில் இருந்த மனக்குழப்பம் மாறும். பணவசதி திருப்திகரமாக அமைந்து மனதுக்கு மகிழ்ச்சி தரும். ஆதரவாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகளின் ஒத்துழைப்பு திருப்திகரமான அளவில் கிடைக்கும். எதிர்மனப்பாங்குடன் உங்களிடம் பேசிய சிலர், மனம் திருந்தி விடுவர். இருப்பினும், அவர்களிடம் நிதானித்து பழகுவது நல்லது. அரசியல் பணிக்கு புத்திரர்களின் பங்களிப்பு சுமாரான அளவில் கிடைக்கும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்வு கிடைக்கும்.
விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான இடுபொருட்கள், தாராள பணவசதி கிடைத்து விவசாயப்பணியில் ஈடுபாடு கொள்வீர்கள். மகசூல் அதிகரித்து பயிர்களுக்கு சந்தையில் அதிக விலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த லாபம் உண்டு. நிலம் தொடர்பான பிரச்னை இருப்பவர்களுக்கு சுமூக தீர்வு கிடைக்கும். புதியநிலம் வாங்க யோகம் உண்டு. குடும்பத்தில் திட்டமிட்ட சுபநிகழ்ச்சியை விமரிசையாக நடத்துவீர்கள்.
பரிகாரம்: லட்சுமி தாயாரை வணங்குவதால் பணவரவு பலமடங்கு பெருகும்.
பரிகாரப் பாடல்:
திருமகளே திருப்பாற்கடல் ஊடன்று தேவர் தொழ
வருமகளே உலகு எல்லாமும் என்றென்றும் வாழவைக்கும்
ஒருமகளே நெடுமால் உரத்தே உற்று உரம் பெரிது
தருமகளே தமியேன் தலைமீது நின் தாளை வையே

Guru Peyarchi Palangal (28.5.13 முதல் 12.6.14 வரை) - Mesham


குருப்பெயர்ச்சியால் நற்பலன் பெறும் ராசிகள்: ரிஷபம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம்
சுமாரான பலன் பெறும் ராசிகள்:மேஷம், கடகம், மகரம்
பரிகார ராசிகள்: மிதுனம், கன்னி, விருச்சிகம், மீனம்


மேஷம்: திகில் திகில் வேண்டுமைய்யா... தில்!

