Saturday 4 January 2014

2014 KADAGAM கடகம்

Source: www.dailythanthi.com

புனர்பூசம் 4–ம் பாதம், பூசம், ஆயில்யம் வரை.
(பெயரின் முதல் எழுத்துக்கள்: ஹி, ஹீ, ஹே, ஹோ, ட, டி, டே, டோ உள்ளவர்களுக்கும்)
உச்ச குரு  உன்னத  வாழ்விற்கு  வழிகாட்டும்!
தேசமெங்கும் செல்வாக்குப் பெற்று வாசமலராய் வாழும் கடக ராசி நேயர்களே!
ஆசையோடு எதிர்பார்த்துக் காத்திருந்த புத்தாண்டு இப்பொழுது அடியெடுத்து வைக்கிறது. உங்கள் யோசனைகள் வெற்றிபெறும் விதத்தில் உங்களது ராசியிலேயே குருவும் உச்சம் பெறுகிறது. மங்கல மேளம் இல்லத்தில்      முழங்கும்.  மாபெரும் சபைகள் உங்களை அழைக்கும். தங்கமும், வெள்ளியும் தடையின்றி வந்து சேரும்.  
வங்கக் கடல்போல வாய்த்த மனம் பெற்ற உங்களுக்கு ஞானகாரகன் கேதுவிற்குரிய எண் ஆதிக்கத்தில் பிறக்கும் புத்தாண்டில் வருடத் தொடக்கத்தில் விரய ஸ்தானத்தில் குரு வீற்றிருக்கிறார். அதுவும் வக்ர இயக்கத்தில் வளமான பார்வையை வழங்குகிறார். அதே நேரத்தில் 6–ம் இடத்தில் ஆதித்தனும், அம்புலியும், புதனும் சஞ்சரிக்கிறார்கள். இத்தனைக்கும் மத்தியில் பிறக்கும் இந்தப் புத்தாண்டில் உச்ச குருவின் ஆதிக்கத்தால் உன்னத வாழ்வு அமையப் போகிறது.
பொதுவாக நீங்கள் சிந்தித்து செயல்படுவீர்கள். கலா ரசனை மிக்கவர்கள்.  உங்கள் பேச்சு மற்றவர்களை மயக்கும். இருந்தாலும் உங்கள் மீதும், உங்கள் திறமையின் மீதும் உங்களுக்கு நம்பிக்கை இருக்காது. எனவே யாராவது ஒருவரைக் கூட்டணி சேர்த்துக் கொண்டுதான் பிரகாசமான எதிர்       காலத்தை அமைத்துக் கொள்ள         முடியுமென்று நினைப்பீர்கள். உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேலைகளை நீங்கள் முழுமனதோடு செய்ய நினைத்தால் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இல்லையென்றால் அரைகுறையாக செய்து விட்டு அப்படியே வந்துவிடுவீர்கள்.  
இப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்ட உங்களுக்கு சுய ஜாதகத்திலுள்ள கட்டங்களையும், 2014–ம் ஆண்டு புத்தாண்டு கட்டத்தையும், ஒப்பிட்டுப் பார்த்து பலன்களைத் துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.
1.1.2014 முதல் 12.6.2014 வரை
வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன், தனாதிபதி சூரியனுடன் இணைந்து 6–ல் சஞ்சரிக்கிறார். அதோடு விரயாதிபதி புதனுமல்லவா சேர்ந்திருக்கிறார். எனவே, பண வரவு திருப்திகரமாக இருந்தாலும் செலவு நடைகள் கூடுதலாகவே இருக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் ஒரு சிலருக்கு வந்து சேரலாம். அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் எதையும் யோசித்து ஏற்றுக் கொள்வது நல்லது.
அந்நிய தேசத்திற்கு வேலை வாய்ப்பை தேடிச் சென்றவர்கள் அங்கு வேலை கிடைக்காமல் தாய் நாடு திரும்பலாம். 6–க்கு அதிபதி குரு வக்ரம் பெற்று சஞ்சரிப்பதால் உத்தியோக வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் அதை உபயோகப்படுத்திக் கொள்ள இயலுமா என்பது சந்தேகம்தான்.
செவ்வாய் ஆதிக்கத்தால் உடன்       பிறப்புகளின் வழியே ஒரு நல்ல வாய்ப்பு தேடி வரும். அரசு வழிச் சலுகைகளில் தாமதம் ஏற்படலாம். ஆரோக்கியப் பாதிப்புகள் அகலும். சுக்ரன் வக்ரம் பெற்று சஞ்சரிப்பதால் பெண் வழிப்     பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். பெற்றோர் வழியில் இருந்த மனஸ்தாபங்கள் மாறும். என்ன இருந்தாலும் குருப்பெயர்ச்சி வரை சற்று பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
