Saturday 4 January 2014

2014 MITHHUNAM மிதுனம்

Source: www.dailythanthi.com

மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள் : க, கா, கி, கு, ஞ, ச, கே, கோ உள்ளவர்களுக்கும்)
குருப் பெயர்ச்சிக்குப் பிறகு  குதூகலம்  அதிகரிக்கும்!
ஆற்றல் மிக்கவர்களை பின்னணியாகக் கொண்டு காரியங்களை செய்து முடிக்கும் மிதுன ராசி நேயர்களே!
புத்தாண்டு பிறக்கப் போகிறது. ஆண்டு தொடங்கும் பொழுதே, குரு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் 5, 12–க்கு அதிபதியான சுக்ரனும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார்.
இதற்கிடையில் உங்கள் ராசிநாதன் புதன் வலிமை இழந்து சூரிய சந்திர சேர்க்கையோடு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இத்தனைக்கும் மத்தியில் பிறக்கும் இந்தப் புத்தாண்டு முத்தான பலன்களை குருப்பெயர்ச்சிக்குப் பின்னரே வழங்கும்.
முப்பெரும் கிரகங்களான குரு, ராகு–கேது, சனி ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்து சர்ப்ப சாந்தி பரிகாரத்தை ராகு–கேதுக்களுக்கும், ஒப்பற்ற குருவிற்கு அறுபத்துமூவர் வழிபாட்டையும், வரப்போகும் அர்த்தாஷ்டமச் சனிக்கு அனுமன் வழிபாட்டையும் நீங்கள் முறையாக மேற்கொண்டால் முன்னேற்றத்தின் முதல் படிக்குச் செல்லலாம்.
பொதுவாக நீங்கள் எல்லோரிடமும் இனிமையாக பழகுவீர்கள். இயல்பாகவே சாதுர்யமும், உங்கள் பேச்சில் கலந்திருக்கும். பிறரைப் புகழ்ந்து பேசியே காரியங்களை சாதித்து விடுவீர்கள். வசிய சக்தி மிகுந்த எண் ஆதிக்கமான ‘5’–க்கு உரிய புதன் உங்கள் ராசிநாதனாக இருப்பதால் பஞ்சாயத்துக்களில் மட்டுமல்ல, பழகும் நண்பர்களும் உங்கள் சொல்லிற்கு முக்கியத்துவம் கொடுப்பர்.
உடல் உழைப்பைக் காட்டிலும் சிந்திக்கும் மூளை உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் நீங்கள். பொல்லாதவர்களையும் நல்லவர்களாக மாற்றும் ஆற்றல் உங்களுக்கு உண்டு.
இப்படிப்பட்ட குணாதிசயங்களைப் பெற்ற நீங்கள் உங்களுடைய சுய ஜாதகத்திலுள்ள கட்டங்களையும், 2014–ம் ஆண்டு புத்தாண்டு கட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
2014–ம் ஆண்டு கேதுவுக்குரிய ‘7’ எண் ஆதிக்கத்தில் வருவதால் உங்கள் சுய ஜாதகத்தில் கேதுவின் பாதசார பலம் மற்றும் ராசிநாதன் புதன் தனாதிபதி ஆகியவற்றின் பலமறிந்து, பாக்யாதிபதியின் நிலையறிந்து அதற்குரிய ஸ்தலங்களை தேர்ந்தெடுத்து யோகபலம் பெற்ற நாளில் வழிபட்டு வந்தால் யோகங்கள் அனைத்தும் வந்து சேரும். அந்த சமயத்தில் அர்த்தாஷ்டம ராகுவிற்கு பரிகாரமாக நாக சாந்தியும் செய்வது நல்லது. அப்        பொழுது தான் தடைகளும் அகலும். தனவரவும் பெருகும்.
1.1.2014 முதல் 12.6.2014 வரை
வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் வலிமை இழந்து குரு வீட்டில் பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கிறார். எனவே, குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. தொழில் வளர்ச்சி சீராக இருக்கும்.  
மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகளை சிறப்பாக முடித்துக்கொடுப்பர். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பூமி விற்பனையால் கிடைக்கும் தொகையைக்கொண்டு புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் கல்வி நலன்கருதியும், கல்யாண வாய்ப்பு, கடல் தாண்டும் முயற்சி கருதியும் தொகை ஒன்றைச் செலவிடும் சூழ்நிலை உருவாகும்.
