Sunday 9 December 2012

RAGHU-KETHU PEYARCHI - KATAKAM

Source: www.dinakaran.com

ராகுவின் பலன்கள்:
திறமைகள் வெளிப்படும்

‘நண்டானுக்கு இடம் கொடேல்’ என்ற பழமொழிக்கேற்ப அடிவாரத்தில் நுழைந்து கலசம் வரை ஆதிக்கம் செலுத்துபவர்களே!  நகைச்சுவையாகப்  பேசும் நீங்கள், பணம், பதவி பார்த்து பழக மாட்டீர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு 2.12.2012 முதல் 21.6.2014 வரை உள்ள காலகட்டத்தில் ராகுவும்  கேதுவும் சேர்ந்து என்ன பலன்களை தரப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தில் அமர்ந்து எல்லோரையும் பகையாளியாக்கி பாடாய்ப்படுத்திய ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்கு நான்கா வது வீட்டில் வந்தமர்கிறார். ஐந்தாம் வீட்டை விட்டு ராகு விலகுவதால் குழந்தை இல்லாமல் தவித்தவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். பிள்ளை களின் பிடிவாத குணம் விலகும். அவர்களின் ஆழ்மனதில் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வருவீர்கள். பலரை நல்லவர்கள் என நம்பி ஏமாந்தீர்களே! இனி தரம் பார்த்து பழகுவீர்கள். கணவன்-மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். உங்கள் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட காரணமாக இருந்தவர்களைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். இழுபறியான வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும். பக்குவமாகப் பேசி  தடைபட்ட காரியங்களையெல்லாம் முடிப்பீர்கள். குடும்பத்தில் எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவுகள் வெடித்ததே! இனி 
சந்தோஷம் நிலைக்கும். வீட் டில் தாமதமாகிக் கொண்டிருந்த கல்யாணம், காதுகுத்து, சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நல்ல விதத்தில் முடியும். ராகு 4ம் வீட்டில் அமர்வதால் தாயாருக்கு நரம்புக் கோளாறு, ரத்த அழுத்தம் வரும். 
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்:
சஷ்டம பாக்யாதிபதியான குருவின் விசாகம் நட்சத்திரத்தில் 2.12.2012 முதல் 6.6.2013 வரை ராகுபகவான் செல்வதால் இழுபறியான வேலைகள்  உடனே முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மகனுக்கு வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பார்த்தபடி வீடு, மனை அமை யும். வங்கிக் கடன் 
கிடைக்கும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். தந்தையாருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 7.6.2013 முதல் 13.2.2014 வரை செல்வதால் இக்காலகட்டத்தில் தாயாரின் உடல்நிலை  பாதிக்கும். சாலையை கடக்கும்போது கவனம் தேவை. 

சின்னச் சின்ன விபத்துகள் வந்துபோகும். சில கூடா பழக்கங்கள் உங்களை நெருங்கக் கூடும்.  புதிய நண்பர்களுடன் கவனமாக இருங்கள். வீடு மாற வேண்டியது வரும். உங்களின் பூர்வ புண்ணியாதிபதியும் தசம ஸ்தானாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.2014 முதல் 21.6.2014 முடிய ராகுபகவான்  செல்வதால் வீண் செலவுகளிலிருந்து மீள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உய ரும். புது சொத்து வாங்குவீர்கள். உத்யோகத்தில் உயர்வு உண்டு. வழக்கு சாதகமாகும்.     சகோதர, சகோதரிகளிடையே இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். 

கர்ப்பிணிப் பெண்களே! நெடுந்தூரப் பயணங்கள் வேண்டாமே! லேசாக  தலைச்சுற்றல் வரும் என்பதால் மாடிப்படி ஏறி இறங்கும்போது கவனம் தேவை. 

கன்னிப் பெண்களே! யாரையும் எளிதில் நம்பாதீர்கள். காதல் விவகா ரத்தில் பெற்றோருடன் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பது நல்லது. தடைபட்ட உயர்கல்வியை மீண்டும் தொடர்வீர்கள். 

மாணவர்களே!  மறதி, மந்தம் நீங்கும். உயர்கல்வியில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளே! கட்சி சம்பந்தமாக வேலைச்சுமை அதிகரிக்கும். கௌரவப்  பதவிகள் தேடி வரும்.  

