Sunday 9 December 2012

RAGHU-KETHU PEYARCHI - KUMBAM


Source: www.dinakaran.com

ராகுவின் பலன்கள்:
ஆதாயம் அதிகரிக்கும்

‘கும்பத்தான் குறை களைவான்’ என்ற முதுமொழிக்கேற்ப மற்றவர்களின் குற்றம், குறைகளை பெரிதுபடுத்திப் பார்க்காமல் பெருந்தன்மையுடன் வாழ்பவர்களே! அணைக்கட்டில் அமைக்கப்பட்டிருந்த நீர் எவ்வளவு ஆவேசமாக வெளியேறுகிறதோ அதே சீற்றத்துடன் அநியாயங்களைத் தட்டிக் கேட்பீர்கள். அப்படிப்பட்ட 
உங்களுக்கு 2.12.2012 முதல் 21.6.2014 வரையுள்ள காலகட்டங்களில் இந்த ராகுவும் கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.  

இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை ஒரு வேலையையும் செய்ய விடாமல் முடக்கிப் போட்ட ராகுபகவான்  இப்பொழுது 
ஒன்பதாம் வீட்டில் வந்து அமர்கிறார். முடியாமல் கிடப்பில் கிடந்த பல காரியங்களை இனி முழுமூச்சுடன் முடித்துக் காட்டுவீர்கள்.  ஒளிந்து மறைந்து வாழ்ந்த வாழ்க்கை இனி பிரகாசிக்கும். குடும்பத்தினருடன் எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவு என்று சங்கடத்திற்கு ஆளானீர்களே! இனி உங்கள் வார்த்தையை மீறி ஒன்றும் செய்ய மாட்டார்கள். கணவன்-மனைவிக்குள் பாசப்பிணைப்பு அதிகரிக்கும். வீட்டில் தள்ளிப்போன சுபகாரியங்கள் கூடி வரும். சேமிப்பு அதிகரிக்கும்.
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் தன லாபாதிபதியான குருபகவானின் விசாக நட்சத்திரத்தில் 2.12.2012 முதல் 6.6.2013 வரை ராகுபகவான் செல்வதால் கல்யாணம், சீமந்தம்,  காது குத்து, கிரகப் பிரவேசம் என வீடு களைகட்டும். புது சொத்து வாங்குவீர்கள். ஆடை, அணிகலன் சேரும். வராது என்றிருந்த பணம் கைக்கு வ ரும். பதவிகள் தேடி வரும். வேலை கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். ஷேர் மூலம் பணம் வரும். ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 7.6.2013 முதல் 13.2.2014 வரை செல்வதால் குடும்பத்தில் கூச்சல், குழப்பங்கள், செலவி னங்கள், இனம் புரியாத கவலைகள், கனவுத் தொல்லைகள் வந்துபோகும். உடம்பில் இரும்புச் சத்து குறையும். பலவீனமாக இருப்பதாக நினைப்பீர் கள். காய், கனி, கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். 

சேவகாதிபதியும் ஜீவனாதிபதியுமான செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.2014 முதல் 21.6.2014 முடிய ராகுபகவான் செல்வதால் ஒருவித  பயமும் படபடப்பும் வந்து நீங்கும். உடன் பிறந்தவர்களுடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கவலைப்படுவீர்கள். 

சொத்து வாங்கும்போது தாய்ப் பத்திரத்தை சரி பார்த்துக் கொள்வது நல்லது. உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். ராகு ஒன்பதாம் வீட்டில் அமர்வதால் தந்தையாரின் ஆரோக்யம் குறையும். சிலநேரங்களில் அவருடன் கருத்து வேறுபாடுகள் வரும். பூர்வீக சொத்தை விற்று வேறிடத்தில் இடம் வாங்குவீர்கள். 

வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். அவர்களின் துணையுடன் முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். வெளிமாநில புண்ணியத் தலங்கள் சென்று வருவீர்கள். 

கன்னிப் பெண்களே! விரக்தியிலிருந்து விடுபடுவீர்கள். சோர்வு, களைப்பு நீங்கும். நினைத்தபடி திருமணம் முடியும். பாதியிலேயே விட்ட கல்வியை தொடர்வீர்கள். 

மாணவர்களே! எண்ணங்கள் பூர்த்தியாகும்.  விளையாட்டுப் போட்டியில் பரிசும், பாராட்டும் கிட்டும். 

அரசியல்வாதிகளே! சகாக்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். மற்றவர்களை விமர்சித்துப் பேசவேண்டாம். 

