Sunday 9 December 2012

RAGHU-KETHU PEYARCHI - MEENAM


Source: www.dinakaran.com

ராகுவின் பலன்கள்:
சோதனை சாதனையாகும்

‘மீனத்தான் மேலோன்’ என்ற பழமொழிக்கேற்ப அழுக்கை தின்று சுத்தப்படுத்தும் மீனைப்போல மற்றவர்களிடத்தில் உள்ள மேலான நற்குணங்களை மட்டுமே பார்ப்பீர்கள். தழைத்துக் குலுங்கும் மரங்களுக்கு ஆதாரமாக  விளங்கும் ஆணி வேரைப்போல் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதி காப்பவர்களே! உங்களுக்கு இந்த 
ராகுவும் கேதுவும் இணைந்து 2.12.2012 முதல்  21.6.2014 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப் போகிறார்கள் என்பதை பார்ப்போம்.

இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதில் அமர்ந்து கொண்டு கிடைக்கின்ற வாய்ப்புகளை எல்லாம் தட்டிவிட்டதுடன், கையில் ஒரு காசும் தங்கவிடாமல்  துடைத்தெடுத்த ராகு பகவான் இப்பொழுது எட்டில் சென்று மறைகிறார். ராகு எட்டில் மறைவதால் அல்லல்பட்ட உங்கள் மனம் இனி அமைதியாகும்.  இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் இனி ஒவ்வொன்றாக முடியும். தந்தையின் உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்பட்டதே! இனி ஆரோக்யம் கூடும்.  தந்தைவழிச் சொத்து கைக்கு வரும். கணவன்-மனைவிக்குள் சின்னச் சின்ன விவாதங்கள் வந்து நீங்கும். ராகு 8ல் அமர்வதால் மனைவிக்கு 
மாதவிடாய்க்கோளாறு, கர்ப்பப்பையில் கட்டி வரக்கூடும். கொஞ்சம் கூடுதலாக அக்கறை காட்டுங்கள். 
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் ராசிநாதனும் ஜீவனாதிபதியுமான குருபகவானின் விசாக நட்சத்திரத்தில் 2.12.2012 முதல் 6.6.2013 வரை ராகுபகவான் செல்வதால் உங்களின்  தோற்றப் பொலிவு கூடும். வற்றிய பணப்பை நிரம்பும். தங்க நகைகள் வாங்குவீர்கள். வீண் அலைச்சல், செலவுகள், வாகன விபத்துகள், மறைமுக  விமர்சனங்கள் வந்து செல்லும். உத்யோகத்தில் வேலைச்சுமை, இடமாற்றம் உண்டு. ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 7.6.2013 முதல் 13.2.2014 வரை செல்வதால் எளிதாக முடிய வேண்டிய விஷயங்களைக்கூட  போராடி முடிக்க வேண்டி வரும். 

உங்களின் கௌரவத்தை பாதிக்கும் சம்பவங்கள் நிகழக்கூடும். யாரையும் வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் 
ஈடுபட வேண்டாம். பித்தத்தால் தலைசுற்றல், வயிற்றுவலி, வலிப்பு வந்து செல்லும். உங்கள் தன பாக்யாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 
14.2.2014 முதல் 21.6.2014 முடிய ராகுபகவான் செல்வதால் திடீர் பணவரவு  உண்டு. சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும்.  தந்தையின் ஆரோக்யம் சீராகும். சகோதரருக்கு வேலை கிடைக்கும். பேச்சால்  பிரச்னை, சிறு நெருப்பு காயங்கள், பிறர் மீது நம்பிக்கையின்மை, பிதுர்வழி சொத்துப் பிரச்னை, பகை, ஏமாற்றம் வந்து போகும்.

வெளியூர் செல்லும்போது வீட்டை பாதுகாப்பாக பூட்டியிருக்கிறோமா என்று ஒருதடவைக்கு இருதடவை சரிபார்த்துக் கொள்ளுங்கள். யாருக்காகவும் ஜாமீன் 
கையெழுத்திட வேண்டாம். முடிந்த வரையில் வறுத்த, பொரித்த உணவு வகைகளை தவிர்த்துவிடுங்கள். காய்கறி, கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். 

கன்னிப் பெண்களே! மனம்போல் மாங்கல்யம் வந்துசேரும். காதல் விஷயங்கள் வேண்டாமே. 

