Saturday 4 January 2014

2014 VIRUCHIGAM விருச்சிகம்

Source: www.dailythanthi.com

2014-ம் ஆண்டு புத்தாண்டு பலன்கள்
விசாகம் 4–ம் பாதம், அனுஷம், கேட்டை வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: தோ, ந, நி, நே, நோ, ய, யி, யு உள்ளவர்களுக்கும்)
ஆண்டின்  தொடக்கம் முதல்  அத்தனையும்  யோகம் தான்!
சாதனை படைத்து சரித்திரத்தில் இடம்பெற வேண்டும் என்று செயல்படும் விருச்சிக ராசி நேயர்களே!
பிறக்கும் புத்தாண்டு உங்களுக்குப் பெருமைகளைக் குவிக்கும் விதம் அமையப் போகிறது. பார்க்கப் போகும் குருவால் பணவரவு கூடும். பாராட்டும் புகழும் சேரும்.  
புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தனாதிபதி குரு வக்ரம் பெற்று தன ஸ்தானத்தையே பார்க்கிறார். புதனும், குருவும் பரிவர்த்தனை யோகம் பெறுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக விரயாதி       பதியாக விளங்கும் சுக்ரன் வக்ரம் பெறுகிறார். தொழில் ஸ்தானாதிபதி சூரியன் தன ஸ்தானத்தில் ஒன்பதுக்கு அதிபதி சந்திரனுடன் இணைந்து தொடங்கும் இந்த 2014 உங்களுக்கு திரண்ட செல்வத்தையும், திருப்பணிகள் செய்யும் வாய்ப்புகளையும் உருவாக்கப் போகிறது.
பொதுவாக உங்கள் ராசிநாதன் செவ்வாய் என்பதால் மனவலிமை அதிகம் படைத்தவர்களாக விளங்குவீர்கள். மகத்தான பலன்தரும் குருபகவான் வாக்கு ஸ்தானத்திற்கு அதிபதியாக விளங்குவதால் வாக்கு பலிதமும், கனவு பலிதமும் உங்களுக்கு உண்    டாகும்.
மூலபலமாக உங்கள் மூளை பலத்தை உபயோகிப்பதால் தான் விரைவில் வெற்றிக் கனியை எட்டிப் பிடித்து வி.ஐ.பி.க்களின் பட்டியலிலும் இடம்பெற முடிகிறது.
இப்படிப்பட்ட குணாதிசயங்களைப் பெற்ற உங்களுக்கு இந்த 2014 புத்தாண்டு எப்படிப்பட்ட பலன் தரும், என்பதைப்பற்றிப் பார்ப்போம்.
1.1.2014 முதல் 12.6.2014 வரை
புத்தாண்டு 2014–ன் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். தனாதிபதி குரு தன ஸ்தானத்தை பார்க்கிறார். அதுமட்டுமல்ல புதனும், குருவும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கிறார்கள். எனவே, வருடத் தொடக்கமே வசந்தமாக  இருக்கிறது. வருமானம் திருப்திகரமாக இருக்கும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும்.  
தொழில் ஸ்தானாதிபதி சூரியன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புதிய ஒப்பந்தங்கள் வந்து கொண்டேயிருக் கும். தொழிலுக்காக அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.   
உச்ச சனியின் ஆதிக்கம் உங்களுக்கு உன்னத வாழ்வளிக்கும் விதத்திலும், மெச்சும் புகழையும் உயர்த்தும் விதத்திலும் சஞ்சரிக்கிறது. பொங்கு சனியின் ஆதிக்கம் நடப்பவர்களுக்கெல்லாம் மங்கல தகவல் வந்து கொண்டேயிருக்கும். உங்களைப் பொறுத்த வரை சகாய ஸ்தானத்திற்கும், சுக ஸ்தானத்திற்கும் அதிபதியாக சனி விளங்குகிறார். எனவே சனிக்கிழமை விரதமிருந்து விநாயகப் பெருமானையும், சனி பகவானையும், அனுமனையும் தொடர்ந்து வழிபட்டு வருவது நல்லது.
விருச்சிக சனியின் சஞ்சாரம்!
இதுவரை விரயச் சனியின் ஆதிக்கத்தில் உங்கள் ராசி இருந்தது. எனவே, விரயங்கள் இருக்கிறதே என்று கவலைப்பட்டிருப்பீர்கள். இந்த ஆண்டு கடைசியில் ஒரு வழியாக விரயச் சனியின் ஆதிக்கம் நிறைவு பெற்று ஜென்மச்சனியாக சஞ்சரிக்கப் போகிறார்.
