Saturday 4 January 2014

2014 KUMBHAM கும்பம்

Source: www.dailythanthi.com

2014-ம் ஆண்டு புத்தாண்டு பலன்கள்
அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: கு, கூ, கோ, ஸி, ஸீ, ஸே, ஸோ, தா  உள்ளவர்களுக்கும்)
அனுசரித்துச் செல்வதன்  மூலமே  ஆதாயம்  கிடைக்கும்!
எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி வருங்காலத்தை வளப்படுத்தும் கும்ப ராசி நேயர்களே!
வந்து விட்டது புத்தாண்டு. குருவின் வக்ர இயக்கம் முடிந்த பின்னால் நாம் அக்கறை செலுத்துகின்ற காரியங்களில் எல்லாம் ஆதாயம் கிடைக்குமா? முப்பெரும் கிரகங்களின் பெயர்ச்சி எப்படியிருக்கப் போகிறது. ஒப்பற்ற தனாதிபதி குரு 6–ல் சஞ்சரிக்கும் பொழுது இடமாற்றம் வந்திடுமா?, இல்லை ஊர் மாற்றம் வந்திடுமா?, உத்தியோக மாற்றம் வந்திடுமா? என்ற சிந்தனை இருக்கும்.  
பிறக்கும் புத்தாண்டில் உங்கள் ராசிநாதன் சனி உச்சம் பெற்று இருக்கிறார். அதே நேரத்தில் தன லாபாதிபதியான குருவோ வக்ரம் பெற்று இருக்கிறார். 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் வலிமை இழந்தாலும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கிறார். அஷ்டமத்தில் செவ்வாய் இருப்பது ஒன்று தான் யோசிக்கக் கூடியதாக இருக்கிறது. 3–ல் கேதுவும், 9–ல் ராகுவும் இருப்பதால் வருமானப் பற்றாக்குறை ஏற்படாது, என்றாலும் நிம்மதி குறைவாகவே இருக்கும்.
மற்றவர்கள் அறிமுகம் செய்யாமலேயே நெருங்கிப்பழகும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. பயணங்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். கொடுத்த வாக்கை எப்படியாவது காப்பாற்றி விடவேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் இடம் பெற்றிருக்கும். யாரேனும் உங்களை ஏமாற்ற நினைத்தால் அவர்கள் மீது கடுமையாக கோபம் கொள்வீர்கள். மற்ற நேரங்களில் எல்லாம் இரக்க சுபாவம்கொண்டவர்களாகவே காட்சி அளிப்பீர்கள். தங்களது பிரச்சினைகளை பிறரிடம் சொல்லிப் பகிர்ந்து கொள்வது உங்கள் வாடிக்கையாகும். இந்த 2014 புத்தாண்டு எப்படி இருக்கும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
1.1.2014 முதல் 12.6.2014 வரை
புத்தாண்டு தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உச்சம் பெற்று ராகுவோடு இணைந்து சஞ்சரிக்கின்றார். எனவே, ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் எண்ணம் மேலோங்கும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த புது முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
சுக்ரனின் வக்ர இயக்கத்தால் பெற்றோர் வழியில் பிரியம் கொஞ்சம் குறையலாம். இடம், பூமி வாங்கியதில் எதிர்பாராத பிரச்சினைகள் ஒருசிலருக்கு உருவாகலாம். தந்தைவழி பங்காளி   களால் விரயம் உண்டு. அஷ்டமத்து செவ்வாய் ஆதிக்கம் இருக்கும் வரை ஆரோக்கியத்தில் சிறுசிறு தொல்லைகள் வந்து கொண்டேதான் இருக்கும்.  வாகனங்களில் செல்லும்பொழுது கவனம் தேவை. அஷ்டமாதிபதி புதன் சப்தமாதியுடன் இணைந்து புத–ஆதித்ய யோகத்தை உருவாக்குவதால் கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். மாமன், மைத்துனர் வழியில் மகத்தான ஒத்துழைப்பு கிடைக்கும். முன்னோர் சொத்துக்        களில் முறையான பஞ்சாயத்துக்கள் நடந்து முடிவடைவதில் தாமதம் ஏற்படும். மூன்றாம் இடத்து கேதுவின் ஆதிக்கம் கூடுதலாக இருப்பதால் உடன்பிறப்புகள் வழியில் அனுசரித்துச் செல்வது நல்லது.
