Saturday 4 January 2014

2014 சிம்மம்: பந்தயத்தில் ஜெயிப்பீங்க! வல்லவரா இருப்பீங்க!

Source: www.dinamalar.com


 
ஆர்வமுடன் உழைத்து குறிக்@காளை எட்டிப்பிடிக்கும் சிம்ம ராசி அன்பர்க@ள! 

சூரியனை ஆட்சி நாயகனாக கொண்ட நீங்கள் ஆளுமை தன்மை கொண்டவர்களாக இருப்பீர்கள். எந்த துறையில் இருந்தாலும் தனித்துவத்தோடு காணப்படுவீர்கள். சூரியன் நட்பு வீடான தனுசுவில் இருக்கும்போதுதான் ஆங்கில புத்தாண்டு  பிறக்கிறது. அந்த இடத்தில் அவரால் நன்மை தர முடியா விட்டாலும், அவர் மீது குருவின் பார்வை படுவது சிறப்பாகும்.  கடந்த ஆண்டு பல கிரகங்கள் சாதகமாக  இருந்ததால், பல்வேறு நற்பலன்களை பெற்றிருப்பீர்கள். இந்த ஆண்டும் நன்மை தொடர்ந்து கிடைக்கும்.  முக்கிய கிரகமான சனிபகவான் 3-ம் இடமான கன்னி ராசியில் இருக்கிறார். இது சிறப்பான அம்சம். அவர், உங்கள் முயற்சிகள் அனைத்தையும் வெற்றி அடையச் செய்வார். பொருளாதார வளத்தை  பன்மடங்கு மேம்படுத்துவார். தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும். சனிபகவான் மார்ச் 4 முதல் ஜூலை 19 வரை வக்கிரம் அடையும் காலத்தில் மட்டும் நன்மை சற்று குறையும். குரு பகவான் தற்போது 11-ம் இடமான மிதுனத்தில் இருக்கிறார். அவரால்  பொருளாதார வளம் மேம்படும். உத்தியோகம் சிறப்படைந்து, புதிய பதவி கிடைக்கும். இந்த ஆண்டின் முற்பகுதியிலும் அவர் அதே இடத்தில் இருந்து நன்மை தருவார். ஜூன் 12ல் குருபகவான் இடம் பெயர்ந்து 12-ம் இடமான கடகத்திற்கு வருகிறார். அங்கு அவரால் நன்மை தர இயலாது. அலைச்சலும், பொருள் விரயமும் தவிர்க்க முடியாது. மனதில் இனம்புரியாத உளைச்சல் உண்டாகும். ஆனால், கடகத்தில் உச்சம் பெறும் குருவின் 5,7,9 பார்வை பலத்தால் ஓரளவு நன்மை உண்டாகும். 5ம் பார்வையால், குழந்தைகளால் நன்மை உண்டாகும். சுப விஷயத்தில் இருந்த தடை நீங்கும். குருவின் 7ம் பார்வையால் கணவன், மனைவி ஒற்றுமை மேலோங் கும். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். குருவின் 9ம் இடத்துப் பார்வையால், பால் பாக்கியம் பெருகும். பிதுர் சொத்தின் மூலம் பெறும் வருமானம் அதிகரிக்கும்.  நிழல் கிரகமான ராகு, சனிபகவானோடு இணைந்து நன்மையளித்துக் கொண்டிருக்கிறார். அவரால் நன்மை ஜூன் 20 வரை தொடர்ந்து நீடிக்கும். அதன்பின், அவர் கன்னி ராசிக்கு இடம் பெயர்ந்து வந்து விடுவார். அங்கு அவரால் நன்மை தர இயலாது. பொருதாளார இழப்பும், வீணான பணவிரயமும் ஏற்படுத்தலாம்.  கேது, ஆண்டு தொடக்கத்தில் மேஷத்தில் உள்ளார். அவர் முயற்சிகளில் தோல்வியை ஏற்படுத்தலாம். ஜூன் 20 அன்று கேது மீனத்திற்கு சென்ற பின் அவரால் வந்த தடையேதும் இருக்காது. ஆனால், உடல் நலக்குறைவை ஏற்படுத்த இடமுண்டு.  இந்த ஆண்டில் பெரும்பாலான முக்கிய கிரகங்கள் சாதகமாக இருப்பதால், நன்மை மேலோங்கும். ஆண்டின் பிற்பகுதியில் கிரகங்களின் மாற்றத்தால், வாழ்வில் தடை பல குறுக்கிட்டாலும், விடாமுயற்சியுடன் செயல்பட்டு வல்லவர் என்பதை நிரூபிப்பீர்கள்.  மொத்தத்தில், இந்த ஆண்டு  நினைத்ததை வெற்றிகரமாக நிறைவேற்றி மகிழ்வீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும். உறவினர் மத்தியில் அவப்பெயர் மறைந்து செல்வாக்கு உயரும். அக்கம் பக்கத்தினரிடம் கவுரவம் மேலோங்கும். ஜூன் மாதத்திற்கு பிறகு குடும்பத்தில் செலவு அதிகரிக்கும். ஆனால் அதை ஈடுகட்டும் வகையில் வருமானம் ஒருபக்கம் வந்து கொண்டேயிருக்கும்.

