Saturday 4 January 2014

2014 MESHAM மேஷம்

Source: www.dailythanthi.com

அசுவதி, பரணி, கார்த்திகை 1–ம் பாதம் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்)
ஏப்ரல் மாதத்திற்கு மேல் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்!
மகத்தான சாதனை புரிந்து மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கும் மேஷ ராசி நேயர்களே!
நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த புத்தாண்டு பிறக்கப் போகி றது. கேதுவின் ஆதிக்கத்தில் பிறக் கும் இந்தப் புத்தாண்டு உங்களுக்கு கீர்த்தியையும், செல்வத்தையும் அள்ளி வழங்கும் விதத்தில் கிரக நிலைகளைக் கொண்டிருக்கிறது. ஞான    காரகன் கேது உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். தன சப்தமாதிபதி சுக்ரனும் வக்ரம் பெற்றிருக்கிறார். 9,12–க்கு அதிபதியான குருவும் வக்ரம் பெற்றிருக்கிறார். உச்ச சனியின் பார்வையும் உங்கள் ராசியில் பதிகிறது.
இத்தனைக்கும் மத்தியில் பிறக்கும் இந்தப் புத்தாண்டு எண்ணற்ற மாற்றங்களை உங்களுக்கு கொடுக்கப் போகிறது.
திசாபுத்தியும், கிரகங்களும் பலம்பெற்றிருந்தால் உங்களுக்குப் பணத்தேவைகள் பூர்த்தியாகும். பக்கபலமாக இருப்பவர்கள் உதவி செய்வார்கள். இணைந்து வரும் எதிர்ப்புகள் எல்லையை விட்டு ஓடும். மணந்து கொண்ட வாழ்க்கைத் துணையால் மறுமலர்ச்சி உண்டாகும். துணிந்து நீங்கள் செயல்பட்டு தொல்லைகளை அகற்றிக் கொள்ளலாம். இல்லையேல் பணிந்து வணங்கி பரிகாரங்களை செய்து கொள்வது நல்லது.
2014–ம் ஆண்டு கேதுவிற்குரிய ‘7’ எண் ஆதிக்கத்தில் அமைவதால், உங்கள் சுய ஜாதகத்தில் கேதுவின் பலம் மற்றும் ராசிநாதன் செவ்வாய், தனாதிபதி சுக்ரனின் பலம் ஆகியவற்றை எடைபோட்டுப் பார்த்து சுயஜாதகத்தில் பாக்கியாதிபதி நிலையறிந்து அதற்குரிய ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் தேக நலம் சிறப்பாக இருக்கும். செல்வ வளமும் அதிகரிக்கும்.
1.1.2014 முதல் 12.6.2014 வரை
வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே ஞானகாரகன் கேது சஞ்சரிக்கிறார். சப்தம ஸ்தானத்தில் ராகு சனியுடன் கூடிச் சஞ்சரிக்கிறார். ராசிநாதன் செவ்வாய் 6–ல் சஞ்சரித்து விபரீத ராஜயோகத்தை உண்டாக்குகிறார். தனாதிபதி சுக்ரனும், விரயாதிபதி குருவும் வக்ரம் பெற்றிருக்கிறார்கள்.
எனவே, இக்காலத்தில் பணம் வந்த மறுநிமிடமே செலவாகலாம். பக்கபலமாக இருப்பவர்களை பகைத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்தினர்களின் குறைகளை முழுமையாகத் தீர்த்து வைக்க முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் அடிக்கடி தொல்லைகள் ஏற்பட்டு அகலும். ஜென்ம கேதுவின் ஆதிக்கத்தால் பயணங்கள் அதிகரிக்கும், அலைச்சல் கூடும். வேலைப்பளு அதிகரிக்கும்.
ஆரோக்கியம் சீராகவும், ஆதாயம் அதிகரிக்கவும் சனிக்கிழமை தோறும் சனீஸ்வர வழிபாட்டையும், வெள்ளிக் கிழமை தோறும் விநாயகப்பெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். ஜென்ம கேதுவின் ஆதிக்கம் இருப்பதால் பிறரை நம்பி காரியங்களை செய்ய இயலாது. எனவே சர்ப்ப சாந்தி பரிகாரத்தை அனுகூலம் வரும் நாளில் யோகத்தை வரவழைத்துத் தரும் ஸ்தலங்களில் செய்து வழிபட்டு வருவது நல்லது.
சந்தோஷம் தருமா? சனிப்பெயர்ச்சி!
