Sunday 9 December 2012

RAGHU-KETHU PEYARCHI - MITHUNUM

Source: www.dinakaran.com

ராகுவின் பலன்கள்:
பிரச்னைகள் தீரும்

‘ரெட்டையன் வார்த்தை வெட்டிக்காடு வரை’ என்ற பழமொழிக்கேற்ப உடைந்து  வருபவர்களுக்கு ஊன்று கோலாய் இருப்பவர்களே! நல்லது கெட்டது என்று 
நான்கையும் அறிந்து வைத்திருக்கும் அனுபவசாலிகளான உங்களுக்கு 2.12.2012 முதல் 21.6.2014  வரையுள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும் கேதுவும் சேர்ந்து  என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து கொண்டு பணப் புழக்கத்தையும் பிரபலங்களின் நட்பையும் ஒருபுறம் தந்தாலும் மறுபுறம் வீண்  அலைச்சல், பகை, கடன் தொந்தரவு என்று கலங்கடிக்கவும் செய்த ராகுபகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். ஐந்தாம் இடம் ராகுவுக்கு உகந்த இடமல்ல என்றாலும் உங்கள் யோகாதிபதியான சுக்கிரன் வீட்டில் அமர்வதால் கெடுபலன்களை குறைத்து ஓர ளவு நல்லதையே செய்வார். குடும்பத்தில் எதற்கெடுத்தாலும் விவாதம், சண்டை என வந்துபோகும். கணவன்-மனைவிக்குள் சந்தோஷம் நிலைக்கும்.  ஆனாலும் புத்தி ஸ்தானமான 5ம் வீட்டில் ராகு அமர்வதால் சந்தேகக் கண்ணுடன் எல்லோரையும் பார்ப்பீர்கள். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் கருதி கொஞ்சம் சேமிக்கச் செய்வீர்கள். ஆனாலும் பிள்ளைகளுடன்  சண்டை, சச்சரவுகள் வந்து  போகும். அவர்களின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அநாவசியமாக மூக்கை நுழைக்க வேண்டாம். நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். 
 
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் சப்தம தசமஸ்தானாதிபதியுமான குருபகவானின் விசாக நட்சத்திரத்தில் 2.12.2012 முதல் 6.6.2013 வரை ராகுபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் உங்களின் எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அறிஞர்கள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும்.  சுப நிகழ்ச்சிகள், 
பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். மனைவியுடன் ஈகோ பிரச்னை, அவருக்கு ஹார்மோன் கோளாறு என்று வரக்கூ டும். உத்யோகத்தில் இடமாற்றங்களும் வேலைச்சுமையும் இருக்கும்.  
     
ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 7.6.2013 முதல் 13.2.2014 வரை செல்வதால் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவினங்கள் கூடும். சொந்த பந்தங்களின் விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். நெருங்கிய நண்பரை இழக்க நேரிடும். ஷேர் மூலம் பணம் வரும். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். உங்கள் சஷ்டமலாபாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.2014 முதல் 21.6.2014 முடிய ராகுபகவான் செல்வதால் சொத்து வாங்கு வது, விற்பதில் இழப்பு வரும். சகோதரர்களுடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். 

ரத்த அழுத்தத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள். கமிஷன், புரோக்கரேஜ்  மூலம் திடீர் பணவரவு உண்டு. வாகன விபத்து ஏற்படக்கூடும். பிள்ளைகளுக்கு நல்ல நட்புச் சூழலை உருவாக்கிக் கொடுங்கள். மகனின் கல்வி, வேலை விஷயமாக நல்ல நிறுவனத்திலிருந்து வாய்ப்புகள் வரும்.  ஆன்மிகவாதிகள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். 

கன்னிப் பெண்களே! தள்ளிப்போய் கொண்டிருந்த திருமணம் இனி கூடிவரும். உயர்கல்வியில்  தேர்ச்சியடைவீர்கள். மாணவர்களே! வகுப்பாசிரியர் பாராட்டுவார். தேர்வில் மதிப்பெண்களை குவிப்பீர்கள். கவிதை, ஓவியம், இசைப் போட்டிகளில் பரிசு பெறுவீர்கள். உயர்கல்விக்காக அயல்நாடு செல்ல வேண்டி வரும். 