10–ம் இடத்திற்கு வரும் முத்தான சனி!
இதுவரை உங்கள் ராசிக்கு 9–ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் புத்தாண்டின் கடைசியில் 10–ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். கர்ம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில் வளம் சிறப்பாக இருக்கும். பழைய தொழிலை மாற்றிவிட்டு, புதிய தொழில் தொடங்கும் சிந்தனை மேலோங்கும்.
அதற்கு ஒத்துழைப்பு செய்யும் விதத்தில் மாற்று இனத்தவரும் உங்களுடன் இணைந்து செயல்பட முன்வருவர். அதே நேரத்தில் சனியின் பார்வை உங்கள் ராசிக்கு 12–ம் இடமான விரய ஸ்தானத்தில் பதிகிறது. எனவே, அன்றாடம் தொழிலைக் கண்காணித்து வராவிட்டால் ஏமாற்றங்களை சந்திக்க இயலும். நம்பிக்கைக்குரியவர்களிடம் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. நாடுமாற்றச் சிந்தனை நடைபெறுமா? என்பது சந்தேகம் தான். சொத்துக்களால் ஆதாயம் உண்டு.
திருநள்ளாறு, பெருச்சிக்கோவில், திருக்கொள்ளிக்காடு போன்ற ஸ்தலங்களுக்குச் சென்று, உங்களுக்கு நடக்கும் சனிச்சுற்றின் அடிப்படையில் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சனி கவசம் பாடி எள் தீபமும் ஏற்றி வழிபட்டால் காரியங்கள் நாளும் வெற்றி பெறும்.
குரு மற்றும் சனி வக்ர காலம்!
இந்தப் புத்தாண்டில் குருவும், சனியும் வக்ரம் பெறுகிறார்கள். இந்த இரண்டு வக்ர இயக்க காலமும், எச்சரிக்கையோடு செயல்பட வேண்டிய காலமாகும். கூடுமானவரை சேமிப்பில் இருந்த தொகைகள் திடீரென செலவாகும்.
தன லாபாதிபதியின் வக்ரம் அவ்வளவு நல்லதல்ல. பண நெருக்கடி ஏற்படும். ஒரு தொகை செலவான பிறகு அடுத்த தொகை வந்து சேரும். சனி ராசிநாதனாக இருப்பதால் உடல்நலத் தொல்லைகள், பணியாளர் பிரச்சினை, பயணங்களில் தடை உருவாகலாம். வீடு மாற்றமும், வேலை மாற்றமும் திருப்தியளிக்கும் விதத்தில் இருக் கும்.
கும்ப ராசியில் பிறந்த பெண்களுக்கு!
கும்ப ராசியில் பிறந்த பெண்களுக்கு குழப்பங்கள் அகலும். குணத்தோடு பழகியவர்களின் நட்பால் கூட்டு முயற்சி வெற்றி பெறும். குரு பார்வை பலத்தால் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த வருட வருமானம் பெருகும். கணவன்–மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். விட்டுக்கொடுத்துச் செல்லாத வாழ்க்கைத் துணை கூட குணம் மாறி அன்பும், ஆதரவும் அதிகமாக காட்டத் தொடங்குவார்.
ராகு–கேது பெயர்ச்சிக்குப் பின்னால் பக்கத்து வீட்டாரின் பகை உருவாகலாம். தாய்வழிப் பிரச்சினைகள் தலைதூக்கும். பிறருக்குப் பொறுப்புச் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை போராடி வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.  குறிப்பாக குழந்தைகளின் திருமணத்தை முன்னிட்டு தங்க ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு கிட்டும். சர்ப்ப சாந்திப் பரிகாரமும், தொடர்ந்து வியாழன் தோறும் குரு தட்சிணாமூர்த்தி வழிபாடும் எடுத்த செயலில் வெற்றி பெற வைக்கும்.
செல்வ வளம் தரும்  சிறப்பு வழிபாடு!
உங்கள் ராசிநாதன் சனி என்பதால் சனிக்கிழமை தோறும் பெருமாள், இலக்குமி, அனுமன் வழிபாட்டை மேற்கொள்வதோடு பிறந்த தேதி மற்றும் கூட்டுத் தொகைக்குரிய எண்களின் ஆதிக்கத்தில் யோகபலம் பெற்ற நாளில், யோகமான நட்சத்திரம் சேரும் பொழுது சிறப்பு வழிபாடாக வன்னி     மரத்தடியில் வீற்றிருந்து அருள் வழங்கும் சனி பகவானை பெருச்சிக் கோவில் சென்று வழிபாடு செய்யுங்கள். இத்திருத்தலம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது.
