Tuesday 1 October 2013

Guru Peyarchi Palangal (28.5.13 முதல் 12.6.14 வரை) - Meenam

மீனம்: மலைபோல் சோதனை பனியாவது உங்கள் கையில்!

நீதி நேர்மை தவறாத மீனராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு 3ல் சஞ்சரித்த குருபகவான், மே28ல் சுகஸ்தானமான 4ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். இவர் தன் பார்வை பலத்தால் 8,10,12 ஆகிய இடங்களை பலம் பெறச் செய்கிறார். ராசிக்கு 8ல் அமர்ந்திருக்கும் சனியின் பார்வை 2,5,10 ராசிகளில் பதிகிறது.சொல்லப்பா சூதாட்டம் கொடியதப்பா!சுகமுள்ள பஞ்சவர்கள் வினையினாலே அல்லப்பா அகிலங்கள் எல்லாம் தோற்றுஅப்பனை ஆரண்யம் சென்றார் என்றால்நல்லப்பா நாளதனில் குருவும் ஏறநரச்சுகமும் கிட்டாது நலிவும் உண்டுமல்லப்பா மண்ணாலும் பொன்னாலும் வேதைமகத்தான குரு அதனின் கொடுமை தானே!என்கிறது ஒரு வெண்பா.இதன்படி, சோதனைகள் கடுமையாக இருக்கும் என்பது தெளிவாகிறது.குருவின் பலத்தால் ஆயுள்பாவம் தீர்க்கம் பெறும். ஆனால், உடல்நிலையில் அவ்வப்போது சிரமம் உருவாகலாம், கவனம். பொருளாதார நிலையில் பணப்பற்றாக்குறைக்கு ஆளாவீர்கள். இயன்றவரை நிதானமாகப் பேசுவது நன்மை தரும். சிலர் வாக்கு கொடுத்துவிட்டு அதைக் காப்பாற்ற முடியாமல் தவிப்பர்.மன தைரியத்திற்கு குறைவிருக்காது. எந்தச் செயலையும் சவாலாக எடுத்துக் கொண்டு முன்னேற முயல்வீர்கள். சகோதரர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம் கவனம். அவர்களின் ஆதரவு உங்களுக்குத் தேவைப்படலாம். அதனால், விவேகத்துடன் செயல்படுவது நன்மையளிக்கும். தாயின் உடல்நலனுக்காக மருத்துவச் செலவு செய்ய நேரிடும். வீடு,மனை வாங்கும் முயற்சியில் விடாமுயற்சி தேவைப்படும். வீடு, வாகன வகையில் இருப்பதைக் கொண்டு திருப்தி கொள்வது நல்லது. மராமத்துச் செலவு அடிக்கடி ஏற்படும். பிள்ளைகள் கல்வியில் பின்தங்கலாம். அவர்களுக்கு தக்க அறிவுரை கூறி வழிகாட்ட முயல்வீர்கள். அவர்களின் எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும். அலைச்சலால் அடிக்கடி உடல்அசதிக்கு ஆளாவீர்கள். சிலருக்கு உஷ்ணம், வயிறு சம்பந்தமான வியாதிகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் முன்னெச்சரிக்கை தேவைப்படும். அறிமுகமில்லாதவர்களிடம் கடன் வாங்குவது கூடாது.திருமண முயற்சிகளில் தடைகளைச் சந்திக் வாய்ப்புண்டு. உறவினர்கள் ஆதரவும் ஓரளவே கிடைக்கும். குடும்பத்தில் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்படலாம். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடப்பது எதிர்கால நன்மைக்கு வழிவகுக்கும். அஷ்டமத்துசனியின் தாக்கத்தால் எதிரிகளின் பலம் அதிகரித்தாலும், குருவின் பார்வை பலத்தால் நிலைமையைச் சமாளிப்பீர்கள். எதிரிகள் விஷயத்திலும் முன்யோசனையுடன் செயல்படுவது பிரச்னையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.தந்தையின் உடல்நலம் சீராக இருக்கும். அவர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கிடைக்கும். ஜீவன ஸ்தானத்தில் குரு,சனி இருவரின் பார்வையும் படுவதால், நன்மையும் தீமையும் கலந்தே நடக்கும். அஷ்டமத்துச் சனியின் தாக்கத்திற்கு ஆளானாலும், குருவின் பார்வை பலத்தால் நிம்மதியை ஓரளவு வாழ்வில் பெறுவீர்கள். சுயதொழில் துவங்க விரும்புபவர்கள் உரிய காலம் வரும் வரை பொறுத்திருப்பது நல்லது.
தொழிலதிபர்கள்: உங்கள் நிறுவனத்தைப் பாதுகாத்துக் கொள்வதில் அக்கறையுடன் செயல்படுவது நல்லது. உற்பத்தியை அதிகப்படுத்திய பிறகு, விற்பனை சரியில்லையே என்ற நிலை ஏற்படலாம். எனவே, ஆர்டர் வாங்கியபின், உற்பத்தி செய்வது லாபத்தை தக்க வைக்கும். நிர்வாகச் செலவு அதிகரிக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கும்.கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் தான் தொழிலில் லாபத்தை தக்க வைக்க முடியும்.
