Friday 30 December 2011

New Year Rasi Palan - 2012 - Kanni


எறும்பைப்போல் சுறுசுறுப்பும் எதுகை, மோனையான பேச்சும் சிந்தனை ஆற்றலும்,பகுத்தறிவுத் திறனும் கொண்ட நீங்கள், நல்ல நிர்வாகியாகவும் திகழ்வீர்கள்.   உங்களின் பிரபல யோகாதிபதி சுக்கிரன் 5ம் வீட்டில் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதையும் சாதித்துக் காட்டும் மன வலிமை பிறக்கும். இதுவரை வராமல் வெளியில் நின்ற தொகை கைக்கு வரும். கனிவான பேச்சால் காரியம் முடிப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் பிறக்கும். மனைவி வழியில் இருந்த பிணக்குகள் நீங்கும். பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். பிள்ளைகளுக்காக சொத்து சேர்ப்பீர்கள்.

 
அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் புது வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல மணமகன் அமைவார். பாதியிலேயே நின்றுபோன வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். உங்கள் ராசியை சந்திரன் பார்ப்பதால் புத்துணர்ச்சி ததும்பும். எதிலும் ஆர்வம் பிறக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். 16.5.2012 வரை உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் குரு மறைந்திருப்பதால் பணம் எவ்வளவு வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். என்றாலும் சமாளிப்பீர்கள். சிலரால் வீண்பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள், எச்சரிக்கை தேவை.

  
17.5.2012 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் அமர்வதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும்.  குழந்தை வரம் வேண்டி கோயில் கோயிலாக அலைந்தீர்களே, கவலை வேண்டாம்; அழகான வாரிசு உண்டாகும். 


புது வேலைக்கும் முயற்சி செய்தீர்களே! இதைவிட அதிக சம்பளம், சலுகையோடு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். ஏளனமாக பேசியவர்கள் எல்லாம் இனி உங்களை பாராட்டுவார்கள். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். வெகுநாள் கனவான புதிய நிலம், வீடு வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்தை சீரமைப்பீர்கள். தாய்வழியில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். எதிர்பார்த்து காத்திருந்த வெளிநாடு பயணம் 
சாதகமாக அமையும்.        

    
செவ்வாய் வருடம் ஆரம்பிக்கும்போதிலிருந்து 22.6.2012 வரை 12ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளால் அவ்வப்போது அலைச்சலும், டென்ஷனும் இருக்கும். அவர்களால் ஆதாயமும் உண்டு. வழக்கில் அவசர முடிவுகள் வேண்டாம். 23.6.2012க்கு பின்னர் செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் விலகும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சொத்துப் பிரச்னை தீரும். 


வருடம் பிறக்கும்போது உங்கள் ராசிக்கு 3ல் ராகு அமர்ந்திருப்பதால் புதுச் சொத்து வாங்குவீர்கள். பெரிய பதவியில் அமர்வீர்கள். சவால்களை சமாளிக்கும் மனோபலம் அதிகரிக்கும். நாடாளுபவர்கள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். இளைய சகோதர வகையில் இருந்த மனத்தாங்கல் நீங்கும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். வழக்குகள் சாதகமாகும். ஷேர் மூலம் பணம் வரும். வேற்று மதம், மொழி, இனத்தவரால் திடீர் திருப்பம் உண்டாகும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். 


9ம் வீட்டில் கேது நிற்பதால் தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். ஆழ்ந்த உறக்கம் வரும். தந்தையாருக்கு நெஞ்சு வலி, மூட்டு வலி வந்துபோகும். அவருடன் மனத்தாங்கலும் வந்து நீங்கும். அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல வேண்டி வரும். 1.12.2012 முதல் உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் ராகுவும், 8ம் வீட்டில் கேதுவும் நுழைவதால் பேச்சில் தடுமாற்றம், விரக்தி, ஏமாற்றம் வந்து போகும். யாரையும் நம்பி எந்த முடிவும் எடுக்க வேண்டாம். 


