Wednesday 21 December 2011

Sani Peyarchi Palan 2011 - Kanni

முயற்சியை முதுகெலும்பாகக் கொண்டவர்களே! குடிசையில் வாழ்ந்தாலும் கோபுரமாய் சிந்திப்பவர்களே! எதிலும் அழகையும் நேர்த்தியையும் விரும்பும் நீங்கள், பாரம்பரியத்தை  விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். இதுவரை உங்கள் ராசிக்குள் ஜென்மச் சனியாக அமர்ந்து நாலாபுறத்திலும் குழப்பங்களையும் தடுமாற்றங்களையும் கொடுத்தாரே. எந்த வேலையையும் முழுமையாக செய்யவிடாமல் உங்களை பைத்தியம் பிடிக்க வைத்த சனிபகவான் இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள காலகட்டங்களில் உங்கள் ராசியை விட்டு விலகி, பாதச் சனியாக அமர்ந்து பலன் தரப்போகிறார். உங்களின் பிரபல யோகாதிபதியான சனிபகவான் உச்சம் அடைந்து வலுவாக அமர்வதால் வற்றிய பணப்பை நிரம்பும். 

அலைபாய்ந்த மனசு இனி அமைதியாகும். இதுவரை எதிர்மறை எண்ணங்களால் மன உளைச்சலுக்கு ஆளானீர்களே! சிலர் உங்களை அசிங்கப்படுத்தினார்களே! பலரையும் நம்பி ஏமாந்தீர்களே! யாருமே நம்மை மதிக்கவில்லையே என்று ஆதங்கப்பட்டீர்களே! கல்யாணம், காதுகுத்து போன்ற விசேஷங்களில் சிலர் உங்களை அலட்சியப்படுத்தி, அவமானப்படுத்தினார்களே! இனி இவையெல்லாம் மாறும். உங்களை கண்டும் காணாமல் போனவர்களெல்லாம் இனி வலிய வந்து பேசுவார்கள். மனதில் இருந்த இனம்புரியாத பயம் விலகும். எப்போதும் தலைவலி, காதுவலி, வயிற்றுவலி என வலியைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தீர்களே! 

சாப்பாட்டுக்கு முன், பின் என்று பல்வேறு மருந்து, மாத்திரைகளை உட்கொள்ள நேர்ந்ததே, இனி உடல்நிலை சீராகும். ஆழ்ந்த உறக்கமும் வரும். இருந்தாலும் எளிய உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடுகளும் உங்களுக்குத் தேவைப்படுகிறது. பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை நீங்கும். சர்க்கரை, ரத்த அழுத்தத்தை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது நல்லது. உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணர்வீர்கள். குடும்பத்தில் எப்போது பார்த்தாலும் சண்டை சச்சரவுகள் இருந்ததே! ஒருநாள் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லையே என்று நினைத்துப் புழுங்கினீர்களே! 

கவலை வேண்டாம். இனி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மனைவி மனதில் மகிழ்ச்சி பூக்கும். என்றாலும் பாதச்சனியாக வருவதால் கணவன்&மனைவிக்குள் ஈகோ பிரச்னைகளும் மனஸ்தாபங்களும் வந்து நீங்கும்.வெளிவட்டாரத்தில் அனுசரித்துப் போங்கள். முடிந்தவரை அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். பார்வைக் கோளாறு, பல் வலி வந்து நீங்கும். காலில் சிறுசிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வழக்குகளில் அலட்சியப்போக்கு வேண்டாம். 

தேவைப்பட்டால் வழக்கறிஞரை மாற்றுங்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் பெரும் அலைச்சலுக்குப் பிறகு முடியும். சாலை விபத்து வந்து போகும்.  சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு ஜென்மச் சனியாக அமர்வதால் இக்கால கட்டத்தில் வீண் விரயம், விரக்தி, ஏமாற்றம், காரியத்தடை வந்து நீங்கும். 

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம் உங்கள் ராசியின் மூன்றாம் இடத்திற்கு அதிபதியும் அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.2011 முதல் 8.11.2012 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். ரத்த சோகை வரக்கூடும். உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி மற்றும் சுவாசக் கோளாறும் மனைவிக்கு மாதவிடாய் பிரச்னை வந்து நீங்கும். சகோதரர்களால் மன உளைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். 

வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. என்றாலும் 4.2.2012 முதல் 22.6.2012 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனிபகவான் வக்ரமடைவதால் பழைய பிரச்னைகள் தீரும். புதுச் சொத்து வாங்குவீர்கள். அதிகாரப் பதவியில் அமர்வீர்கள்.   
9.11.2012 முதல் 11.12.2013 வரை மற்றும் 19.5.2014 முதல் 10.9.2014 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் மதிப்பு, மரியாதை கூடும். 