நலம் தரும் ராகு–கேது பெயர்ச்சி!
இதுவரை உங்கள் ராசிக்கு 3–ம் இடத்தில் கேதுவும், 9–ம் இடத்தில் ராகுவும் சஞ்சரித்து வந்தார்கள். இந்தப் புத்தாண்டில் ஜூன் மாதம் 21–ம் தேதி கன்னி ராசியில் ராகுவும், மீன ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். பின்னோக்கிச் செல்லும் இந்தக் கிரகங்களின் ஆதிக்கத்தால் நீங்கள் முன்னேற்றம் காண வழிகிடைக்கப் போகிறது. 2–ல் சஞ்சரிக்கும் கேதுவால் செயல்பாடுகளில் நிதானம் காட்டுவது நல்லது. மனக்குழப்பங்கள் உருவாகலாம். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது.
குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்களா என்பது சந்தேகம் தான். கொடுக்கல்–வாங்கல்களிலும் கொஞ்சம் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. அஷ்டமத்து ராகுவால் பண வரவு திருப்திகரமாக இருந்தாலும் செலவுகள் கூடுதலாகும். மறைந்த ராகு நிறைந்த தனலாபத்தைக் கொடுக்கும் என்பார்கள். எனவே இக்காலத்தில் தொழிலால் வரும் லாபத்தை சேமிப்பாக வைத்துக் கொள்ளாமல், செலவுகளில் சுப விரயங்களாக மாற்றிக் கொள்வது நல்லது.
குருப் பெயர்ச்சி  பலன்கள்!
புத்தாண்டில் குரு உச்சம் பெற்று சஞ்சரிக்கப் போகிறார். தன லாபாதிபதி உச்சம் பெற்று சஞ்சரிப்பது ஒருவழிக்கு யோகம்தான் என்றாலும், அவர் 6–ம் இடத்தில் அல்லவா சஞ்சரிக்கிறார். எனவே இதன் விளைவாக ஜூன் 13–ம் தேதி முதல் மாற்றங்களும், ஏற்றங்களும் உங்களுக்கு வந்து சேரப் போகின்றன. குருவின் பரிபூரண பார்வை 2, 10, 12 ஆகிய இடங்   களைப் புனிதப்படுத்துகின்றார்.  
அப்படிப்பட்ட குரு 6–ல் சஞ்சரிக்கும் பொழுது உத்தியோகம், தொழிலில் உதிரி வருமானங்கள் பெருகும். உற்சாகத்தோடு பணி புரிவீர்கள். ஊதிய உயர்வு, இலாகா மாற்றங்கள் எதிர்பார்த்தபடி ஒரு சிலருக்கு வந்து சேரும். கடன் சுமை குறைய வழிபிறக்கும். விலகிச் சென்ற உறவுகள் மீண்டும் வந்திணையும்.
அதன் பார்வை பலத்தால் தன ஸ்தானம் புனித      மடைவதால் எந்தத் தொழில் செய்பவராக இருந்தாலும், எதிர்பார்ப்பதைவிட லாபம் ஒரு மடங்கு கூடுதலாகவே கிடைக்கும். சொந்தம், சுற்றம் அனைத்தும் பாராட்டும் அளவிற்கு உங்கள் முன்னேற்றம் கூடும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். பிறருக்கு பொறுப்புச் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையும் மீண்டும் வந்து நிம்மதி தரும்.
கூட்டு முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் இதுவரை கூட்டாளிகளால் திருப்தி ஏற்படவில்லையே என்று நினைத்திருக்கலாம். இந்த குரு மாற்றத்தின் விளைவால் தனித்து இயங்க முற்படுவீர்கள். கொள்கைப் பிடிப்போடு செயல்பட்டுக் குடும்பத்தில் உள்ளவர்களைத் திருப்திப்படுத்துவீர்கள்.
அயன சயன ஸ்தானத்தில் குருவின் பார்வை பதிவதால் ஒரு சிலருக்கு அயல்நாட்டு யோகம் வந்து சேரலாம். வாகனமாற்றம் செய்ய முன்வருவீர்கள். வீடு மாற்றங்கள் ஒரு சிலருக்கு வந்து சேரும். வேற்று மனிதர்களின் ஒற்றுமையோடு வியக்கும் அளவு முன்னேற்றம் காண இந்தக் குருப்பெயர்ச்சி வழிவகுக்கும். திசைமாறிய தென்முகக் கடவுளை வழிபட்டால் தெய்வ அனுகூலமும் கைகொடுக்கும்.

No comments:

Post a Comment