சனிபகவான் ராசிக்கு 2ம் வீட்டில் அமர்ந்து பாதச் சனியாக தொடர்வதால் வீண் அலைச்சல், டென்ஷன் வந்துபோகும். ஆனால், யோகாதிபதி சனி உச்சமாகி அமர்வதால் திடீர் பணவரவு, செல்வாக்கு எல்லாம் உண்டு. இருந்தாலும் வரவுக்கு மிஞ்சிய செலவுகளும் இருக்கத்தான் செய்யும்.  சில விஷயங்களுக்கு உணர்ச்சிவசப்படாமல் அறிவு பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். 


ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். வெளிமாநில புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவீர்கள். பார்வைக் கோளாறு, பல் வலி வந்துபோகும். கர்ப்பிணிப் பெண்கள் நீண்டதூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பணம், நகையை கவனமாகக் கையாளுங்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். 


சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்குள்ளேயே ஜென்மச் சனியாக  அமர்வதால் இக்கால 
கட்டத்தில் மனஇறுக்கம், ஏமாற்றம், வீண் விரயம், ஒருவித படபடப்பு, நம்பிக்கையின்மை வந்துபோகும்.கன்னிப் பெண்களே! தடைபட்டுக் கொண்டிருந்த கல்யாணம் கூடி வரும். இனி உங்கள் ரசனைக்கேற்ற வாழ்க்கைத்துணை அமைவார். விடுபட்ட பாடத்தில் வெற்றி பெறுவீர்கள். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். முகப்பரு, தோலில் நமைச்சல், கனவுத் தொல்லை வந்து நீங்கும்.


மாணவர்களே! படிப்பைத்தவிர மற்றதில் கவனம் செலுத்த வேண்டாம். பெற்றோரின் அறிவுரையை அலட்சியப்படுத்தாதீர்கள். 
வியாபாரிகளே! தொழிலில்  போட்டியாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். மே, ஜூன், ஜூலை, நவம்பர் மாதங்களில்  திடீர் திருப்பங்களும் அதிரடி லாபங்களும் உண்டாகும். 

கடையை வசதியான இடத்திற்கு மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். ஹோட்டல், புரோக்கரேஜ், கமிஷன், எலக்ட்ரிக்கல் வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். புதிய பங்குதாரர்களையும் 
சேர்ப்பீர்கள். உத்யோகஸ்தர்களே! உங்களைவிட தகுதி குறைந்தவருக்குக்கூட பதவி உயர்வு கிடைத்ததே! சம்பள உயர்வு இல்லாமல் அலைக்கழிக்கப்பட்டீர்களே! சக ஊழியர்களாலும் தர்ம சங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டீர்களே! 

இனி இந்த அவலநிலை மாறும். எல்லோரும் மதிப்பார்கள். ஏழரைச் சனி இருப்பதால் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். மூத்த அதிகாரிகளைப் பற்றி குறை கூறாதீர்கள். முக்கிய பதிவேடுகளை கவனமாகக் கையாளுங்கள். அநாவசியமான விடுப்புகளை இனி குறையுங்கள். காலம் தாழ்த்தாமல் பணிகளை விரைந்து முடிப்பது நல்லது. சக ஊழியர்களை அரவணைத்துப் போங்கள். கணினி துறையினர்களுக்கு புது வாய்ப்புகள் வரும். என்றாலும் யோசித்து ஏற்பது நல்லது.


அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்திற்கு தெரிவியுங்கள். உங்களின் பொறுப்புணர்வை மேலிடம் பாராட்டும். சகாக்கள் மத்தியில் மதிப்பு கூடும். கலைத்துறையினரே! ஒருபுறம் விமர்சனம் இருந்தாலும் மற்றொரு புறம் கடின உழைப்பால் சாதித்துக் காட்டுவீர்கள். வருமானம் உயரும். விவசாயிகளே! வங்கியில் கடன் கிடைக்கும். அவ்வப்போது வீண் செலவுகளை வைத்த மோட்டார் பம்புசெட்டை புதிதாக மாற்றுவீர்கள்.இந்தப் புத்தாண்டு தத்தளித்துக் கொண்டிருந்த உங்களை தலை நிமிர வைப்பதுடன்  புகழையும் பணத்தையும் தருவதாக அமையும்.
பரிகாரம்:
சென்னை-மயிலாப்பூரில் அருள்பாலிக்கும் கபாலீஸ்வரருக்கு தும்பைப் பூ மாலை அணிவித்து வணங்குங்கள். முடிந்தால் ரத்த தானம் செய்யுங்கள்.

No comments:

Post a Comment