Saturday 4 January 2014

2014 DHANUSU தனுசு

Source: www.dailythanthi.com

2014-ம் ஆண்டு புத்தாண்டு பலன்கள்
மூலம், பூராடம், உத்ராடம், 1–ம் பாதம் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: யே, யோ, ப, பி, பு, பூ, பா, ன, டே, பே உள்ளவர்களுக்கும்)
வழிபாட்டின் மூலம்  வளர்ச்சி  கூடும் ஆண்டு!
அடுத்தவர்களுக்கு ஆலோசனை சொல்வதில் அசகாய சூரர்கள் என்று பெயர் பெற்ற தனுசு ராசி நேயர்களே!
புத்தாண்டு உங்கள் ராசியிலேயே பிறக்கிறது. அற்புதப் பலன்களை அள்ளி வழங்கப் போகிறது. புத்தாண்டு பிறக்கும் பொழுது உங்கள் ராசிநாதன் குரு வக்ரம் பெற்று உங்கள் ராசியையே பார்க்கிறார். சப்தமாதிபதி புதன் உங்கள் ராசியிலேயே சஞ்சரித்து பரிவர்த்தனை அடைகிறார்.
புத–ஆதித்ய யோகத்தோடு இந்த புத்தாண்டு பிறக்கிறது. உங்கள் ராசிநாதன் குருவிற்கு பகை கிரகமான சுக்ரன் வக்ரம் பெறுகிறார். இது நன்மைதான். மறைமுக எதிர்ப்புகள் மாறும். குறை கூறியவர்கள் விலகுவர். அரைகுறையாக நின்ற பணி தொடரும்.
10–ல் செவ்வாய் பலம் பெறுகிறார். தனாதிபதி சனி உச்சம் பெற்று, ராகுவோடு இணைந்திருக்கிறார். அதுவும் லாப ஸ்தானத்தில் உச்சம் பெறுவது யோகம் தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் 5–ம் இடத்தில் கேது அமர்ந்து புதிய ஆண்டு பிறக்கிறது. பொதுவாக உங்கள் ராசிநாதன் குரு என்பதால் நேர்மை, நீதிக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.
எதையும் எதிர்பார்க்காமல் பிறருக்கு உதவி செய்யும் நல்ல குணம் உங்களுக்கு உண்டு. பாசத்தோடு பழகும் நீங்கள் பக்திக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். நேர்வழியில் செல்ல வேண்டுமென்று எண்ணத்தை வளர்த்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த 2014 புத்தாண்டு எப்படியிருக்கும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
1.1.2014 முதல் 12.6.2014 வரை
புத்தாண்டு 2014–ம் ஆண்டு தொடக் கத்தில் உங்கள் ராசிநாதன் குரு வக்ரம் பெறுகிறார். எனவே, தேக நலனில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக்கொள்ள அதிக செலவு செய்யும் சூழ்நிலை உருவாகும்.  கொடுக்கல்–வாங்கல்கள் சிறப்பாக இருந்தாலும் மன நிம்மதி கொஞ்சம் குறைவாகவே இருக்கும். குரு, புதன் பரிவர்த்தனை யோகம் பெற்று சஞ்சரிப்பதால் மாமன், மைத்துனர் வழி ஒத்துழைப்பு கிடைக்கும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.
சுக்ரனின் வக்ர இயக்கத்தால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த புது முயற்சிகள் கைகூடும். மாற்றினத் தவர்கள் ஒத்துழைப்புச் செய்வர். 10–ல் செவ்வாய் சஞ்சரிப்பது யோகம்தான். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களுக்கு தலைமைப் பதவியும், புதிய பொறுப்புகளும் வந்து சேரும்.
என்றைக்கோ வாங்கிப் போட்ட இடம் இப்பொழுது விற்பனையாகி கணிசமான தொகை கைக்கு வந்து சேரும். ராகு–கேதுக்களின் ஆதிக்கம் கூடுதலாக இருப்பதால் பிள்ளைகள் வழியில் விரயங்கள் ஏற்படலாம். பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனுக்குடன் தீர்வு காண்பது நல்லது. வெளிநாட்டுப் பயணங்களை தள்ளி வைக்கும் சூழ்நிலையும் ஒரு சிலருக்கு உருவா  கும்.
ஏழரைச் சனியின் தொடக்க காலம்!
