Sunday 9 December 2012

RAGHU-KETHU PEYARCHI - DHANUSU

Source: www.dinakaran.com

ராகுவின் பலன்கள்:
சொத்து பிரச்னை தீரும்

‘வில்லானை சொல்லால் வளை’ என்ற கூற்றுக்
கிணங்க அதிகாரத்திற்கு அடிபணியாத நீங்கள், அன்பிற்கும் கனிவான வார்த்தைக்கும் கட்டுப்படுவீர்கள். குடிசை வீட்டில் பிறந்தாலும் சாட்டிலைட் சிந்தனைகளுடன் விண்ணை முட்டும்  உயர்ந்த லட்சியங்களுடன் வாழ்பவர்கள் நீங்கள்தான். ஏக்கர் கணக்கில் சொத்து சேர்த்தாலும் ஆறடி நிலம் கூட சொந்தமாகப் போவதில்லை என்ற  பிரம்ம சூத்திரத்தை 
அறிந்திருப்பீர்கள். உங்களுக்கு இந்த ராகுவும் கேதுவும் இணைந்து 2.12.2012 முதல் 21.6.2014 வரையுள்ள காலகட்டங்களில் எ ன்ன மாற்றத்தை தருவார்கள் 
என்று பார்ப்போம்.   
:
இதுவரை உங்களின் ராசிக்கு பன்னிரண்டில் அமர்ந்து கொண்டு காரியத்தடைகள், மன உளைச்சல், சொன்ன சொல்லை நிறைவேற்ற முடியாமை என  அடுக்கடுக்காக பல பிரச்னைகளையும் நெருக்கடிகளையும் கொடுத்து வந்த ராகுபகவான், இப்பொழுது உங்கள் ராசிக்கு லாப வீட்டிற்கு வருவதால் புத்துணர்ச்சியும் புதிய முயற்சிகளில் வெற்றியையும் பணவரவையும் கொடுப்பதுடன் வீண் செலவுகளையும் கட்டுப்படுத்துவார். சவாலான காரியங்களைக்  கூட சர்வ சாதாரணமாக இனி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். குழந்தை இல்லாதவர் களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். அதிக வட்டிக் கடனை அடைத்து முடிப்பீர்கள். மகள் திருமணத்தைச் சிறப்பாக முடிப்பீர்கள். மகனுக்கு நல்ல நிறு வனத்தில் வேலை கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பால் சொத்துப் பிரச்னைகள் தீரும். வெளிநாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. தூக்கமில்லாமலும் நிம்மதியில்லாமலும் உடலாலும் மனதாலும் நொந்து போயிருந்த நீங்கள் இனி ஆரோக்யமாகவும் அழகாக வும் மாறுவீர்கள். 
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் ராசிநாதனும் சுகாதிபதியுமான விசாக நட்சத்திரத்தில் 2.12.2012 முதல் 6.6.2013 வரை ராகுபகவான் செல்வதால் தாழ்வுமனப்பான்மை நீங்கி  
தன்னம்பிக்கை பிறக்கும். லோன் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். தள்ளிப்போன திருமணம் முடியும். புது வாகனம் வாங்குவீர்கள். தாயாரின்  உடல் நிலை சீராகும். தாய்வழி உறவினர்கள் மத்தியில் இருந்த மோதல்கள் விலகும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள்.  
             
தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 7.6.2013 முதல் 13.2.2014 வரை ராகுபகவான் செல்வதால் வழக்கில் வெற்றி உண்டு. சொத்துப் பிரச்னை  முடிவுக்கு வரும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களுக்கு தலைமை தாங்குவீர்கள். வேற்றுமதத்தவர்கள் உதவியாக இருப்பார்கள். மூத்த சகோதரர் உதவுவார். ஷேர் மூலம் பணம் வரும்.        
 
விரயாதிபதியும் பூர்வபுண்யாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.2014 முதல் 21.6.2014 முடிய ராகுபகவான் செல்வதால் குழந்தை  பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். சகோதரிக்கு திருமணம் நடக்கும். பழைய கடன் பிரச்னை ஒன்று தீரும். நீண்ட  நாட்களாக போக நினைத்த அண்டை மாநில புண்ணியத் தலங்களுக்கு செல்வீர்கள். 11ல் ராகு இருப்பதால் பாதியிலேயே நின்றுபோன பல வேலைகள் உடனே முடியும். வழக்குகள் விரைந்து பைசலாகும். எதிரிகள் நண்பராவார்கள்.  