தொழில், வியாபாரம்: 
தொழில், வியாபாரத்தில் விறுவிறுப்பாகச் செயல்பட்டு ஆதாயத்தை அதிகரிக்கச் செய்வர். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். திட்டமிட்டபடி,  விரிவாக்க முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். புதிய தொழில் முயற்சியில் கால் பதித்து சாதனை படைப்பீர்கள். அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பங்குதாரர் களின் ஒத்துழைப்பு வளர்ச்சிக்கு கைகொடுக்கும். ஜூன்12க்குப் பிறகு, நன்மைகள் குறையத் தொடங்கும். அரசு வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்காமல் போகலாம். யாரையும் நம்பி முக்கிய ஆவணம், பணத்தை ஒப்படைப்பது கூடாது.  கேது சாதகமற்ற நிலையில் இருப்பதால் நிர்வாகச் செலவும் அதிகரிக்கும்.

பணியாளர்கள்:  ஆண்டின் தொடக்கத்தில் பணியாளர்கள் நன்மையை எதிர்பார்க்கலாம். மேலதிகாரிகளின் ஆதரவு நல்ல முறையில் கிடைக்கும். சக ஊழியர்கள் உதவி செய்ய காத்திருப்பர். சிலருக்கு பணி, பதவி உயர்வு கிடைக்க யோகமுண்டு. மாற்று வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்தில் புதிய வேலை கிடைக்கும். ஜூன் மாதத்திற்கு பிறகு பணிச்சுமை அதிகரிக்கும். சகபணியாளர்களால் சிரமத்திற்கு ஆளாக நேரிடும். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

கலைஞர்கள்:  புதிய ஒப்பந்தம் கிடைக்க பெறுவர். அரசு வகையில் பாராட்டு, விருது வந்து சேரும். குரு பெயர்ச்சிக்குப் பிறகு, எதிலும் நிதானம் தேவைப்படும். கடின முயற்சியால் மட்டுமே புதிய ஒப்பந்தம் பெற வேண்டியதிருக்கும்.

பெண்கள்: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவி இடையே அன்பு மேம்படும். கன்னிப் பெண்களுக்கு ஜூன் மாதத்திற்குள் சுபநிகழ்ச்சிகளைச் சிறப்பாக நடத்திட அனுகூலம் உண்டு. புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். விருந்து விழா என அடிக்கடி சென்று வருவீர்கள். உறவினர்கள் வருகையும், அவர்களின் ஒத்துழைப்பும் சந்தோஷத்தை அளிக்கும். ஜூன் மாதத்திற்கு பிறகு உறவினர்கள் மத்தியில் வீண் விரோதம் ஏற்படலாம். எனவே யாரிடமும் அளவாக பேசி உறவை வலுப்படுத்திக் கொள்ளவும்.

மாணவர்கள்: மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு மிகச் சிறப்பானதாக அமையும். விரும்பிய பாடம் கிடைக்கப்பெறுவீர்கள். அடுத்த கல்வி ஆண்டு அக்கறை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். பெற்றோர், ஆசிரியர் வழிகாட்டுதலை ஏற்று நடப்பது நன்மைக்கு வழிவகுக்கும்.

விவசாயிகள்: நல்ல விளைச்சலும், அதற்கேற்ற வருமானமும் இருக்கும். விவசாயப்பணிக்கான பணம் எளிதில் கிடைக்கும். திட்டமிட்டபடி நவீன உழவுக்கருவிகளை வாங்கலாம். வழக்கு விவகாரங்களின் முடிவு உங்களுக்கு சாதகமாக அமையும். ஆண்டின் பிற்பகுதியில் நன்மை குறையத் தொடங்கும்.

பரிகாரம்: அம்பிகைக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஆதரவற்றோருக்கு தானம் அளித்து ஆசி பெற்றால் நன்மை  கிடைக்கும். ஜூன் மாதத்திற்கு பிறகு நவக்கிரகத்தில்  குருபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஏழை  குழந்தைகளின் கல்விச் செலவுக்கு உதவி செய்யுங்கள்.

பரிகாரப் பாடல்:
குறித்தேன் மனத்தில் நின்கோலம் எல்லாம்
நின் குறிப்பறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி வண்டு கிண்டி
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப்பிரான்
ஒரு கூற்றை மெய்யில்
பறித்தேன் குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே.

No comments:

Post a Comment