Wednesday 21 December 2011

Sani Peyarchi Palan 2011 - Kumba

குப்பை, கூவம், ஓடை, ஆறு எல்லாம் வந்து கலந்தாலும் கொஞ்சமும் உவர்ப்புத் தன்மை மாறாத கடலைப்போல இழப்பு, ஏமாற்றம், தோல்வி, துக்கம் என எது வந்தாலும் ஏற்றுக் கொள்பவர்களே. இதுவரை உங்கள் ராசிநாதனான சனி
பகவான், ராசிக்கு 8ல் அஷ்டமத்துச் சனியாக நின்று கொண்டு உங்களை ஆட்டிப்படைத்தாரே. எல்லோரிடமும் கெட்ட பெயரையும் ஏச்சு, பேச்சுக்களையும் சம்பாதித்ததுடன், பல பிரச்னைகளிலும் சிக்க வைத்தாரே. 

இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள காலகட்டங்களில் 9ம் வீட்டில் உச்சம்பெற்று வலுவாக அமர்வதால் ‘நமக்கேன் வம்பு’ என்று ஓரமாய் ஒதுங்கியிருந்த நீங்கள், இனி எல்லாவற்றிலும் முன்னிலை வகிப்பீர்கள். தோல்வி பயத்தால் துவண்டு இருந்த உங்கள் மனதில் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை துளிர்விடும். உங்கள் ராசிநாதன் யோக வீட்டில் வலுவாக அமர்வதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். 

இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து நிம்மதி இல்லாமல் போனதே, இனி ஓரளவு வாஸ்து, வசதியான வீட்டிற்கு மாறுவீர்கள். வார்த்தையால் வடிக்க முடியாத கஷ்டங்களை எல்லாம் அனுபவித்தீர்களே! மனதிற்குள் நிம்மதியில்லாமல், எந்த ஒரு சந்தோஷத்தையும் அனுபவிக்க முடியாமல் எப்போதும் ஏதேனும் ஒரு கவலை உங்களை வாட்டி வதைத்ததே! உங்களைவிட தகுதி குறைந்தவர்களுக்கெல்லாம் கைகட்டி பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருந்தீர்களே! இனி அந்த அவல நிலையெல்லாம் மாறும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். 


கணவன்&மனைவிக்குள் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். உங்களுக்குள் கலகமூட்டியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.  உங்கள் பணத்தை ஏமாற்றியவர்கள் இப்போது திருப்பித் தருவார்கள். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். ஏளனமாகவும், இழிவாகவும் திட்டியவர்கள் எல்லாம் இனி உங்களை பாராட்டுவார்கள். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளத் தயங்கினீர்களே! 

இனி எதிலும் முன்னிலை வகிப்பீர்கள். நீண்டகால லட்சியமாக சொந்த வீடு வாங்க வேண்டும் என்றிருந்தீர்கள் அல்லவா, அது இப்பொழுது நிறைவேறும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பங்காளிப் பிரச்னை தீரும். ஆனால் தந்தைக்கு ரத்த அழுத்தம், முதுகு, முழங்கால் வலி, சிறுசிறு அறுவை சிகிச்சை, அவருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். 


பிதுர்வழி சொத்துப் பிரச்னைகள் தலைதூக்கும். பணம் வந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். பருமனாக இருந்த நீங்கள், பார்ப்பதற்கு அழகாவீர்கள். சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் அமர்வதால் இக்கால கட்டத்தில் இனந்தெரியாத கவலை, ஏமாற்றம், பொருள் இழப்பு, வாகன விபத்து வந்து செல்லும். 
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்திற்கான அதிபதியும், ஜீவனாதிபதியுமான செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.2011 முதல் 8.11.2012 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் கம்பீரமாகப் பேசி காரியம் முடிப்பீர்கள்.  புது பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். என்றாலும் 4.2.2012 முதல் 22.6.2012 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனிபகவான் வக்ரமடைவதால் அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். 

தன் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணி முழுமையடையும். தாய்வழியில் ஆதரவு பெருகும்.     
9.11.2012 முதல் 11.12.2013 வரை மற்றும் 19.5.2014 முதல் 10.9.2014 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், இக்கால கட்டத்தில் நவீன மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை 
மாற்றுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். மேல்மட்ட அரசியல்வாதிகளின் தொடர்பு கிடைக்கும். திருமணத்தடை நீங்கும். வேற்றுமதத்தினர், நாட்டினர் உதவுவார்கள். 