வருடத் தொடக்கத்தில் விநாயகப் பெருமான் வழிபாடும், சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாடும்,  பவுர்ணமி தோறும் கிரிவலம் வருவதும் நல்லது.
விருச்சிக சனியின் சஞ்சாரம்!
இதுவரை உங்கள் ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியாக வாசம் செய்த சனிபகவான் இந்த வருடம் கடைசியில் 5–ம் இடமான விருச்சிக ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். புத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி புத்திர விருத்தியை ஒருசிலருக்கு உருவாக்குவார்.  பூர்வீக சொத்து தகராறுகள் அகலும். சனியின் பார்வை சப்தம ஸ்தானத்தில் பதிவதால் வெளிநாட்டு முயற்சிகளில் ஒரு சிலருக்கு வெற்றி கிடைக்கும். வீடுமாற்றம், வாகன மாற்றம், செய்ய தகுந்த வாய்ப்புகள் வந்து சேரும்.  
குரு மற்றும் சனியின் வக்ர காலங்கள்!
குரு உங்கள் ராசிக்கு 6,9–க்கு அதிபதியாகிறார். சனி உங்கள் ராசிக்கு 7, 8–க்கு அதிபதியாகிறார். எனவே, இந்த வக்ர காலத்தில் நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். இரண்டு கிரகத்திற்கும் ஓரிடத்தின் ஆதிபத்யம் நல்ல இடத்தின் ஆதிபத்யமாக இருக்கிறது. எனவே குடும்பத்தில் சில பிரச்சினைகள் உருவாகி மறையும். கட்டிடங்கள் கட்டி வைத்தும் குடியேற முடியவில்லையே என்ற கவலை ஏற்படும்.
கடக ராசியில் பிறந்த பெண்களுக்கு!
இந்தப் புத்தாண்டு உங்களுக்குப் புதிய பாதையை அமைத்துக் கொடுக்கப் போகிறது. உச்சம் பெறும் குருவால் உன்னத வாழ்க்கை அமையும். ஜூன் மாதம் வரை சற்று பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. சுபச் செலவுகள் அதிகரிக்கும். வீடு மாற்றச் சிந்தனை மேலோங்கும். அரசியல் மற்றும் பொது நலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கூட கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும், மேலதிகாரிகளின் அனு      கூலமும் கிடைக்கும். குழந்தைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன்–மனைவிக்குள் கனிவு கூடும். ஒற்றுமை பலப்படும். ஆன்மிக நாட்டம்அதிகரிக்கும். சனிப்பெயர்ச்சி காலத்தில் கூடுதலாக கவனம் தேவை. சர்ப்ப கிரக வழிபாடு சந்தோஷத்தை நிலையாக வைத்துக் கொள்ள வழிகாட்டும். ராகு–கேது பெயர்ச்சி காலத்தில் உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். தாய்வழி ஆதரவு கிட்டும்.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
ராசிநாதன் சந்திரன் என்பதால் திங்கள் தோறும் சாந்த ரூப அம்பிகையை வழிபட்டு வாருங்கள். பிறந்த தேதியின் அடிப்படையில் சிறப்பு வழிபாட்டை மேற்கொள்வதோடு யோக பலம்பெற்ற நாளில் சிவகங்கை மாவட்டம் இரணியூரிலுள்ள ஆட்கொண்ட நாதர், சிவபுரம் தேவியை வழிபட்டு வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்.
நலம்  தரும்  ராகு–கேது  பெயர்ச்சி!
இதுவரை அர்த்தாஷ்டம ராகுவாக சஞ்சரித்தவர் இந்த ஆண்டு மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். முன்னேற்றம் தரும் இடமான மூன்றில் ஜூன் 21 முதல் தனது பின்னோக்கிச் செல்லும் பயணத்தை மேற்கொள்ளப் போகிறார். அதே நேரத்தில் 9–ம் இடத்தில் மீன ராசியில் கேது சஞ்சரிக்கப் போகிறார். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முன்னேற்றங்கள் கூடும். தொழில் வளர்ச்சிக்கு தொகை வந்து கொண்டேயிருக்கும். வழக்குகள் சாதகமாக அமையும். உடன்பிறப்புகள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர்.