இதுவரை ஏழாமிடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் உச்சம் பெற்று விளங்கினார். அதன் பார்வை உங்கள் ராசியில் பதிந்ததால் காரியத்தடைகளும், கவலைகளும் உங்களுக்கு அதிகரித்திருக்கலாம். அந்த நிலை இனி மாறப்போகிறது. இந்த ஆண்டு வருடக் கடைசியில் 15 நாட்களுக்கு முன்னதாகவே சனிப்பெயர்ச்சி நிகழவிருக்கிறது. 7–ம் இடத்தில் சஞ்சரித்த சனியைக் காட்டிலும் 8–ம் இடத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது கொஞ்சமேனும் அவர் நன்மை செய்வார்.
ஆயினும் இட மாற்றம், ஊர் மாற்றம், உத்தியோக மாற்றம், வீடு மாற்றம், நாடு மாற்றம், வாகன மாற்றம் என ஏதேனும் ஒரு மாற்றத்தை உருவாக்கி அதன் மூலம் நற்பலன்களை உங்களுக்கு வழங்கலாம். இக்காலத்தில் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வதே நல்லது.  
தொடர்ந்து சனிக்கிழமைதோறும் சனி கவசம் பாடி, சனி பகவானை வழிபடுவது நல்லது. உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி பகவான் தொழில் மாற்றங்களைக் கொடுப்பார். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்பட வைப்பார். கூட்டாளிகளால் ஏமாற்றங்களைச் சந்திக்காமலிருக்க அப்போதைக்கப்போது வரும் லாபத்தைப் பிரித்து எடுத்துக் கொள்வது நல்லது.
குரு மற்றும் சனியின் வக்ர காலம்!
குருவின் வக்ர காலத்தில் பாகப் பிரிவினை சுமூகமாக முடியும். பங்காளிப்பகை மாறும். சனியின் வக்ர காலத்தில் தொழிலில் சில ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். அயல்நாடு சென்றவர்கள் தாய் நாடு திரும்புவர். புத்திர ஸ்தானத்தை சனி பார்ப்பதால் பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது.
மேஷ ராசி பெண்களுக்கு!
மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு வருடத் தொடக்கத்தில் தெய்வ பலம் கூடுதலாக இருக்கும். திடீர் தனலாபங்கள் வந்து சேரும். சனியின் பார்வை ராசியில் பதிவதால் இனிய பலன்கள் உங்களுக்கு ஏற்படுவதில் சில இடையூறுகளை சிலர் விளைவிக்கலாம். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும்.
கணவன்–மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தைச் செல்வம் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. சனி–செவ்வாய் சேர்க்கைக் காலத்தில் அனுமன் மற்றும் துர்க்கை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். வருடக்கடைசியில் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் வருவதால் விழிப்புணர்ச்சியோடு செயல்படுவது நல்லது.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
உங்கள் ராசிநாதன் செவ்வாய் என்பதால் அதற்குரிய முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்வதோடு, செவ்வாய்க்கிழமை தோறும் விரத            மிருப்பது நல்லது. பிறந்த தேதி மற்றும் கூட்டுத்தொகைக்குரிய எண்களின் ஆதிக்க நாளில், யோகபலம் பெற்ற நட்சத்திரமும் கூடும் நேரத்தில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது. குறிப்பாக வைத்தீஸ்வரன் கோவில் சென்று பஞ்சார்ச்சனை செய்து வழிபட்டு வருவது நல்லது.
யோகம் தரும் ராகு–கேது பெயர்ச்சி!
