Saturday 4 January 2014

2014 SIMHAM

Source: www.dailythanthi.com

2014-ம் ஆண்டு புத்தாண்டு பலன்கள்
மகம், பூரம், உத்ரம் 1–ம் பாதம் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: ம, மி, மு, மெ, மோ, ட, டி, டு, டே உள்ளவர்களுக்கும்)
கன்னி–ராகு  எண்ணியதை  முடித்து  வைக்கும்!
கரும்பின் சுவை போன்ற பேச்சும், எறும்பின் சுறுசுறுப்பும் கொண்டு இயங்கும் சிம்ம ராசி நேயர்களே!
புதிய வருடம் பிறக்கப் போகிறது. பொன்னான வாய்ப்புகள் உங்களுக்கு வந்து சேரப் போகிறது. புதிய முயற்சிகளில் எல்லாம் வெற்றி கிடைக்கும் விதத்தில் கிரக நிலைகள் உலா வருகின்றன. புகழேணியின் உச்சிக்கு செல்ல இருக்கிறீர்கள்.
இந்தப் புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் 5–ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு தனாதிபதி புதனும், விரயாதிபதி சந்திரனும் இணைந்திருக்கிறார்கள். அந்த ஸ்தானத்தைக் குரு பார்க்கிறார். எனவே வருடத் தொடக்கத்திலேயே வருமானம் அதிகரிக்கும். என்றாலும் வந்த மறுநிமிடமே செலவாகிவிடலாம்.
யோகம் தரும் செவ்வாய் 2–ல் சஞ்சரிப்பதால் இடம், பூமியால் லாபம் கிடைக்கும். மறைமுகப்பகை மாறி மகிழ்ச்சியை விளைவிக்கும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்          களுக்கு அதிகப் பொறுப்புகள் வந்து ஆட்கொள்ளும்.
நினைத்தால் நினைத்த காரியத்தை உடனடியாக செய்ய வேண்டுமென்று சொல்வீர்கள். முன்கோபம், உங்களுக்கு முன்னேற்றத்தையும் கொடுக்கும். முட்டுக் கட்டையாகவும் இருக்கும்.
இப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்ட உங்களுக்கு சுய ஜாதகத்திலுள்ள கட்டங்களையும், 2014–ம் ஆண்டு புத்தாண்டு கட்டத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து பலன்களை துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.
1.1.2014 முதல் 12.6.2014 வரை
வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன், தனாதிபதி புதனுடன் இணைந்து 5–ம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். எனவே, பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழிலில் மேன்மை உண்டு. தொல்லை தரும் எதிரிகள் விலகுவர். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் பெருகும்.
விரயாதிபதியாக விளங்கும் சந்திரன் வருடத் தொடக்க நாளில் 5–ம் இடத்தில் சஞ்சரித்து குருவால் பார்க் கப்படுகிறார். எனவே, நீண்ட நாட்களாக முடிவடையாத சுபகாரியப் பேச்சுக்கள் இப்பொழுது திடீரென முடிவாகும்.
தொழில் ஸ்தானாதிபதி வக்ரம் பெற்றிருப்பதால் தொழில் மாற்றச் சிந்தனைகள் மேலோங்கும். இதுவரை ஏமாற்றத்தையே அறிந்திராத நீங்கள் இப்பொழுது ஏமாற்றம் காண நேரிடும். பெண் வழிப்பிரச்சினைகள் தலை தூக்கும்.  
உடன்பிறப்புகள் ஏறுக்கு மாறாகப் பேசி இதயத்தை வாட வைக்கலாம்.  தொழில் கூட்டாளிகளை விலக்கிவிட்டு, புதியவர்களைச் சேர்க்க முன்வருவீர்கள். சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும் நேரமிது.
வருடத் தொடக்கத்திலேயே சகாய ஸ்தானத்தில் ராகுவும், பிதுரார்ஜித ஸ்தானத்தில் கேதுவும் இருப்பதால் ஏற்றமும், இறக்கமும் இருக்கும்.
உங்கள் வாழ்க்கை எப்பொழுதும் ஒரே மாதிரியாக உயர்நிலையில் இருக்க அனுகூலம் தரும் அரவு கிரக கோவில்களைத் தேர்ந்தெடுத்து, எண்ணங்களை நிறைவேற வைக்கும் இனிய நாட்களில், பரிகாரங்களைச் செய்து வந்தால் பலன்கிடைக்கும்.
