Friday 30 December 2011

New Year Rasi Palan - 2012 - Vrichigam


பணத்திற்கும் பகட்டான வாழ்க்கைக்கும் மயங்காத உங்களை, பகடைக் காயாக உருட்டினாலும் கொண்ட கொள்கையிலிருந்து மாறுபட மாட்டீர்கள். நீதி நியாயத்திற்காக குரல் கொடுக்கும் நீங்கள், அடிபட்டவர்களை அரவணைப்பீர்கள். தளராத தன்னம்பிக்கையால் தடைகளையும் படிக்கட்டுகளாக்கி பயணிப்பவர்களே!சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் எதையும் சமாளித்து வெற்றி பெறும் நெஞ்சுறுதி பிறக்கும். இயலாத காரியங்களையும் இங்கிதமான பேச்சால் முடித்துக் காட்டுவீர்கள். 


பிரபலங்கள் உதவுவார்கள். செலவுகள் உங்களை தொடர்ந்து வந்தாலும் அதற்கேற்ற வருமானமும் உண்டு. குடும்பத்தில் ஓரளவு நிம்மதி உண்டு. பிள்ளைகளை அவர்களின் எண்ண ஓட்டத்திலேயே சென்று பிடிப்பது நல்லது. அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். சிலர் வீடுமாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். உங்கள் ராசிநாதனான செவ்வாய் வருடம் ஆரம்பிக்கும் போதிலிருந்து 22.6.2012 வரை 10ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் புதிய பொறுப்பும் பதவியும் தேடி வரும். 


வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளின் நட்புறவு கிட்டும். ஒரு சொத்தை விற்று பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் தீர்வுக்கு வரும். புதிதாக வீடு, வாகனம் வாங்குவீர்கள். சகோதர, சகோதரிகள் உதவியாக இருப்பார்கள். மனைவிவழி உறவினர்களால் உதாசீனப்படுத்தப்பட்டீர்களே! இனி மாமனார், மாமியார், மச்சினர் போன்றோர் மதிப்பார்கள். தாய்வழியில் மதிப்பு, மரியாதை கூடும். உங்களை அழுத்திக் கொண்டிருந்த தாழ்வு மனப்பான்மை விலகும். 16.5.2012 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் மறைந்திருப்பதால் சில நேரங்களில் வீண் பழி, ஏமாற்றம், அலைச்சல், டென்ஷன், வேலைச்சுமை, செரிமானக் கோளாறு என வந்து நீங்கும். 

உள்மனதில் ஒருவித போராட்டம் எழும்பும். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக வழக்குகள் வேண்டாமே. என்னதான் திட்டமிட்டு செயல்பட்டாலும் எந்த காரியமானாலும் இரண்டு மூன்று முறை அலைந்துதான் முடிக்க வேண்டிவரும். எதிரிகளில் சிலர் நண்பர்களாவார்கள். தங்க 
ஆபரணங்கள், வீட்டுப் பத்திரங்களை கவனமாகக் கையாளுங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். 

அதிக வட்டிக்கு வாங்கிய கடனில் ஒரு பகுதியை கொடுத்து முடிப்பீர்கள். சந்தேக புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டிவரும். 
உறவினர்கள், நண்பர்களுடன் கொஞ்சம் இடைவெளிவிட்டு பழகுவது நல்லது. ஆனால் 17.5.2012 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் நுழைவதால் திடீர் திருப்பங்கள் உண்டாகும். சோர்ந்து கிடந்த நீங்கள் உற்சாகமாவீர்கள். எதிலும் ஆர்வம் பிறக்கும். பாதியிலேயே நின்றுபோன வேலைகள் முழுமையடையும். வீட்டில் தாமதமான சுப நிகழ்ச்சிகள் இனி கோலாகலமாக நடக்கும். 

கணவன்-மனைவிக்குள் இருந்த சந்தேகம், ஈகோ பிரச்னைகள் நீங்கும். குழந்தை பாக்யம் கிட்டும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமையும். மகளுக்கு இருந்த கூடாப் பழக்கம் விலகும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். தாயாருக்கு இருந்த நெஞ்சு வலி நீங்கும். பூர்வீகச் சொத்திலிருந்த பிரச்னை தீரும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. தள்ளிப்போன வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும். 


வருடம் பிறக்கும் போது ராசிக்குள் ராகு நிற்பதால் தலைவலி, மயக்கம், குமட்டல், நாக்கில் கசப்பு என வந்து நீங்கும். சில சமயங்களில் முன்கோபத்தால் எடுத்தெறிந்து பேசுவீர்கள். நேரம் கிடைக்கும் போது யோகா, தியானம் செய்யத் தவறாதீர்கள். எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. 7ம் வீட்டில் கேது அமர்வதால் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி சண்டை வரும். உங்கள் இருவருக்குள் பிரச்னையை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள். 