12.12.2013 முதல் 18.5.2014 வரை மற்றும் 11.9.2014 முதல் 16.12.2014 வரை உங்கள் தனாதிபதியும்&லாபாதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்கால கட்டங்களில் இழுபறிநிலை மாறும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். 

ஷேர் மூலம் லாபமடைவீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 3ம் வீட்டை பார்ப்பதால் திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வீடு, வாகன வசதிகள் பெருகும். சனிபகவான் உங்களின் 6ம் வீட்டை பார்ப்பதால் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். 

புது சொத்து சேரும். நிலுவையிலிருந்த வழக்கு வெற்றியடையும். சனிபகவான் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. அத்தை, மாமா வகையில் ஆதரவு பெருகும்.
இல்லத்தரசிகளே! வருங்காலத்தை மனதில் கொண்டு தங்க ஆபரணங்களை வாங்கிச் சேர்ப்பீர்கள்.  மாமனார், மாமியாருடனான கருத்து மோதல்கள் நீங்கும். அலுவலகம் செல்லும் பெண்களே! நிரந்தர வேலையில்லாமல் அடிக்கடி மாறிக் கொண்டிருந்தீர்களே! இனி பணியில் நிரந்தரமாக்கப்படுவீர்கள். 

கன்னிப் பெண்களே! வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு சில வேதனைகளை சந்தித்தீர்களே! அந்தநிலை மாறும். தன்னுடன் படித்தவர்களுக்கெல்லாம் திருமணம் முடிந்து விட்டதே! நமக்கு எப்போது முடியுமோ என்று கலங்கினீர்களே! இனி விரைவிலேயே கெட்டி மேளம்தான். கசந்த காதல் இனிக்கும். மாணவ&மாணவிகளே! உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். ஆசிரியரின் அன்பைப் பெறுவீர்கள். 

வியாபாரிகளே! மற்றவர்களின் பேச்சைக் கேட்டு தவறாக முதலீடு செய்து கையை சுட்டுக் கொண்டீர்களே! இனி சந்தை நிலவரம் அறிந்து புது சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். தடைபட்ட ஒப்பந்தங்கள் தேடிவரும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். வங்கியில் வாங்கியிருந்த கடனை ஒருவழியாக கட்டி முடிப்பீர்கள். கெமிக்கல், இரும்பு, பாசுமதி அரிசி, எண்ணெய் வகைகளால் லாபம் உண்டு. 

உத்யோகத்தில் எந்த மதிப்பும், மரியாதையும் இல்லாமல் ஒரு அடிமையைப்போல் வேலை பார்த்தீர்களே! உங்களின் பணியில் திருப்தியில்லை என்று அடிக்கடி உயரதிகாரி புலம்பித் தள்ளினாரே, இனி உங்கள் கை ஓங்கும். உங்களை புரிந்து கொள்ளும் அதிகாரி வந்து சேருவார். உங்களைப் பற்றிய தவறான கருத்துக்கள் விலகும். புது வாய்ப்புகள் தேடிவரும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பழைய சம்பள பாக்கிகளும் வந்து சேரும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து புதிய வேலைகள் வந்து அமையும். சக ஊழியர்களின் தொந்தரவுகள் விலகும். 

அரசியல்வாதிகளே! மாநில அளவில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தலைமையின் வாரிசுகள் உங்களுக்கு தனிப்பட்ட வகையில் உதவுவார்கள்.  கலைஞர்களே! ஏச்சுப் பேச்சிலிருந்து விடுபடுவீர்கள். வீண் வதந்திகளும் அவப் பெயர்களும் நீங்கும். புதிய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். சம்பளப் பாக்கி கைக்கு வரும்.விவசாயிகளே! நிலத் தகராறால் கோர்ட், கேஸ் என்று போனால் வெற்றி உங்களுக்குத்தான். மகசூல் பெருகும். கூட்டுறவு வங்கி கடனுதவி கிடைக்கும். இந்த சனி மாற்றம் உங்களை தலை நிமிர வைப்பதுடன், நீண்ட நாள் ஆசைகளையும் நிறைவேற்றுவதாகவும் அமையும். 
பரிகாரம்:
விழுப்புரத்திலி ருந்து திருக்கோவிலூர் செல்லும் பாதையிலுள்ள கல்பட்டு எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசாந்த சனீஸ்வரரை, புனர்பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். வாய் பேச இயலாதவர்களுக்கு உதவுங்கள். வாழ்வில் வளம் பெருகும்.

No comments:

Post a Comment