விருச்சிக சனியின் சஞ்சாரம்!
இதுவரை உங்கள் ராசிக்கு 3–ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் இந்தப் புத்தாண்டில் அர்த்தாஷ்டம சனியாக அடியெடுத்து வைக்கிறார். 6–க்கு அதிபதி மற்றும் 7–க்கு அதிபதியாக விளங்கும் சனி நான்கில் சஞ்சரிக்கும்பொழுது, கொஞ்சம் கூடுதலாக கவனத்துடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் அதிக தொல்லைகள் உருவாகும். வருமானப் பற்றாக்குறை அதிகரிக்கும்.
தொழிலில் நண்பர்களால் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். குடும்ப பிரச்சினைகள் அதிகரித்து மனநிம்மதியின்மை ஏற்படுகிறதே என்று நினைத்து கவலைப்படுவீர்கள்.  பொருளாதாரத்தில் சரளமான நிலை இருந்த போதும், வாங்கிப் போட்ட சொத்துக்களை எல்லாம் இப்பொழுது விற்பனை செய்ய முன்வருவீர்கள். வரவைக் காட்டிலும், செலவு கூடும் இந்த நேரத்தில் வாகனங்களையும் மாற்றிக் கொள்வது நல்லது. வாகனப் பழுதுச் செலவுகள் அதிகரிக்கும். தொழில் நிலையங்களை வேறு இடத்திற்கு மாற்ற முன்வருவீர்கள்.
குரு மற்றும் சனியின் வக்ர காலங்கள்!
புத்தாண்டில் குருவும் வக்ரமாகிறார், சனியும் வக்ரமாகிறார். இந்த வக்ர இயக்கத்தால் நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். இரண்டு கிரகங்களும் இரண்டு இடத்து ஆதிபத்யங்களையும் கொண்டிருப்பதால் ஒன்றின் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். மற்றொரு ஆதிபத்யம் சிறப்பாக இயங்க வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். பொதுவாக குடும்ப ஒற்றுமை குறையலாம். குடியிருக்கும் வீட்டால் பிரச்சினைகள் உருவாகலாம். பிள்ளைகள் உங்கள் சொல்லை மீறி எதுவும் செய்யலாம். தொழிலில் புதிய பங்குதாரர்களை இணைத்துக் கொள்வீர்கள்.
சிம்ம ராசியில் பிறந்த பெண்களுக்கு!
இந்தப் புத்தாண்டு உங்களுக்கு எல்லா வகையிலும் வளர்ச்சியைக் கொடுக்கும். நல்ல வாய்ப்புகள் நாளும் வந்து சேரும். குழந்தைச் செல்வங்   களால் பெருமை ஏற்படும். கொடுக் கல்–வாங்கல்கள் திருப்திகரமாக இருக்கும். உச்ச குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 4–ம் இடமான சுக ஸ்தானத்தில் பதிவதால் ஜூன் 13 முதல் சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். தாய்வழி ஆதரவு கிடைக்கும். தடைகள் அகலும். உங்கள் சொல்லுக்கும், செயலுக்கும் மரியாதை கிடைக்கும். தலைமைப் பதவிகள் முதல் தக்க விதத்தில் பொது நலவாழ்வில் புகழ் கூடும்.  
ஆண்டின் கடைசியில் சனிப் பெயர்ச்சிக்குப் பின்னால் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரமாக அமைகிறது. எதிர்பாராத விரயங்கள் அதிகரிக்கும். எடுத்த காரியத்தில் எதிரிகளின் குறுக்கீட்டால் தடைகள் உருவாகும். வருடத் தொடக்கத்தில் குடும்ப ஒற்றுமை பலப்பட்டாலும்,      வருடக்கடைசியில் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். கணவன்–மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படாமலிருக்க அனுசரித்துச் செல்வது நல்லது. வைரவர் வழிபாடு, முறையான சர்ப்ப சாந்தியும் செய்தால் உங்கள் வளர்ச்சிக்கு வழிகாட்டும்.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