வியாபாரிகளே! பற்றுவரவு உயரும். கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், இரும்பு, பருத்தி, ரசாயன வகைகள் மூலம் லாபமடைவீர்கள். அரசாங்க விஷயங் களில் அலட்சியம் காட்டாதீர்கள். 

உத்யோகஸ்தர்களே! இதுவரை 10ம் வீட்டில் ராகு நின்றுகொண்டு வீண்பழியையும் வேலைச்சுமையையும் கொடுத் தாரே, இனி 9ல் நுழைவதால் அந்தநிலை மாறும். உங்களின் நிர்வாகத்திறன் அதிகரிக்கும். உங்களை தரக்குறைவாக நடத்திய மேலதிகாரி வேறு  இடத்திற்கு மாற்றப்படுவார். வெகுநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு இப்போது கிடைக்கும். வேலைச்சுமை குறையும். 

கணினி துறையினரே! புதிய  வாய்ப்புகள் தேடி வரும். 

கலைத்துறையினரே! உங்களின் படைப்புகள் பட்டிதொட்டயெங்கும் பேசப்படும். சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும். வீண் வதந்திகள், கிசுகிசுக்களிலிருந்து 
விடுபடுவீர்கள். 
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசிக்கு நான்காவது வீட்டில் அமர்ந்து உங்களை நாலாபுறத்திலும் பந்தாடிய கேது பகவான் இப்போது மூன்றாவது வீட்டிலே முகமலர்ந்து 
அமர்கிறார். குடும்பத்தில் சங்கடங்கள் தீரும். சந்தோஷம் கூடும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். தாயாருடன்  இருந்து வந்த கருத்து மோதல் நீங்கும். அவரின் உடல்நிலை சீராகும். ஆனால் இளைய சகோதரருடன் பிரச்னைகள் வந்து நீங்கும். பிரபலங்கள்,  தொழிலதிபர்களின் நட்பு கிட்டும்.  
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் சப்தமாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதத்தில் 2.12.2012 முதல் 2.2.2013 வரை கேதுபகவான் செல்வதால் தள்ளிப்போன திருமணம் முடியும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். அரசால் ஆதாயம் உண்டு. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். உங்கள் சுக பாக்யாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.2013 முதல் 11.10.2013 வரை கேது செல்வதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய நகையை மாற்றி புது டிசைனில் நகை வாங்குவீர்கள். வீடு கட்டும் முயற்சி வெற்றி பெறும். தந்தை வழிச் சொத்து வந்து சேரும். தாயா ருக்கு இருந்த நோய் குணமாகும். வாகனம் வாங்குவீர்கள். கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான அசுவனி நட்சத்திரத்தில் 12.10.2013 முதல் 21.6.2014 வரை செல்வதால் சோம்பல் நீங்கும். தைரியம் பிறக்கும். சவாலான காரியங்களையும் எளிதில் முடிப்பீர்கள். உங்கள் ஆலோசனையை அனைவரும் ஏற்பார்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். போட் டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வேற்று மதத்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். இழுபறியான வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பணப் பற்றாக்குறையால் அரைகுறையாக வீடு கட்டும் பணி நின்றுபோனதே! இனி முழுமையாக கட்டி முடிப்பீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னை முடி வுக்கு வரும். சொந்த ஊரில் உங்களை மதிப்பார்கள். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. உறவினர்கள், நண்பர்கள் தேடி வருவார்கள். உயர்ரக வாகனங்கள் வாங்குவீர்கள். தங்கநகை சேரும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு மாறுவீர்கள். வியாபாரிகளே! வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். முரண்டு பிடித்த வேலையாட்கள் இனி பொறுப்பாக வேலை பார்ப்பார்கள். உத்யோகஸ்தர் களே! உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். உயரதிகாரி பாராட்டுவார். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் வந்தமையும். சக ஊழியர்களுடன் இருந்து வந்த பகை நீங்கும். இந்த ராகு-கேது பெயர்ச்சியில் ராகு உங்களை சீண்டிப் பார்த்தாலும் கேதுவால் தடைகள் உடைபடுவதுடன் புதிய முயற்சிகளில் வெற்றியும் யோகமும் உண்டாகும்.
பரிகாரம்:
ஊத்துக்காடு காளிங்கநர்த்தனரான கிருஷ்ணரை தரிசித்து வாருங்கள். இத்தலம் கும்பகோணத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தூரத்தில் உள்ளது. ஆதரவற்றோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு ஆடை வாங்கிக் கொடுங்கள்.

No comments:

Post a Comment