மற்றவர்கள் சொல்வதை கேட்டு மனைவி, மனைவிவழி உறவினர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். 1.12.2012 முதல் உங்கள் ராசிக்கு 6ல் கேதுவும் 12ல் ராகுவும் நுழைவதால் மன தைரியம் கூடும். பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். இளைய சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். திடீர் பணவரவு உண்டு. அரசு அதிகாரிகள் நண்பராவார்கள். 
சனிபகவான் ராசிக்கு 12ம் வீட்டில் விரயச் சனியாக தொடர்வதால் வருங்காலத்தைப் பற்றிய பயம் வந்து நீங்கும். பழைய கடன் பிரச்னையை எவ்வாறு சமாளிக்கப் போகிறோமோ என்று கவலைப்படுவீர்கள். 

பணவரவு ஓரளவு இருக்கும். ஆன்மிகவாதிகள், சித்தர்களின் ஆசி கிடைக்கும். இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. வாகனங்களை இயக்குவதில் கவனம் தேவை. 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் இக்கால கட்டத்தில் திடீர் பணவரவு உண்டு. வேலை கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள்.கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தால் முடங்கிப் போனீர்களே, இனி காதல் கைகூடும். தோலில் நமைச்சல், தேமல் நீங்கும். பெற்றோரின் ஆலோசனையை ஏற்பீர்கள். வேலை கிடைக்கும். கண்ணுக்கழகான கணவர் வந்தமைவார். போலியாக பழகியவர்களிடமிருந்து ஒதுங்குவீர்கள்.


மாணவர்களே! ஏனோ தானோ என்று படிக்காமல் இனி ஆர்வத்துடன் படிப்பீர்கள். கணிதம், அறிவியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். வகுப்பறையில் ஆசிரியர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். வியாபாரிகளே! வட்டிக்கு வாங்கி புதிய முதலீடு போட்டு நஷ்டப்பட்டீர்களே! உங்களுக்கு பின்னால் தொழில் தொடங்கியவர்கள் கூட முன்னேற்றமடைந்தார்களே! இனி உங்களின் மாறுபட்ட அணுகு
முறையால் லாபமீட்டுவீர்கள். 

ஜனவரி, ஜூன், ஜூலை, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் லாபம் அதிகரிக்கும். மருந்து, கமிஷன், வாகன உதிரி பாகங்களால் ஆதாயமுண்டு. வாடிக்கையாளர்களை கவர புது சலுகைகளை அறிவிப்பீர்கள். ஆகஸ்ட் மாதத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வேலையாட்களின் தொந்தரவு குறையும். கூட்டுத் தொழிலில் பிரச்னைகள் ஓயும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.உத்யோகஸ்தர்களே! ஓடி ஓடி உழைத்தும் உங்களை உதாசீனப்படுத்தியதுடன், கெட்டப் பெயரும்தானே மிஞ்சியது. 

இனி அந்த அவலநிலை மாறும். மேலதிகாரி உங்கள் ஆலோசனையை ஏற்பார். ஜூன், ஜூலை மாதங்களில் பதவி உயர்வு, சம்பள உயர்வு தடையில்லாமல் கிடைக்கும். சக ஊழியர்களுடன் இருந்த மனப்போர் நீங்கும். கணினி துறையினருக்கு விரும்பிய இடத்திற்கு டிரான்ஸ்பர் கிடைக்கும்.  அரசியல்வாதிகளே! சிலர் உங்களைப் பற்றி  தவறான வதந்திகளை மேலிடத்திற்கு கொண்டு செல்லக்கூடும். விழிப்புடன் இருங்கள். 
கலைத்துறையினரே! பழைய நிறுவனங்களில் இருந்து புதிய வாய்ப்புகள் வரும். கிசுகிசுக்கள் ஓயும். 


போராடி படைப்புகளை வெளியிடுவீர்கள்.
விவசாயிகளே, கூட்டுறவு வங்கியில் லோன் கிடைக்கும். பழைய கடனை அரசு தள்ளுபடி செய்யும். நெல், கரும்பு உற்பத்தியால் லாபமடைவீர்கள். 
இந்தப் புத்தாண்டு முனகிக் கொண்டிருந்த உங்களை முழக்கமிட வைப்பதுடன், வாழ்வின் இரண்டாவது அத்தியாயத்தை தொடங்குவதாகவும் அமையும்.
பரிகாரம்:
மயிலாடுதுறை-கும்பகோணம் பாதையில் உள்ள திருவாடுதுறை தலத்தில் அருளும் கோமுக்தீஸ்வரரையும் திருமூலர் ஜீவசமாதியையும் சனிக்கிழமையன்று வணங்கி வாருங்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுங்கள்.

No comments:

Post a Comment