Saturday 4 January 2014

2014 மீனம்: ஒரு புறம் எரிமலை மறுபுறம் பனிமலை

Source: www.dinamalar.com


 
வெற்றி வேணுமா போட்டு பார்க்கணும் எதிர்நீச்சல் என்ற கொள்கையுடைய மீனராசி அன்பர்களே! 

நீங்கள் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும் சாமர்த்தியசாலி. கடந்த ஆண்டு முக்கிய கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருந்ததால் பல்வேறு இன்னல்களை சந்தித்து இருக்கலாம். ஆனால், இந்த ஆண்டு பல்வேறு நன்மைகளை காணலாம். முக்கிய கிரகங்களில் ஒன்றான சனிபகவான் 8-ல் இருக்கிறார். அஷ்டமத்தில் சனியால் எப்படி நன்மை தர முடியும்? இங்கு, அவர் உங்கள் முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்கலாம். உறவினர்கள் வகையில் மனக்கசப்பும் கருத்துவேறுபாடும் ஏற்படும். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். இந்த ஆண்டும் சனிபகவானின் நிலை அதே இடத்தில்தான் உள்ளது. அதே நேரம், மார்ச் 4 முதல் ஜூலை 19 வரை சனிபகவான் வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. சாதகமற்ற கிரகம் செயல்பட முடியாமல் போவது உங்களுக்கு சாதகம்தானே. அந்த சமயத்தில், அவரால் உங்களுக்கு நன்மை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது  நிழல் கிரகமான ராகு 8-ம் இடத்தில் சனிபகவானோடு இணைந்து உள்ளார். அவர் தடைகளை உருவாக்குவார். உறவினர்கள் வகையில் மனக்கசப்பை ஏற்படுத்தலாம். வெளியூர் பயணத்தை அடிக்கடி உருவாக்குவார். ஆனால், அவர்கள் மீது குருவின் பார்வை விழுவதால் அவர்களால் கெடுபலனை தரமுடியாது. ஜூன் 20ல், ராகு 7-ம் இடமான கன்னிக்கு மாறுகிறார். அங்கு அவர் இருக்கும் சமயத்தில், குடும்பத்தில் சிற்சில பிரச்னைகளை உருவாக்குவார். அலைச்சல் அதிகரிக்கும். குடியிருக்கும் வீட்டையோ, ஊரையோ மாற்றுவார்.  இன்னொரு நிழல் கிரகமான கேது 2-ம் இடமான மேஷத்தில் உள்ளார். அங்கு பொருள் விரயத்தையும், பகைவர் வகையில் தொல்லையையும் தருவார். ஜூன்20ல், அவர் இடம் பெயர்ந்து உங்கள் ராசிக்கு வருகிறார். அதன் காரணமாகவும், உங்கள் முயற்சிகளில் தடைகள் வரலாம். பகைவர்களின் தொல்லை அதிகரிக்கும். உடல் நலம் பாதிக்கப்படலாம். சனி, ராகு, கேது இப்படி தொல்லைகளைத் தந்தாலும், முக்கிய கிரகமான குரு பகவான் 4-ம் இடமான மிதுனத்தில் உள்ளார். நான்காம் இடத்து குரு, மன உளைச்சலையும், உறவினர் வகையில் வீண் பகையையும் உருவாக்குவார் என்றாலும், அவர், உங்கள் ராசி நாயகன் என்பதால் அதிகபட்ச கெடுபலன்களை தரமாட்டார். அது மட்டுமல்ல! ஆண்டின் ஆரம்பத்தில், குருபகவான் மார்ச் 12 வரை வக்கிர நிலையில் உள்ளார். இந்த காலக்கட்டத்தில் அவர், கெடுபலனை தராமல் நன்மையே செய்வார். அவர் ஜூன்12ல், கடகத்திற்கு வருகிறார். இது உங்களுக்கு மிக ஆறுதலைத் தரும் இடம். 5-ம் இடமான அங்கு அவர் பணவரவையும், வாழ்க்கை வளத்தையும், சுபங்களையும் தருவார். அதன்பின், உங்கள் வாழ்க்கையில் பல்வேறு நன்மைகள் நடக்க தொடங்கும். மேலும் குருபகவானின்  பார்வையாலும் உங்களுக்கு நன்மை கிடைக்கும். 5-ம்  இடத்துப்பார்வையும், 7-ம் இடத்துப் பார்வையும் சாதமாக அமையும். 5-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 9-ம் வீடான விருச்சிகத்தில் விழும். அதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து  முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து  சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த  திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. 7-ம் இடத்துப் பார்வை 11-ம் இடமான மகரத்தில் விழும். இதன் மூலம் பொருளாதார வளம் மேம்படும்.  உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி கிடைக்கும். மேற்கண்ட நிலையை காணும்போது ஆண்டின் பிற்பகுதி குதூகலமாக அமையும். கணவன்- மனைவி இடையே அன்பு தொடரும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஜூனுக்கு பிறகு கை கூடும். புதிய வீடு வாகனம் வாங்க யோகம் கூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் வகையில் இருந்து வந்த பிணக்குகள் மறையும்.  மொத்தத்தில் இந்த ஆண்டின் ஒருபுறம், கிரகங்கள் எரிமலைக் குழம்பைக் கக்கினாலும், மறுபுறத்தில் இருக்கும் குரு பனிமலையாய் உங்கள் நெஞ்சைக் குளிர வைப்பார்.

