Sunday 9 December 2012

RAGHU-KETHU PEYARCHI - THULAM

Source: www.dinakaran.com

ராகுவின் பலன்கள்:
சொத்து சேரும்

‘கோலோன் ஓயான்’ என்ற பழமொழிக்கேற்ப தொடங்கியதை முடிக்கும்வரை அதே சிந்தனையாக இருப்பீர்கள். மற்றவர்களின் மன ஓட்டத்தை அறிவதி லும் 
வல்லவர்கள். சுயநலமில்லாமல் சுற்றம், நட்புக்காக உழைப்பீர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு ராகுவும் கேதுவும் 2.12.2012 முதல் 21.6.2014 வரையுள்ள காலகட்டத்தில் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் அமர்ந்திருந்த ராகு ஏடாகூடமாக பேசவைத்து எல்லாவற்றிலும் சிக்க வைத்தார். பணம் பல வகையில் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி அடுத்தடுத்த செலவுகள் வந்து சேமிப்பை கரைத்ததே! குடும்பத்தில் கணவன்- மனைவிக்குள் நெருக்கத்தை குறைத்தார். இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால் ஓரளவு பிரச்னைகள் குறையும். இனி இடம்,  பொருள், ஏவல் அறிந்து பேசும் வித்தையை கற்றுக் கொள்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். ஆனால் ராசிக்குள் ராகு அமர்வதால் ஆரோக்யத்தில் இனி  நீங்கள் அதிக அக்கறை 
காட்ட வேண்டும். உங்கள் ராசிக்குள்ளேயே ஏற்கனவே சனிபகவானும் அமர்ந்து கொண்டிருப்பதால் யூரினரி இன்ஃபெக்ஷன்,  ஹார்மோன் கோளாறு, நீரிழிவு நோய் மற்றும் தலை, தோள்பட்டையில் வலி வந்துபோகும். மருத்துவரின் ஆலோசனையின்படி நடந்து கொள்ளுங்கள்.  போலி மருத்துவரிடம் சிக்கிக் கொள்ளாதீர்கள். உங்கள் ராசிநாதனான சுக்கிரனுக்கு ராகு நட்பு கிரகமாக வருவதால் அனைத்துப் பிரச்னைகளிலிருந் தும் நூலிழையில் காப்பாற்றப்படுவீர்கள். 
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் திருதிய சஷ்டமாதிபதியான குருவின் விசாகம் நட்சத்திரத்தில் 2.12.2012 முதல் 6.6.2013 வரை ராகுபகவான் செல்வதால் தடைகள் நீங்கும். ஓரளவு பணமும் வரும். விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஏமாற்றங்கள், இழப்புகளை சந்திக்க வேண்டியது வரும். வழக்கை சுமுகமாக முடிக்க முயற்சிப்பீர்கள். 

சிலர் வீடு மாற வேண்டியது வரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை குறைந்த வட்டிக்கு மாற்றுவீர்கள்.  ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 7.6.2013 முதல் 13.2.2014 வரை செல்வதால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். சுவாதி  
நட்சத்திரக்காரர்களுக்கு இக்காலகட்டத்தில் பிரிவு, விபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. புது முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. மகான்கள், சித்தர்களின் 
ஜீவசமாதி சென்று வருவது நல்லது. 

உங்கள் தன சப்தமாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.2014 முதல் 21.6.2014 முடிய ராகுபகவான் செல்வதால் எதிர்பார்த்த பணம்  வரும். 
சொத்துப் பிரச்னையை தீர்க்க புதுவழி கிடைக்கும். மனைவி வழி உறவினர்களால் ஆதாயமுண்டு. விலையுயர்ந்த தங்க நகைகள் வாங்குவீர்கள். வீடு கட்டும் முயற்சி பலிதமாகும். வெளிமாநில புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மனைவிக்கு ரத்த சம்பந்தப்பட்ட நோய் வந்துபோகும். 

ராசியில் நிற்கும் ராகு சலிப்பையும் அலட்சியப் போக்கையும் உண்டாக்குவார். வெளி உணவுகளை அறவே தவிர்த்துவிடுவது நல்லது. காய்கறிகளை  அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நேரம் கடந்து சாப்பிட வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். 

கன்னிப்பெண்களே! பெற்றோருடன் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வது நல்லது. தள்ளிப்போன திருமணம் முடியும்.

மாணவர்களே! நினைவாற்றல் கூடும்.  வகுப்பறையில் 
முன்வரிசையில் வந்து அமருங்கள். விளையாட்டு, இலக்கியப் போட்டிகளில் பதக்கம், பரிசு கிடைக்கும். கெட்ட நண்பர்களை தவிர்க்கப்  பாருங்கள். 