கேதுவின் முழுமையான பார்வை உங்கள் ராசியில் பதிவதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகிற பொழுதே நல்ல மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. அந்நிய தேசத்திலிருந்து அழைப்புகள் வந்து கொண்டேயிருக்கும். புண்ணிய ஷேத்திரங்களுக்கு சென்று வருட தொடக்கத்தில் வழிபட்டு வருவது நல்லது.
6–ம் இடத்தில் அடியெடுத்து வைக்கும் சனி!
இதுவரை உங்கள் ராசிக்கு 5–ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் இவ்வருடக் கடைசியில் 6–ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். 8–க்கு அதிபதி 6–ல் சஞ்சரிக்கும் பொழுது எதிர்பாராத விதத்தில் சில நல்ல பலன்களும் உங்களுக்கு வந்து சேரப் போகிறது. திடீரென காரியங்கள் கைகூடி திக்குமுக்காட வைக்கும்.
உத்தியோகம், தொழிலில் உன்னத நிலை உருவாகும். பொருளாதார நிலை உயரும். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளுக்கு உறவினர்கள் கைகொடுத்து உதவுவர். அரசு பணி எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அது கைகூடும். கலைத்துறையில் உள்ளவர்கள் கவுரவிக்கப்படுவர். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.   
குரு மற்றும் சனியின் வக்ர காலங்கள்!
இந்த வக்ர காலமே உங்களுக்கு  பொற்காலமாகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். வருங்கால நலன் கருதி தீட்டும் திட்டங்களுக்கு முக்கியப் புள்ளிகள் முன் வந்து உதவுவர்.  குழந்தைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடி வரும். சனியின் வக்ர காலத்தில் ஆரோக்கியம் சீராகும்.  9–ம் இடத்திற்கும் சனி அதிபதி என்பதால் பொன், பொருட்களும் விரயமாகும். உங்களின் அனுசரிப்பே ஆதாயத்தைக் கொடுக்கும்.
மிதுன ராசியில் பிறந்த பெண்களுக்கு!
இந்தப் புத்தாண்டு உங்களுக்கு பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும் ஆண்டாக அமையப் போகிறது. வருடத் தொடக்கத்தில் உத்தியோக முயற்சியில் வெற்றி கிடைக்கும். உச்ச குருவின் ஆதிக்கம் வந்த பின்னால் ஜூன் மாதத்திற்கு மேல் சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும்.
குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். உறவைப் பகையாக்கியவர்கள் உங்களை விட்டு விலகுவர். கறவை மாடுகள், காடு, கழனி என்றெல்லாம் வாங்கும் வாய்ப்பு உண்டு. அடிமைத் தொழில் மாறி சுய தொழில் செய்யும் எண்ணம் மேலோங்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சனிப்பெயர்ச்சிக்குப் பின்னால் பெற்றோர்களையும், தாய்வழி உறவினர்   களையும் அனுசரித்துச்செல்வது நல்லது. அர்த்தாஷ்டமச் சனி ராகுவிற்கு பரிகாரமாக துர்க்கை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சர்ப்ப சாந்தி பரிகாரத்தை யோகபலம் பெற்ற நாளில் செய்வது நல்லது.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
ராசிநாதன் புதன் என்பதால் புதன்கிழமை தோறும் விஷ்ணு வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. தாமரைப் பூமாலை சூட்டி சங்கு சக்கரதாரியை வழிபட்டால் சேமிப்பு உயரும். பிறந்த தேதியின் அடிப்படையில் சிறப்பு வழிபாட்டை மேற்கொள்வதோடு மதுரை மேலூர் அருகிலுள்ள சக்கரத்தாழ்வாரை வழிபட்டு வர சகல யோகங்    களையும் வரவழைத்துக் கொள்ள இயலும்.
அர்த்தாஷ்டம ராகுவும், பத்தாமிடத்து கேதுவும்!