மாணவர்களே! உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி படியுங்கள். விடைகளையும் எழுதிப் பாருங்கள். நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். விட்டுக் 
கொடுத்துப் போங்கள். 

அரசியல்வாதிகளே! அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வீண் விமர்சனம் வேண்டாம்.

வியாபாரிகளே! பழைய சரக்குகள் விற்றுத் தீரும். மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகளை போடாதீர்கள். வரவேண்டிய பாக்கிகளை நயமாகப்பேசி வசூல் செய்யுங்கள். ஷேர், புரோக்கரேஜ், கமிஷன் வகைகளால் லாபமுண்டு. கடையை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடையே நிலவிவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.  

உத்யோகஸ்தர்களே! மேலதிகாரியின் அடக்குமுறை மாறும். இனி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சலுகைகளுடன் பதவியும் உயரும். 

கணினி துறையினரே! வெளிநாட்டிலிருந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 

கலைத்துறையினரே! உங்களின் போராட்டத்திற்கு பலன் கிட் டும். புது வாய்ப்புகள் வரும். மூத்த கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள். 
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் அமர்ந்துகொண்டு மன உறுதியையும், விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையையும் கொடுத்து வந்த  கேது பகவான் இப்போது ராசிக்கு இரண்டாவது வீட்டில் நுழைகிறார். இனி சாணக்கியத்தனமாகப் பேசி சில காரியங்களை சாதிப்பீர்கள். ஆனால் சில  நேரங்களில், சிலர் நீங்கள் பேசுவதை தவறாக புரிந்து கொண்டு சண்டைக்கு வருவார்கள். கையிருப்பு கரையுமளவிற்கு செலவுகள் அதிகரிக்கும். கண்  எரிச்சல், பல்வலி வந்து நீங்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்களை சிலர் குறைத்து  மதிப்பிட்டார்களே! அவர்களெல்லாம் ஆச்சரியப்படும்படி பல விதங்களில் சாதிப்பீர்கள். அயல்நாட்டுப் பயணங்கள் தேடி வரும். 
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் சஷ்டமாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதத்தில் 2.12.2012 முதல் 2.2.2013 வரை கேதுபகவான் செல்வதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். பிரபலங்கள் உதவியாக இருப்பார்கள். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். சிலர் பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள். உங்கள் சேவகாதிபதியும் அஷ்டமாதிபதியுமான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.2013 முதல் 11.10.2013 வரை கேது செல்வதால் துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். வீட்டில் மங்கள இசை முழங்கும். இளைய சகோதரர் ஆதரவாக இருப்பார். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வேற்று மொழியி னர், மதத்தினர் உதவுவார்கள். தன் சுய நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் 12.10.2013 முதல் 21.6.2014 வரை கேது பகவான் செல்வதால் பணத் தட்டுப்பாடு, மன உளைச்சல், வீண் டென்ஷன், ஒருவித சலிப்பு மற்றும் பைல்ஸ் உபாதை வந்துநீங்கும். முன்யோசனை இல்லாமல் மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் பிரச்னையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். கேதுபகவான் 2ம் வீட்டில் அமர்வதால் பார்வைக் கோளாறு வரக்கூடும். கண்ணை பரிசோதித்துக் கொள்ளுங்கள். அநாவசிய உறுதிமொழிகளை தவிர்ப்பது நல்லது. பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணியாமல் செல்லாதீர்கள். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை போட்டு நஷ்டப்படாதீர்கள். சந்தை நிலவரம் அறிந்து செயல்படுவது நல்லது. உத்யோகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. மேலதிகாரி நெருக்கமாக இருந்தாலும் உடன்பணிபுரிபவர்கள் குறை கூறத்தான் செய்வார்கள். வேலைச்சுமை அதிகரிக்கும். இந்த ராகு-கேது பெயர்ச்சி சின்ன சின்ன எதிர்ப்புகளையும் எதிர்பார்ப்புகளில் தாமதத்தை தந்தாலும் மாற்றுப் பாதையில் சென்று வெற்றி பெற வைக்கும்.
பரிகாரம்:
சிதம்பரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ள காட்டுமன்னார்கோயிலுக்கு அருகேயுள்ள திருக்காட்டம்புலியூரில் அருளும் பதஞ்சலீஸ்வரரையும், பதஞ் சலி முனிவரையும் தரிசித்து வாருங்கள். சுமைதூக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள்.


No comments:

Post a Comment