Sunday 9 December 2012

RAGHU-KETHU PEYARCHI - MESHAM

Source: www.dinakaran.com

ராகுவின் பலன்கள்:
வெற்றி பெறுவீர்கள்

ஆடோடு மோதேல் என்ற பழமொழிக்கேற்ப உங்களிடம் மோதுபவர்களுக்கு தக்க பதிலடி தராமல் விடமாட்டீர்கள். கண்ணைப் பார்த்துக் கருத்துக் களை பகிர்ந்து கொள்ளும் நீங்கள், கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காமல், கிடைத்த துரும்பை துடுப்பாக்கி கரையேறுவீர்கள். அப்படிப் பட்ட உங்களுக்கு இந்த ராகுவும் கேதுவும் 2.12.2012 முதல் 21.6.2014 வரை உள்ள காலகட்டங்களில்  என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம். 

இதுவரை உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்து கொண்டு எந்த வேலையையும் செய்ய விடாமல் நாலாபுறமும் பாடாய்ப்படுத்திய ராகுபகவான்  ராசிக்கு ஏழாம் வீட்டில் வந்து அமர்வதால், திக்கு திசையறிந்து வெளியுலகத்திற்கு வருவீர்கள். உங்களின் அறிவுத்திறனை மழுங்க வைத்த ராகுபகவான் இப்பொழுது உங்களுக்குள் ஒளிந்து கிடந்த திறமைகளை எல்லாம் வெளிக் கொண்டு வரப்போகிறார். தொட்டதுக்கெல்லாம் வீண் விவாதங்களும்  மன உளைச்சலும் டென்ஷனும் தானே மிஞ்சியது. அவையெல்லாம் இனி விலகும். உற்சாகத்துடன் எல்லா வேலைகளையும் முடித்துக் காட்டுவீர்கள்.  எந்த விஷயத்தையும் மற்றவர்களின் ஆலோசனையின்றி சுயமாக சிந்தித்து முடிவெடுங்கள்.

குடும்பத்தினர் உங்கள் வார்த்தைக்கு இனி முக்கியத்துவம் தருவார்கள். கணவன்-மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும் என்றாலும் களத்திர ஸ்தான மான ஏழாம் வீட்டில் ராகு அமர்வதால் மனைவியுடன் சிறு வாக்குவாதங்கள் வந்து போகும். அதை பெரிதுபடுத்த வேண்டாம். மனைவி சுட்டிக் காட்டும்  கெட்ட பழக்கங்களை திருத்திக் கொள்ளுங்கள். 
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் யோகாதிபதியான குருபகவானின் விசாக நட்சத்திரத்தில் 2.12.2012 முதல் 6.6.2013 வரை ராகுபகவான் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். 
கல்யாணம், கிரகப் பிரவேசம், சீமந்தம் என வீடு களைகட்டும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வங்கிக் கடன் உதவி கிடைக்கும். ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதியில் 7.6.2013 முதல் 13.2.2014 வரை செல்வதால் இருசக்கர வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. வீண் சந்தேகத்தால் குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். கனவுத் தொல்லை வந்து போகும். 

தாழ்வுமனப்பான்மை மற்றும் எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கப் பாருங்கள். வேற்றுமொழிக்காரர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு.  எண்ணெய் மற்றும் வாயுப் பதார்த்தங்களை தவிர்த்துவிடுங்கள். வாகனம் வாங்குவீர்கள். உங்கள் ராசிநாதனான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.2014 முதல் 21.6.2014 முடிய ராகுபகவான் செல்வதால் ஆரோக்யத்தில் கூடுதல் கவ னம் செலுத்துங்கள். சகோதர வகையில் சின்னச்  இழப்புகளும் கருத்து 
மோதல்களும் வந்து போகும். பிள்ளைகளின் வருங்காலத்திற்காக சேமிப்பீர்கள். 

அவர்கள் உயர்கல்வியில் வெற்றி பெற்று உங்களை பெருமைப்படுத்துவார்கள். அரைகுறையாக நின் றுபோன பல வேலைகளை இனி விரைந்து முடிப்பீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். நிரந்தர வேலையின்றி தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

கன்னிப் பெண்களே! சகஜமாகப் பேசியதால் பல இடங்களில் தர்மசங்கடத்திற்கு உள்ளானீர்களே! இனி இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுவீர்கள்.  கசந்த காதல் இனிக்கும். மாதவிடாய்க் கோளாறு, மன இறுக்கம் விலகும். 

மாணவர்களே! படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். விளையா டும்போது சிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கவனமாக இருங்கள். 