இதுவரை உங்கள் ராசிக்கு 11–ம் இடத்தில் சஞ்சரித்து வந்தார் சனி பகவான். புத்தாண்டு கடைசியில் ஏழரைச் சனியின் ஆதிக்கத்தில் தொடங்குகிறது. எனவே இனிய மாற்றங்கள் ஏராளமாக இனி வரப்போகின்றன. புனிதப் பயணங்களும், பொருளாதார நிலை உயர்வும் வரும். மங்கல நிகழ்ச்சிகளில் தங்கு தடைகள் அகலும். தொழில்   மாற்றம், ஊர் மாற்றம், வீடு மாற்றம் உருவாகும் நேரமிது.
ஏழரைச் சனி முதல் சுற்றும், மூன்றாவது சுற்றும் நடப்பவர்கள் எச்சரிக்கையோடு செயல்படவேண்டும். ஏற்ற பரிகாரங்களையும் செய்து கொள்ள வேண்டும். பொங்கு சனியின் ஆதிக்கம் நடப்பவர்கள் பொருள் குவிப்பர், புகழ் குவிப்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் சனி விருத்தியம்சத்தையே உங்களுக்கு கொடுக்கும். தனாதிபதியாகவும் சனி இருப்பதால் இக்காலத்தில் தன வரவு தடையின்றி வந்து சேர சனிக்கிழமை தோறும் எள் தீபம் ஏற்றி சனி பகவானை வழிபாடு செய்யுங்கள். சனி கவசம் பாடுவது நல்லது. திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரிச்சிக் கோவில் வன்னிமரத்தடி சனீஸ்வரரை வழிபட்டு வருவது நல்லது.
குரு மற்றும் சனியின் வக்ர காலங்கள்!
புத்தாண்டில் குருவின் வக்ரமும், சனியின் வக்ரமும் நிகழவிருக்கிறது.  சில கிரகங்கள் வக்ர காலத்தில் தான் நன்மையைச் செய்யும். பலம் பெற்றிருக்கும் நேரத்தில் பலன் கொடுக்காது. அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது குருவின் வக்ரம் உங்களுக்கு நன்மை தரும். கொடுக்கல்–வாங்கல்கள் சிறப்பாக இருக்கும். நண்பர்   களின் ஆதரவு கூடும். தொழிலை   விரிவுபடுத்தப் பார்ப்பீர்கள்.
அதே நேரத்தில் சனியின் வக்ரம் சஞ்சலத்தைக் கொடுக்கும். சகோதர ஒற்றுமையை குறைக்கும். தன வரவு வந்தாலும் மறுநிமிடமே செலவாகும். வழிபாடு இக்காலத்தில் வளர்ச்சியைக் கூட்டும்.
தனுசு ராசியில் பிறந்த பெண்களுக்கு!
தனுசு ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டு புதிய திருப்பங்கள் பலவற்றையும் கொடுக் கும் விதத்தில் அமையப் போகிறது. மதிப்பும், மரியாதையும் உயரும். மக்கட் செல்வங்களுக்கு மண மாலை சூட்டிப் பார்க்கப் போகிறீர்கள். பழைய கடன் கள் தீரும். புதிய தொழிலில் ஈடுபாடுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தைப் பற்றி விமர்சிப்பதை தவிர்ப்பது நல்லது.  
குருப்பெயர்ச்சிக்குப் பின்னால் இடமாற்றங்கள் வீடு மாற்றங்கள் அமையும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேருவர். தாய் வழியில் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் மாறும். பணியாளர்கள் பக்கபலமாக இருப்பர்.
ராகுப்பெயர்ச்சிக்குப் பின்னால் உங்கள் பெயரிலேயே தொழில் தொடங்கும் வாய்ப்பு உருவாகலாம். சேமிப்பு அதிகரிக்கும். சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு விரயங்கள் ஏற்படலாம். ராகு– கேது பிரீதியும், அனுமன் வழிபாடும் ஆனந்த வாழ்க்கையை வழங்கும்.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
உங்கள் ராசிநாதன் வியாழன் என்பதால் வியாழக்கிழமை தோறும் குரு தெட்சிணா மூர்த்தி வழிபாட்டை முறையாக மேற்கொள்ளுங்கள். பிறந்ததேதி மற்றும் கூட்டுத் தொகைக்குரிய எண்களின் ஆதிக்க நாளில் யோக பலம்பெற்ற நட்சத்திரம் சேரும் பொழுது சிறப்பு வழிபாடாக சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் உள்ள கீர்த்தி வழங்கும் கிழக்கு நோக்கிய தெட்சிணாமூர்த்தியை வழிபட்டு வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்.