பாம்பு கிரகங்கள் என்று வர்ணிக்கப்படும் ராகுவும், கேதுவும் இந்தப் புத்தாண்டில் பெயர்ச்சியாகிறார்கள். உங்கள் ராசியை பொறுத்தவரை ராகு பகவான் அர்த்தாஷ்டம ராகுவாகவும், கேது பகவான் தொழில் ஸ்தான கேதுவாகவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இதன் விளைவாக குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு அகலும். குடியிருக்கும் வீட்டாலும் பிரச்சினைகள் உருவாகலாம். கடுமையாக முயற்சித்தும் காரியங்கள் முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள்.
இந்த நிகழ்வு ஜூன் 21–ம் தேதி ஏற்படும் ராகு–கேது பெயர்ச்சியின் விளைவால் உருவாகப் போகிறது. இருந்தாலும் ராகுவின் பரிபூரண பார்வை தன ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானம், எதிரிகளின் ஸ்தானத்திலும் பதிவதால் வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்க வழிபிறக்கும். வருமானப் பெருக்கத்திற்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து அலைமோதும். தொழிலில் லாபம் வந்து கொண்டேயிருக்கும். கேதுவின் பலத்தால் தலைமைப் பொறுப்புகள் தானாக வந்து சேரும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும்.  கூட்டுத் தொழிலில் மாற்றங்கள் ஏற்பட வழிபிறக்கும். வாட்டங்கள் அகலவும், வளர்ச்சி கூடவும் சுய ஜாதகத்தில் ராகு–கேதுக்களின் சார பலமறிந்து சர்ப்பசாந்திகளை முறைப்படி செய்தால் சந்தோஷங்கள் வந்து சேரும்.
உச்ச  குருவின்  சஞ்சாரம்!
புத்தாண்டில் குருப்பெயர்ச்சி நிகழவிருக்கிறது. எல்லா குருப்பெயர்ச்சியையும் விட இந்த ஆண்டு பெயர்ச்சியாகும் குரு முக்கியத்துவம் பெறுகிறது. காரணம் 12 ஆண்டுக்கு ஒருமுறை கடகத்தில் உச்சம் பெறும் குரு இப்பொழுது கடகத்தில் நுழைகிறார். எனவே, ஆன்மிகமும், அறிவியலும் தழைத்தோங்கப் போகும் இந்த நேரத்தில் உங்கள் ராசியைப் பொறுத்தவரை 7, 10–க்கு அதிபதியான குரு, தன ஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார்.
எனவே, பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். தினம் ஒரு நல்ல தகவல் வந்து கொண்டேயிருக்கும். மனம்போனபடி எல்லாம் சென்ற உங்கள் குழந்தைகள் இனி உங்கள் சொல்லிற்கு மதிப்புக்    கொடுப்பர். தனவரவு  தாராளமாக வந்து சேரும். தக்க விதத்தில் தொழில் வளம் கைகூடும். மண முறிவு ஏற்பட்டு பிரிய நினைத்த தம்பதியர் கூட மறுபடியும் சேர்ந்து வாழ முன்வருவர்.
கடன் சுமை தீரும். கவலைகள் ஓயும். உடல் நலம் சீராகும். மனதில் உறுதி ஏற்படும். மண், பூமி சேர்க்கைக்கும் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். மாடு, கன்று வாங்குவதில் கூட ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். கோபத்தைக் குறைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது. பாயில் படுத்தவர்கள் பம்பரமாய் பணிபுரிவர். நோயில் இருப்பவர்கள் நோய் நீங்கி குணம் பெறுவர்.
உறவினர் பகை மாறும். தொழிலில் எதிர்பார்த்த     படியே லாபம் கிடைக்கும். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களுக்கு அற்புத பதவி வந்து சேரும். இக்காலத்தில் குரு தெட்சிணாமூர்த்தி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். திசைமாறிய தென்முகக் கடவுள் எங்கெல்லாம் இருக்கிறதோ அவற்றை கண்டறிந்து வாய்ப்பிருக்கும் பொழுது வழிபட்டு வருவது நல்லது.

No comments:

Post a Comment