Friday 30 December 2011

New Year Rasi Palan - 2012 - Simham


காய்த்த மரம் வளைந்து நிற்கும்; கல்லடியும்படும் என்பதை அறிந்த நீங்கள், ஏச்சுப் பேச்சுக்கள் எத்தனை வந்தாலும் எடுத்த காரியத்தை முடிக்காமல் விடமாட்டீர்கள். தன்மானம் மிக்க நீங்கள், தலைவனாக இருந்தாலும் தவறு செய்துவிட்டால் தட்டிக் கேட்கத் தயங்கமாட்டீர்கள். 
உங்கள் யோகாதிபதி செவ்வாய் உங்கள் ராசியிலேயே அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் இனி வெற்றிப் பாதையில் பயணிப்பீர்கள். வீடு, மனை வாங்க முயற்சி செய்வீர்கள். வாடிய முகம் மலரும். 

சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் வெற்றியடையும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பழைய சொந்த-பந்தங்கள், நண்பர்கள் மதிப்பார்கள். பிள்ளைகளிடமிருந்த பிடிவாத குணம் நீங்கும். உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். உங்களுக்கு 8வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். அவ்வப்போது பணப் பற்றாக்குறையும் வரும். என்றாலும் சமாளித்து விடுவீர்கள். 

குடும்ப அந்தரங்க விஷயங்களையெல்லாம் வெளியில் சொல்லி ஆறுதல் தேட வேண்டாம். சுக்கிரன் 6ல் மறைந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். 16.5.2012 வரை குருபகவான் ராசிக்கு 9ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பணப்
புழக்கம் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். சொத்து வாங்க பாதி பணம் தந்து மீதி பணம் தேடினீர்களே! இனி அது கிடைக்கும். 

நெஞ்சு வலியால் சோர்ந்திருந்த தந்தையாரின் உடல் நிலை சீராகும். பேச்சு வார்த்தையில்லாமல் தனித்திருந்த அப்பா இனி உங்களுடன் சேர்ந்து கொள்வார். வங்கியில் வாங்கியிருந்த கடனை அடைப்பீர்கள். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். கல்யாணம், காதுகுத்து, மஞ்சள் நீராட்டு, கிரகப் பிரவேசம் என பல விசேஷங்களிலும் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும். நாடாளுபவர்கள் உதவுவார்கள்.

 
கோயில் கும்பாபிஷேக திருப்பணி கமிட்டியில் இடம் பிடிப்பீர்கள். அதிக மைலேஜ் தரக் கூடிய வாகனம் வாங்குவீர்கள். ஆனால் 17.5.2012 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் அமர்வதால் எதிலும் அலட்சியமாக இல்லாமல் முன்யோசனையுடன் செயல்படப் பாருங்கள். அடுத்தவர்களை விமர்சித்துப் பேசுவதை நிறுத்துங்கள். வறட்டு கௌரவத்திற்காக ஆடம்பரச் செலவுகள் செய்து கொண்டிருக்காதீர்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் பாக்கி வைக்காதீர்கள். யாருக்கும் கேரண்டர் கையெழுத்திடாதீர்கள். 

பிள்ளைகளின் நட்பு வட்டங்களை கண்காணியுங்கள். முக்கிய பணிகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. உத்யோகத்தில் அடிக்கடி இடமாற்றம் வரும். அவசரப்பட்டு வேறு நிறுவனத்திற்கு மாற வேண்டாம். அரசு அங்கீகாரம் இல்லாத வங்கிகளில் வைப்புத் தொகை வைக்க வேண்டாம். செவ்வாய் வருடம் ஆரம்பிக்கும் போதிலிருந்து 22.6.2012 வரை ராசிக்குள்ளேயே வக்ரமாகி நிற்பதால் சில நேரங்களில் எதிலும் ஆர்வமில்லாமல் போகும். அவ்வப்போது கோபப்படுவீர்கள். 23.6.2012க்கு பின்னர் செவ்வாய் சாதகமான 
வீடுகளில் செல்வதால் மனஇறுக்கம் விலகும். 


புத்துணர்ச்சி பெருகும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த பிரச்னைகள் நீங்கும். வருடம் பிறக்கும்போது ராகு 4ம் வீட்டில் நிற்பதால் தாயாருக்கு சின்னச் சின்ன அறுவை சிகிச்சைகள், மூட்டுவலி வந்து நீங்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் மீண்டும் தலை தூக்கும். தாய்மாமன் வகையில் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். சகோதரர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். கேது 10ம் வீட்டில் தொடர்வதால் மறைமுக எதிர்ப்பு, உத்யோகத்தில் வேலைச்சுமை, ஒருவித படபடப்பு, கண் எரிச்சல், ஒற்றைத் தலைவலி வந்து நீங்கும். 

ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். அரசாங்க விஷயத்தில் அலட்சியமாக இருந்து விடாதீர்கள். பழைய கசப்பான சம்பவங்கள் அவ்வப்போது மனதை வாட்டும். உங்கள் மீது சிலர் பழி சுமத்துவார்கள். 1.12.2012 முதல் உங்கள் ராசிக்கு 3ல் ராகுவும் 9ல் கேதுவும் நுழைவதால் வழக்கு விரைந்து முடியும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை தந்து முடிப்பீர்கள். வெளிநாட்டிலிருப்பவர்களால் உதவியுண்டு. தந்தைவழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும்.


சனிபகவான் உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் அமர்ந்திருப்பதால் சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடிக்கும் வல்லமை பிறக்கும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர்கள். அனுபவ அறிவை பயன்படுத்தி சில பிரச்னைகளுக்கு யதார்த்தமான தீர்வு காண்பீர்கள். வேற்றுமதத்தினர், மொழியினர் உதவுவார்கள். வழக்கால் பணம் வரும். ஆனால், சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் பாதச் சனியாக அமர்வதால் சிறுசிறு விபத்துகள், குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். 

  
கன்னிப் பெண்களே! நிஜம் எது நிழல் எது என்பதை உணர்வீர்கள். நீங்கள் நினைத்தது நிறைவேறும். உங்கள் ரசனைக்கேற்ற மணமகன் வந்தமைவார். கல்யாணம் சிறப்பாக முடியும். மாதவிடாய்க் கோளாறு, தலைச்சுற்றல், தூக்கமின்மை நீங்கும். தாயாருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். மாணவர்களே! தேர்வு நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள். கணிதம், அறிவியல் சம்பந்தப்பட்ட பாடங்களில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். ஓவியம், கவிதை, கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு, பாராட்டு பெறுவீர்கள். நல்ல நட்புச் சூழல் உருவாகும். 


வியாபாரிகளே! சந்தை நிலவரம் அறிந்து புது கொள்முதல் செய்வீர்கள். புதிய பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். கடையை விரிவுபடுத்தி அழகு
படுத்துவீர்கள். ஹோட்டல், கெமிக்கல், ஏற்றுமதி-இறக்குமதி, மர வகைகளால் அதிக லாபமடைவீர்கள். அனுபவமுள்ள வேலையாட்கள் அமைவார்கள். சிலரை விசாலமான இடத்திற்கு மாற்றுவீர்கள். புதிதாக முதலீடு செய்யலாம். ஜனவரி, மே, ஜூன் மாதங்களில் வியாபாரம் சூடு பிடிக்கும். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். புது கிளைகள் தொடங்குவீர்கள். பங்குதாரர்களை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். உங்களிடத்தில் முற்பகுதியில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள்.    


உத்யோகஸ்தர்களே! உங்களை அலட்சியப் படுத்திய மேலதிகாரியின் மனம் மாறும். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். அலுவலகப் பிரச்னைகள் மட்டுமல்லாது அதிகாரியின் சொந்த பிரச்னைகளையும் தீர்த்து வைப்பீர்கள். பெரிய பதவியில் அமர்த்தப்படுவீர்கள். சம்பளம் உயரும். பணிகளையும் திறம்பட முடித்து எல்லோரையும் வியக்க வைப்பீர்கள். இடமாற்றம், மறைமுக எதிர்ப்புகள், முகவரி இல்லாத குற்றச்சாட்டு கடிதங்களின் அடிப்படையில் சின்னச் சின்ன விசாரணைகளை சந்திக்க வேண்டிய சூழல் வரும். கணினி துறையினருக்கு பதவி உயரும். 


அரசியல் வாதிகளே! கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்குங்கள்.  கலைத்துறையினரே! கௌரவிக்கப்படுவீர்கள். உங்களுக்கு எதிராக விமர்சனங்கள் வந்தாலும் அஞ்ச வேண்டாம். பெரிய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  விவசாயிகளே! தண்ணீர் கிடைக்கும். மகசூல் பெருகும். வீட்டில் நல்லது நடக்கும். இந்தப் புத்தாண்டு தொலை நோக்குச் சிந்தனையுடன் செயல்பட வைத்து சவால்களில் வெற்றி பெற வைப்பதாகவும் அமையும். 
பரிகாரம்:
திருப்பரங்குன்றம் முருகப்பெருமானை வியாழக் கிழமையில் சென்று தரிசனம் செய்யுங்கள். பழுதடைந்த பள்ளியை புதுப்பிக்க உதவுங்கள்.

No comments:

Post a Comment