குலதெய்வத்திடம் குழந்தைக்காக வேண்டிய பிரார்த்தனையை இன்னும் நிறைவேற்றவில்லையே! 
உடனடியாக குடும்பத்துடன் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். கன்னிப் பெண்களே! தோஷங்கள் நீங்கி கல்யாணம் நடக்கும். சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் 
தகுந்தாற்போல் சமயோசித புத்தியுடன் இனி செயல்படுவீர்கள். மாணவர்களே! வகுப்பறையில் வீண் அரட்டை வேண்டாம். படிப்பில் கவனம்  தேவை. 

அரசியல்வாதிகளே! இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் தலைமையிடம் கொண்டு செல்வது நல்லது. 

வியாபாரிகளே! போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு புது யுக்திகளை கையாளுவீர்கள்.  புது ஏஜென்சி எடுப்பீர்கள். அனுபவம் மிகுந்த நல்ல 
வேலையாட்கள் வருவார்கள். 

உத்யோகஸ்தர்களே! அதிகாரிகளுடன் இருந்த மோதல் போக்கு, சக ஊழியர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள்  எல்லாம் மாறும். உங்களின் திறமைகள் வெளிப்படும். வெகுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. 

கணினி  துறையினரே! அயல்நாட்டில் வேலை கிடைக்கும். 

கலைத்துறையினரே! வேற்று மொழி வாய்ப்புகளும் தேடி வரும். சம்பள பாக்கி கைக்கு வரும்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்திருந்து பிரச்னைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த கேது பகவான் இப்பொழுது உங்கள்  ராசிக்கு பூர்வ புண்ணிய வீடான ஐந்தாம் வீட்டிற்கு வந்து அமர்கிறார். பிள்ளைகளால் வீண் அலைச்சலும் செலவும் வரும். அவர்களின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். 
கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. அதிகமான எடையை தூக்க வேண்டாம். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உங்களைப்பற்றி வீண் வதந்திகள் வரும். உள் மனதில் எப்போதும் ஒருவித பயமும் பதட்டமும், சந்தேகமும் இருந்து கொண்டேயிருக்கும். உறவினர்களில் ஒரு சிலர் பகையாவார்கள். தாய், தாய்மா மன் வழியில் சங்கடங்கள் வரும். 
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் பாக்யாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதத்தில் 2.12.2012 முதல் 2.2.2013 வரை கேதுபகவான் செல்வதால் அரசு வேலை கள் விரைந்து முடியும். பணப் பற்றாக்குறை ஏற்படும். தந்தைக்கு நெஞ்சு வலி வந்து நீங்கும். தந்தைவழி உறவினர்கள் மதிப்பார்கள். பிதுர்வழி சொத் துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். வெளிநாடு, வேற்று மாநிலம் செல்லும் வாய்ப்பு வரும். சஷ்டம லாபாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.2013 முதல் 11.10.2013 வரை கேது செல்வதால் வற்றிய பணப்பை நிரம்பும். புது வேலை அமையும். எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். கௌரவப் பத விகள் தேடி வரும். தொண்டைப் புகைச்சல், சளித் தொந்தரவு வந்துபோகும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் 12.10.2013 முதல் 21.6.2014 வரை செல்வதால் எதிர்மறை எண்ணங்கள் தலைதூக்கும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகளால் அலைச்சல், பிரச்னைகள் வந்துபோகும். பூர்வீகச் சொத்து பராமரிப்புச் செலவு கள் அதிகரிக்கும். ரத்த சோகை, மூச்சுப் பிடிப்பு, சிறுநீர் பாதையில் அலர்ஜி வரக்கூடும். கேது 5ம் வீட்டில் அமர்வதால் சொந்த ஊர் விஷயங்களில் அதிகம் தலையிட வேண்டாம். வேற்று மதத்தினர் மற்றும் வெளிநாட்டினரால் திடீர் திருப் பங்கள் ஏற்படும். வெளிமாநில புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். புரோக்கரேஜ், கெமிக்கல், ஏற்று மதி-இறக்குமதி வகைகளாலும் ஆதாயம் உண்டு. இந்த ராகு-கேது பெயர்ச்சியில் கேதுவால் மனக்கசப்பும், அனுபவ அறிவும் ஏற்பட்டாலும், ராகுவால் திடீர் யோகமும் பெரிய பதவிகளும் கிட்டும்.
பரிகாரம்:
நாகர்கோவில் தலத்தில் மூலவராகவே அருள்பாலிக்கும் நாகராஜரை தரிசித்து வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவை முடிந்தவரை ஏற்றுக் கொண்டு உதவுங்கள்.

No comments:

Post a Comment