கல்யாணம், காதுகுத்து என வீடு களைகட்டும்.  குடும்பத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்த பணம் வரும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். உத்யோகத்தில் சிறுசிறு இடையூறுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில்  
லாபம் உண்டு. திருமணம் கூடி வரும்.  12.12.2013 முதல் 18.5.2014 வரை மற்றும் 11.9.2014 முதல் 16.12.2014 வரை உங்கள் சுக&சப்தமாதிபதியான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்கால கட்டங்களில் தாய்வழியில் மருத்துவச் செலவுகள் வரும். வீடு மாறுவீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். மனைவியுடன் வீண் விவாதங்கள் வெடிக்கும். 

ஆனால் வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.    சனிபகவான் உங்களின் 4ம் வீட்டை பார்ப்பதால் வேலைச்சுமை அதிகரித்துக் கொண்டேயிருக்கும்.  திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 8ம் வீட்டை பார்ப்பதால் உடல்நலத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களின் அன்புத்தொல்லை அதிகமாகும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது புலம்புவீர்கள். உங்களின் லாப வீட்டை சனி பார்ப்பதால் திடீர் பணவரவு உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. மூத்த சகோதரரை மதியுங்கள்.

இல்லத்தரசிகளே! எப்போதும் அலுத்துக் கொண்ட கணவர் இனி அன்பாகப் பேசுவார். அவரின் வருமானம் உயரும். அலுவலகம் செல்லும் பெண்களே! வேலைச்சுமையால் வாட்டிவதைக்கப்பட்டீர்களே! இனி சுமை குறையும். சம்பளம் உயரும். கன்னிப் பெண்களே! கல்வி, காதல் என அனைத்திலும் தோற்றீர்களே! தகுதிக்குத் தகுந்த வேலை கிடைக்காமல் தவித்தீர்களே! இனி அந்த அவல நிலையெல்லாம் மாறும். உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் அனுசரித்துப் போகக் கூடிய நபர் அறிமுகமாவார். நல்ல வேலையும் கிடைக்கும். மாதவிடாய்க் கோளாறிலிருந்து விடுபடுவீர்கள். 

மாணவ&மாணவிகளே! புத்தகத்தைத் தொட்டாலே தூக்கம் வந்ததே, இனி அந்த நிலை மாறும். படிப்பில் ஆர்வம் பிறக்கும். வகுப்பறையில் ஆசிரியரின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். மதிப்பெண் உயரும். நீங்கள் ஆசைப்பட்ட நிறுவனத்தில் உயர்கல்வியைத் தொடருவீர்கள். அயல்நாட்டு வாய்ப்புகளும் உண்டு. வியாபாரிகளே! தொடர்ந்து வந்த போட்டியாளர்களை சமாளிக்கும் வகையில் உங்கள் அணுகுமுறையை மாற்றுவீர்கள். புதிய முதலீடுகள் செய்வீர்கள். தொலைக்காட்சி&வானொலி விளம்பரங்களின் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். 

கொடுக்கல்&வாங்கலில் நிம்மதி ஏற்படும். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். கடையை நவீனமயமாக்குவீர்கள். பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஹோட்டல், இரும்பு, ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள்.உத்யோகஸ்தர்களே! நிலையற்ற சூழல் நிலவியதே! இனி அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும். உங்களை கசக்கிப் பிழிந்த அதிகாரி வேறிடத்திற்கு மாறுவார். உங்களை ஆதரிக்கும் புதிய அதிகாரி வந்து சேருவார். நீதிமன்றத் தீர்ப்பும் சாதகமாகும். 

அலுவலகத்தில் வீண் பேச்சை குறையுங்கள். சக ஊழியர்களிடம் கொஞ்சம் கவனமாகப் பழகுங்கள். இழந்த சலுகைகள், 
பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். கணினி துறையினருக்கு, வெளிமாநிலம்&வெளிநாட்டிகளில் கான்ட்ராக்ட் முறையில் பணிபுரிய வாய்ப்புகள் வரும். அரசியல்வாதிகளே! உட்கட்சி பூசல், சூழ்ச்சிகளிலிருந்து மீள்வீர்கள். தலைமை உங்களின் செயல்களை உற்று நோக்கும். அடிக்கடி தொகுதிப் பக்கம்போய் நிலவரங்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
கலைஞர்களே! மனதை வாட்டிய வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். கலைநயம் மிகுந்த உங்களின் படைப்புகள் பட்டித்தொட்டியெங்கும் பேசப்படும். 

விவசாயிகளே! பயிர்களை நவீனரக உரமிட்டு பாதுகாப்பீர்கள். எண்ணெய் வித்துகள், துவரை, உளுந்து பயறு வகைகளால் 
ஆதாயமடைவீர்கள். இந்த சனி மாற்றம் கொஞ்சம் அலைச்சலையும் செலவினங்களையும் தந்தாலும் உங்களை முன்னேற்றப் பாதைக்கும் அழைத்துச் செல்லும்.
பரிகாரம்:
சீர்காழியிலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரரையும் புதன்பகவானையும் கேட்டை நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். நினைத்தது நிறைவேறும்.

No comments:

Post a Comment