உங்கள் ராசியைப் பொறுத்தவரை சனி சகாய ஸ்தானாதிபதி ஆவார். உங்களுக்கு வேண்டிய சகல பாக்கி யங்களையும் சனிபகவான் தான் கொடுப்பவராக விளங்குகிறார். அப்படிப்பட்ட சனிபகவான் உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது அளவற்ற திரவியங்களை அள்ளிக் கொடுப்பார். நிலம், பூமி வாங்கும் யோகமுண்டு.  
வீடுமாற்றம், நாடுமாற்றம், இலாகாமாற்றம், வாகன மாற்றம் என்று வரும் மாற்றங்கள் நல்ல மாற்றங்களாக அமையும்.
சுக ஸ்தானாதிபதியாகவும் சனி விளங்குவதால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.  வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வந்து உதவிக்கரம் நீட்டுவர். வெளியுலகத் தொடர்பு விருத்திக்கும். தாய்வழி ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
குரு மற்றும் சனியின் வக்ர காலம்!
இந்தப் புத்தாண்டில் குருவின் வக்ரமும் நிகழ்கிறது. சனியின் வக்ரமும் நிகழவிருக்கிறது. குரு வக்ர காலத்தில் வாங்கல்–கொடுக்கல்கள் ஒழுங் காக விழிப்புணர்ச்சி தேவை. வருமானம் திருப்திகரமாக இருந்தாலும் செலவுகள் கூடுதலாக இருக்கும். பிள்ளைகள் வழியிலும் மேற்பார்வை செலுத்துவது நல்லது. சனியின் வக்ர காலத்தில் உடன் பிறப்புகளையும், உறவினர்களையும் அனுசரித்துச் செல்லுங்கள். பயணங்கள் அதிகரிக்கும்.இடம், பூமி வாங்குவதிலும் மற்றும் பத்திரப் பதிவுகளிலும் கவனம் தேவை.
விருச்சிக ராசியில் பிறந்த பெண்களுக்கு!
விருச்சிக ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப்புத்தாண்டு ஒரு பொன்னான ஆண்டாக அமையப் போகிறது. முத்தான வாழ்க்கைக்கு அஸ்திவாரமிடும் விதத்தில் கிரகங்கள் உலா வருகின்றன. குறிப்பாக குருப்பெயர்ச்சிக்குப் பின்னால் பொருளாதார நிலை மேலோங்கும். பணமழையில் நனையப் போகிறீர்கள். பக்கபலமாக இருப்பவர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பு செய்வர். மக்கள் செல்வங்களால் உதிரி வருமானம் கிடைக்கும். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்    படும். தொழில் முயற்சியில் ஈடுபடுவோருக்கு தேர்ந்தெடுத்த தொழில் எதுவாக இருந்தாலும் அதில் லாபம் கிடைக்கும். வருடம் முழுவதும் வசந்த காற்று வீசும் இந்த நேரத்தில் அரசியல் ஈடுபாடு கொண்டவர்களுக்கு அதிக நன்மை ஏற்படும். வெற்றிப் பாதையில் வீர நடை போடுவீர்கள். தங்கம், வெள்ளி, மற்றும் விலையுயர்ந்த பொருட்களையெல்லாம் தாராளமாக வாங்கி சேர்க்கும் வாய்ப்பு கிட்டும்.
ராகு–கேது பெயர்ச்சியை முன்னிட்டு யோக பலம்பெற்ற நாளில் சர்ப்ப சாந்தி பரிகாரத்தை செய்து கொண்டால் தேக நலனும் சீராகும். செல்வ வளமும் பெருகும். சனிப் பெயர்ச்சிக்குப் பிறகு ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
உங்கள் ராசியில் சந்திரன் நீச்சம் பெறுவதால் பவுர்ணமியன்று கிரிவலம் வருவதன் மூலம் பலன் அதிகம் பெறலாம். வார வழிபாடாக ஆனைமுகப் பெருமான், ஆறுமுகப் பெருமான், அனுமன், நந்தீஸ்வரரை வழிபாடு செய்யுங்கள். பிறந்த தேதிக்குரிய எண் ஆதிக்க நாளும், யோக பலம் பெற்ற நட்சத்திரமும் சேரும் நேரத்தில் சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டியில் வீற்றிருந்து அருள் வழங்கும் கற்பக விநாயகரை வழிபட்டு காரிய வெற்றியை வரவழைத்துக் கொள்ளுங்கள்.
