Sunday 9 December 2012

RAGHU-KETHU PEYARCHI - KANNI

Source: www.dinakaran.com


ராகுவின் பலன்கள்:
லாபம் அதிகரிக்கும்

‘கன்னி மகனை கைவிடேல்’ என்ற முதுமொழிக்கேற்ப பழகுவதற்கும், ஆபத்து நேரத்தில் ஓடிவந்து உதவுவதற்கும், உங்களைப்போல் வேறு யாருமி ல்லை. மற்றவர்கள் முயன்று முடியாது என ஒதுக்கித் தள்ளிய விஷயத்தை யதார்த்தமான அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். உங்கள் மன தின் ஓரத்தில் 
குழந்தைத்தனமும் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கும். சாயாகிரகங்களான இந்த ராகுவும் கேதுவும் 2.12.2012 முதல் 21.6.2014 வரை யுள்ள காலகட்டத்தில் உங்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருந்து கொண்டு வாழ்வில் முன்னேற்றங்களையும், மன தைரியத்தையும், பிரபலங்களின் நட்பையும்  கொடுத்து வந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் வந்து அமர்கிறார். பணம் எவ்வளவு வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி தவிர்க்க முடியாத செலவுகளும் அடுத்தடுத்து வரும். சிறுவேலைகள்கூட ஒரு முறைக்கு இரண்டு முறையாக அலைந்து முடிக்க வேண்டிவரும்.  வாக்கு ஸ்தானத்தில் ராகு நுழைந்திருப்பதால் பேச்சில் கவனம் தேவை; நீங்கள் நல்லதைச் சொல்லப்போய் அதை சிலர் வேறுவிதமாக புரிந்து கொள்வார்கள். கூடுமானவரை யாரிடமும் கோபமாக பேச வேண்டாம். பேச்சில் இனிமை  சேர்த்துக்கொள்வது நல்லது. உங்களின் முன்கோபத்தால் சிலரின்  நட்பை இழக்க வேண்டியது வரும். ஆகவே தியானம் பழகுவது கோபத்தை கட்டுப்படுத்த உதவும். கண், காது, பல்வலி அதிகரிக்கும். மருத்துவரின்  ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ளாதீர்கள்.
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் சுக சப்தமாதிபதியான குருவின் விசாகம் நட்சத்திரத்தில் 2.12.2012 முதல் 6.6.2013 வரை ராகுபகவான் செல்வதால் ஓரளவு பணம் வரும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். கிரகப் பிரவேசம், சீமந்தம் என வீடு களைகட்டும். சிலர் சொந்த ஊரை விட்டு இடம் பெயர்வீர்கள். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னைகள் தீரும். உத்யோகத்திலும் செல்வாக்கு கூடும்.   ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 7.6.2013 முதல் 13.2.2014 வரை செல்வதால் ஆரோக்யம் பாதிக்கும். 

வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. கூடாப் பழக்க வழக்கங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் பிரிவு வரக்கூடும். பார்வைக் கோளாறு வந்துபோகும். உங்கள் திருதிய, அஷ்டமாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.2014 முதல் 21.6.2014 முடிய ராகுபகவான் செல்வதால் நிலம், வீடு வாங்குவது, விற்பதில் கவனம் தேவை.  மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். தீக்காயங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மின்சார சாதனங்களை கவனமாகக் கையாளுங்கள்.

பிள்ளைகளின் பிடிவாத குணம் மாறும். மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி நடத்தி முடிப்பீர்கள். நீங்கள் விரும்பியபடி வெளிநாட்டில் வேலை  பார்க்கும் 
வரன் வந்தமையும். மகனின் உயர் கல்வியைத் தொடர்வதில் இருந்த பிரச்னைகள் நீங்கும். 2ம் வீட்டில் ராகு நிற்பதால் வெளிவட்டாரத்தில்  யாரையும் தாக்கிப் 
பேச வேண்டாம். பேச்சில் இனிமை சேர்த்துக் கொள்ளுங்கள். அரசாங்க காரியங்களில் வெற்றியுண்டு. குடும்பத்துடன் குலதெய்வக்  கோயிலுக்கு சென்று 
வாருங்கள். விலையுயர்ந்த தங்க நகைகளை கவனமாகக் கையாளுங்கள்.  

கன்னிப் பெண்களே! அலட்சியம், சோம்பல், பயம்  இவற்றிலிருந்து விடுபடுவீர்கள். கல்யாணமும் சிறப்பாக நடந்து முடியும். தவறானவர்களின் நட்பை ஒதுக்கி விடுங்கள். மாணவர்களே! உயர்கல்வியில்  கூடுதல் கவனம் செலுத்தி வெற்றி பெறுவீர்கள். 

அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள். 

வியாபாரிகளே! போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க, நவீன விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள்.  லாபம் உயரும். பணியாளர் ஒத்துழைப்பார்கள்.  வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கான்ட்ராக்ட், கமிஷன் மூலம் லாபம் அடைவீர்கள். 

உத்யோகஸ்தர்களே! அலுவலகத்தில் இருந்து வந்த மோதல்போக்கு மறையும். பதவி உயர்வு உண்டு.  மேலதிகாரி உங்களின் ஆலோசனையையும்  ஏற்பார். 
சக ஊழியர்களால் மனஸ்தாபங்கள் வெடிக்கும். 

கணினி துறையிலிருப்பவர்களே! அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்திலிருந்து புது வாய்ப் புகள் வரும். சம்பளம் உயரும். 

கலைத்துறையினரே! தள்ளிப்போன புதிய வாய்ப்புகள் தேடி வரும். 
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் அமர்ந்து தந்தையாருக்கு உடல்நலக் குறைவையும் அவருடன் கருத்து மோதல்களையும் பணப்பற்றாக்குறையையும் தந்த கேது இப்போது உங்களின் ராசிக்கு எட்டில் வந்தமர்கிறார். இனி கொஞ்சம் அலைச்சல் இருக்கத்தான் செய்யும். அடிமனதில்  ஒருவித பயம் வரும். சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட வேண்டாம். கணவன் மனைவிக்குள் சண்டை வந்து போகும். யூரினரி இன்ஃபெக் ஷன், பைல்ஸ் தொந்தரவு வரக்கூடும். 
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் விரய ஸ்தானாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதத்தில் 2.12.2012 முதல் 2.2.2013 வரை கேதுபகவான் செல்வதால் ஆன்மி கத்தில் உங்கள் மனம் லயிக்கும். நீண்டநாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சுபச்செலவுகள் அதிகரிக்கும். வாகனங்களை அதிவேகமாக இயக்க வேண்டாம். உங்கள் தன பாக்யாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.2013 முதல் 11.10.2013 வரை கேது செல்வதால் வற்றிய பணப்பை நிரம்பும். திரு மணம் கூடி வரும். கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். பிள்ளை பாக்யம் கிட்டும். கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் 12.10.2013 முதல் 21.6.2014 வரை செல்வதால் ஆரோக்யத்தில் கூடுதலாக அக்கறை காட்டுங்கள். உணவு கட்டுப்பாடு தேவை. விபத்துகள் வந்து நீங்கும். எதிர்பாராத தொகை கைக்கு வரும். சிலர் உங்கள்மீது வீண் பழி சுமத்தி விமர் சித்தாலும் கலங்காதீர்கள். கேது 8ல் அமர்வதால் முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் வரும். மற்றவர் விஷயங்களில் அநாவசியமாக மூக்கை நுழைக்காதீர்கள். செல்போனில் பேசிக்கொண்டு வாகனங்களை இயக்க வேண்டாம். எட்டில் நிற்கும் கேது ஆன்மிகச் சிந்தனை, பொது அறிவு, யோகா, தியானம் இவற்றில் ஈடுபாட் டையும் ஏற்படுத்துவார். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. வேலையாட்களிடம் அதிகம் கண்டிப்பு காட்டாதீர்கள். உத்யோகத்தில் அதிக வேலைச்சுமையால், நேரந்தவறி வீட்டிற்குச் செல்ல நேரிடுவதால் குடும்பத்தில் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வரும். பிரச்னைகளை தவிர்க்க குடும்பத்தாருடன் விடுமுறையை செலவிடுங்கள். குடும்பத்தோடு குலதெய்வம் கோயிலுக்கு சென்று வாருங்கள். இந்த ராகு-கேது மாற்றம், சுற்றியிருக்கும் சொந்த பந்தங்களின் உள்மன ஓட்டங்களை உணர வைப்பதுடன், காலத்திற்கு தகுந்தாற்போல் உங்களை தயார்படுத்தவும் செய்யும்.
பரிகாரம்:
திருநெல்வேலியிலிருந்து மேற்கே 13 கி.மீ. தொலைவிலுள்ள கோடகநல்லூர் தலத்தில் காளத்தீஸ்வரர் எனும் திருநாமத்தோடு அருள்பாலிக்கும் ஈசனை தரிசித்து வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.




No comments:

Post a Comment