Sunday 9 December 2012

RAGHU-KETHU PEYARCHI - VIRUCHAGAM

Source: www.dinakaran.com

ராகுவின் பலன்கள்:
யோகம் உண்டு

‘தேளான் தோள் கொடுப்பான்’ என்ற முதுமொழிக்கேற்ப முழுமையாக உங்களை சரணாகதி அடைபவர்களை முன்னேற்றுபவர்களே! நெஞ்சுக்குள்  நீதிமன்றம் நடத்துபவர்களே! கவரிமானைப் போல கௌரவம் பார்க்கும் உங்களை பணத்தை காட்டி விலைக்கு வாங்க முடியாது. அப்படிப்பட்ட உங் களுக்கு 2.12.2012 முதல் 21.6.2014 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும் கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.    

இதுவரை உங்கள் ராசியில் அமர்ந்திருந்த ராகுபகவான் திக்கு திசையறியாது திண்டாட வைத்ததுடன், காரணகாரியமே இல்லாமல் பிரச்னைகளில்  சிக்க 
வைத்தாரே! ஒருநாள் சிரித்தால், மூன்று நாள் அழ வைத்தாரே! தலைவலி, நெஞ்சுவலி என சதா சர்வகாலமும் புலம்பித் தவிக்க வைத்தாரே! ராகுபகவான் இப்பொழுது ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டிற்கு வந்தமர்வதால் நோய் விலகும். முதுகுவலி,  கால்வலி என முடங்கிய நீங்கள், இனி முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் குடி கொள்ளும். உங்கள் ஆலோசனையை எல் லோரும் ஏற்பார்கள். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். புண்ணிய நதிகளில் 
நீராடுவீர்கள். 
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் தன பூர்வபுண்யாதிபதியான விசாக நட்சத்திரத்தில் 2.12.2012 முதல் 6.6.2013 வரை ராகுபகவான் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆபரணங்கள் வாங்குவீர்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல வேலை அமையும். ஷேர் மூலம் பணம் வரும். பூர்வீகச்  சொத்து கைக்கு வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். புதுவீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வீர்கள்.  தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 7.6.2013 முதல் 13.2.2014 வரை ராகுபகவான் செல்வதால் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.

பூர்வீகச்  சொத்தை சீர்திருத்தம் செய்வீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பெரிய பதவிகள் தேடிவரும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். உங்கள் ராசிநாதனும் சஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.2014 முதல் 21.6.2014 முடிய ராகுபகவான் செல்வதால் மறைமுக  எதிர்ப்புகள் விலகும். திடீர் யோகம் உண்டாகும். 

பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். தன்னிச்சையாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீடு, மனை  வாங்குவது விற்பது லாபகரமாக முடியும்.   பிள்ளைகளிடம் பாசமாக பழகுவீர்கள். அவர்களை உயர்கல்வி, உத்யோகம் பொருட்டு அயல்நாட்டுக்கு அனுப்பி வைப்பீர்கள். உங்களின் உண்மை யான பாசத்தை உடன்பிறந்தவர்கள் இனி உணர்வார்கள். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். 

தந்தையுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.  தாயின் உடல்நிலை சீராகும். குலதெய்வக் கோயிலை எடுத்துக் கட்டுவீர்கள். நாடாளுபவர்களின் உதவி கிடைக்கும். வெளிநாட்டிலிருப்பவர்களால்  ஆதாயம் உண்டு. சிறு விபத்துகள் வரக்கூடும். இயக்கம், சங்கம், டிரஸ்ட் இவற்றிலெல்லாம் கௌரவப் பதவிகள் தேடி வரும். 

கன்னிப் பெண்களே!  மனம் தெளிவாகும். மாணவர்களே! 
உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். விளையாட்டில் பதக்கம் உண்டு. 

அரசியல்வாதிகளே! உங்கள் பலத்தை நிரூ பித்துக் காட்டி தலைமையிடத்தில் நல்ல பெயரெடுப்பீர்கள். அக்கம்-பக்க வீட்டாரிடம் உங்கள் குடும்ப விஷயங்களை சொல்லிக் 
கொண்டிருக்காதீர்கள்.  

