Sunday 9 December 2012

RAGHU-KETHU PEYARCHI - MAKARAM


Source: www.dinakaran.com

ராகுவின் பலன்கள்:
வெற்றிகள் குவியும்

‘மகரத்தார் நகரத்தை ஆள்வார்’ என்ற கூற்றுக்கிணங்க ஆளுமைத் திறன் அதிகமுடையவர்கள் நீங்கள். கோள்கள் கூட பாதை மாறலாம், ஆனால்  கொண்ட குறிக்கோளிலிருந்து  நீங்கள் மாற மாட்டீர்கள். தவறு செய்ய வாய்ப்பிருந்தும் தவறு செய்ய மாட்டீர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு 2.12.2012  முதல் 21.6.2014 வரையுள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப்பார்ப்போம். 

இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராம் வீட்டில் அமர்ந்து ஓரளவு பணவரவு, பொருள் வரவு, உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு, பிரச்னைகளை  சமாளிக்கும் மன தைரியத்தையும் தந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் வந்து அமர்கிறார். தொட்ட காரியங்கள் வெற்றியடையும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கணவன்-மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். பணவரவு அதிகரிப்பதால் பழைய கடனில் ஒருபகு தியை அடைப்பீர்கள். இந்த ராகு சுயமாக சிந்திக்க வைப்பதுடன், சுயமாக தொழில் செய்யும் வல்லமையையும் கொடுப்பார். குழந்தை இல்லையே  என வருந்திய தம்பதியருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். துரோகிகளைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். 
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் திருதிய ஸ்தானாதிபதியும் விரயாதிபதியுமான குருபகவானின் விசாக நட்சத்திரத்தில் 2.12.2012 முதல் 6.6.2013 வரை ராகுபகவான் செல்வதால் தடுமாற்றம், தயக்கம் நீங்கி தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். விலை உயர்ந்த  ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 7.6.2013 முதல் 13.2.2014 வரை செல்வதால் உத்யோகத்தில் திடீர் இடமாற்றம், வேலைச் சுமை இருக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். உடல் சோர்வு, தலைச்சுற்றல், செரிமானக் கோளாறு வந்து செல்லும். யாருக் கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். நெருங்கிய நண்பர், உறவினரின் இழப்பு ஏற்படும்.

சுக லாபாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.2014 முதல் 21.6.2014 முடிய ராகுபகவான் செல்வதால் தாயாருக்கு ரத்த அழுத்தம்,  முதுகு, மூட்டு வலி வந்துபோகும். தாய்மாமன், அத்தை வகையில் மனஸ்தாபங்கள் வந்து செல்லும். வேலைச்சுமை அதிகரிக்கும் என்றாலும் பணவ ரவு உண்டு. புது வேலை கிடைக்கும். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். ராகு 10ல் வருவதால் வெளிவட்டாரத்தில் வி.ஐ.பிகள், கல்வியாளர்கள் அறிமுகமாவார்கள்.  மகனின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள்.  பழைய நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு குடி புகுவீர்கள். 

கன்னிப் பெண்களே!  விரக்தி, சோம்பலில் இருந்து மீள்வீர்கள். காதல் கனியும். 

மாணவர்களே! நல்ல கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பைத் தொடரும் வாய்ப்பு கிட்டும். அரசி யல்வாதிகள் தலைமையை அனுசரித்துப் போவது நல்லது. 

வியாபாரிகளே! சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்தால்தான் லாபம் கிடைக்கும். தள்ளுபடி விற்பனை மூலம் பழைய சரக்குகளை விற்று முடிப்பீர்கள். பாக்கிகளும் வசூலாகும்.  வாடிக்கையாளர்களின் ஆதரவும் பெருகும். ஷேர், ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத்  தொழிலில் பங்குதாரர்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுங்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்யோகஸ்தர்களே! ராகு 10ம்  வீட்டிற்கு வருவதால் வேலைச்சுமை வாட்டியெடுக்கும் என்றாலும் புதிய அனுபவங்களை கற்றுக் கொள்வீர்கள். திடீர் இடமாற்றம் உண்டு. மேலதிகாரி யுடன் அவ்வப்போது மனஸ்தாபங்கள் வரும். முக்கிய ஆவணங்களை கையாளும்போது கவனம் தேவை. 