லாப ஸ்தான ராகு, பஞ்சம ஸ்தான கேது!
இதுவரை உங்கள் ராசிக்கு 12–ம் இடத்தில் ராகுவும், 6–ம் இடத்தில் கேதுவும் சஞ்சரித்து வந்தார்கள். எனவே, பரபரப்பான வாழ்க்கை உங்களுக்கு அமைந்திருக்கும். இனிமேல் உங்கள் பணத்தேவைகள் பூர்த்தி செய்யும் விதத்தில் ராகு–கேதுக்களின் பெயர்ச்சி அமைகிறது. கன்னி ராகு எண்ணியதை முடித்து வைக்கும். புண்ணிய ஷேத்திரங்களுக்கு சென்று மகிழ்ச்சி காண்பீர்கள். கண்ணியமிக்க நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைத்து காரிய வெற்றி காண்பீர்கள்.
லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது புதிய ஒப்பந்தங்கள் அதிகரிக்கும். நாட்டுப் பற்று மிக்கவர்கள் உங்களோடு இணைந்து செயலாற்றுவர். வீட்டு மனை வாங்கியதில், வீடு கட்டிக் குடியேற வேண்டுமென்ற விருப்பம் நிறைவேறும்.
பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் நிறையவே நடைபெறும். பிள்ளைகள் வழியில் உதிரி வருமானங்கள் வந்து சேரும். பூர்வீக சொத்துக்களால் லாபமுண்டு. புதிய வாய்ப்புகள் அதிகரிக்கவும், பொருளாதார நிலை மேலும் உயரவும் முறையாக யோக ஸ்தலத்தில் சர்ப்ப சாந்தி செய்வது நல்லது.
குதூகலம்  தரும்  குருப்பெயர்ச்சி  பலன்கள்!
புத்தாண்டில் குரு உச்சம் பெற்று கடக ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். உங்கள் ராசி அடிப்படையில் தன பஞ்சமாதிபதியான குருபகவான் உச்சம் பெற்று உங்கள் ராசியைப் பார்க்கும் நேரம் ஒரு பொன்னான நேரமாகும். இந்த நிகழ்வு ஜூன் 13–ம் தேதி நிகழ  விருக்கிறது. எனவே இந்தப் புத்தாண்டில் பொன்னும், பொருளும் போற்றுகிற செல்வாக்கும், இன்னும் பெருகும். இயல்பாக வளம் கிடைக்கும். மன்னவரும், மந்திரியும், சான்றோர்களும் அன்யோன்ய உறவாகி அனைத்துக் காரியங்களிலும் வெற்றி பெற வழிவகுத்துக்கொடுப்பர்.
பலம்பெற்ற குருவின் பரிபூரண பார்வை உங்கள் ராசியில் பதிவது மிகுந்த யோகம் ஆகும். குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கேற்ப தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்துதவுவர். பட்டி தொட்டிகளில் எல்லாம் உங்கள் புகழ் பரவும். பாராட்டுக்   களையும், விருதுகளையும் குவிப்பீர்கள். உற்றார்,    உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரி யப்படுவர்.
கல்யாணக் கனவுகள் நனவாகும். கார், வண்டி வாகன சேர்க்கைகள் அதிகரிக்கும். ஊரில் ஒரு வீடு கட்டலாம் என்று நினைத்தவர்கள் கூட இரண்டு வீடுகளைக்   கட்டும் வாய்ப்பு உருவாகும். பொருளாதார நிலை உயரும். புதிய தொழிலுக்கு நண்பர்கள் போட்டி போட்டுக்கொண்டு மூலதனம் தருவர். அரசியல் வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். அயல்நாட்டிலிருந்தும் அனுகூலத் தகவல் வந்து சேரும். இக்காலம் ஒரு பொற்காலமாக அமைய திசைமாறிய தென்முகக் கடவுளை வழிபடுவது நல்லது.
குருவின் பார்வை பலத்தால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வாரிசு இல்லாத தம்பதியருக்கு வாரிசு உருவாகி மகிழ்ச்சியை வழங்கும். மருத்துவச் செலவுகள் குறையும். மகத்தான உடல் வாகைப்பெற்று உற்சாகத்தோடு பணிபுரியப் போகிறீர்கள். பிள்ளைகள் வழியிலும் பெருமை சேரும்.

No comments:

Post a Comment