திறமையுடன் செயலாற்றி வெற்றி காணும் மேஷராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் சஞ்சரித்து, நல்ல பலன்களைக் கொடுத்த குரு, மே28 முதல் மூன்றாம் இடத்திற்குப் பெயர்ச்சியாகிறார். அவர் தன் பார்வை பலத்தால் 7,9,11 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். சனி ராசிக்கு 7ல் அமர்ந்து 1,4,9 ஆகிய இடங்களைப் பார்க்கிறார்.  ஓங்கவே குருவேதான் ஒன்று மூன்று, உகந்த நாலாறெட்டு பத்தீராறில் தீங்காக நின்றிடிலோ பலனைக்கேளு, தேடிய பொருள் பூமி சேதமாகும்வாங்கவே அகத்தினிலே அலைச்சலோடு வாத பித்த ரோகமது வந்து வாட்டும்தாங்கவே தந்தையொடு புத்திரர்க்கும் தேடிவரும் தீமையது திகல் உண்டாமே! என்கிறது ஒரு வெண்பா. இதன்படி பார்த்தால், இந்த ஓராண்டு நடவடிக்கைகளும் திகிலாகவே இருக்கும் என்பது உறுதியாகிறது.பொதுவாக குரு மூன்றில் இருந்தால், உறவினர்களின் பகை ஏற்படும். இதுவரை செய்த செயல்களுக்கு பலன் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் இருக்கும். தற்போது நடந்து வரும் செயல்பாடுகளில் தடங்கல் ஏற்படும். சிலரால் ஏமாற்றப்படவோ, வஞ்சிக்கப்படவோ வாய்ப்புண்டு. கண்டச்சனி 7ம் இடத்தில் இருப்பதால், வாகனம் ஓட்டுவதிலும், பயணத்தின் போதும் நிதானம் தேவைப்படும். ஆரோக்கிய விஷயங்களில் அக்கறை தேவைப்படும். பொருளாதார விஷயத்தில் மந்த நிலை இருக்கும். செலவு கட்டுக்கடங்காமல் போகும். குடும்பத்தினருடன் வாக்குவாதம் உருவாகும். குடும்ப பிரச்னையில் அமைதி காப்பது பிரச்னையைத் தவிர்க்க உதவும்.குரு 3ல் இருப்பதால், மனதில் அதைரியம் உண்டாகலாம் கவனம். இளைய சகோதரர் வகையில் பிரச்னை உருவாக வாய்ப்பிருக்கிறது. இது தற்காலிகமானது தான் என்பதால் வருத்தப்படத் தேவையில்லை. சுக ஸ்தானத்தில் சனியின் பார்வை படுவதால் தாயின் உடல்நிலைக்காக மருத்துவச் செலவு செய்வீர்கள். உங்களுடைய உடல்நிலையும் பாதிக்கப்படலாம். குறிப்பாக, கொழுப்புச்சத்து, சர்க்கரை வியாதி, வாதம் தொடர்பாக சிகிச்சை எடுப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் மராமத்துப்பணி செய்யவேண்டிய கட்டாயம் உருவாகும். சிலருக்கு வீட்டை மாற்ற வேண்டியதிருக்கும். வாகன விஷயத்திலும் இருக்கும் வசதியைக் கொண்டு திருப்திப்படுவது நல்லது. பராமரிப்புச் செலவு கூடும். புத்திரர் கல்வி,வேலைவாய்ப்பில் சோம்பல், கவனச்சிதறலால் பின்தங்குவர். பிடிவாத குணத்துடன் நடந்து கொள்ளும் அவர்களுக்கு தகுந்த அறிவுரை கூறி நல்வழிப்படுத்துவது அவசியம். கடன் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. ஒருமுறைக்கு இருமுறை யோசித்து கடன் வாங்குவது நல்லது. மனைவி ஸ்தானமாகிய ஏழாம் இடத்தில் சனி, ராகு இருப்பதால் திருமண விஷயத்தில் தடை ஏற்பட்டு விலகும். சுபநிகழ்ச்சி நடத்திட உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன்,மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும் குருவின் பார்வையால் பிரச்னை வந்த வேகத்தில் மறைந்து போகும்.எதிரிகள் உங்களின் செயல்பாடுகளை நோட்டமிட்டபடி இருப்பர். மறைமுக எதிரிகளாலும் தொல்லையைச் சந்தித்து வருவீர்கள். அக்கம்பக்கத்தினரிடமும் அளவுடன் பழகுவது பிரச்னையை பெருமளவு குறைக்கும்.தந்தைவழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தந்தையின் உடல்நலம் கருதி மருத்துவச் செலவு செய்வீர்கள். உயர்கல்வி பெறுவதற்காக சிலர் வெளியூர், வெளிநாடு சென்று தங்குவர். கல்வி முடித்து வேலை தேடுபவர்களுக்கு கடின முயற்சி தேவைப்படும்.லாப ஸ்தானமாகிய 11ல் குருவின் பார்வை படுவதால் பணப்பற்றாக்குறையைச் சமாளிக்க அவ்வப்போது நல்ல வழி கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவி கிடைக்கும். மூத்த சகோதரர்களின் வழிகாட்டுதலால் பிரச்னையிலிருந்து விடுபடுவீர்கள். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்காது.
தொழிலதிபர்கள்: தொழிலில் சிரமநிலை இருக்கும். தொழிலாளர்களை வேலை வாங்குவதற்குள் போதும் போதுமென்றாகி விடும். இயந்திர பராமரிப்பு செலவு அதிகரிக்கும். உற்பத்தி சுமாராக இருக்கும். உழைப்பு அதிகம், பலன் குறைவு என்கிற இக்கட்டான நிலை ஏற்படும். 
வியாபாரிகள்: நகை, தானியம், மளிகை, பழம், இனிப்பு, எண்ணெய் வியாபாரம் செய்பவர்களுக்கு அதிக பலன் இராது. மற்ற வியாபாரிகள் ஓரளவுக்கு லாபம் சம்பாதிப்பர். தற்போது இருக்கிற இடத்தை மாற்ற வேண்டிய அவசியம் சிலருக்கு வரலாம். வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த கடனை வசூலிப்பவர்கள் மிகவும் சிரமப்பட வேண்டி வரும். 
பணியாளர்கள்:  எந்த வேலையை எடுத்தாலும், அதில் தடை தாமதம் என பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளலாம். இதன் காரணமாக, அதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாக நேரும். இன்று செய்ய வேண்டிய வேலையை நாளை செய்து கொள்ளலாம் என ஒத்தி வைத்தால் உங்கள் பாடு திண்டாட்டமாகி விடும்.  சலுகைகள் ஓரளவுக்கே கிடைக்கும். வரவுக்கு மீறிய செலவு இருக்கும்.
பெண்கள்:  குடும்ப பெண்கள் தங்கள் உடல்நலத்தை சரிவர கவனித்துக் கொண்டால் தான் வீட்டுப்பணிகளை விரைந்து முடிக்க முடியும். குடும்பச்செலவுக்குத் தேவையான பணம் கிடைக்காது. சில சமயங்களில் நகைகளை அடமானம் வைக்க நேரிடலாம். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். பணிபுரியும் பெண்களை கடுமையான வேலை சிரமப்படுத்தும். அலுவலகத்தில் கடன் பெற நினைப்பதை தற்போதைக்கு ஒத்திவைப்பது நல்லது.
மாணவர்கள்:  இன்ஜினியரிங், சட்டம், தொழில் சார்ந்த படிப்புகளில் உள்ள மாணவர்கள் உடனுக்குடன் பாடங்களைப் படிக்காவிட்டால் தேர்வதற்கு சிரமப்படும். பிற துறையில் உள்ளவர்கள் மறதி காரணமாக அவதிப்படுவர். ஆசிரியர்களுடன் சுமூகமான போக்கு இருந்தால் தான், படிப்பில் நன்மை ஏற்படும். நண்பர்களின் சேர்க்கை உங்களைச் சிரமத்தில் மாட்டி விடலாம். படிக்கும் நேரத்தை அணுவளவும் வீணாக்கக் கூடாது.
அரசியல்வாதிகள்:  உயர்ந்த பதவியில் உள்ளவர்கள் கூட அல்லாடும் நேரம் இது. இந்த நேரத்தில், பணத்தைத் தேடி அலைந்தால் சட்டச்சிக்கலில் மாட்டக் கூடும். ஆதரவாளர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள். 
விவசாயிகள்:  விவசாயத்திற்காக விண்ணப்பித்த கடன்தொகை கிடைக்க தாமதமாகும். சாகுபடி செலவு அதிகரிக்கும். உழைக்கிற அளவுக்கு மகசூல் பெறுவது சிரமமே. 
பரிகாரம்:  லட்சுமிநரசிம்மரை வழிபட்டால் தொழில், வேலையில் பிரச்னை குறையும்.
பரிகாரப்பாடல்:
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை
தக்கானை கடிகை தடம் குன்றின் மிசை இருந்த
அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே!

All 12 Rasipalan, Source: www.dinamalar.com