அரசியல்வாதிகளே! எதிர்க்கட்சியினரை விமர்சித்துப் பேச வேண்டாம். அண் டை அயலாருடன் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். 

வியாபாரிகளே! பழைய சரக்குகள் விற்றுத் தீரும். கடையை விரிவுபடுத்தி நவீன மயமாக்குவீர்கள். பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். இரும்பு,  உணவு, 
புரோக்கரேஜ் வகைகளால் லாபமடைவீர்கள். 

உத்யோகஸ்தர்களே!  உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தேங்கிக் கிடந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வெகுநாட்களாக எதிர்பார்த்த சம்பள உயர்வு இப்பொழுது கைக்கு வரும்.  

கணினி துறையினரே! சம்பள உயர்வுடன் புதிய சலுகைகளும் கிடைக்கும். 

கலைத்துறையினரே! வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். நல்ல நிறுவனத்திலிருந்து வாய்ப்பு கிடைக்கும். 
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்து விரயச் செலவுகளையும் வீண் அலைச்சலையும் தூக்கமில்லாமலும் தவிக்க வைத்த  கேதுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு லாப வீடான பதினொன்றில் வந்தமர்கிறார். வற்றிய பணப்பை நிரம்பும். கைமாற்றாக இருந்த கடனையும்  தந்து முடிப்பீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வி.ஐ.பிகள், தொழிலதிபர்களின் நட்பை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும். மனைவி நெடு நாட்களாக கேட்டுக் கொண்டிருந்த தங்க ஆபரணம், ரத்தினங்களை வாங்கித் தருமளவிற்கு வசதியாக இருப்பீர் கள். இழுபறியான 
வழக்குகள் சாதகமாக முடியும். மூத்த சகோதரர் உதவுவார். அரைகுறையாக நின்றுபோன வீட்டை கட்டி முடித்து புது வீட்டில் புகுவீர்கள். பழைய பிரச்னைகளெல்லாம் ஒவ்வொன்றாகத் தீரும். 
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் சேவகாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதத்தில் 2.12.2012 முதல் 2.2.2013 வரை கேதுபகவான் செல்வதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனோபலம் அதிகரிக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். வங்கியில் லோன் கிடைக்கும். இளைய சகோத ரருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். எதிரிகள் நண்பர்களாவார்கள். அரசாங்க விஷயங்களில் வெற்றியுண்டு. உங்கள் பூர்வ புண்யாதிபதியும் விரயாதிபதியுமான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.2013 முதல் 11.10.2013 வரை கேது செல்வதால் கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். தோற்றப்பொலிவு கூடும். திருமண முயற்சிகள் கூடிவரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் 12.10.2013 முதல் 21.6.2014 வரை செல்வதால் உங்கள் கை ஓங்கும். வழக்கால் ஏற்ப ட்ட நெருக்கடிகள் நீங்கும். உடல் நலம் சீராகும். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சிலர் சொந்தத் தொழில் தொடங்குவீர்கள். வேற்று மதத்தவர்கள் உதவுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். மறைமுக எதிரிகள் அடங்குவார்கள். புதிய நண்பர்களால் ஆதாயமுண்டு. ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத் தை மாற்றியமைப்பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். பங்குதாரர்களை மாற்றுவீர்கள். அரசு கெடுபிடிகள் தளரும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதா யம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடுவீர்கள். ராகு உங்கள் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டாலும் கேது அவற்றை உடைத்துத் தள்ளி உயர வைப்பார்.
பரிகாரம்:
திருப்பாம்புரத்தில் அருளும் ஆதிசேஷன் வழிபட்ட பாம்புரேஸ்வரரையும் வண்டார் பூங்குழலியையும் தரிசியுங்கள். கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையிலிருந்து பேரளம் வழியாக இத்தலத்தை அடையலாம். வயதானவர்களுக்கு செருப்பும் குடையும் கம்பளியும் வாங்கிக் கொடுங்கள்.

No comments:

Post a Comment