வியாபாரிகள்: அளவான மூலதனத்துடன் அதிக முயற்சியினால் வியாபாரத்தில் உள்ள அனுகூல விஷயங்களை பாதுகாத்துக் கொள்வது அவசியமாகும். சந்தை போட்டியை சமாளிப்பதில் கூடுதல் சிரமங்களை எதிர்கொள்வீர்கள். சராசரியைவிட விற்பனை இலக்கின் அளவு குறையும். மிதமான அளவில் பணவரவு கிடைக்கும். நிர்வாக நடைமுறை மற்றும் குடும்ப செலவுகளுக்காக கொஞ்சம் கடன் பெறுவீர்கள். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு நடைமுறை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றி செயல்படுவது அவசியம். பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் வருமானம் ஓரளவு கிடைக்கும். சிலசமயம் அதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கும் ஆளாவர். சிலர் பணியில் குளறுபடியை எதிர்கொண்டு ஒழுங்கு நடவடிக்கையினால் சில சலுகைகளைப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம். 
பெண்கள்: குடும்பப் பெண்கள் உடல்நல ஆரோக்கியத்தை தகுந்த முறையில் பாதுகாத்துக் கொள்வதால் மட்டுமே அன்றாடப் பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்ற இயலும். குடும்பத்தின் பணவரவுக்கேற்ப செலவுகளை திட்டமிடுவது அவசியம். உறவினர்களிடம் மனக்கிலேசம் வராத அளவில் நிதானித்து பேசுவது நல்லது. பணிபுரியும் பெண்கள் கூடுதல் கால அவகாசத்தில் பணி இலக்கு நிறைவேற்றுவர். சலுகைகள் கிடைப்பதில் தாமதம் இருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் லாபவிகிதம் குறைத்து விற்பதால் மட்டுமே புதிய ஆர்டர் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.
மாணவர்கள்: உயர்கல்வி முயற்சிகளை இப்போதைக்கு தள்ளி வைக்கும் சூழ்நிலையே அமையும்.எதிர்கால லட்சியங்களை மனதில் கொண்டு அக்கறையுடன் படிப்பதால் மட்டுமே ஞாபகத்திறன் வளரும். கவுரவமான தேர்ச்சிவிகிதம் பெற இயலும். பெற்றோர் மனம் வருந்தாத அளவில் நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு வகைகளை உண்ண வேண்டாம். சக மாணவர்களுடன் படிப்பு தவிர பிற விஷயங்களில் விவாதம் தவிர்க்கவும். வேலைவாய்ப்பு பெற முயற்சிப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற பணி கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: ஆதரவாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவதில் தகுதிக்கு மீறிய எவ்வித வாக்குறுதியும் தரக்கூடாது. எதிரியின் செயல்களினால் சிரமமும் மனவருத்தமும் அடைவீர்கள். இருப்பினும் சுயகவுரவத்தை பாதுகாக்கும் எண்ணத்துடன் அரசியல் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவீர்கள். அதிகாரிகளிடம் இதமான அணுகுமுறை பின்பற்றுவதால் அரசு தொடர்பான அனுகூலம் ஓரளவு பெறலாம். விவகார பேச்சுக்களில் நிதானித்து நடந்துகொள்வது நல்லது.
விவசாயிகள்: விவசாயப்பணிகளில் முடக்கம் ஏற்படும். மகசூல் சுமாராக இருக்கும். பயிர் வளர்க்க கூடுதல் பணம் தேவைப்படும். கால்நடை வளர்ப்பில் கிடைக்கிற பணவரவு அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும். சொத்து ஆவணத்தின் பேரில் கடன் பெறுபவர்கள், நம்பகமானவர்களிடம் வாங்குவது நல்லது.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வணங்கினால், மலைபோல் வரும் சோதனைகள் பனிபோல் நீங்கி விடும்.
பரிகாரப்பாடல்:
கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு
அங்கமுதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை
இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.

No comments:

Post a Comment