தொழில், வியாபாரம்: தொழில், வியாபாரத்தில் லாபத்துக்கு குறையிருக்காது வருமானம் அதிகரிக்கும். அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சிலர் வணிகம் விஷயமாக வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அதிக முதல்போடாமல், அறிவைப் பயன்படுத்தி முன்னேற வழிவகை காணுங்கள். அரசு வகையில் இருந்து வந்த பிரச்னை மறையும். அனுகூலமான போக்கு காணப்படும்.

பணியாளர்கள்: உத்தியோகத்தில் இதுவரை இருந்துவந்த பின்தங்கிய நிலை மறையும். ஜூன் மாதம் முதல் பல சிறப்பான பலன்களைக் காணலாம். வேலையில் பளு குறையும். முக்கிய கிரகங்கள் உங்களை இடம் மாற்றி விடும் என்பதால், அதையே உங்களுக்கு சாதகமாக்கி, விருப்பமான இடமாற்றத்தை முயற்சி செய்து பெற்று விடுங்கள். சில சமயங்களில் கெட்டதும் கூட நல்லதற்காகவே வருகிறது. உங்கள் ஆற்றல் தொடர்ந்து மேம்பட்டு இருக்கும். புதிய பதவி கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு.

கலைஞர்கள்: கலைஞர்களுக்கு நல்ல சான்ஸ் கிடைக்கும். ஆண்டின் பிற்பகுதியில், தடைபட்டிருந்த வருமானம் கிடைக்க இடமுண்டு.

பெண்கள்: குருவின் ஏழாம் இடத்து பார்வை, கன்னிப்பெண்களுக்கு திருமண யோகத்தைக் கொடுக்கும். ஆண்டின் பிற்பகுதியில் நகை பணம், சேரும். கணவருடன் இணக்கமான போக்கு இருக்கும். வேலை செய்யும் பெண்களுக்கு ஜூனுக்குப் பிறகு சலுகைகளை எதிர்பார்க்கலாம்.

விவசாயிகள்: நவீன கருவிகளை ஜூன் மாதத்துக்குப் பிறகு வாங்கலாம். புதிய நிலம் வாங்கும்போது, பத்திரங்களைக் கவனமாகப் படித்துப் பார்க்கவும். விளைபொருட்களுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்கும்.

மாணவர்கள்: இந்த கல்வி ஆண்டில் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். அடுத்த கல்வி ஆண்டில் சிறப்பான பலனைக் காணலாம். விரும்பிய கோர்சில் சேர்வதற்கு இடம் கிடைக்கும்.

பரிகாரம்: துர்க்கை வழிபாடு நன்மை தரும். வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பத்திரகாளி அம்மனை வழிபடுங்கள். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியையும், சனிக்கிழமைகளில் சனிபகவானையும் வணங்கி வாருங்கள். பெருமாள் கோயிலுக்குச் செல்லுங்கள். ராகு நிலையும் சரியில்லாததால் ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.

பரிகாரப் பாடல்:
துணையும் தொழும் தெய்வமும்
பெற்ற தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட
வேரும் பனிமலர்ப் பூங்கணையும்
கருப்புச் சிலையுமென் பாசாங்குசமும்
கையில் அணையும்
திரிபுரசுந்தரியானது அறிந்தனமே.

No comments:

Post a Comment