அரசியல்வாதிகளே! தலைமையைப் பற்றிக் குறை கூறவேண்டாம். 

வியாபாரிகளே! போட்டியாளர்கள் அதிகரிக்கத்தான் செய்வார்கள். பெரிய முதலீடுகளை தவிர்த்து இருப்பதை வைத்து லாபம் சம்பாதிக்கப் பாருங்கள்.  வேலையாட்கள் முரண்டு பிடிப்பார்கள். முக்கிய வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. அரசு விஷயங்களில் அலட்சியப்போக்கு வேண்டாம். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களை அனுசரித்துப் போங்கள். புது ஆர்டர்கள், ஏஜென்சிகளை போராடிப் பெறுவீர்கள். 

உத்யோகஸ்தர்களே!  தடைபட்ட உரிமைகளும் சலுகைகளும் உடனே கிடைக்கும். மூத்த அதிகாரிகளின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள்.  

கணினி துறையினரே! சம்பள உயர்வுடன் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினரே! உங்கள் படைப்பாற்றலுக் கேற்ற நல்ல வாய்ப்புகள் வ ரும். சம்பள விஷயத்தில் விட்டுக் கொடுத்துப் போங்கள். 
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் உட்கார்ந்து கொண்டு ஏகப்பட்ட தொந்தரவுகளையும் மன உளைச்சல்களையும் கொடுத்து வந்த கேது, இப்பொழுது ராசிக்கு ஏழாவது வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். இனி வீண் பயம் விலகும். பிரச்னைகளை நேருக்கு நேராக எதிர்கொள்ளும் ஆற்றல்  கிடைக்கும்.  மனைவியோடு 
விட்டுக்கொடுத்து போங்கள். தேவையில்லாத பயணங்கள் இனி இருக்காது. பலரையும் நம்பி ஏமாந்த நிலை மாறும். பிர பலங்களின் அறிமுகமும் கிடைக்கும். 
நன்றி மறந்தவர்களை நினைத்து அவ்வப்போது வருத்தப்படுவீர்கள். சொத்துப் பிரச்னை, பங்காளி சண்டைக்காக  நீதிமன்றம் செல்ல வேண்டாம். அரசுக் 
காரியங்களில் கவனமாக இருங்கள். குடும்ப விஷயங்களை யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். 
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் லாபாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதத்தில் 2.12.2012 முதல் 2.2.2013 வரை கேதுபகவான் செல்வதால் பணவரவு அதிக ரிக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். ஆனால், முன்கோபத்தால் புது பிரச்னைகள் உருவாகும். மூத்த சகோதரர் அனுசரணையாக இருப்பார். புது முதலீடுகள் வேண்டாம். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளும் எடுக்க வேண்டாம். உங்கள் ராசிநாதனும் அஷ்டமாதிபதியுமான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.2013 முதல் 11.10.2013 வரை கேது செல்வதால் பணத் தட்டுப்பாடு குறையும். புதிய பாதையில் பயணித்து வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வீடு, மனை, வாகனம் வாங்கு வீர்கள். அசதி, சோர்வும் வந்து நீங்கும். கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் 12.10.2013 முதல் 21.6.2014 வரை செல்வதால் சின்னச் சின்ன விபத்துகள் வந்து நீங்கும். எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். மனைவி வழியில் செலவுகள் அதிகரிக்கும். நீண்டநாள் பிரார்த்தனைகளை இப்பொழுது நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உங்களின் நட்பு வட்டம் விரிவடையும். நவீன வாகனம் வாங்குவீர்கள். உறவினர்களிடையே நிலவி வந்த மனஸ் தாபங்கள் விலகும். ராசிக்கு 7ம் வீட்டில் கேது அமர்வதால் வியாபாரத்தில் கூட்டுத் தொழிலை தவிர்க்கப் பாருங்கள். பங்குதாரர்களுடன் பகை வரும். வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் மேலதிகாரியுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மாறும். உங்களின் நிர்வாகத்திறன் கூடும். உடன் பணிபுரிபவர்களால் நிம்மதியுண்டாகும். இந்த ராகு-கேது பெயர்ச்சியில் ராகு உங்களுக்கு ஆரோக்ய குறைவையும். முன்கோபத்தையும் தந்தாலும் கேதுவின் அனுக்கிரகத்தால் நினைத்ததை முடிக்கும் வல்லமையும் உண்டாகும்.
பரிகாரம்:
கும்பகோணத்தில் நகரின் மையத்திலேயே அமைந்துள்ள ஆதிசேஷன் வழிபட்ட ஈசனான நாகேஸ்வரரையும் பெரியநாயகியையும் தரிசியுங்கள். கோயில் திருப்பணிகளுக்கு உதவுங்கள்.

No comments:

Post a Comment