நலம் தரும் ராகு–கேது பெயர்ச்சி!
இதுவரை உங்கள் ராசிக்கு 11–ம் இடத்தில் ராகுவும், 5–ம் இடத்தில் கேதுவும் சஞ்சரித்து வந்தார்கள். இந்தப் புத்தாண்டில் ஜூன் மாதம் 21–ம் தேதி கன்னி ராசியில் ராகுவும், மீன ராசியில் கேதுவும் பின்னோக்கிச் செல்கிறார்கள். இதனால் பெரிய மாற்றங்கள் வந்து சேரப் போகிறது. 10–ல் ராகு சஞ்சரிப்பதால் செயல்பாடுகளில் தீவிரம் காட்டுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் திட்டங்களுக்கான முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். மாமன், மைத்துனர் வழி ஒத்துழைப்பு கிடைக்கும்.
ராகுவின் பார்வை பலத்தால் இட மாற்றம், ஊர் மாற்றங்கள் ஒரு சிலருக்கு ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இலாகா மாற்றங்கள் உருவாகலாம். அஷ்டம ஸ்தானத்தை ராகு பார்ப்பதால் ஆரோக்கிய பாதிப்புகள் குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு வந்து கொண்டே இருக்கலாம். தொழிலில் பழைய பங்குதாரர்கள் விலகலாம். மாற்றினத்தைச் சார்ந்த புதிய பங்குதாரர்களை இணைத்து செயல்படுவீர்கள்.
கேதுவின் பலத்தால் வீடு, நிலம் வாங்குவதிலிருந்த பிரச்சினைகள் அகலும். வெளிநாட்டு முயற்சியில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தில் திடீர், திடீரென மனக்கசப்புகள் உருவாகி மறையும்.
குருப் பெயர்ச்சி  பலன்கள்!
புத்தாண்டில் குரு உச்சம் பெற்று சஞ்சரிக்கப் போகிறார். உங்கள் ராசிநாதன் உச்சம் பெறுவது யோகம் தான் என்றாலும், அஷ்டமத்தில் அல்லவா உச்சம் பெறுகிறார். எனவே, எதிர்பாராத மாற்றங்கள்  வந்து சேரும். இல்லம் கட்டி குடியேற வேண்டும் அல்லது இல்லம் வாங்க வேண்டுமென்ற எண்ணம் இப்பொழுது நிறைவேறப் போகிறது.
ஜூன் 13–ம் தேதி பெயர்ச்சியாகும் குரு அதன் பார்வை பலத்தால் 2, 4, 12 ஆகிய இடங்களைப் புனிதப்படுத்துகிறார். எனவே அந்த இடங்களுக்குரிய ஆதிபத்யங்கள் அனைத்தும் சிறப்பாக நடைபெறும். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். எடுத்த செயல்களில் வெற்றி காண்பீர்கள். வாகனம் வாங்கும் வாய்ப்பு கிட்டும். நண்பர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். சேமிப்பு சீட்டுகளில் சேர்ந்து பணம் கட்டி வருபவர்களுக்கு திடீரென பரிசு கிடைத்து பணவரவு வந்து சேரப்போகிறது.
சண்டை, சச்சரவில் சிக்கித் தவித்த குடும்ப உறவினர்கள் இப்பொழுது சமரசமாகி தங்கள் கடமைகளை உணர்ந்து பணிபுரிவர். தொழில் முன்னேற்றம் காணும் நேரமிது. அடிமைத் தொழிலிருந்து விலகி  ஏதேனும் ஒரு புதிய தொழில் தொடங்கும் திட்டத்தை உருவாக்குவீர்கள்.
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும். தொல்லை கொடுத்த எதிரிகள் விலகலாம். அரசியல் மற்றும் பொதுநல ஈடுபாடு கொண்டவர்களுக்கு செல்வாக்கு மேலோங்கும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் அதிகரிக்கும். மதி நுட்பத்தால் மக்கள் செல்வங்            களின் கல்வி முன்னேற்றத்திற்கு வித்திடுவீர்கள். அயல்நாட்டில் கல்வி கற்று அதிகப் புகழ் சேர்க்க வேண்டுமென்று விரும்பும் உங்கள் குழந்தைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். இடமாற்றம், நாடுமாற்றங்கள் ஒரு சிலருக்கு இனியதாக அமையும். இக்காலத்தில் திசைமாறிய தென்முகக் கடவுளை வழிபட்டால் அசையாத சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும்.

No comments:

Post a Comment