இல்லத்தில் சுபகாரிய நிகழ்வுகள் நடப்பதில் தாமதம் ஏற்படுகிறதே என்று கவலைப்பட்டவர்கள் இனிக் கவலைப்பட தேவையில்லை. கை கொடுத்துதவும் நண்பர்கள் உங்கள் கவலை தீர வழிவகுப்பர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இலாகா மாற்றம் உருவாகலாம். கேது பலத்தால் தந்தை வழி உறவில் சிறிது விரிசல்கள் ஏற்பட்டு அகலும். பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்து விட்டுப் புதிய சொத்துக்களை வாங்க வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கூடுதல் லாபம் தொழிலில் வந்து சேரும். எனவே, ஆடம்பரச் செலவுகளை அதிகம் செய்வீர்கள். ஆபரண சேர்க்கைக்கு அஸ்திவாரமிடுவீர்கள்.  
ராகு–கேதுக்கள் முறையாக நற்பலன்களை வழங்க முறையாக நீங்கள் சர்ப்ப சாந்தி பரிகாரங்களை செய்து கொள்வது நல்லது. சுய ஜாதகத்தில் ராகு–கேதுக்களின் பலமறிந்து அதற்குரிய ஸ்தலங்களுக்கு சென்று வழிபட்டு வரலாம்.
குதூகலம்  தரும்  குருப்பெயர்ச்சி!
புத்தாண்டில் உங்கள் ராசியில் குரு உச்சம் பெறப்போகிறார். இந்த ஆதிக்கம் ஜூன் 13–ம் தேதி முதல் நிகழவிருக்கிறது. ஜென்ம குருவின் ஆதிக்கமாக இருந்தாலும் கூட 9–ம் இடத்திற்கு அதிபதியான குரு உச்சம் பெறும் பொழுது, பொன், பொருட்கள் வந்து சேரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். அண்ணன் தம்பி பகை மாறும். எப்பொழுதோ கொடுத்த கடன்கள் இப்பொழுது வசூலாகும்.
பொதுநலத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும். மதி நுட்பத்தால் மகத்தான காரியங்கள் பலவற்றையும் செய்து சாதனையாளர்களின் விருதுகளைப் பெருமளவு பெறப் போகிறீர்கள். ஒவ்வொரு வியாழக்கிழமையும் விரதமிருந்து குரு தெட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வதோடு, அனுகூலம் தரும் நாளில் திசைமாறிய தென்முகக் கடவுளையும் வழிபட்டு வந்தால் தித்திக்கும் விதத்தில் வாழ்க்கைப் பாதை அமையும்.
குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களிலும் பதிவதால் அந்த இடங்களெல்லாம் புனிதமடையப் போகின்றது. குரு பார்க்கக் கோடி நன்மை என்பதால் இனி, கோடி நன்மைகள் கிடைக்கும். வாடிய மனம் இனி மகிழ்ச்சி காணும். தேடிய நற்பலன்களெல்   லாம் இல்லம் தேடி வரும். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள்.  
கல்யாண வாய்ப்புகள் கைகூடி வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. பிரிந்த தம்பதியர் வந்திணைவர். பிரச்சினைகள் அனைத்தும் நல்ல முடிவிற்கு வரும். வழக்குப் போட்டவர்கள் வாபஸ் பெறுவர். வாரிசுகளுக்கு கூட வெளிநாட்டு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பீர்கள். ஆரோக்கியக் குறைபாடுகள் அகலும். சுறுசுறுப்போடும், விறுவிறுப்போடும் செயல்பட்டு சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வாகனம் புதிதாக வாங்கும் வாய்ப்பு கிட்டும். அங்ஙனம் வாங்கும் சூழ்நிலை அமைந்தவர்கள் அதிர்ஷ்ட எண் ஆதிக்கத்தில் வாங்கினால் அதை எடுத்துச் செல்லும் இடங்களெல்லாம் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற இயலும்.

No comments:

Post a Comment