வியாபாரிகளே! போட்டிகள் ஒருபுறமிருந்தாலும் ராஜதந்திரத்தால் லாபத்தைப் பெருக்குவீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசி பழைய பாக்கிகளை வசூல் செய்யுங்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உணவு, சிமென்ட்,  புரோக்கரேஜ், மருந்து வகைகளால் இரட்டிப்பு லாபம் உண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் கறாராகப் பேசி வேலையை விரைந்து முடிக்கப்  பாருங்கள். 

உத்யோகஸ்தர்களே! யாராலும் செய்ய முடியாத கஷ்டமான வேலைகளையும் செய்து முடித்து சக ஊழியர்களையும் ஆச்சரியப்படுத்துவீர்கள். மேலதிகாரியைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம். 

கணினி துறையிலிருப்பவர்களே! அதிக சம்பளத்துடன் அயல்நாட்டில் வேலை கிடைக்கும். 

கலைத்துறையினரே! நெடுநாட்களாக காத்திருந்ததற்கேற்ப புது வாய்ப்புகள் வந்தமையும். 
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராவது வீட்டில் அமர்ந்து ஓரளவு நல்ல பலன்களை தந்த கேதுபகவான் இப்போது பத்தாவது வீட்டில் வந்தமர்வ தால் எதிலும் ஒரு பதட்டம், டென்ஷன் இருக்கும். எடுத்த வேலையை நான்கைந்து முறை அலைந்து முடிக்க வேண்டியது வரும். மூத்த சகோதரருடன்  இருந்த கருத்து மோதல்கள் விலகும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் பெரு மையடைவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். சேமிக்க முடியாதபடி செலவுகளும் தொடரும். தங்கையின் கல்யாணத்தை முன்னின்று நடத்துவீர்கள்.  நாடாளுபவர்கள், தொழிலதிபர்களின் நட்பு கிட்டும். 
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் தனாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதத்தில் 2.12.2012 முதல் 2.2.2013 வரை கேதுபகவான் செல்வதால் யதார்த்தமாகப் பேசி சில வேலைகளை முடிப்பீர்கள். கண், காது, பல்வலி வந்துபோகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். தந்தையாருடன் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வரும். வேலைச்சுமை அதிகரிக்கும். தூக்கம் குறையும். சுக லாபாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.2013 முதல் 11.10.2013 வரை கேது செல்வதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். கணவன்-மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். தாய்வழி உறவினர்களால் உதவியுண்டு. வேலை கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். மூத்த சகோதரர் வகையில் ஆதாயமுண்டு. கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் 12.10.2013 முதல் 21.6.2014 வரை செல்வதால் பணப் புழக்கம் அதிகரிக்கும். ஆனால் திடீர் செலவுகளால் திணறுவீர்கள். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். எதிர்ப்புகளும், இட மாற்றங்களும் வரும். சொத்து வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். நெருங்கிய உறவினரை இழக்க வேண்டி வரலாம். ஆன்மிகத்தில் ஆழமாகச் செல்வீர்கள். வேற்று மொழியினர் உதவுவார்கள். நெருங்கிய உறவினர்களால் கொஞ்சம் செலவுகளும் அலைச்சலும் வரும். சிக்கனத்தைக் கடைபிடிப்பது நல்லது. வியாபாரத்தில் அவசரப்பட்டு பெரிய முதலீடுகள் செய்யாதீர்கள். பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டியது வரும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையே செலுத்தி விடுங்கள். முரண்டுபிடித்த பங்குதாரர்கள் இனி உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சின்ன அவமானங்களை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த ராகு-கேது மாற்றம் வேலைச்சுமையையும் விரும்பியதை அடைவதில் தாமதத்தைத் தந்தாலும் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற சூட்சுமத்தை உணர வைக்கும்.
பரிகாரம்:
காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகேயுள்ள மகாகாளேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வாருங்கள். இது ராகு-கேது பூஜித்த தலமாகும். தந்தையி ழந்த பிள்ளைக்கு முடிந்த உதவியைச் செய்யுங்கள்.

No comments:

Post a Comment