கணினி துறையினரே! சம்பள உயர்வுடன் பதவி உயர்வும் கிட்டும். 

கலைத்துறையினரே! திறமைக்கு பரிசும், பாராட்டும் கிட்டும். வெகுநாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிறுவனத்திலிருந்து புது வாய்ப்பு கதவைத் தட்டும். 
கேதுவின் பலன்கள்:
இதுவரையில் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் அமர்ந்து முன்கோபத்தால் பிரிவு, உறவினர்களிடையே கருத்து மோதல் என பல கசப்பான அனுபவங்களையும் 
தந்த கேது, இப்போது உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் வந்தமர்வதால் பக்குவப்பட வைப்பார். கனிவான பேச்சாலேயே காரியங்களை சாதிப்பீர்கள். வீட்டில் தள்ளிப்போன சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். குழந்தைகள் பாசமாகப் பழகுவார்கள்.
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் அஷ்டமாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதத்தில் 2.12.2012 முதல் 2.2.2013 வரை கேதுபகவான் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் வரும். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்துவார்கள். உடல் உஷ்ணத்தால் அடி வயிற்றில் வலி, கண் எரிச்சல் வந்துபோகும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை முறையே செலுத்திவிடுங்கள். வாகனத்தில் செல்லும்போதும், சாலையை கடக்கும்போதும் கவனம் தேவை. வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். உங்கள் பூர்வ புண்யாதிபதியும் ஜீவனாதிபதியுமான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.2013 முதல் 11.10.2013 வரை கேது செல்வதால் இக்கால கட் டத்தில் நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பூர்வீக சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். உத்யோகத்தில் சம்பளம், பதவி உயர்வு உண்டு. கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் 12.10.2013 முதல் 21.6.2014 வரை செல்வதால் மன அழுத்தம், வீண் டென்ஷன், குடும்பத்தில் சச்சரவுகள், நெஞ்சு எரிச்சல், வாயுத் தொந்தரவு வந்துபோகும். யாரும் உங்களை புரிந்து கொள்ளவில்லை என்று ஆதங்கப்படுவீர்கள். முன்பின் அறிமுகமில்லாதவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களின் பலவீனத்தை சிலர் பயன்படுத்திக் கொண்டு முன்னேறுவார்கள். பணம், நகைகளை கவனமாகக் கையாளுங்கள். கேது 4ம் வீட்டில் அமர்வதால் முக்கிய படிவங்களில் கையெழுத்திடும்போது ஒரு தடவைக்கு, பலதடவை யோசித்து கையெழுத்திடுவது நல்லது. வீடு கட்டத் தேவைப்படும் தொகையை முன்னரே சேமித்துக் கொண்டு வீடு கட்டத் தொடங்குங்கள். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் மற்றும் பயணச் செலவுகள் அதிகரிக்கும். சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். ஆன்மிகவாதிகள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையால் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் பாராட்டு, பதவி உயர்வு உண்டு. இந்த ராகு-கேது மாற்றம் புதிய படிப்பினைகளையும் முன்னெச்சரிக்கை உணர்வை தருவதுடன் கடின உழைப்பால் பிற்பகுதியில் வெற்றியை தருவதாகவும் அமையும்.
பரிகாரம்:
ஸ்ரீவாஞ்சியத்திலுள்ள ராகுவும் கேதுவும் சேர்ந்திருக்கும் அபூர்வ கோலத்தை தரிசித்து வாருங்கள். கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையிலிருந்து நன்னிலம் வழியாக இத்தலத்தை அடையலாம். சாலையோரம் வாழ் சிறுவர்களுக்கு உதவுங்கள்.


No comments:

Post a Comment