Sunday 9 December 2012

RAGHU-KETHU PEYARCHI - SIMMAM

Source: www.dinakaran.com

                                                                                                    












 ராகுவின் பலன்கள்:
வருமானம் உயரும்

‘சிம்மத்தாருடன் சினம் கொள்ளாதே’ என்ற பழமொழிக்கேற்ப கோபம் வந்துவிட்டால் சிங்கமாகச் சீறி அடுத்தவர்களை ஆடாய் அடக்குவீர்கள். சுருக்கென்று சுண்டி இழுக்கும் பேச்சுக்கு சொந்தக்காரர்களான நீங்கள், எந்த வேலையையும் உடனே முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு 2.12.2012 முதல் 
21.6.2014 வரையுள்ள காலகட்டங்களில் இந்த  ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களை தரப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

இதுவரை உங்களின் ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்ந்திருந்த ராகுபகவான் உங்களை நாலாபுறமும் பந்தாடினாரே! தாயாருக்கு அறுவை சிகிச்சையை  தந்ததுடன், மனக்கசப்பையும் வீண் விவாதங்களையும் கொடுத்தாரே! இப்பொழுது ராசிக்கு 3ம் வீட்டிற்கு வந்தமர்வதால் எதிலும் வெற்றியுண்டாகும். முயற்சியில் இருந்த முட்டுக்கட்டைகள் யாவும் நீங்கும். கழுத்தை நெருக்கிப் பிடித்த கடன் தொல்லைகளை பைசல் செய்வீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். கணவன்-மனைவிக்குள் ஈகோவால் இருந்த இடைவெளி குறையும். குழந்தை பாக்யம் கிட்டும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில்  வேலை கிடைக்கும். மகளுக்கு தள்ளிப்போய் கொண்டிருந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு கூடி வரும். தாயாருக்கு இருந்து வந்த சர்க்கரை நோய்,  மூட்டுவலி எல்லாம் குறையும். சோர்ந்த முகம் மலரும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். பாதியிலேயே நின்றுபோன வீடு கட்டும் பணியை  முடிக்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். விரைந்து முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். சிலர் இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். வி.ஐ.பிகள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள் என உங்களின் நட்பு வட்டம் விரியும். புண்ணியத் தலங்கள் சென்று வருவீர்கள். பெரிய நோய் இருக்குமோ என்ற பயம், கனவுத் தொல்லை, தூக்கமின்மை எல்லாமும் நீங்கும். இளைய சகோதர வகையில் சில நேரங்களில் மனஸ்தாபங்கள் வந்தாலும்  பாசம் குறையாது.  
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்களின் பூர்வ புண்ணியாதிபதியும் அஷ்டமாதிபதியுமான குருவின் விசாகம் நட்சத்திரத்தில் 2.12.2012 முதல் 6.6.2013 வரை ராகுபகவான் செல்வதால்  
அடிமனதிலிருந்த பயம், கவலை விலகும். நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். மகளுக்கு திருமணம் முடியும். ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான 
சுவாதி நட்சத்திரத்தில் 7.6.2013 முதல் 13.2.2014 வரை செல்வதால் தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். 

அரசால் ஆதாயமுண்டு. புது முதலீடு செய்து வியாபாரம் தொடங்குவீர்கள். வழக்குகள் சாதகமாகும். ஷேர்  மூலம் பணம் வரும். பழைய பிரச்னைகள் தீரும்.   
                                                                                        
உங்கள் சுகாதிபதியும் பாக்யாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.2014 முதல் 21.6.2014 முடிய ராகுபகவான் செல்வதால் குடும்ப  வருமானம் உயரும். பழைய சொத்து வந்து சேரும்.  பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோக, திருமண முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பெற்றோரின் உடல்நிலை சீராகும். புதிய பொறுப்புகள், பதவிகள் வரும். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் ஒருபடி உயரும். வராது என்றிருந்த பணமெல்லாம் வந்து சேரும். இதுவரை தாய்வழி உறவினர்களால் இருந்து வந்த அலைச்சல்களும் செலவுகளும் நீங்கும். பேச்சில் தெளிவு பிறக்கும். அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள். பால்ய  நண்பர்கள் உதவுவார்கள்.  

கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். பாதியிலேயே விட்ட படிப்பை மீண்டும் தொடர்வீர்கள். தோல் அலர்ஜி, ரத் தசோகை நீங்கும். 

மாணவர்களே! உயர்கல்வியில் வெற்றியுண்டு. நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். 

அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை தவிர்ப்பது நல்லது. தலைமை உங்களுக்கு முக்கியத்துவம் தரும். 

வியாபாரிகளே! போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு புது யுக்திகளை கையாளுவீர்கள். பழைய பாக்கிகளை இனி கறாராகப் பேசி வசூலியுங்கள். பற்று வரவு உயரும். ஷேர், மருந்து, கமிஷன் வகைகளால் லாபமடைவீர்கள். புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள்.

உத்யோகஸ்தர்களே! உங்களை அலைக்கழித்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். புது அதிகாரி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை  ஒப்படைப்பார். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். 

கணினி துறையினரே! அயல்நாடு செல்ல வாய்ப்பு அமையும். 

கலைஞர்களே! இனி பெரிய நிறுவனங்களிடமிருந்து புது வாய்ப்பு வரும். 
கேதுவின் பலன்கள்:
இதுவரையில் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் அமர்ந்திருந்த கேதுபகவான் எந்த வேலையையும் முழுமையாகச் செய்ய விடாமல் உங்களை தத்த ளிக்க 
வைத்தாரே! உத்யோகத்தில் அடிக்கடி இட மாற்றங்களையும் அவமானங்களையும் சந்திக்க வைத்தாரே! இப்போது ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந் தமர்வதால் வேலைச்சுமை குறையும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல் குழப்பங்கள் மாறும். மூத்த சகோதரர் பக்கபலமாக இருப்பார். தங்கையின்  கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். உத்யோகத்தில் நெடுநாட்களாக எதிர்பார்த்த சம்பள உயர்வும், பதவி உயர்வும் இப்போது கிட்டும். இனி ரத்த அழுத்தம் சீராகும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஒன்பதாம் இடத்தில் கேது அமர்வதால் தந்தையாரின் உடல்நிலை பாதிக்கும். அவ ருடன் கருத்து மோதல்கள் வந்துபோகும். கௌரவச் செலவுகள் அதிகரிக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். 
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் ராசிநாதனான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதத்தில் 2.12.2012 முதல் 2.2.2013 வரை கேதுபகவான் செல்வதால் உங்கள் ஆளு மைத் திறன் அதிகரிக்கும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வாயுத் தொந்தரவால் லேசாக நெஞ்சுவலி வந்துபோகும். நடைப்பயிற்சி செய்யத் தவறாதீர்கள். உங்கள் திருதிய ஜீவன ஸ்தானாதிபதியுமான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.2013 முதல் 11.10.2013 வரை கேது செல்வதால் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குடும்ப வருமானம் உயரும். வேலை கிடைக்கும். மகளுக்கு திருமணம் கூடி வரும். வீடு மாறுவீர்கள். கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் 12.10.2013 முதல் 21.06.2014 வரை செல்வதால் பூர்வீகச் சொத்தை போராடி பெறுவீர்கள். செலவுகள் கட்டுப்படுத்த முடியாமல் போகும். தந்தையாருக்கு நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் வந்துபோகும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. கேது ஒன்பதாம் வீட்டிற்கு வருவதால் தந்தைவழிச் சொத்துகளை அடைவதில் அலைச்சல்களும் செலவுகளும் ஏற்படும். பத்திரங்களை கவனமாகக் கையாளுங்கள். வேலையின்றி தவித்தவர்களுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புது வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்யோகத்தில் மரியாதை கூடும். சக ஊழியர்களால் நிம்மதி பிறக்கும். இந்த ராகு-கேது மாற்றத்தில் கேதுவால் இனந்தெரியாத பயமிருந்தாலும் ராகுவின் உதவியால் அதிரடி திட்டங்கள் தீட்டி வெற்றி வாகை சூடுவீர்கள்.
பரிகாரம்:
புதுக்கோட்டை அருகேயுள்ள திருமயத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள பேரையூர் எனும் தலத்தில் அருளும் நாகநாதரை தரிசியுங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.

No comments:

Post a Comment