வியாபாரிகளே! போட்டியாளர்களை அனுபவ அறிவால் வெல்வீர்கள். பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். லாபம் அதிகரிக்கும். அரசு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும். கூட்டுத் தொழிலில் புது முதலீடுகளை செய்வீர்கள். ஏற்றுமதி-இறக்குமதியால் அதிக லாபம் வரும். 

உத்யோகஸ்தர்களே! உங் களை நம்பி முக்கிய பொறுப்புகளை, உங்கள் அதிகாரி ஒப்படைப்பார். சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். கணினி துறையினரே! பெரிய  நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். அதிக சம்பளத்துடன் சலுகைகளும் கிட்டும். 

கலைஞர்களே! நல்ல வாய்ப்புகளெல்லாம் விலகிப்போனதே!  வேலைகளை திறம்பட செய்து கொடுத்தும் பணம் வராமல் தவித்தீர்களே! இனி புகழ் கூடும். 
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசிக்கு ஏழாவது வீட்டில் இருந்து கொண்டு உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே சண்டை சச்சரவுகளையும் மனை விக்கு உடல் நலக்குறைவையும் அடுக்கடுக்காக தந்தாரே! காரியத்தடை, மன உளைச்சல், டென்ஷன் என தொல்லை தந்த கேது பகவான் இப்பொ ழுது உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து அகற்றும் சக்தியை கொடுப்பார். குடும்பத்திலி ருப்பவர்கள் இனி உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கணவன்-மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். 
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் ஜீவனாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதத்தில் 2.12.2012 முதல் 2.02.2013 வரை கேதுபகவான் செல்வதால் அரைகுறை யாக நின்ற கட்டிடப் பணியைத் தொடங்குவீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். உத்யோகத்தில் பதவி, சம்பளம் உயரும். நாடாளுபவர்கள் உதவுவார்கள். அதிகாரப் பதவிக்கு தேர்தெடுக்கப்படுவீர்கள். உங்கள் சப்தம விரயாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.2013 முதல் 11.10.2013 வரை கேது செல்வதால் அடிப்படை வசதிகளை மேம்ப டுத்துவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படு வீர்கள். தன் சுய நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் 12.10.2013 முதல் 21.6.2014 வரை கேது செல்வதால் எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய சிக்கல் களை தீர்ப்பீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். கோயில் கும்பாபிஷேகத்தை முன் னின்று நடத்துவீர்கள். வேற்று மொழிக்காரர்கள் உதவுவார்கள். கேது 6ல் நிற்பதால் எதிரிகளை வீழ்த்துவீர்கள். புத்திசாலித்தனத்துடன் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பணப் பற்றாக்குறை நீங்கும். பிரிந்தி ருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். மனைவி வெகுநாட்களாக கேட்டுக் கொண்டிருந்த தங்க ஆபரணங்களை இப்போது வாங்கிக் கொடுப்பீர் கள். குடும்பத்தில் உங்கள் பேச்சிற்கு மரியாதை கூடும். உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்குகள் வெற்றியடையும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். கடையை வேறிடத்திற்கு மாற்றுவீர்கள். பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களின் தேவைகளை உணர்ந்து அதற்குத் தகுந்தாற்போல் பொருட்களை வாங்கி வைப்பீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். உத்யோகத்தில் உங்களை ஏளனமாக பார்த்த உயரதிகாரிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திறமையாக செயல்படுவீர்கள். குறைகூறிக் கொண்டிருந்த சக ஊழியர்களும் இனி வலிய வந்து பேசுவார்கள். உங்களின் கடின உழைப்புக்காக பதவி உயர்வு, சம்பள உயர்வெல்லாம் உண்டு. இந்த ராகு-கேது மாற்றம் விரக்தி வேதனைகளிலிருந்து விடுவிப்பதுடன் அதிகாரம் ஐஸ்வர்யங்களில் திளைக்க வைக்கும்.
பரிகாரம்:
சென்னையிலிருந்து 110 கி.மீ. தொலைவிலுள்ள புகழ்பெற்ற ராகு-கேது தலமான காளஹஸ்திக்கு சென்று வாருங்கள். இறைவன் காளத்திநாதர் என்றும் அம்மை ஞானப்பூங்கோதை எனும் திருப்பெயரோடும் எழுந்தருளியுள்ளார்கள். அன்னதானம் செய்யுங்கள்.

No comments:

Post a Comment