மேஷத்தில் சஞ்சரித்து வந்த கேதுவும், துலாத்தில் சஞ்சரித்து வந்த ராகுவும் தன் வான்வழிப் பயணத்தில் பின்னோக்கிச் சென்று கன்னியில் ராகுவும், மீனத்தில் கேதுவுமாக இருக்கப் போகிறார்கள். இது புத்தாண்டில் ஜூன் 21–ம் தேதி நிகழவிருக்கிறது. 6–ல் ராகு இருந்து, குரு கேந்திரத்தில் இருந்தால் அஷ்டலட்சுமி யோகம் என்பார்கள். அந்த அடிப்படையில் 8 லட்சுமிகளும் உங்கள் இல்லத்தில் வந்து குடியேறி, கொட்டும் பண மழையில் நீங்கள் நனைய இந்த ராகு–கேது பெயர்ச்சி வழிவகுக்கும்.
ராகுவின் பார்வை 4, 8, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. இந்த ராகு–கேது பெயர்ச்சியின் பலனால் உங்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் உயர் பதவிகள் கிடைப்பதில் இருந்த தாமதம் மாறும்.
12–ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் புத்திசாலித்தனமாக செயல்பட்டு புதிய வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்வீர்கள். கட்டிடங்களை கட்டி வாடகைக்கு விடவேண்டுமென்ற உங்கள் நோக்கம் நிறைவேறலாம். ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். உறவினர்களின் மனஸ்தாபங்கள் மாறும்.
குதூகலம்  தரும்  குருப்பெயர்ச்சி!
ஆண்டின் தொடக்கத்தில் மிதுனத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான் ஜூன் மாதம் 13–ம் தேதி கடக ராசியில் உச்சம் பெறுகிறார். அர்த்தாஷ்டம குருவாக சஞ்சரிப்பதால் அமைதிக்குறைவு ஏற்படுமோ என்று நீங்கள் நினைக்க வேண்டாம். 9, 12 ஆகிய இடங்களுக்கு குரு அதிபதியாவதால் தந்தை வழியில் தகுந்த நற்பலன்கள் கிடைக்கும். சுபவிரயங்கள் அதிகரிக்கும். குடும்பச்சுமை கூடும்.
‘மன்னவன் 4–ல் நின்றால் மலைபோல் துயர்வந்தாலும், கண் எதிரில் பனியாய் மாறும், கச்சிதமாய் நோய்கள் தீரும்’ என்பார்கள். எனவே, உடல்நல குறைபாடுகள் அகன்று உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். கடன் சுமை குறைய புதிய வழிபிறக்கும்.
குருவின் பரிபூரண பார்வை 8, 10, 12 ஆகிய இடங்   களில் பதிகிறது.  அதன் பலனால் சிக்கல்கள் விலகும். சிரமங்கள் தீரும். அந்த அடிப்படையில் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.
சென்ற குருப்பெயர்ச்சியில் ஏற்பட்ட இழப்புகளை எல்லாம் இப்பொழுது ஈடுகட்டும் வாய்ப்பு உருவாகலாம். உத்தியோகத்தில்  நீங்கள் நினைத்த இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம்.
குருவின் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிவதால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். கூட்டாளிகள் ஏமாற்றி விட்டார்களே என்று கவலைப்பட வேண்டாம். புதிய தொழில் தொடங்கும் திட்டங்களை அரங்கேற்றம் செய்வீர்கள்.
குருவின் பரிபூரண பார்வை 12–ம் இடத்தில் பதிவதால் பயணங்களால் பலன் கிடைக்கும். அன்னிய தேசத்தில் இருந்து அனுகூலச் செய்தி வந்து சேரும். வருமானத்தை அசையாத சொத்துக்களாக மாற்றி   அமைத்துக் கொள்ள முன்வருவீர்கள்.
வாகன ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் வாகன மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். உங்களுக்கு அதிர்ஷ்ட எண் ஆதிக்கத்தில், எண்கணித அடிப்படையில் வண்ணங்களும், எண்களும் யோகம் தரும் விதத்தில் அமைந்தால் அந்த வாகனத்தை எடுத்துச் செல்லும் இடங்களில் எல்லாம் காரிய வெற்றி ஏற்படும். குரு வழிபாடு குதூகலம் தரும்.

No comments:

Post a Comment