அரசியல்வாதிகளே! தலைமையை விமர்சிக்காதீர்கள். சகாக்களுடன் மனக்கசப்பு  உண்டாகும். 

வியாபாரிகளே! போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறினீர்களே! இனி உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். புதிய முதலீடுகளில் 
கவனம் தேவை. ரியல் எஸ்டேட், கட்டிட வகைகளால் ஆதாயமடைவீர்கள். 7ம் வீட்டில் ராகு வந்தமர்வதால் கூட்டுத் தொழிலில்  பங்குதாரர்களுடன் அவ்வப்போது வீண் விவாதங்கள் வரத்தான் செய்யும். கொஞ்சம் பொறுத்துப் போங்கள். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். 

உத்யோகஸ்தர்களே! மேலதிகாரியின் போக்கை அறிந்து நடந்து கொள்ளுங்கள். உங்களின் கடின உழைப்புக் கேற்றாற்போல பதவி உயர்வும் அடைவீர்கள். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். 

கணினி துறையினர்களே!  வேலைச்சுமை அதிகரிக்கத்தான் செய்யும் என்றா லும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. கலைத்துறையினர்களே! போராடி வெற்றி பெறுவீர்கள். உங்களின் படைப்புகளுக்கு கைத்தட்டலுடன் காசும் சேரும்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் நின்றுகொண்டு உங்களை பக்குவமில்லாமல் பேச வைத்த கேதுபகவான் இப்போது உங்கள் ராசியிலேயே 
வந்தமர்வதால் இனி சமயோசித புத்தியுடன் பேச வைப்பார். எப்போது பார்த்தாலும் எதிர்மறையாக சிந்தித்த நீங்கள் இனி ஆக்கபூர்வமாக  செயல்படுவீர்கள். 

குடும்பத்தினருடன் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் இனி நீங்கும். ராசிக்குள் கேது அமர்வதால் எதிலும்  சலிப்பு, டென்ஷன்,  தலைச்சுற்றல், சோர்வு, காய்ச்சல், தூக்கமின்மை வந்துபோகும். பெரிய நோய் இருப்பது போன்ற பிரமை ஏற்படும்.. வட்டிக்கு வாங்கிய கடனை எப்படி  அடைக்கப் போகிறோமோ என்ற பயம் வரும். 
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதத்தில் 2.12.2012 முதல் 2.2.2013 வரை கேதுபகவான் செல்வதால் பிள் ளைகளால் கொஞ்சம் அலைச்சலும் செலவும் இருக்கும். படிப்பு, உத்யோகத்தின் பொருட்டு உங்களை விட்டுப் பிரிவார்கள். பூர்வீக சொத்துப் பிரச்னை தலைதூக்கும். ஆரோக்யம் பாதிக்கும். உங்கள் தன-சப்தமாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.2013 முதல் 11.10.2013 வரை கேது செல்வதால் பணவரவு உண்டு. ஆனால் திடீர் செலவுகளால் சேமிப்புகள் கரையும். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்வது நல்லது. வாகனம் வாங்குவீர்கள். கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் 12.10.2013 முதல் 21.06.2014 வரை செல்வதால் யூரினரி இன்பெக்ஷன், தோலில் நமைச்சல், அலர்ஜியால் கட்டி வந்து போகும். சிலருக்கு சிறு அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டி வரும். புதியவர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். முக்கிய காரியங்கள் இரண்டு அல்லது மூன்றாவது முயற்சியில்தான் முடிவடையும். குறிப்பாக அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இக்கால கட்டத்தில் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாக முடியும். வியாபாரிகளே! பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் நிம்மதியுண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். வரிகளை முறையாக செலுத்திவிடுவது நல்லது. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் காரசாரமான விவாதங்களை தவிர்த்துவிடுங்கள். உத்யோகஸ்தர்களே! வேலைச்சுமை அதிகரித்தாலும் மூத்த அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இந்த ராகு-கேது மாற்றம் அவ்வப்போது ஏமாற்றத்தையும் எதிர்பார்ப்புகளை அடைவதில் தடைகளை தந்தாலும் தொலைநோக்குச் சிந்தனையாலும் சம யோசித பேச்சாலும் தாக்குப்பிடிக்க வைக்கும்.
பரிகாரம்:
மயிலாடுதுறை மற்றும் சீர்காழிக்கு அருகேயுள்ள கீழப்பெரும்பள்ளம் எனும் தலத்தில் அருள்பாலிக்கும் நாகேஸ்வரரை தரிசியுங்கள். ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியருக்கு உதவுங்கள்.

No comments:

Post a Comment