ராசிநாதன் சூரியன் என்பதால் ஞாயிறு தோறும் உமாமகேஸ்வரர் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். பவுர்ணமியன்று கிரிவலம் வருவதும் நன்மை தரும். பிறந்த தேதி அடிப்படையில் சிறப்பு வழிபாட்டை மேற்கொள்வதோடு, சிவகங்கை மாவட்டம் வைரவன்பட்டியிலுள்ள மார்த்தாண்ட வைரவரையும் வளரொளிநாதர், வடிவுடையம்மனையும் வழிபட்டு வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்.
நலம்  தரும்  ராகு–கேது  பெயர்ச்சி!
இதுவரை 3–ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு இந்த புத்தாண்டில் தன ஸ்தானம் எனப்படும் 2–ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். எனவே ஜூன் 21–ம் தேதிக்கு மேல் சொல்லை செயலாக்கிக் காட்டுவீர்கள். சுற்றத்தார் போற்றுமளவு முன்னேற்றம் வந்து சேரும். செல்வந்தர்களின் வரிசையில் இடம்பிடிப்பீர்கள். செல்வாக்கும் அதிகரிக்கும்.
கடன்களை எல்லாம் கொடுத்து விட்டு கண்ணியமாக வாழ வேண்டுமென்று விரும்புவீர்கள்.  நாளும், பொழுதும் நல்ல தகவல்கள் வந்து கொண்டேயிருக்கும். படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு திட்டமிட்டபடியே வேலை கிடைக்கும்.
கேதுவின் பலத்தால் அலைச்சல் அதிகரிக்கலாம். அஷ்டமத்து கேது என்பதால் ஆதாயம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். மனதில் இனம் புரியாத கவலை மேலோங்கும். தெய்வத் திருப்பணிகளுக்கு அள்ளிக் கொடுப்பீர்கள். கடல் தாண்டும் முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகளின் தொல்லையால் அடிக்கடி இடமாற்றம் ஏற்படும். முன்னேற்றத்தை முறையாக வரவழைத்துக் கொள்ள ராகு–கேதுக்களுக்கு பிரீதி செய்வது நல்லது.
குருப் பெயர்ச்சிப் பலன்கள்!
புத்தாண்டில் குரு உங்கள் ராசிக்கு 12–ம் இடத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கப் போகிறார். விரய ஸ்தானத்தில் உச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. வரவைக் காட்டிலும் செலவு கூடும்.
பஞ்சம, அஷ்டமாதிபதியான குரு உச்சம் பெறும் பொழுது பிள்ளைகளுக்காக ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உண்டு. எனவே, அவர்களின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாடு சென்று படிப்பைத் தொடர விரும்பும் பிள்ளைகளுக்கு பெரும் தொகையொன்று செலவிட வேண்டிய சூழ்நிலை சிலருக்கு ஏற்படும். திருமண வயதடைந்த பெண் குழந்தைகளுக்கான கல்யாணப் பேச்சுக்கள் கைகூடும்.
குருவின் பரிபூரண பார்வை உங்கள் ராசிக்கு 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிவதால் குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் உயரும். மக்கட் செல்வங்களால் உதிரி வருமானங்கள் பெருகும். அந்நிய தேசத்திலிருந்து அனுகூலச் செய்திகள் வந்து சேரும். இடம், பூமி வாங்கியதில் இருந்த பத்திரப் பதிவில் ஏற்பட்ட தடைகள் அகலும்.
கடைதிறப்பு விழாக்களும், கட்டிடத் திறப்பு விழாக்  களும் செய்து மகிழ்வீர்கள். தாய்வழி ஆதரவு கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் முறையாக வந்து சேரும். மேலதிகாரிகளின் கோபம் மாறும். சென்ற சில மாதங்களாக செயல்பாடுகளில் கிடைக்காத வெற்றி இப்பொழுது கிடைக்கத் தொடங்கும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். உற்சாகத்தோடு ஒவ்வொரு நாளும்  பயணங்களை மேற்கொள்வீர்கள்.

No comments:

Post a Comment